Saturday, July 31, 2010

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!

எனதருமை வலையுலக நட்புக்களுக்கு உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!

நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!



நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு கடலையும் கடந்திடுவேனே!!

துன்பத்தில் துவண்டு போகும் தருணங்களில், கைகோர்த்து தோள் சாயும்போது புது அவதானிப்பை உணர்கின்றேனே !!

காலங்கள் கடந்து போகும், உறவுகள் மறந்து போகும், மலர்கள் உதிர்ந்து போகும், காட்சிகள் மறைந்து போகும் ஆனால் இறுதிவரை நம்முடன் வருவது நட்பு ஒன்றே!

சிந்திக்க வைத்து, சிரிக்க வைத்து, இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வந்து உருகவைப்பதும் நட்பு ஒன்றே!!

அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

என்றும் உங்கள் ரம்யா!!