குழம்பி குழம்பி அப்புறமா கண்டு பிடிச்சுட்டேன். யாரு நானு யாரு.. அதானே எனக்கே தெரியலை??
நான் பிச்சிகிட்டு தான் இதை எழுதி இருக்கேன். படிக்கிற நீங்களும் கொஞ்சமா பிச்சுக்கோங்க ப்ளீஸ்!!!
1. செய்யது (மாட்டினே மவனே)
2. அபுஅஃப்ஸர் (ஹா ஹா ஹா)
3. ராகவன் அண்ணா (எழுதிவிடுவார் )
மூணு பேரையும் அவங்க கிட்டே சம்மதம் கேட்காம இணைச்சுட்டேன். திட்டு உண்டு என்று என் மனசாட்சி சொல்லுது. பின்னே என்னாங்க?
எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமே இந்த மாதிரி செய்தது எந்தவிதத்திலேயும் நியாயம் இல்லை தான்.
என்னா செய்யா. விதி வலியது. பிச்சிகட்டும்.
சரி நாம்ப இப்போ விஷயத்துக்கு வருவோம். இந்த சொற்கள் உங்களுக்கு தெரியாம இருந்தா தெரிஞ்சிக்கோங்க.
தெரிஞ்சிருந்தா ரம்யாவை கண்டுக்காமா விட்டுருங்க.
நானும் பிழைச்சி போய்டறேன் சரியா??
இங்கே பாருங்க உங்க விதி எவ்வளவு வில்லங்கமா வேலை செய்யுதுன்னு!!!!!
நடுகற் கோயில் : பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் 'நடுகற் கோயில்' என்று வழங்குவார்கள்.
பள்ளிப்படை: அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது 'பள்ளிப்படை' என்று வழங்கப்படும்.
சைன்யம்: படை . அதாங்க போருக்கு போற படை (நீங்க வேறே ஏதாவது நினைச்சுகாதீங்க)
அந்தகாரம்: இருட்டு
சுளுந்து: நெருப்பை கொளித்தி பிடித்து கொண்டு அந்த காலத்தில் இருட்டில் நடப்பார்கலாம்
கமுக்கம்: ரகசியம்
தொம்பை:அந்த காலத்தில் இதில் நெல், அரிசி போன்றவைகளை சேமித்து வைத்திருப்பார்களாம் .
அட்டாலி: அந்த காலத்தில் தட்டு முட்டு சாமான்களை சேகரித்து வைக்கும் இடம். இதுதான் இந்த காலத்துப் பரண்.
அப்பா ஒரு வழியா முடிச்சுட்டேனுங்க.
பிடிச்சி இருந்தாலும், பிடிக்கா விட்டாலும் நீங்க என்னா எனக்கு ஒட்டு போடாமலா இருக்கப் போறீங்க?
இவ்வளவு நேரம் படித்து தெரிந்து கொண்டதிருக்கு ரொம்ப நன்றிங்க.
சரி நான் வர்ட்டா?? (சூப்பர் ஸ்டார் ஸ்டைல் இதே படிக்கணும் சரியா??)