இது ஒரு உண்மை சம்பவம். மிகவும் பரசித்தி பெற்ற ஒரு பள்ளி. அதில் 6 வயதே நிரம்பிய ஒரு சிறுவனின் கண்ணீர் சம்பவம் என் காதுகளுக்கு எட்டியது.
அந்த பள்ளியில் ஒரு சிறுவனன் 1 ஆம் வகுப்பில் படித்து வருகிறான். அவன் பெயர் ராஜா என்று வைத்துக்கொள்ளுவோம். ராஜா சுமாராக படிக்கும் மாணவன் என்று கூறினார்கள். படிப்பது முதல் வகுப்பு இதில் சுமார் என்ன, சுமார் இல்லாமல் என்ன? எப்போதும் சுமாராக மதிப்பெண்கள் வாங்கும் நம் ராஜா கடந்த மாதந்திர தேர்வில் எல்லா பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு தொன்னுத்தொன்பது மதிப்பெண்கள் வாங்கி
உள்ளான். இதை பாராட்டும் வகையில் ராஜாவின் வகுப்பூ ஆசிரியை அவர்கள், ராஜாவை ஊக்குவிக்கும் வகையில், V.Good and * * * இப்படி மூன்று ஸ்டார்கள் வழங்கி இருக்கிறார்கள். ராஜாவிற்கோ சந்தொஷம் மகிழ்ந்திருக்கிறான், தலை கால் புரியவில்லை. ஒவ்வொரு பாடம் கற்பிக்க வரும் ஆசிரிகைகளிடம் காண்பித்து, அவர்களும் ராஜாவை பாராட்டி கொஞ்சி அனுப்பி இருக்கிறார்கள். இவைகள் அனைத்தும் மதிய உணவு வேளை வரை தொடர்ந்து நடந்திருக்கிறது.
மதிய உணவு இடைவேளை முடிந்து, அடுத்து வந்த ஆசிரியையிடம் ராஜா, மிஸ் நான் 3 ஸ்டார்கள் வாங்கிஇருக்கிறேன் என்று காட்டி உள்ளான். அந்த ஆசிரியையும் அந்த மதிப்பெண் வாங்கிய தாளை வாங்கி பார்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த மதிப்பெண் தாளில் ராஜாவின் பெயர் மற்றும் அவன் வாங்கிய மதிப்பெண்கள் 66 என்று இருந்திருக்கிறது. அந்த ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை. 66 மதிப்பெண்களுக்கு எல்லாம் ஸ்டார்ட்ஸ் போட மாட்டங்கப்பா. நீ அடுத்த முறை நல்லா படித்து, நல்ல மதிப்பெண் வாங்கினால் அப்போ உனக்கு நிறைய ஸ்டார்ஸ் எல்லாம் போடுவாங்க, இப்போ நீ போய் உன் இடத்தில் உட்கார் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் ராஜாவோ அய்யோ என் ஸ்டார்ஸ் எல்லாம் காணாம போய்டுச்சு. மிஸ் என் ஸ்டாட்ஸ் எல்லாம் வேணும், என் ஸ்டார்ட்ஸ் என்று விடாமல் அழுதிருக்கிறான். உடனே அந்த ஆசிரியை நல்ல புத்திமதிகள் கூறி
அவனை போய் இடத்தில் அமர சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ராஜா அதை கேட்காமல் ஸ்டார்ஸ் ஸ்டார்ஸ் என்று அழுததினால், ராஜாவின் வகுப்பாசிரியையை அழைத்து விபரம் கேட்டு இருக்கிறார்கள். வகுப்பு ஆசிரியையும் ஆமாம் மிஸ் அவன் 99 மதிப்பெண்கள் தான் ஒரு பாடத்தில் வாங்கி இருந்தான். நான்தான் அவனுக்கு 3 ஸ்டார்ஸ் போட்டேன், ஆனால் எப்படி ராஜாவின் மதிப்பெண்கள் 99 என்பது 66 ஆக மாறியது என்று ஒன்றும் புரியாமல் விளித்திருக்கிறார்கள். பிறகு மதிப்பெண் register ஐ சரிபார்த்திருக்கிறார்கள். அதில் ராஜாவின் மதிப்பெண் 99 ஆகத்தான் இருந்திருக்கிறது. எப்படி என்று மறுபடியும் வகுப்பிற்கு வந்திருக்கிறார்கள். ராஜாவின் முன்னால் ஒரு சிறு பெண் குழந்தை (அதே 6 வயது, பெயர் மாதவி என்று வைத்துகொள்ளுவோம்) அமர்ந்திருக்கிறாள். அவளின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆனால் மதிப்பெண் பட்டியலில் 66 என்று இருதிருக்கிறது. அனால் கையில் வைத்திருக்கும் மதிப்பெண் தாளில் மாதவியின் பெயருக்கு கீழ் 99 என்று இருந்துள்ளது. வகுப்பு ஆசிரியைக்கு ஒன்றும் புரியவில்லை. மாதவியை அருகே அழைத்து நீ வாங்கிய மதிப்பெண்கள் என்ன என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு மாதவி எந்தவித தயக்கமும் இல்லாமல் 99 நான் தான் 99 வாங்கி இருக்குறேனே. என்று மதிப்பெண் தாளை கண்பித்துஇருக்கிறாள்.
இந்த வயதில் ஒரு பயம் இல்லாமல் இந்த பெண் இவ்வாறு கூறியது யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்த்திருக்கும் என்று கேள்வியுடன், மாதவியை முதல்வரிடம் அழைத்து சென்றிருக்கிறார்கள். முதல்வருக்கு செல்லும் முன்பே விபரம் அறிவிக்கப்பட்டது. அதனால் முதல்வர் மிகவும் அன்புடன் மாதவியை தன்னிடம் அழைத்து, என்னடா கண்ணா உன் மதிப்பெண் தாளை uncle க்கு காட்டும்மா, என்று கேட்டிருக்கிறார். அவளும் மதிப்பெண் தாளை மிகவும் மகிழ்ச்சியுடன் காட்டி இருக்கிறாள். அதில் எல்லா மதிப்பெண்கள் கூட்டுத்தொகை சரியாக 99 என்று இருதிருக்கிறது. நீ வாங்கினதா என்று அன்புடன் விசார்த்திதிருக்கிறார். மாதவி ஆமாம் uncle நான்தான் வாங்கி இருக்கிறேன் என்று கடுகளவு கூட தயங்காமல்
சொல்லி இருக்கிறாள். பிறகு முதல்வர் இனிப்பு, பரிசுகள் எல்லாம் கொடுத்து மதிப்பெண்களை பற்றி விசார்த்திருக்கிறார். எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, நான் 99 வாங்கி இருக்கிறேன் என்று மறுபடியும் அதே தான் கூறி இருக்கிறாள். ஒன்றும் கூறாமல் மாதவியயை அனுப்பி விட்டு. தவறு எப்படி நடந்திருக்கு என்று கண்டுபிடிக்குமாறு வகுப்பாசிரியைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நடந்தது என்ன?
மதிய உணவு இடைவேளைக்கு அனைவரும் சென்றிருந்த நேரத்தில், மாதவி ராஜாவின் விடைத்தாளில் உள்ள ராஜாவின் பெயரை அழித்துவிட்டு, அதில் தன் பெயரை எழுதி, தன் விடைத்தாளில் தன் பெயரை அழித்துவிட்டு ராஜாவின் பெயரை எழுதி இருக்கிறாள் என்று கண்டுபிடித்து விட்டார்கள். மறுபடியும் மாதவியை கூப்பிட்டு விசாரித்தால், அப்போதும் அதே பதில்தான். இது என்னோட விடைத்தாள் நான் வாங்கிய மதிப்பெண்கள், நான் வாங்கிய 3 ஸ்டார்ஸ் என்று ஆணித்தரமாக கூறிஇருக்கிறாள். முதல்வர் எதுவும் பேசாமல் நாளைக்கு உன் அப்பா மற்றும் அம்மாவை அழைத்து வா என்றிருக்கிறார். பிறகு ஏன் இந்த பெண் இவ்வாறு செய்துள்ளது என்று தீர விசாரித்ததில், கிடைத்த உண்மை என்னவென்றால்? மாதவியின் பெற்றோர்கள் அவள் குறைந்த மதிபெண்கள் வாங்கும்போதெல்லாம் அவளுக்கு ஒரே திட்டு ஒரே அடியாம். அடி வாங்கி வாங்கி ஒரே ஒரு நண்பியிடம் சொல்லி
அழுவாளாம். அந்த நண்பி குழந்தையும் ஒன்றும் புரியாமல், அழாதே என்று கூறுவாளாம். இதை விசாரிக்குபோது அந்த சிறு குழந்தை கூறி இருக்கிறது. பிறகு அவர்கள் வீட்டு பக்கத்தில் குடித்தனம் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளார்கள். அவர்களும் அந்த குழந்தையை எப்போதும் அடிப்பார்கள். ஏன்னு கேட்டால் சரியா படிக்க
மாட்டேன்கிறாள் என்பார்களாம். இதை கேட்டு எனக்கு திக் என்று இருந்தது.
6 வயது என்பது ஒரு வயதே அல்ல. சில குழந்தைகள், சிறு குழந்தையாக இருக்கும்போதே நன்றாக படிக்கும் அறிவை பெறுகிறார்கள், சில குழந்தைகள் மெதுவாக நன்றாக படித்து விடுவார்கள். குழந்தைகள் ஏற்கனவே புத்தக மூட்டைகளை சுமந்து மிகவும் சொல்லவொண்ணா துயரத்தில் இருக்கிறாரகள் என்று தான் என் கண்ணோட்டத்தில் தெரிகிறது.
இது தவறாகவும் இருக்கலாம்.
6 வயதில் நல்ல மதிபெண் வாங்கவில்லை என்று அடித்ததில் அந்த சிறு குழந்தையின் போக்கு எவ்வளவு அபாயகரமாக மாறி இருக்கிறது பார்த்தீர்களா? குழந்தைகள் படிக்கவேண்டும் என்று கண்டிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ வழி முறைகளை பெற்றோர்கள் கையாளலாம் அல்லவா ?
பெற்றோர்களின் இந்த செய்கை அந்த பிஞ்சு குழந்தையின் மனதை எவ்வளவு மோசமான முறையில் மாற்றி உள்ளது பார்த்தீர்களா? இது ஒரு கெட்ட செயலாகவும் இந்த சமுதாயத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது அல்லவா?
தயவு செய்து தாய்மார்களே, தந்தைமார்களே இது போன்ற நடவடிக்கைகளை குறைத்து கொள்ளவீர்கள் என்று நம்புகின்றேன்.
அந்த குழந்தைக்கு எந்த வித மன உளைச்சலும் ஆகாமல் பள்ளி நிர்வாகம் கவனித்து வந்துள்ளது என்பதை நான் மிகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
இது போல் பல மாதவிகள் வளராவண்ணம் பார்த்துகொள்வோமாக!!
ரம்யா