Friday, October 2, 2009

காத்திருந்த விழிகளில் கண்ணீர் ஏனோ!!


இலவின் மென்மை
இசையின் இனிமை
மதியின் குளுமை
மனதின் வலிமை
இவற்றில் கிடைக்கும்
நெஞ்சின் நிறைவை
நித்திய சோதனையில்
சத்தியமா மறந்தாய்
காத்திருந்த கண்கள்
நேற்று வரை தோற்க
மனதின் மகிழ்ச்சி
கனவாகிப் போக
காத்திருந்த காலங்கள்
கணிதம் தெரியாமல்
காலாவதியாகிப் போனதே
நிஜம் நிழலாகையில்
கருத்தில் ஏற்பட்ட வலி
கண்ணீர் பெருக்கியதே
வலியை போக்க
மனதை மயக்க
மருந்தொன்று உண்டு
புன்னகை சூடி
உருண்டோடும் கண்ணீரை
கானல் நீராக்கினால்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டு ஓடாதோ!!