Tuesday, April 28, 2009

கல்லூரி கலாட்டாக்களின் நடுவே ஒரு சுற்றுலா!!

கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!!

நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம். எல்லா தோழிகளுடனும் நான் எப்பவுமே ரொம்ப நெருக்கமான நெருக்கம்தான் .

தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. தொகுதி உடன்பாடு இல்லாமலே அட்டகாசமா அரசியல் பண்ணுவாங்கன்னு கேள்வி. நான் அதில் எல்லாம் தலையிட மாட்டேன். ஆனா எல்லார் கூடவும் நட்பா இருப்பேன்; அன்பா பழகுவேன்; எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் .

அதனால் என் மிக நெருங்கிய தோழிகள் எனக்கு கூறும் அறிவுரை, உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க.

உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது. விதி வலியது. யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும். அது என்னோட குணம். அதனாலே எல்லாருடனும் எப்போதும் நட்புதான்.

சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்! கல்லூரி இறுதி ஆண்டு. அந்த இறுதி ஆண்டு முடிவதற்குள், வானத்தையே வில்லா வலைச்சிடனம்னு மனதிற்குள் ஒரு ஆசை. கடற்கரை, சினிமா இப்படி சுத்துவோம். நிறைய பேரு இல்லை சும்மா ஒரு 8 பேருதான். அதுலே நான் தான் அறுந்த வாலு. வால் நம்பர் ஒண்ணு.

எல்லாரும் சேர்ந்து கேரளா டூர் போனோம். கேரளாவில் ஒரு தோழியின் வீடு உள்ளது. அவங்க வீட்டில் தங்கி நல்லா ஊரு சுத்தினோம். மறுபடியும் சென்னைக்கு ரயில் பயணம். இரவு ஒரே அமர்க்களம்தான். தடை இல்லாத பேச்சுதான். ஒரு வழியா இரவு உணவு முடிந்தவுடன், மறுபடியும் பேசிக் கொண்டிருந்தோம். எங்க Compartment எல்லாரும் உறங்கி விட்டார்கள்.

அதனால் நாங்களும் தூங்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்தோம். ரொம்ப நல்ல முடிவுதான் என்று நானும் நினைத்துக் கொண்டேன். அப்போதான் சாப்பிட்ட கை கழுவலை என்று நினைவிற்கு வந்தது. தனியா போக பயம், அதனாலே ஒரு தோழியை அழைத்துக் கொண்டு போனேன். கையை கழுவிட்டு எங்க இடத்துக்கு வந்தா?? போங்க! ஒரே திக் திக் திகில்தான். சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க! அவ்வளவு ஒரு பயங்கரம் அரங்கேற்றம். சினிமா காட்சி தோற்றுப் போய்விட்டது போங்க.


ஒரு ஆளு முகமூடி போட்டுக்கிட்டு கையிலே கத்தியோட எனது தோழிகிட்டே கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்ற சொல்லி மிரட்டிகிட்டு இருந்தான். எனக்கு ஒண்ணுமே புரியலை கண்ணு இருட்டிடுச்சு. வாழ்க்கையிலே படிச்சு கூட முடிக்கலை. அதுக்குள்ளே அகால மரணமா? அப்படீன்னு யோசிச்சேன். என் உடன் இருந்த தோழி கத்துவான்னு அவ கத்தாம இருக்க சைகையால் அடக்கிவிட்டேன்.

ஏற்கனவே தனது கழுத்தில், கையில், காதுகளில் இருந்து பறிகொடுத்த தோழிகள் திரு திரு என்று சத்தம் போடாமல் விழித்துக் கொண்டிருந்தனர். நான் கை கழுவ போய் இருந்ததால் விளக்கை அணைக்கவில்லை. எங்களைப் பார்த்தவுடன் எனது தோழிக்கு கண்களில் ஒரு பிரகாசம். எப்படியும் நான் காப்பாற்றி விடுவேன் என்று. நான் எங்கே காப்பாற்றுவது! நானே கால்கள் நடுங்க அடுத்த அடி எடுத்து வைத்தால் திருடன் என் பக்கம் திரும்பி விடுவானோன்னு ஒரே பயம்.


ஆனாலும் வினாடிக்கும் குறைவாகத்தான் யோசித்தேன். உடனே என்னோட சால்வை எடுத்து அந்த முகமூடி திருடனின் முகத்தின் மேல் பின்னால் இருந்து போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டே கத்தினேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள், விளக்கும் போட்டார்கள், ஆனால் ஒருவரும் அருகே வரவில்லை.

ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்து விட்டேனோ என்ற பயம் என்னை ரொம்ப நோக வைத்து விட்டது. பின்னால் இருந்து கண்களை துணியால் மூடியவுடன், அந்த திருடன் ஆவேசமானான். கத்தியை காற்றில் சகட்டு மேனிக்கு வீசினான். அதில் என் கைகளிலும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் பயத்துடனேயே சால்வையை இருக்கப் பிடித்துக் கொண்டு கத்தினேன். எனது தோழிகள் இருந்த இடம் தெரிய வில்லை.

ஆனாலும் பிடியை தளர்த்த வில்லை.உள்ளூர ஒரே பயம்! ஆனாலும் அசட்டு தைரியம்தான். எங்களோட போராட்டத்தை பார்த்து இரெண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள். கட்டுவதற்கு கயறு இல்லை. ஒரு இளைஞன் தேடும் படலத்தில் ஈடுபட்டான். அருகில் ஒருவர் தலையில் துண்டு கட்டி இருந்தார், அதை கேட்டால் தர மறுத்தார். நான் அந்த துண்டை உருவச்சொல்லி அந்த துண்டை வைத்து திருடனின் கைகளை கட்டுமாறு கூறினேன். ஒரு இளைஞன் நான் கூறியதுபோல் செய்தான், மற்றொரு இளைஞனை ரயிலின் சங்கிலியை பிடித்து இழுக்கச் செய்தனர் என் தோழிகள். ரயிலு நின்னுடுச்சு. உடனே முக்கியமான நிர்வாகிகள், எங்க TTR எல்லாரும் எங்க இடத்துக்கு வந்துட்டாங்க.

ஒரு ஊரு வந்தவுடன் அங்கே அந்த திருடனை இறக்கி, எங்களையும் ரயில்லே இருக்கற போலீஸ்காரங்க போலீஸ் ஸ்டேஷன் வரை வரச்சொன்னாங்க. எனக்கு ஒரே பயமா போச்சு. ஏன்னா வீட்டுக்கு தெரியாம டூர் வந்திருக்கேன் அது முதல் பயம்! அப்புறமா போலீஸ் என்றால் அதைவிட ரொம்ப பயம். நான் எல்லாம் வரமாட்டேன் என்று அடம் பிடிச்சேன்.

அப்புறமா எல்லாரும் தைரியம் கூறி அனுப்பிவைத்தார்கள். ஆனால் திருடனோட கண்ணில் கட்டி இருக்கும் துணியை கழட்ட கூடாது. கழட்டினால் அவன் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு அப்புறம் வந்து கத்தியாலே குத்தி விடுவான் என்று ஒரு போலீஸ்காரரிடம் சொன்னேன். அவரு சரி என்றார்.

ஸ்டேஷன் போய் எனது தோழிகளின் நகைகளை கேட்டோம். போலீஸ்காரங்க தரமாட்டோம், அவன் பையிலே நிறைய நகைகள் இருக்கு.

அதுனாலே நீங்க அப்புறமா சொல்லி அனுப்பறோம், அடையாளம் சொல்லி வாங்கி செல்லுங்கள் என்றார்கள். நாங்களும் உடனே கிளம்பிட்டோம்.

மறுபடியும் கல்லூரியில் சகஜமான வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. மனதில் ஒரு திகிலாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தோம்.

இரெண்டு மாதங்கள் கழித்து ஒரு அரசு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அழைப்பு எனது பெயருக்கு தான் வந்தது. எனக்கு ஒரே பயம், எனது தோழிகள் தைரியம் கூறி அந்த விழாவிற்கு அழைத்துச் சென்றார்கள்.

நிறைய பெரியவங்க எல்லாம் வந்திருந்தாங்க. எங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது, முக்கியமான பெரியவங்க பக்கத்துலே உக்கார்ற பாக்கியம் கிடைச்சுது. எல்லாரும் எங்களையே பாக்கறமாதிரி ஒரு உணர்ச்சி. வெக்கம் வெக்கமா இருந்திச்சு.

நல்ல முறையில் வேலை செய்த போலீஸ்காரங்க, பல துறையில் வேலை செய்தவங்க, நேர்மையான முறையில் பல லட்சங்களை தனது ஆட்டோவில் வைத்து சென்ற பணத்தை போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர், இப்படி பலர். அவர்களின் நடுவே நாங்களும் ஏன் என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம்.

ஒவ்வொருவருக்கும் அவர்களின் நல்ல செயல்களுக்கு ஏற்ப பரிசுகள் வழங்கினார்கள். பார்த்துக் கொண்டே இருக்கும் போது இப்போது "வீர மங்கை" என்ற விருது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு வழங்கப் போகிறோம். என்று, அந்த ரயிலில் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினார்கள். கொஞ்சம் தாமதமாகத் தான் எனக்கு உரைத்தது அது நான்தான் என்று. எல்லாரும் கைதட்ட என்னை மேடைக்கு எனது தோழிகள் புடை சூழ அழைத்துச் சென்றார்கள். பரிசும் தந்தார்கள். பரிசு பெற்றவுடன் இறங்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தேன்.

ஆனால் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அக்கா என்னை பேச அழைத்தார்கள். நான் பேச மாட்டேன் என்று மறுப்பு சொல்ல எனக்கு உரிமை வழங்க வில்லை. கால்கள், கைகள் தந்தி அடிக்க மைக் முன்னால் போய் நின்றேன். நான் போய் வீர மங்கையாம். நான் சொல்லலை, அவங்க சொன்னாங்க. ஏதோ உளறி கொட்டி கிளறி மூடிட்டு வந்துட்டேன். இந்த விஷயம் சும்மா இருக்குமா? வெளியே சத்தமில்லாமல் சுத்தமாக எங்க வீட்டுக்கு தெரிந்து விட்டது. எங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. எங்க அண்ணா உடனே வந்துட்டாரு. திட்டுதான். என்ன செய்ய?? நாளிதல்லே படிக்கும் பொண்ணோட போட்டோ வந்ததுன்னா சும்மாவா??

இப்படி ஒரு கதை நடந்து முடிஞ்சும் போச்சு!!

இந்த எனது தைரியத்துக்காவது ஓட்டு போடுங்கப்பா!!





Thursday, April 23, 2009

பார்க்கத் துணியுங்கள் பாக்தாத் பேரழகியை!!

எல்லாருக்கும் வணக்கம்ங்க!

எனக்கு ஒரு மினஞ்சல் வந்தது. அதெ என்னோட நண்பர்கள் சிலருக்கு அனுப்பி வைத்தேன்.

வெளியே போயிட்டு வந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு செக் பண்ணினா 75 மின்னஞ்சல் வந்திருந்துச்சு. என்னான்னு பார்த்தா! நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியதோடு அல்லாமால் அதிலே கும்மி கூட அடிக்க முடியும்ன்னு நம்ப நண்பர்கள் நிரூபித்து விட்டார்கள்.

சிலர் பயத்துடனும், தைரியத்துடனும் பதில் மின்னஞ்சல் அனுப்பினார்கள். அவர்கள் அனைவருக்கும் எனதன்பு நன்றிகள்!

கும்மியில் பங்கு பெற்றவர்கள் முறையே
*************************************************
வால்பையன்
உருப்புடாதது அணிமா
ஆளவந்தான்
ராகவன் நைஜீரியா

நம் நண்பர்கள் அடித்த கும்மியை உங்களுக்காக இங்கே அளிக்கிறேன். நான் படித்து சிரித்து சிரித்து எனக்கு வயறு வலிச்சி போச்சு. அதான் நீங்களும் சிரிங்கன்னு பதிவா போடறேன்.

எச்சரிக்கை
*************
கீழே காணப்படும் அழகியை பார்ப்பதற்கு பயப்படுகிறவர்கள் மிகவும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்க்கவும்.
மன வலிமை மிக்கவர்கள் மட்டும் பார்க்கவும்.
மனம் பலவீனமானவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
தைரியசாலிகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை.



நண்பர்களே கும்மி ஆரம்பம்!!
***********************************
ஐயோ, அந்த பயங்கர உருவம் நீங்கதானா???? :-)
/விஜய் (வெட்டிவம்பு)

Hi Vijay,
அடபாவிங்களா ஒரு கூட்டமே அலையுதா என்னை பேய்ன்னு சொல்ல :))
ஹா ஹா சூப்பர்!!
இருங்க இன்னைக்கு நைட் பேயா வந்து உங்களை பயமுறுத்துறேன் :))
ரம்யா

இப்படி ஒரு மெயில் அனுப்பி காலைல கதி கலங்க வெச்சதுக்கு
நன்றி ரம்யா அக்கா
ஹ ஹ ஹ ஹ !!!
வாழ்க வளமுடன் !!!
Thamil Selvi

வந்துட்டு போன அந்த அழகான பொண்ணோட அட்ரஸ் கொடுங்க ப்ளீஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அளவில்லா அதிர்ச்சியுடன்
வால்பையன்

ஆமா எதுக்கு இப்படி நேர்ல வந்து சந்தோஷத்த குடுக்குறீங்க??
உருப்புடாதது அணிமா

நல்ல மாப்பிளையா(உங்களை தான்) பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான்
வால்பையன்

அட மெய்யாலுமா??
உருப்புடாதது அணிமா

தாயிருந்தாலும் அவுங்க குடும்பத்துக்கிட்ட(ரம்யாகிட்ட) பேசிக்கோங்க!அளவில்லா குசும்புடன்
வால்பையன்

அதெல்லாம் முடியாது..
நீங்க தான் நேர்ல வந்து பேசோனும்...
ஒறவு மொறை நீங்கதானே..
அளவில்லா கொழுப்புடன்,
உருப்புடாதது அணிமா

ஏற்கனவே அவுங்க அக்காவை தான் கட்டிகிட்டு,
மரை கழண்டு போய் உட்காந்திருக்கேன் திரும்பவுமா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வால்பையன்

அப்போ நாம மச்சான் மொற ஆகுதா??
பெரிய மச்சான்...
அன்போடும் பன்போடும் உள்ள சின்ன மச்சான்( ஆக போகும்)
உருப்புடாதது அணிமா

விசாரிச்சு பாக்கையில அவுக வேற மாதிரி சொல்றாகளே... :)))
//உட்காந்திருக்கேன்// இப்படி தான் வூட்டுகாரவுகளுக்க்கு மரியாத குடுப்பீகளா? என்னாதிது சின்னபுள்ள தனமா இருக்கு
//திரும்பவுமா// எவ்வளவோ பண்ணிட்ட்...... (நீங்களும் ஒரு தடவை மன்சுக்குள்ளே சொல்லிக்குங்க :D )

இது ரம்யாவுக்கு
*******************
ய்மயா குட்டி..யிப்ப்டி யெய்யாம் பய்முருத கூடாது ( கண்ட நாள் முதல் - கிருஷ்ணா மாதிரி “சத்தம்” போட்டு படிக்கனும் :)))))) )
Alagar.P

அழகர் அண்ணேநீங்க சொல்றது
ஒண்ணுமே பிரியல எனக்கு
வால்பையன்

ஏதோ எனிக்கி மட்டும் பிரிஞ்சா மாரி பேசுரீங்க??
இங்கும் அதே அதே...
உருப்புடாதது அணிமா

நல்லவேளை தப்பிச்சேன்.. :) இந்த பதிலை ”பு.த.செ.வி” + பின்நவீனத்துவம் லிஸ்ட்ல சேத்துடுறேன். இதுவும் புரியலேன்னா ஒரு பதிவு போட வேண்டியிருக்கும் பரவாயில்ல்லியா :))))))) :D
Alagar.P

அதுக்கு அந்த மோகினியே தேவலாம்ன்னு நினைக்கிறேன்...
உருப்புடாதது அணிமா

அந்த பயம் இருக்கட்டும் :)
Alagar.P

ஆமாங்க அந்த பய இருக்கட்டும்!
மோகினிக்கு ரொம்ப பிடிச்சி போச்சாம்!
வால்பையன்

எனக்கு இந்த சிலடை பிடிச்சு போச்சு...
விசாரிச்சு விவரம் (விவரமா) சொன்னதுக்கு நன்றிங்கண்ணா :)
Alagar.P

என்னாப்பா இது லிஸ்டுல 50 மெயில் ஐடி இருக்கு
3 பேரு மட்டும் கும்மி அடிச்சிகிட்டு இருக்கோம்!
வால்பையன்

வேடிக்கை பாக்குற யாரையாவது களத்துல இறக்கி விடுங்க :)
Alagar.P

എന്നാഥു അമ്ബഥാ??
என்னாது அம்பதா??
3 பேர் மட்டும் கும்மியா??
ச்சே எ.கொ.சா.இ??
அளவில்லா அதிர்ச்சியுடன்,
உருப்புடாதது அணிமா

பேரழகிய பார்த்த அதிர்ச்சியில
இருந்து யாரும் மீண்டு வரல போல
அளவில்லா சந்தேகத்துடன்
வால்பையன்

மீண்டு வரலியா..இல்ல மிரண்டு வரலியா..
”அதே” அளவில்லா சந்தேகத்துடன்
Alagar.P

இங்க நாம மூணு பேரு தானே இருக்கோம்
வேற பேரழகிகள் இல்லையே!
அப்புறம் ஏன் மிரளனும்
அதே சந்தேகத்தோடு
வால்பையன்

ஒன்னுமே புரியல.
ஏதோ படம் வந்துச்சு அப்படின்னு விட்டுட்டேன்.
இதுல இவ்வளவு விசயம் இருக்கா?
இராகவன் நைஜீரியா

என்னாது படமா??
அதுல தான் என்னோட வருங்கால மனைவி படம் இருக்கு...
அதுக்கு தான் இவ்ளோ மேட்டர்...
ஆசை ஆசையாய்,
உருப்புடாதது அணிமா

தம்பி நேத்து பார்த்த போது சொல்லியிருக்க வேண்டியதுதானே.
அண்ணியும் பார்த்து இருப்பாங்க இல்ல.
இராகவன் நைஜீரியா

//அதுல தான் என்னோட வருங்கால மனைவி படம் இருக்கு...//
அதுகுள்ளயும் அவசரப்படக்கூடாது!

இப்போ தான் அவுங்க சொந்தகாரங்க
ரம்யா வெளியே போயிட்டு வந்துருக்காங்க
இனிமே வந்து பதில் சொல்லுவாங்க
வால்பையன்

இப்போ தான் அவங்க வீட்ல சம்மதம் சொன்னாங்க...
அதனால தான் நேத்து சொல்ல முடியல..
சுடுகாட்டில் இருந்து
உருப்புடாதது அணிமா

ஓ அப்படியா..
அடுத்த தடவை பார்க்கும் போது சொல்லிக்களாம்.
இராகவன் நைஜீரியா

சொல்லிட்டாங்களாஇப்போ எல்லா சுடுகாட்டிலியேயும் இருக்குற சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்புங்க!
வால்பையன்

யாருப்பா அங்க ...
வண்டிய எடுங்கப்பா...
எல்லா சுடுகாட்டுலையும் போய் சொல்லிட்டு வரலாம்.
இராகவன் நைஜீரியா

சில பேரழகி பேய்கள் நைட்டாகிருச்சுன்னு
வீட்டுக்கு திரும்பிட்டாங்களாம்!!
வால்பையன்

ஆமாம், என்னை வைச்சு காமெடி கீமெடி பன்னலயே???
அப்புறம் எல்லாரும் கல்யானத்துக்கு சுடுகாட்டுக்கு வந்துடுங்கோ.
அளவில்லா ஆனந்தத்தோடு
உருப்புடாதது அணிமா

ஆஹா...
உங்க வீட்டில் எப்படி?
இராகவன் நைஜீரியா

தம்பி யோக் என்னாது இது
இராகவன் நைஜீரியா

ஷூவை பார்க்க சொன்ன ரம்யா,
அங்க இருந்த பேரழகிய பார்க்க சொல்லாதது ஏன்??
கடுப்பான சந்தோசத்தில்
உருப்புடாதது அணிமா

அதானே...ஏன் பார்க்கச் சொல்லவில்லை..
ஒரே அழுகுணி ஆட்டமா இருக்கு...
இராகவன் நைஜீரியா

சுடுகாட்டுக்கு வந்துருவோம்!
எல்லோருக்கும் சூடா ரத்த பொறியல் கிடைக்குமுல்ல
அளவில்லா பசியோடு
வால்பையன்

ஆமாங்க வால் ரொம்ப பசியா இருக்காரு
நான் எல்லாம் சைவ பேய்ங்க
அதனால எனக்கு வெஜிடபுள் சூப் வேணும்
இராகவன் நைஜீரியா

//அதானே...
ஏன் பார்க்கச் சொல்லவில்லை..//

பார்த்து உங்களுக்கும் பிடிச்சி போயிருச்சுன்னா
இருக்குறதே ஒரே ஒரு பேயி
எத்தனை பேர்த்துக்கு கட்டி கொடுக்குறது
அழகருக்கு பேசி முடிச்சாச்சு
எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க
ஏன்னா நீங்க தான் விருந்தே!
அதே பசியோடு
வால்பையன்

அது மட்டும் இல்ல.. கல்யானத்துக்கு மெனு என்னான்னா??
தலக்கறி ( இது அந்த தல இல்ல),
தொடக்கறி ( இது ரம்பா இல்ல)
மூளக்கறி ( என்னோட மூளை இல்ல)
அப்புரமா அவிஞ்சு போன உடம்பு( உடும்பு இல்ல) வருவல்..
சாப்பிட அழைக்கும்
உருப்புடாதது அணிமா

///அழகருக்கு பேசி முடிச்சாச்சு எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க////

இது என்னாது???
அப்போ அவிங்க எனிக்கி இல்லியா?
நொந்த மனசுடன்,
உருப்புடாதது அணிமா

அழகருக்கு பேசி முடிச்சாச்சு
எல்லோரும் விருந்துக்கு
மறக்காம வந்துருங்க
வால்பையன்

//மூளக்கறி (என்னோட மூளை இல்ல)//
எனக்கு மூளை இல்லைன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு!

ஏகப்பட்ட மூளையுடன்
வால்பையன்

////எனக்கு மூளை இல்லைன்னு சொன்னா மாதிரி இருந்துச்சு! ஏகப்பட்ட மூளையுடன்////
எங்கே தப்பா படிச்சிடுவீங்களோன்ன்னு பயந்துட்டேன்...
இன்னும் அதே லொல்லுடன்,( அந்த லொள்ளு அல்ல )

உருப்புடாதது அணிமா

//இது என்னாது??? அப்போ அவிங்க எனிக்கி இல்லியா?//
போட்டிக்கு ரெண்டு பேரு இருக்கிங்களா!
சரி யாரு காட்டேரியோட சண்டை போட்டு
ஜெயிக்கிறிங்களோ அவுங்களுக்கு தான் இந்த பேரழகி
வால்தனத்துடன்

வால்பையன்

ஆமாம் யார் ஜெயிக்கிறார்களோ..
அவங்களுக்குதான்..
இராகவன் நைஜீரியா

மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம்
அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி
வால்தனத்துடன்
வால்பையன்

சரி ராகவன் அண்ணே
அந்த காட்டேரிய அவுத்து விடுங்க!
சண்டை போடட்டும்!
வால்பையன்

ஆமாம் யார் ஜெயிக்கிறார்களோ..
அவங்களுக்குதான்..
இராகவன் நைஜீரியா

நமக்கு அந்த கவலை வேண்டாம்.
இருப்பவர்கள் தான் கவலைப் படவேண்டும் வாலு..
இராகவன் நைஜீரியா

///மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம் அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி////

நான் ரெட்டி இல்லீங்கோ!!!
யாருப்ப இங்க ரெட்டி?
ஓ. இது ரெடியா??
எப்பவுமே தப்ப தப்பா பார்க்கும்,
உருப்புடாதது அணிமா

மூளைன்னா அந்த பேரழகிக்கு ரொம்ப பிடிக்குமாம்
வறுக்க கூட வேண்டியதில்லையாம்
அப்படியே சாப்பிடுவாங்கலாம் யாரு ரெடி
வால்பையன்

அது உங்ககிட்ட தானே இருக்கு...
இப்ப எங்ககிட்ட கேட்டா நான் எங்க போவேன்..
இராகவன் நைஜீரியா

அடி ஆத்தாடி,
நான் தான் இங்க அம்பது...
உருப்புடாதது அணிமா

தம்பி இப்பத்தான் மணி 6.00 ஆகுது...
அதுக்குள்ளே ...
இராகவன் நைஜீரியா

50 அடித்து ஆடிய அணிமா (மிஸ்டர். பேய்) க்கு வாழ்த்துககள்
இராகவன் நைஜீரியா

///தம்பி இப்பத்தான் மணி 6.00 ஆகுது...
அதுக்குள்ளே ... இராகவன், நை...///

என்ன பன்றது ? இன்னிக்கு 5 மணிக்கே ஆ(ரம்)பிச்சிட்டோம்ல...
உருப்புடாதது அணிமா

ஓ... 5 மணிக்கேவா பேய்க்கு வாக்கப்பட்டா இப்படித்தான்..
இராகவன் நைஜீரியா

//இப்ப எங்ககிட்ட கேட்டா நான் எங்க போவேன்..//
இங்க இருக்குறது குட்டிசாத்தான் அண்ணே

காட்டேரிகூட தான் சண்டை போடணும்!
பேய்களின் தலைவி சென்னையில டயர்டாகி தூங்க போயிட்டாங்க இல்லைன்னா அவுங்களையே ஐடியா கேட்கலாம்
அளவில்லா ஆர்வத்துடன்
வால்பையன்

வாலு... நீங்களே இப்படி சொன்னா என்னா செய்யறது.
வற்றாத நதியே....
இந்த வசனம் தான் ஞாபகத்து வருதுங்க
இராகவன் நைஜீரியா

ஆமாம்ணே! கஷ்டம் தான் அளவில்லாமல் நொந்து
வால்பையன்

அப்படியா?? கிளிக்கு ரெக்க மொளச்சிடிச்சு.. (இது நியாபகம் வரலியா)
இஃகி.. இஃகி
உருப்புடாதது அணிமா

அது உங்களைப் பார்த்தவுடன் ஞாபகம் வந்துடுச்சு
இராகவன் நைஜீரியா

மொளைக்குது பெருசா மே மாசம் மட்டும் தான் அந்த சுதந்திரம் அப்புறம் திரும்பவும்! வேதாளத்தோட முருங்கை மரத்துல குடும்பம் நடத்தணும்
அளவில்லா உயரத்தில்
வால்பையன்

சில விசயங்களை தவிர்க்க முடியாது வாலு...
இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...
என்சாய்...
உருப்புடாதது அணிமா

///அழகருக்கு பேசி முடிச்சாச்சு எல்லோரும் விருந்துக்கு மறக்காம வந்துருங்க////

அடபாவி மக்கா.. லஞ்ச் முடிச்சு.. ஒரு மீட்டிங் போயிட்டு வர்றதுக்குள்ள எனக்கும் அந்த பேரழகிக்கும் (என்ன பண்றது இனி மேல் அப்படி தான் வெளியில சொல்லியாகணும்) கல்யாணமே பேசிமுடிச்சிட்டீங்களே.. உங்க ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லியா.... இந்த கொடுமைய தட்டி கேக்க ஆளே இல்லியா????.. ச்சின்னப்பையன் நீங்க கேளுங்களேன்.. ரம்யா நீங்க கேளுங்களேன்.. குடுகுடுப்பை நீங்களாவது கேளுங்களேன் பா..அதீத பயத்துடன்.....பீதியுடன்.. மிரட்சியுடன்.. இன்னும் எல்லா ”உடன்”
Alagar P

///இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை...என்சாய்...////
பழய தத்துவம் 3986934063906834096. அதே குறும்போடு,

உருப்புடாதது அணிமா

என்னே ஒரு புள்ளிவிவரம். வாழ்க அழகர்...
இராகவன், நைஜீரியா


hi ramya,pair of shoes kandupuduchitaen.
aanaa enna oru akka vanthaanga..
vandhu pudinkittu poittaanga..
evvalavu alagaa irunthaanga theriyuma...
cute lady..i have enjoyed with thril.
with love,
Raji

டிஸ்கி: இது எனக்கு வந்த மின்னஞ்சல் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.





Tuesday, April 14, 2009

ஆதரவற்ற குழந்தைகளும் - முதியவர்களும்!!

ஆதரவைத் தேடும் ஆதரவற்றோர் குழுமி இருக்கும் சோலைகள்!!

இந்த பதிவு எனது ஐம்பதாவது பதிவு. நான் பதிவு ஆரம்பிக்கும் போது என்னுடன் எனது சகோதரியும், ஒரே ஒரு சகோதரர் மட்டும் தான் இருந்தார்கள்.

ழுத ஆரம்பித்த சிலநாட்களிலேயே ஜீவன் என்ற அருமையான மனிதரை நண்பராகக் கிடைக்கப் பெற்றேன். இதைத் தொடர்ந்து பதிவுலகில் பல நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் கிடைக்கப் பெற்றேன்.

ன்று எனது ஐம்பதாவது இடுக்கைக்கிற்கு சகோதரி ராமலக்ஷ்மி மற்றும் ஜீவன் அவர்களும் இந்த இடுக்கை எழுத ஊக்கச்சக்தியாக இருந்தார்கள்.

சகோதரி ராமலக்ஷ்மி எழுதிய தொகுப்பு --> இவர்களும் நண்பர்களே...
நண்பர் திரு.ஜீவன் எழுதிய தொகுப்பு --> இறைவனின் குழந்தைகள்

ழுதச் சொன்ன எனதன்புச் சகோதரி ராமலக்ஷ்மி அவர்களுக்கு எனதன்பு வணக்கத்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக்க் கொள்கின்றேன். அதே போல் திரு.ஜீவன் அவர்களுக்கும் எனதன்பு வணக்கத்தையும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சில அருமையான பிள்ளைகள் தனது பெற்றோர்களை அன்பான முறையில் கவனித்துக் கொள்கின்றார்கள். நான் ஒட்டு மொத்தமாக அனைவரையும் குறை கூறவில்லை. ஆதரவின்றி இதுபோல் இல்லங்களில் வசித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களை மையமாக வைத்து இதை எழுதுகின்றேன்.


முதியோர் இல்லங்கள்
======================
தரவற்றோர் இல்லங்கள் பல உள்ளன, அதில் எதைச் சொல்ல. எனக்கு இது போன்ற இல்லங்களின் தொடர்பு சமீப காலமாகத்தான் என்றில்லை - சிறு வயது முதல் எனக்கு இது போன்ற இல்லங்களுடன் தொடர்பு உண்டு. நான் பாட்டியிடம்தான் வளர்ந்தேன். அவர்கள் பாட்டி என்ற அன்பை மட்டும் தான் தர முடியும் இல்லையா? அம்மா மற்றும் அப்பா என்ற அன்பை தர முடியுமா? முடியவே முடியாது!! அப்போது எங்கள் வீட்டின் அருகே ஒரு இல்லம் இருந்தது. அங்கே அடிக்கடி சென்று விடுவேன்.

அவங்களை எல்லாம் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். புரியாத வயது. ஆனாலும் ஏதோ ஒன்று என் மனதில் நெருடிக் கொண்டே இருக்கும். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனது எட்டு வயதில் என் மனதை அரித்த எண்ணங்கள் அவை!! நமக்காவது பாட்டி இருக்காங்க, ஆனா இவங்களுக்கு அந்த உறவு கூட இல்லையே! என்ற எனது நியாயமான கேள்விகள் தான் என்னை வாட்டி எடுத்த நினைவுகள். அடிக்கடி அங்கே சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வேன்.

என்ன உதவி?? பெருக்குவேன், துணிகள் மடித்துத் தருவேன், இல்லத்தின் மேலாளர் கடையில் சென்று ஏதாவது வாங்கி வரச் சொன்னால் அதை வாங்கித் தருவேன். அந்த வயதில் எனக்கு தெரிந்த உதவி அவ்வளவுதான்.

ப்படித்தான் எனக்கு ஆதரவற்றோர் இல்லங்கள் பழக்கமாயின. நான் வளர வளர, இவர்களின் நினைவுகளும்,சந்திப்புகளும் உரம் போட்டது போல் என்னுடனேயே வளர்ந்து வந்தன. பள்ளியில் படிக்கும் போது அந்த வயதின் பரிணாம வளர்ச்சி, கல்லூரியில் படிக்கும்போது சற்றே பகுத்து பார்க்கும் பரிணாம வளர்ச்சி. அதன் பிறகு சிறிது இடைவெளி. நானாக ஏற்படுத்திக் கொள்ளாத இடைவெளி தான் அது. நினைவுகள் மட்டும் கோலோச்சிய நாட்கள் அவை. என் நினைவுகள் மங்கிய நாட்களில்தான் நான் இவர்களை மறந்தேன் என்று கூற வேண்டும். நினைவுகள் மீண்டவுடன் அனைவரையும் சந்த்தித்த அந்த நாள் நான் மறுபடியும் புத்துணர்வை அடைந்த நாளாகும்.

பூ, காய், கனிகள் இவற்றை கிளைகள் தாங்குகின்றன. கிளைகளை மரம் தாங்குகின்றது, மரத்தை வேர்கள் தாங்குகின்றன என்றாலும் அந்த வேர்களைத் தாங்குவது யார்? இங்கே பூமித் தாய் தாங்குகிறார்கள் என்பது எல்லாரும் அறிந்த உண்மையே! ஆனால் நிஜ வாழ்க்கையில், இது போல் கேள்விக் குறியாய் நிற்கும் மரங்களைத் தாங்குவது யார்? இது ஒரு கேள்விதானே? விடை தெரியவில்லை தானே? இதே போல்தான் சில இடங்களில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோர்கள் "ஆதரவற்றோர்கள்" லிஸ்டில் சேர்ந்து விடுகிறார்கள்.

தரவற்றோர்கள் இல்லங்களை மறுவாழ்வு இல்லங்கள் என்றும் கூட கூறலாம். ஏனெனில், அங்கு சேர்ந்த பிறகு பலவிதமான சொந்தங்களை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள் இந்த ஆதரவற்ற முதியவர்கள். அது போல் ஏற்பட்ட சொந்தங்களை தமது சொந்தங்களாகவே பாவித்து அவர்களுடன் தனது வாழ்க்கைப் பாதையையும் இணைத்து நடக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். எப்படியும் வாரம் ஒரு முறை இது போல் உள்ள இல்லங்களுக்கு சென்று விடுவேன். யாராய் இருந்தாலும் பாரபட்சம் கிடையாது. எல்லோருடனும் பேசுவேன்.

முதியவர்களிடம் கனிவாகவும், அதே நேரத்தில் அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்றவகையில் பேசினால்தான் அவர்கள் விரும்புவார்கள். அவர்களின் முகபாவத்த்ல் இருந்து தெரிந்து கொண்டுவிடுவேன் இவர்கள் என்ன மூடில் இருக்கின்றார்கள் என்று. இதெல்லாம் ஒரு பெருமை கிடையாதுங்க. இது போல் பலரை பார்த்து நான் பெற்ற அனுபவம் தான் காரணம். அவர்களின் மன நிலைக்கு ஏற்ப பேசுவதால் என்னை மிகவும் பிடிக்கும்.

ருகே சென்று அமர்ந்தால், எப்படி வந்தாய், பஸ் என்று கூறினால், ரொம்ப கூட்டமாய் இருந்ததா? என்று கனிவுடன் கேட்பார்கள். கொஞ்சம் களைப்போடு சென்றால் வேலை அதிகமா? இல்லை பஸ்சில் கூட்டத்தில் கஷ்டப்பட்டு வந்தாயா?? இல்லை ஒன்றும் சாப்பிடாமல் வந்தாயா என்று கனிவுடன் விசாரிப்பார்கள் . சாப்பிடவில்லை என்றால் தன்னிடம் உள்ள ஏதாவது ஒன்றை சாப்பிட தருவார்கள். அதை நாம் வாங்கி சாப்பிட்டு விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே நெகிழ்ந்து விடுவார்கள். அருகே அமர்ந்து, நாம் உண்ணுவதை ரசித்து, நம் தலை கோதி கண்களில் நீர் மல்க அமர்ந்த்திருப்பார்கள். சிலர் ஜோடியாகவும் இருப்பார்கள். சிலர் தனியாகவும் இருப்பார்கள்.

தில் என்ன பெரிய விஷயம் என்னவென்றால், அவர்களின் உறவினர்கள் இவர்களை தொடவே மாட்டார்களாம். கூட வந்திருக்கும் குழந்தைகளுக்கு அன்பாக ஏதாவது கொடுத்தால் இவர்கள் முன்னாடியே குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களாம். இதெல்லாம் கூறி கண் கலங்குவார்கள்.

வாழ்க்கையை தொலைத்த பெண்கள்
================================

தே போல் சிறுவயதிலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கின்ற பெண்கள்- என்ன சொல்வது என்றே தெரியாது, அந்த முகத்தில் குழந்தைதனம் கூட மறைந்திருக்காது, அவர்களின் கைகளில் ஒரு குழந்தை இருக்கும்! இப்படி எல்லோருடனும் சிறிது நேரம் கழிப்பேன். சில பெண்கள் ஒருவரிடமும் பேசவே மாட்டார்கள். என்ன கேட்டாலும் அமைதிதான் காப்பார்கள். அதையும் நிர்வாகம் என்னிடம் கூறும். நிர்வாகம் அந்த பெண்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து கூறச் சொல்லுவார்கள். அதெப்படி பேசாமல் இருப்பது என்று, நான் எப்படியாவது பேச வைத்து விடுவேன். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும், இரண்டாவது முறை சந்திக்கும் போது சென்ற முறையைவிட பேசுவது கொஞ்சம் சுலபமாகத் தெரியும்.

து போல் என் மனதிற்கு தெரிந்தால் அடுத்த நாளே அலுவலகத்தில் விடுப்பு கொடுத்து விட்டு மதியம் சென்று சந்திப்பேன்.. என்னை எதிர்பார்க்காத தருணத்தில் பார்த்துவிட்டால் என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்பார்கள். இப்படித்தான் அவர்களின் மனதில் இடம் பிடித்து, பிறகு விவரம் அறிந்து அவர்களின் பெற்றோகளிடம் சேர்க்கும் வரை எனது பங்கு இருக்கும். அப்போது அந்த பெற்றோர்கள் என்னை கனிவுடன் பார்த்து இவ்வளவு சிறிய வயதில் உனக்கு இவ்வளவு சிரமம் எங்க பொண்ணு வைத்துவிட்டதே நீ நல்லா இருப்பாய் மகளே ! என்று வாழ்த்தியவர்களும் உண்டு.

தற்கும் அவர்களை ஆசுவாசப் படுத்தி அந்த தவற்றையும் மன்னித்து விடுங்கள் என்று கூறுவேன். அந்த இடத்தில் என்னை நிறுத்தி பார்ப்பேன், மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்போது குற்ற உணர்வுடன் கூறுவேன், ஆனால் அவர்கள் அப்படியே எடுத்துக் கொள்ளுவார்கள். நான் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளுவார்கள். இப்படித்தான் வாழ்க்கைப் பாதை சீராகப் போய்கொண்டு இருக்கின்றது.


மழலை இல்லம்
=================


மேலே காணும் பிறந்து ஆறே நாட்களான நான் பெயர் வைத்த குழந்தை!!

மேலே காணும் குழந்தைகள் தான் நான் கூறிய AIDS என்ற அரக்கன் தாக்கிய குழந்தைகள். இது போல் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். நிர்வாகம் இதற்கு மேல் விவரம் தெரிவிக்க விரும்பவில்லை.

தரவற்றோர் இல்லம் ஒன்றில் "மழலை இல்லம்" என்று ஒரு பகுதி. அதில் இருக்கும் மழலை பட்டாளங்களுக்கு நான் மிகவும் பழக்கம். பேச தெரியாது. ஆனால் என்னை அந்த பிஞ்சு மனங்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும், என்னை பார்த்தவுடன் துள்ளுவார்கள். சிரிப்பார்கள், தூக்கச் சொல்லி அடம் பிடிப்பார்கள். இதில் ஒன்றிற்கு இரண்டாகப் போட்டி வேறு. இருக்கும் எல்லாரையும் தூக்கி கொஞ்சி விட்டு படுக்க வைத்தால்தான் அடங்குவார்கள். இல்லையென்றால் அடம்தான் அதிகமாகும். அந்த குழந்தைகள் அத்தனையும் தூக்கிக் கொண்டு வந்திடலாமான்னு ஆசையா இருக்கும்.

தில் பெரிய வருத்தம் என்னவென்றால் சில குழந்தைகளுக்கு AIDS என்ற அரக்கன் தாக்கி இருக்கிறான் என்பது தான் மிகப் பெரிய சோகம். உள்ளே நுழைந்தவுடனே எல்லாம் ஓடி வந்து நம்மை கட்டிக்கொள்ளும். இதில் பல குழந்தைகளுக்கு நானும், எனது சகோதரியும் பெயர் வைத்து இருக்கின்றோம். பல குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டு வெளிநாடு சென்று விட்டன. அது போல் குழந்தைகள் அதிகம் கிடைக்கும் இடம் பஸ் நிறுத்தம்தான். இவர்களுக்கு மருத்தவர்கள் கொடுக்கச்சொல்லும் உணவு மிகவும் சிறந்ததாக இருக்கும். இப்படியும் சில குழந்தைகள் வளருகிறார்கள். உடலுக்கு போடும் சோப்பில் இருந்து உட்கொள்ளும் உணவு வரை மருத்துவரின் ஆலோசனையின் பேரில்தான் கொடுப்பார்கள். ஏனெனில் பிறந்தவுடன் எடுத்து வரும் குழந்தைகள்தான் இங்கே அதிகம்.

வ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனி தொட்டில்கள், ஐந்து குழந்தைகளுக்கு ஒரு பணிப்பெண். சுத்தமாக எப்போதும் வைத்திருத்தல். அருமையான நிர்வாகம். தனியாரோடதுதான். அதில் ரெண்டு குழந்தைகளை எடுத்து வந்திடலாமான்னு மனது அடம் பிடிக்கும். ஆனால் எங்க குடும்ப நண்பர் வக்கீலாக இருக்கிறார். இப்போது நல்லாத்தான் இருக்கும் காலப் போக்கில் நீ தேர்ந்தெடுத்திருக்கும் வாழ்க்கைக்கு பெரிய களங்கத்தை உண்டு பண்ணும் என்றார். அதனால் அந்த முயற்சியில் இருந்து பின் வாங்கிட்டேன்.

வெளியாட்கள் பல தடைகளைத் தாண்டித்தான் அந்த குழந்தைகளை சந்திக்க முடியும். வெளியில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் - ச்சான்சே இல்லே. யாரும் நேரடியாக கொடுக்க முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு! அதனால் குழந்தைகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கின்றன. அதே போல் தத்து எடுத்துக் கொள்ள வருபவர்களும் அவ்வளவு சுலபமாக தத்து எடுக்க முடியாது. எல்லாமே சட்டத்திற்கு உட்பட்டுதான் கொடுப்பார்கள். பிறகு அவர்கள் நல்ல முறையில் வளர்கிறார்களா என்பதையும் நிர்வாகம் பொறுப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருக்கும்.

வர்களை நான் ஆதரவற்ற குழந்தைகள் என்றே கூற மாட்டேன், அவர்களுக்குத் தான் நாம் இருக்கின்றோமே என்று நிர்வாகத்திடம் கூறுவேன். இந்த இல்லத்தில் வளர்ந்து வரும் குழந்தைகள், விவரம் அறியாப் பருவத்திலேயே வளர்ப்புப் பெற்றோர்களை அடைந்து விட்டால், அவர்களின் வாழ்க்கையில் துன்பமே இல்லை. உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களையும் அந்த செல்வங்கள் பெறவேண்டும் என்றும் நான் எண்ணுவதுண்டு. ஆனால் அவ்வாறு ஒரு வாழ்க்கை அமையாதவர்கள், அந்த இல்லத்திலேயே வளர்வதும் உண்டு. அது போல் வளர்பவர்கள் தனது வாழ்க்கை மிகவும் சோகத்தில் இருப்பது போல் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.

வர்களுக்கு நல்ல கல்வி, நல்ல உடைகள், நேரத்திற்கு தேவையான உணவு இவற்றை கொடுத்தாலே போதும் நிர்வாகத்திற்கு மிகவும் உதவியாக இருக்குமே. அவர்களுடன் சில மணி நேரம் கழித்தால் அவர்களின் சோகம் தவிர்க்கப்படும்.

ந்த இல்லம்தான் சிறந்தது, அந்த இல்லம் தான் சிறந்தது என்று நான் எதையும் கூறமாட்டேன். எனக்கு தெரிந்த வரையில் நிறைய இல்லங்கள் புற்றீசல் போல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றது. அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை நாமும் செய்து வருகின்றோம்.

இது போல் உள்ளவர்களுக்கு உதவிக் கரம் இன்னும் அதிகமானால் சந்தோஷமே. அருகில் உள்ள இல்லங்களுக்கு சென்று தன்னால் இயன்ற சிறு உதவின்னாலும் போதுமே.

னால் எவ்வளவோ செலவு செய்கின்றோம். நம்மால் முடிந்த நேரத்தில், முடிந்த பொருட்களை இந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கும் வாங்கிக் கொண்டு சென்று கொடுத்து விட்டு, ஒருநாள் முழுவதும் அவர்களுடன் கழிக்கும் சுகம் வேறு எதிலும் வராது. அந்த அருமையான உணர்வை நானும் அனுபவித்திருக்கின்றேன். என்னைப் போல் நிறைய பேர் அனுபவித்து இருப்பார்கள். அந்த சுகத்திற்கு வேறு எதுவும் ஈடு ஆகாது.

ந்த தலைப்பு பற்றி எழுத ஆரம்பித்தால் முடிவே இருக்காது. ஆனாலும் நான் இப்போது முடிக்கும் பகுதிக்கு வந்து விட்டேன். மற்றவைகளை அடுத்து ஒரு சந்தர்ப்பம் வரும்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

மறுபடியும் என்னை எழுதத் தூண்டிய சகோதரி ராமலக்ஷ்மிக்கும், நண்பர் ஜீவனுக்கும் நன்றி.

இப்போதெலாம் நேரடியாகவே சிலரை தேர்ந்தெடுத்து எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். இல்லங்களில் இருப்பவர்களை நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வருவோம். அதே போல் சுனாமியில் சிக்கி தனித்து விடப்பட்ட குழந்தைகளை கவனித்து வருகின்றோம். அவர்களின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம். கல்வி அறிவைக் கொடுத்தால் அவர்கள் பலரை காப்பாற்றலாம் அல்லவா??

எனது எதிர்காலத் திட்டம்
=========================

தனித் தனியாக என்னால் கவனிக்கப்படும் அனைத்து உள்ளங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து வைத்து, தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இது எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவது என்பது எனது அன்பு நெஞ்சங்ககளான உங்கள் வாழ்த்துக்களில் உள்ளது.

Tuesday, April 7, 2009

நண்பருக்கு பாராட்டு !!

நமது நண்பர் ஜமால் அவர்களுக்கு இந்த பாராட்டை அளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் பெருமையும் அடைகின்றேன்!!



கற்போம் வாருங்கள் என்றார், கற்றுக்கொள்ள கடல் கடந்து, மலைகள் பல கடந்து ஓடினோம். அவ்வாறு ஓடி வந்தவர்களை நண்பர் ஜமால் ஏமாற்றவில்லை.

பல கருத்துச் செறிந்த பதிவுகளைக் நண்பர் ஜமால் கொடுத்து இருக்கிறார். அவற்றில் எல்லாம் கருத்துக்கள் பல கோலோச்சின. ரசிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் இடுகைகளை கொடுத்து இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாரையும் நிமிர வைத்த இடுக்கை.. அதுதான் பத்து வரிகள் நிறைந்த பதிவு. "பத்து வரியில் தெரியாத கவிதை தொகுப்பு" என்று ஒரு இடுக்கை இட்டார் அல்லவா?? அதுதான் எல்லார் மனதிலும் போய் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது.

படிக்க முடியாத வரிகள் என்றாலும், அனைவரின் நெஞ்சத்திலும் நீடுழி வாழ்கின்ற திறன் பெற்று விட்டதல்லவா?


பின்னூட்டம் போட சோம்பல் படாமல், அந்த பத்து வரிக்கவிதைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐந்நூறு இப்படி பல ஆயிரம் பின்னூட்டங்களை குவித்தது.

பின்னூட்டங்கள் எப்படி இருந்தது என்ற விளக்கத்திற்கு நான் இங்கு வரவில்லை.

தனது பொன்னான நேரம் மற்றும் அன்பு அனைவற்றையும் கலந்து அல்லவா! நண்பருக்கு பின்னூட்டம் வழியாக வாரி வாரி வழங்கினார்கள் நம் சக நண்பர்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.. இந்த வரிகள் தானே நினைவிற்கு வருகின்றன.


வரலாறு காணாத வகையில் நம் நண்பர்கள் அனைவரும் ஒரு சேர நண்பர் ஜமாலை அவர்களை அன்பில் திக்கு முக்காட செய்து விட்டனர். இதைக் கண்டு திகைத்த நான் அத்தருணத்தில் முடிவு செய்தேன் என் நண்பனுக்கு இடுக்கை ஒன்று போட்டு அது என்றென்றும் நம் எல்லார் மனதிலும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.




அந்த எண்ணத்தில் அரும்பியதுதான் வாழ்த்து என்ற இந்த மொட்டு.

பத்தே வரிகள் தான்
பகட்டில்லாத வரிகள்
வரிகளில்தான் வேற்றுமை
கருத்தில் இல்லை வேற்றுமை
வரிகளின் நீளங்கள்
சிறிதும் பெரிதுமாக
சிங்காரமாக காட்சியளித்தன
சிதறி இருந்தால் முத்துக்கள்
சிதறாமல் சிந்தினோம்
சிரிப்பென்னும் முத்துக்களை
வாழ்த்துக்கள் தொடர்க !!


Monday, April 6, 2009

ஏழைக்குச் செல்வம் கிடைத்தால்!!

எனதருமைச் செல்லங்களே இன்று என் கதை கேட்க தயாரா இருப்பீங்க இல்லையா? இதோ ரம்யா வந்து விட்டேன்!!

ஓர் ஊரில் அடுத்தடுத்து செல்வந்தர் ஒருவரும், ஏழை ஒருவனும் குடி இருந்தார்கள். செல்வந்தரின் வீடு பெரிதாக இருந்தது. ஏழையின் வீடோ குடிசை வீடு.

ஏழைக்குச் சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்துக் கிடைக்கின்ற சிறிதளவு கூலியுடன் வீடு திரும்புவான் அவன். எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

அவன் வீட்டுக் கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கும். படுத்தவுடன் நன்றாகத் தூங்கி விடுவான் அவன்.

ஆனால் செல்வந்தரோ எப்பொழுதும் பரப்புடனும், கவலையுடனும், காட்சி அளித்தார். தன் வீட்டுக் கதவுகளையும் சன்னல்களையும் மூடியே வைத்திருந்தார். திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களைத் திருடி சென்று விடுவார்களோ என்று அஞ்சினார். அதனால் அவர் இரவில் தூங்குவதே இல்லை.

ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தார் அவர். இவ்வளவு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக் இருக்க முடிய வில்லையயே என்று வருந்தினார்.

ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய வ்ரும்பினார் அவர்.

ஏழையை அழைத்த அவர், நண்பனே! நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய். உனக்கு உதவி செய்ய எண்ணுகிறேன். என்னிடன் அள்ள அள்ளக் குறையாத செல்வம் உள்ளது. அதிலிருந்து உனக்கு நூறு பொற்காசுகள் தருகிறேன். நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து" என்றார்.

செல்வந்தரிடம் நூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட ஏழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.

இரவு வந்தது இந்தப் பொற்காசுகளைத் திருடர்கள் திருடிச் சென்று விடுவார்களோ என்று அச்சத்தில் வீட்டுக் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.

தூங்கும் போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்க வில்லை. சிறு ஓசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான்.

தன் மகிழ்ச்சி பறி போனதற்கும் காரணம் பொற்காசுகள் தான் என்று உண்மையை உணர்ந்தான் அவன்.

பொழுது விடிந்தது. பொற்காசுகளை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தான். "ஐயா! நான் ஏழை தான். உங்கள் பொற்காசுகள் என் மகிழ்ச்சியையும் அமைதியையும் குலைத்து விட்டன. எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று செல்வந்தரிடம் தந்துவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன்.

Sunday, April 5, 2009

செல்லமே செல்லம்ஸ் கார்னெர் !!

நேர்மையான உழவன்!!

இன்று நான் சொல்லும் கதை உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இது ராஜா பற்றிய கதையாயிற்றே.

வீரம் மிகுந்த 'பேசராவ்' என்பவர் மராட்டிய படைத் தலைவராக இருந்தார். பக்கத்து நாட்டின் மீது பெரும் படையுடன் சென்றார். பல வெற்றிகளைக் கண்டார்.

வெற்றி பெற்ற அவர் பல நாட்கள் பயணத்திற்குப் பின் தன் நாட்டை அடைந்தார். தலை நகரத்தை அடைய இன்னும் சில நாட்கள் பயணம் தேவைப்பட்டது.

பயணத்தால் தன் வீரர்கள் களைப்பு அடைந்து இருப்பதைக் கண்டார். அருகில் இருந்த சிற்றூர் ஒன்று அவர் கண்களுக்குத் தெரிந்தது.

வீரர்களைப் பார்த்து, "நாம் இங்கேயே முகாமிட்டுத் தங்குவோம்" என்றார். அங்கே முகாம் அமைக்கப்பட்டது.

வீரர்கள் பசியுடன் இருப்பதை அறிந்தார் அவர்.

வீரர் தலைவன் ஒருவனை அழைத்து "அருகில் உள்ள ஊருக்குச் செல், நமக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வா, தேவையான வீரர்களை உன்னுடன் அழைத்துச் செல்" என்று கட்டளை இட்டார்.

ஐம்பது வீரர்களுடன் அங்கிருந்து புறப்பட்டார் வீரர் தலைவர். அவர்கள் எதிரில் உழவர் ஒருவர் வந்தார்.

அவனைப் பார்த்து வீரர் தலைவர், "இந்த ஊரிலேயே தோட்டத்துடன் நல்ல விளை நிலம் எங்கே உள்ளது?" எங்களுக்குக் காட்டு என்றார்.

உழவர் அவர்களை அழைத்துச் சென்று ஒரு நிலத்தைக் காட்டினார்.

அங்கே ஒரு பக்கம் வாழையும், தென்னையும் காய்த்துத் தொங்கின. இன்னொரு பக்கம் கரும்பும் நெல்லும் நன்றாக விளைந்து இருந்தன.

மகிழ்ச்சியுடன் வீரர் தலைவர், "வீரர்களே! வயலுக்குள் இறங்கி உங்கள் விருப்பம் போல உணவுப் பொருள்களைக் கொண்டு வாருங்கள்" என்று கட்டளை இட்டார்.

ஆரவாரத்துடன் வீரர்கள் அந்த வயலில் இறங்கினார்கள்.

இதைக் கண்ட அந்த உழவர், "இதை விட அருமையான வயல் ஒன்று காட்டுகிறேன். எல்லாப் பழவகைகளும், கரும்பும், நெல்லும், காய்கறிகளும் அங்கே உள்ளன" என்றார்.

"இதை விட அருமையான நிலம் இருக்கிறதாம். நாம் அங்கே செல்வோம்" என்றார் வீரர் தலைவர்.

உழவரைத் தொடர்ந்து வீரர் தலைவரும், வீரர்களும் நடந்தார்கள், நெடுந்தொலைவு நடந்த பிறகு ஒரு நிலத்தைக் காட்டிய உழவர் "இதில் உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.

அந்த நிலத்தை பார்த்த வீரர் தலைவர் கடுப்பாகிப் போனார். "உழவரே! எதற்காக எங்களை இவ்வளவு தொலைவு வீணாக அழைத்து வந்தீர்? நீர் முதலில் காட்டிய நிலமே இதைவிட வளமாக இருந்ததே" என்று கோபத்துடன் கேட்டார்.

"ஐயா! நான் முதலில் காட்டியது வேறு யாருடைய நிலமோ? நீங்கள் அந்த நிலத்தில் பொருள்களை எடுத்திருந்தால் அந்த உழவனின் இழப்பிற்கு நானும் பொறுப்பு ஆவேன். இந்த நிலம் எனக்கே சொந்தமான நிலம். அதனால்தான் உங்களை இங்கு அழைத்து வந்தேன். உங்கள் விருப்பம்போலப் பொருள்களை எடுத்துச் செல்லுங்கள்" என்றார்.

உழவரின் சொற்கள் வீரர் தலைவரின் உள்ளத்தைத் தொட்டது. அந்த நிலத்தில் எதையும் தொடாமல் திரும்பிய அவர் படைத் தலைவரிடம் நடந்ததைச் சொன்னார்.

ஒரு உழவருக்கு இருக்கும் நேர்மையான உள்ளம் தனக்கு இல்லையே என்று வருந்தினார் அவர்.

"வீரர்களே! இந்த ஊரில் எந்தப் பொருள் எடுத்தாலும் அதற்கு உரிய விலையைத் தந்து விடுங்கள்". என்று கட்டளை இட்டார் அவர்.

பின்குறிப்பு
==========
இந்த கதையும் உங்களுக்கு சிந்திக்கவும், நல்ல நெறிகள் பற்றி யோசிக்கவும் வைக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கின்றது.

Saturday, April 4, 2009

மறுபடியும் குட்டீஸ் கார்நெர் !!

தனக்கு நன்மை!! அடுத்தவனுக்குத் தீமை!!


ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். வணிகத்திற்காக அவன் வெளியூர் செல்ல வேண்டி வந்தது.

பக்கத்து ஊருக்குச் சென்ற அவன், "ஐயா! நிறைய பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. உங்கள் கழுதையை இரவல் தாருங்கள். வணிகம் முடிந்து திரும்பியதும் கழுதையைத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான்.

பக்கத்து ஊர்காரனும் தன் கழுதையைத் தந்தான்.

வஞ்சகனான அந்த வணிகன் தன் கழுதையின் முதுகில் பஞ்சு மூட்டைகளை ஏற்றினான். பக்கத்து வீட்டுக்காரனின் கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றினான்.

தன் வேலையாளைப் பார்த்து "நான் குதிரையில் முன்னாள் செல்கிறேன். என்ன நடந்தாலும் கழுதைகளை எங்கும் நிறுத்தாதே. பக்கத்து ஊர் வந்து சேர்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

இரெண்டு கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு வேலையாள் புறப்பட்டான். உப்பு மூட்டை ஏற்றப்பட்ட கழுதை தள்ளாடித் தள்ளாடி நடந்தது. பஞ்சு மூட்டையைச் சுமந்த கழுதையோ மகிழ்ச்சியுடன் நடந்தது.

திடீரென்று வானம் இருண்டது. மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இரண்டு கழுதைகளும் மழையில் நனைந்து கொண்டே நடந்தன.

மூட்டைக்குள் இருந்த உப்பு மழை நீரில் கரைந்து கீழே விழுந்து கொண்டே வந்தது. ஆனால் பஞ்சு மூட்டைகளோ மழையில் நனைந்து நீரை இழுத்துக் கொண்டு எடை அதிகமாகிக் கொண்டே வந்தது.

பஞ்சு மூட்டைகளின் கனத்தைத் தாங்க முடியாமல் வணிகனின் கழுதை துடித்தது. அதனால் அடியெடுத்து வைக்கவும் முடிய வில்லை. ஆனால் வேலையாளோ அதை அடித்து விரட்டினான்.

பஞ்சு மூட்டைகளின் எடை மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. முதுகு எலும்பு முறிந்த அந்தக் கழுதை அங்கேயே விழுந்து இறந்தது.

மூட்டைகள் வந்து சேரத் தாமதம் ஆவதை அறிந்தான் வணிகன். என்ன நடந்தது என்பதை அறிய குதிரையில் திரும்பினான்.

தன் கழுதை இறந்து கிடப்பதைக் கண்டான். என்ன நடந்து இருக்கும் என்பதும் அவனுக்குப் புரிந்தது.

'அடுத்தவன் கழுதை துன்பப் படட்டும். என் கழுதை மகிழ்ச்சியுடன் வர வேண்டும் என்று சூழ்ச்சி செய்தேன்! எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது'. என்று வருந்தினான் அவன்.

பின்குறிப்பு

==========

எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன வென்றால் "தன் வினை தன்னைச் சுடும்" இல்லையா??

மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நல்லவைகள் நம்மை ஓடோடி வந்தடையுமே !!

நசரேயன் அவர்களா இப்படி சொன்னது !!

இல்லே இல்லே அப்படி சொன்னது நசரேயன் இல்லே !!

நமது நண்பர் திரு.நசரேயன் அவர்கள் சொந்த ஊருக்கு வராராமாம். அதுக்கு விடுப்பு கேட்கப்போய் இருக்காரு. நசரேயன் மேலிடம் தற்சமயம் வேலை அதிகமா இருக்கு, இந்த நேரம் பார்த்து பொறுப்பில்லாமல் விடுப்பு கேட்கறீங்களே! இது நியாமா?? என்று பெரிய தலையின் காரியதரிசி மஞ்சள் அழகி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு நம் நசரேயன் தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது. என்று சற்று கோவமா சொல்லி இருக்காரு.

எனக்கு ரம்யா! ரம்யான்னு ஒரு தோழி இருக்காங்க. அவங்க பாருங்க எவ்வளவு சமத்தா பதிவு எல்லாம் எழுதறாங்க. நீங்க என்னடான்னா எப்ப பார்த்தாலும் பாஸ் பின்னாடியே சுத்திகிட்டு, அவரு சொன்னது பாதி, நீங்க சொல்லறது பாதின்னு பீலாவா விடறீங்க என்று நண்பர் தமிழில் கேட்க, அதற்கு அந்த மஞ்சள் அழகி நண்பர் என்ன பேசினாருன்னு புரியாமால் ஏதோ திட்டராருன்னு நினைச்சிகிட்டு, என்ன சொல்லறீங்க இப்போ என்று ஆங்கிலத்தில் கோவமாக கேக்க, அதற்குள் அங்கு வந்த M.D. என்ன பிரச்சனை நசரேயன் என்று கேட்க, நம்ம நண்பர், ஹி ஹி ஒன்றும் இல்லை வரச்சொல்லி என்னை மிரட்டறாங்கன்னு சொல்ல, அதற்கு M.D. அவங்க அந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டங்க.

உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, இல்லைங்க சார், நான் பேசாம என் கம்ப்யூட்டர் முன்னாடிதான் உக்காந்து இருந்தேன், இவங்கதான் என்னை கூப்பிட்டு திட்டறாங்க சார், அதற்கு M.D. அப்படி எல்லாம் அவங்க திட்ட மாட்டங்க. நான் தான் உங்களை வரச்சொல்லி சொன்னேன்.அதுக்கு போயி அவங்களை தெரியாத பாஷையிலே பேசறீங்க. நீங்க தான் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர் ஆயிற்றே என்று கேட்டார். மனசுக்குள்ளே அந்த M.D.ஐ திட்டிகிட்டு,எச்சூச்மீ நான் வந்து, இல்லே ஊருக்கு போய், இல்லே லீவு வேணும். (அப்பாடா ஒரு வழியா லீவு கேட்டுடோம். சரி குடுப்பாரா இல்லையா?? பாப்போம்.)

M.D. சொன்னாரு, ஓகே ஒன்லி ரெண்டு வாரம்தான், அதுக்கு மேலே அங்கே போய் லீவு தொடர்ந்தால் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. அப்படின்னும் கோவமா சொல்லிட்டாரு. அப்பா உடனே இடத்தை காலி பண்ணிடலாம்னு வெளியே ஓடி வந்தாரு. வெளியே இருக்கவங்களுக்கு ஒன்னும் புரியலை. இவ்வளவு நேரம் நசரேயன் என்ன உள்ளே பேசிக்கிட்டு இருந்தாருன்னு ஒரே குழப்பம்ஸ். கேள்வியோட அவரை பார்த்தாங்க. ஆனா நம்ம நண்பர் யாரு கிட்டேயும் பேசலை. உடனே கைபேசி எடுத்து தங்ஸ்க்கு அம்மா தாயே துணி மணி எல்லாம் கட்டி வை.

எங்க அலுவலகத்திலே லீவு கொடுத்திட்டாங்க, மறக்காம எங்க வீட்டுக்கு வாங்கின பொருட்கள் எல்லாம் பத்திரமா எடுத்து வை. அப்புறம் மறந்துட்டேன்னு சொல்ல கூடாது என்று பட படன்னு சொல்லிட்டாரு. கொஞ்சம் வேகமா பேசிட்டோமோன்னு ஒரு சந்தேகம் வேறே.

சரி சாயங்காலமாத்தானே வீட்டுக்கு போகப் போறோம். அப்போ சமாளிச்சுக்கலாம். அப்படின்னு ஒரு பெரு மூச்சு விட்டுட்டு, சரி இப்போ என்ன செய்யலாம், இந்த ரம்யாவோட பதிவை படிக்கலாமா? வேண்டாமா? அப்படீன்னு ஒரே குழப்பம், ஏன்னா படிக்க ஆரம்பிக்கும்போதே, M.D. ரூமிற்கு போகவேண்டியதா போய்டுச்சு, அதான் ஒரே யோசனையா இருக்குதுன்னு உள்ளேயே பேசிகிட்டாரு.

நண்பர்களே! நீங்க எல்லாம் நம் நண்பர்க்கு சொல்லுங்க, நம்ப ரம்யா பதிவை படிச்சதனாலேதான் உங்களுக்கு ரெண்டு வாரம் லீவு கிடைச்சுது. இந்த வெவரத்தை நல்லா எடுத்து சொல்லுங்கப்புங்களா!!

பின்குறிப்பு

===========

ஊட்டிக்கு போகாலாம்னு எல்லாரும் சொன்னவுடனே, சரி எல்லாரும் ரயில்லே போகலாம் ஒரே ஜாலியா இருக்கும்னு முடிவு பண்ணின அடுத்த நிமிடம் டிக்கெட் முன்பதிவு பண்ண போனோமா, அவங்க ஒரு பேப்பரை கொடுத்து, அதுலே உங்களைப் பற்றி விளக்கமா எழுதுங்கன்னு சொன்னாங்களா?? இப்படி வெவரம் கேக்கறாங்கப்பா, இப்போ நான் என்ன செய்யனும்னு நசரேயன் அவர்களை போன் போட்டு கேட்டேன் , அதுக்கு நசரேயன், இல்லே ரம்யா உங்க வெவரம் எழுதி கொடுத்த உடனே உங்களுக்கு ஊட்டி போக டிக்கெட் கொடுத்திடுவாங்க. நான் அப்படிதான் டிக்கெட் முன் பதிவு பண்ணிட்டு அடிக்கடி ஊருக்கெல்லாம் போவேன் அப்படீன்னு விளக்கம் சொன்னாரு.

அதே போல அங்கே டிக்கெட் எங்கே கொடுப்பாங்கன்னு கேட்டேன், அதுக்கு அங்கே இருந்தவரு ஒருவர் சொன்னாரு, உங்களோட வர்றவங்க வெவரம், மற்றும் உங்க வெவரமும் எழுதி கொடுத்தா! ஊட்டிக்கு போக டிக்கெட் கொடுப்பாங்கன்னு சொல்லி என் கிட்டே ஒரு பேப்பரை கொடுத்தாரு. பரவா இல்லையே நம்ப நசரேயன் ரொம்ப விவரமான ஆளுதான். சரியாதான் நமக்கு சொல்லி கொடுத்திருக்காருன்னு எனக்கு நானே மனதுக்குள்ளே நசரேயனுக்கு ஒரு சபாஷ் போட்டுகிட்டேன்.

நானும் என்னைப்பற்றியும், என் கூட வரவங்களைப் பற்றியும் எழுதி கொடுத்துட்டு ஊட்டிக்கு போக டிக்கெட் கொடுங்கன்னு கேட்டேன். நீங்க முன்பதிவு பண்ணின டிக்கெட்டுக்கு இவ்வளவு பணம் தரனும், பணமும் சரியான சில்லரையும் குடுத்துடுங்கன்னு சொன்னாங்க. நான் சொன்னேன் இதில் உள்ள கேள்விகளுக்கு விடை எழுதினால் போதும் டிக்கெட் கொடுத்திடுவாங்கன்னு நசரேயன் சொன்னாதா சொன்னேன். அதுக்கு அந்த ரயில்வே அதிகாரிங்க யாருங்க அந்த நசரேயன்! லாலுக்கு வேண்டியவரா இல்லே லாலுவோட மறு பெயரா?? அப்படீன்னு கேட்டாங்க??, இல்லேம்மா மரியாதையா பணத்தைக் கொடுத்திட்டு டிக்கெட்டை வாங்கி கிட்டு போங்க, இல்லேன்னா இடத்தை காலி பண்ணிடுங்கன்னு சொன்னாங்க.

நான் வாங்கின சம்பளத்தை என்னோட மணிபர்சிலே வச்சி, மனிபர்சோட ஜிப்பை மூடி பத்திரமா வச்சிருந்து, அப்புறமா நான் என்னோட மணிபர்சை திறந்து அதுக்குள்ளே இருந்த என்னோட பணத்தை எடுத்துக் கொடுத்து டிக்கெட் வாங்கி ஊட்டி போயிட்டு வந்தேனாக்கும். ஆனா இந்த நண்பர் நசரேயன் என்னா சொன்னாருன்னா ஓசியிலே ஊட்டிக்கு போன ரம்யா.

இங்கே ஒரு உள்குத்து வச்சிருக்காரு, பாருங்க, ஐயா பாருங்க, அம்மா பாருங்க, அண்ணா பாருங்க, தம்பி பாருங்க, அக்கா பாருங்க, தங்கச்சிங்களா பாருங்க, இப்போ என்ன செய்யலாம்னு எல்லாருமா என்னா முடிவெடுத்திருக்கீங்க??

நல்லா கேட்டுக்கங்க, என் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி நான் ரயில் ஏறி ஊட்டி போனேன். இதுதாங்க நடந்த கதை.

Wednesday, April 1, 2009

ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!


முதல் பாகம் அன்று எழுதினேன் இல்லையா?? அதன் தொடர்ச்சிதான் இது!!

பாகம் II
==========

ஊரெல்லாம் சுற்றிவிட்டு மாலையில் நன்றாகச் சாப்பிட்டோம். வெளியே நிறைய காலேஜ் பசங்க டான்ஸ் எல்லாம் ஆடினாங்க. வேடிக்கை பாத்துட்டு எங்க ரூம்க்கு போனோம். என் தோழிகளின் தம்பிகள் மனதிற்குள் என்னைத் திட்டிக் கொண்டே எங்களுடன் வந்து விட்டார்கள். இதெல்லாம் நான் ஏற்கனவே கூறி விட்டேன். இப்போ தொடருவோம் சரியா ??

சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் ரூமிற்கு வந்தார். ரூமில் எல்லாம் வசதியா இருக்கான்னு பார்க்க வந்ததாக கூறினார். அதற்கு அக்கா கூறினார்கள், நாங்களே இன்னும் ரூமை பார்க்கவில்லை, இருங்க குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்க்கின்றேன் என்றார்கள்.


நானோ என்னங்க மேனேஜர்! ரூமிலே ஒரு Fan கூட இல்லே. நாங்க பத்து பேரு தங்கப் போறோம் Fan இல்லாம எப்படி தூங்கறதுன்னு கேட்டேன். அதற்கு அந்த மேலாளர் என்னை தலையில் இருந்து கால் வரை ஒரு மாதிரி பார்த்தார். பிறகு இங்கே எதுக்கும்மா Fan?? அதெல்லாம் இங்கே தேவையே இல்லை என்றார். என்னை ஏன் அவர் அப்படி பார்த்தார் என்று புரியவில்லை. அப்புறம்தான் மெதுவாக புரிந்தது, தலையில் குல்லா, இரெண்டு ஸ்வெட்டெர், கைகளுக்கு Glouse, கால்களுக்கு சாக்ஸ் இப்படி ரொம்ப உஷாரா இருந்தேன். அதற்கு மேல் Fan வேறே கேட்டதால் அந்த மேலாளர் என்னை ஒரு மாதிரிப் பார்த்திருக்காரு.


அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே என்னை ஒரு லூசு ரேஞ்சுக்கு ஹோட்டல் மேலாளர் பாத்துகிட்டு இருந்தாரு. எனக்கு ஒரே வெக்கம், வெக்கமா போச்சு. ஏனென்றால் ஒருவரும் எனக்கு சப்போர்ட்டா பேசவில்லை. அதான் அதுக்கு மேலே நான் வாயை திறக்கவே இல்லை.


எல்லாரும் படுத்துட்டாங்க. ஆனா எனக்குதான் தூக்கமே வரலை. மொத்தம் ஐந்து பெட், எல்லாம் டபுள் காட். எனக்கு என்று நான் பிடித்த இடம் கடைசி கட்டில். அதில் நானும் என் நெருங்கிய தோழியும் படுத்திருந்தோம். அவள்தான் நான் என்ன திட்டினாலும் கோவிச்சுக்க மாட்டா. என்னையை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு, நானும் எப்பவுமே அவளை கிண்டல் பண்ண மாட்டேன். மீதி எல்லாரையும் நல்லா ஓட்டுவேன். நான் எப்போதும் கதவுகிட்டே படுக்க மாட்டேன். கதவை திறந்து திருடன் யாரவது வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கும். அப்படி வந்தா மொதல்லே அடிபடரவ நான்தானே.


அதே போல் அன்றும் கடைசியா தான் நான் படுத்துக் கொண்டு இருந்தேன். இடம் மாற்றம் எனக்கு எப்பவும் தூக்கம் வராது. இது கூட ஒரு விதமான மனப்பிராந்தி. என்ன செய்ய?? எல்லோரும் தூங்கிவிட்டார்கள்.


நான் மட்டும் விழித்திருந்தேன். இப்போதுதான்விழித்திரு, தனித்திரு என்ற சொற்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது.
திடீரென்று ஏதோ சத்தம். என்னவென்று லைட் போட்டு பார்த்தேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள். இருவரில் ஒரு பையன் கீழே கிடந்தான். ஒருவன் மற்றொருவனை எட்டி உதைத்ததால் ஏற்பட்ட குழப்பம்.


ஆனால் உதைத்தவனோ ஒரு கேள்விக் குறியாக படுத்திருந்தான். கட்டிலில் இடமே இல்லை மற்றொருவனுக்கு. அவ்வளவு ஆக்கிரமிப்பு அவனை அடித்து எழுப்பி கீழே கிடந்தவனை கட்டிலில் படுக்க வைப்பதற்குள் ஒரு வழியாகி விட்டோம்.

ஒரு வழியாக பிரச்சனை முடிந்து விட்டது என்று அனைவரும் தூங்கி விட்டார்கள். மறுபடியும் எனக்குள் ஒரே போராட்டம். தூக்கம் வரலை.

ஜன்னல்கள் மூடி இருந்ததாலே காற்றோட்டமே இல்லாதது போலவும், மூச்சு முட்டுவது போல் ஒரு உணர்வு. அதனால் ஜன்னலை திறந்தேன் அவ்வளவுதான் ஐஸ் வந்து மேலே விழுந்தது போல் மூச்சு திணறி விட்டது. அவ்வளவு சில்! லேசாக திறந்து வைத்து விட்டு, கம்பளிப் போர்வைக்குள் புகுந்து விட்டேன். எனக்கு மட்டும் இரெண்டு கம்பளிப் போர்வை அதற்குள்ளும் ஒரே குளிர். உள்ளுக்குள் இருக்கும் எலும்புகள் கூட ஆடற மாதிரி தோன்றியது. ஐயோ! இந்த செப்டம்பரில் தெரியாமல் வந்திட்டோமே என்று என் மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டு இருந்தேன்.

இப்போது யாரோ குதித்து போல் ஒரு சத்தம், பிடி பிடி அவனை பிடிங்க என்று ஒரு அபயக் குரல். எனக்கு புரிந்துவிட்டது என்னவென்று, ஏனெனில் அந்த ஜன்னலில் கிரில் இல்லை. திறக்கும்போதே பயம்தான். ஆனாலும் கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான். அவ்வளவு தான் நான் பயந்து விட்டேன்; நாம் ஜன்னலை திறந்து வைத்தது தப்பா போச்சு எவனோ அது வழியா குதிச்சுட்டான்னு பயந்துட்டேன். இருட்டில் ஒன்றும் புரியவில்ல. அவன் எங்கு இருக்கிறான், யாரு பக்கமா நகருவான்னு கண்களை மிகவும் கூர்மையாக்கி கவனிக்க ஆரம்பித்தேன்.


இருந்தாலும் நாம safety ஆகிவிடலாம்னு முடிவெடுத்த அடுத்த கணத்தில் எதுக்கும் இருக்கட்டும்னு ஐயோ!! திருடன் திருடன் என்று என் பங்கிற்கு நானும் கத்திட்டு, ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன்.


எல்லாரும் எழுந்து விட்டார்கள், அக்கா எழுந்து லைட் போட்ட பிறகு யாரு யாருன்னு கேட்டாங்க. எல்லார் முகத்திலும் ஒரே பரபரப்பு! ஒரு பதிலும் இல்லை. அக்காவுக்கு கோவம் வந்துடுச்சு போல.


யாரு எங்கே ஒளிஞ்சி இருக்கீங்க மரியாதையா வெளியே வந்துடுங்கன்னு அக்கா சொன்னாங்க. ஆனால் யாரும் வரவில்லை. அதற்குள் என் தோழிகள் அக்காவிடம் ரம்யாவை காணவில்லை என்று கூறி விட்டார்கள். அக்கா பயந்து விட்டார்கள். ஐயோ! அவ ரொம்ப பயப் படுவாளே உன் கூடத்தானே படுத்திருந்தாள் இப்போ எங்கே போனா? அவளை மொதல்லே தேடுங்கன்னு சொல்லிட்டு, நாங்கள் படுத்திருந்த ரூம் பக்கத்திலே சிறிய ஒரு டிரெஸ்ஸிங் ரூம் இருந்தது. அங்கே திருடன் எங்கேயாவது ஒளிந்து கொண்டு இருப்பானோ?? என்று அக்கா உடனே ஹோட்டல் மேலாளருக்கு போன் செய்தார்கள். அந்த கதவையும் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டார்கள்.


பிறகு ஒரு வழியாக எல்லாரும் நின்று கொண்டிருந்ததால் மெதுவாக நான் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தேன். அதுவரை எல்லாரும் என்னை எங்கே தேடுவது என்று விழித்துக் கொண்டிருந்தார்கள். நான் மெதுவா போய் என் தோழியின் தோள் மீது கை வைத்தேன். அவள் திருடன் திருடன் என்று அலறிக் கொண்டே கட்டிலை சுற்றி சுற்றி வர ஆரம்பித்தாள். நான் கூறுகின்றேன் நான்தான்பா உன் தோள் மீது கை வைத்தேன் என்று. அதை யாருமே காதில் போட்டு கொள்ளவில்லை. அப்புறம்தான் எங்க அக்காவிற்கு உறைத்தது போல. ஆமா நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்தேன்னு கேட்டாங்க. அவங்களோட எல்லாரும் என்னை அடிக்கற மாதிரி பார்த்தாங்க.


அதுக்குள்ளே விடுதி மேலாளர் வந்து விட்டார். எங்கேம்மா திருடன் என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாரு. வந்தவரு கேட்டது என்னான்னா, அப்படி எல்லாம் இங்கே யாரும் வர முடியாது அந்த அளவிற்கு செக்யூரிட்டி வச்சிருக்கோம். என்ன ஒரே ஆர்பாட்டம் பண்ணுறீங்கன்னு திட்டினாரு. அக்காவுக்கு கோவம் வந்திடிச்சு என்னாங்க இப்படி பேசறீங்க?? நானே சத்தம் கேட்டுத்தான் எழுந்தேன்னு சொன்னாங்க. அப்போ சரிம்மா வந்த திருடன் எங்கே அப்படின்னு மேலாளர் கேட்டாரு. இல்லைங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க, நாங்க பார்த்தோம் என்று என் தோழி ஒருவள் பீலா விட்டாள்.

மேலாளர் சரி எங்கே காட்டுங்கள் என்றார். அக்கா அடைத்து வைத்த ரூமை காட்டினார்கள். அங்கே மெதுவா கையில் குச்சியுடன் சென்றார். அவருடன் எங்க அக்காவும் போனாங்க.


நான் எதுக்கும் இருக்கட்டும்னு ரூமின் ஒரு கோடியில் போய் நின்று கொண்டேன். வெளியே ஓடலாம்னு பார்த்தா கும்மிருட்டு. எங்கே ஓடுவது என்று தெரியவில்லை,அதான் அங்கே போய் நின்னுட்டேன்.


அந்த ரூமுக்குள்ளே போனா யாரையும் காணோம். மேலாளருக்கு ஒரே கடுப்பு. ஏம்மா இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுறீங்கன்னு திட்டிட்டாரு. அதான் எனக்கும் ஒன்னும் புரியலை. இருங்க யோசிக்கலாம்னு எங்க அக்கா சொன்னாங்க. அப்புறம்தான் ஆராய்ந்தார்கள், ஏன் திருடன் என்று முடிவு செய்தோமுன்னு யோசிச்சாங்க. ஆனா ஏன்னு புரியலை போல.

எனக்கும் கொஞ்சம் தைரியம் வந்து எல்லோருடனும் சேர்ந்து பேச ஆரம்பித்தேன். அதுவரை சும்மா இருந்த தோழிகள் என்னை கண்ணகி பார்வை பார்த்தார்கள். மேலாளர் சரி எல்லாரும் எதை வச்சு திருடன்னு முடிவு பண்ணினீங்கன்னு கேட்டாரு?? அப்போதான் எல்லாருக்கும் அது உறைச்சுது.

நான் சொன்னேன் இல்லேங்க யாரோ பிடி பிடின்னு கத்தினாங்க அதான் பயந்துட்டோம்.நான் கூறியதை அந்த மேலாளர் நம்பாமல் என்னைய ஒரு மாதிரி பார்த்தார். ஏன்னா மொதல்லே நான் விட்ட உதாரிலே (Fan இல்லேன்னு சொன்னேனே)என் மீது அவருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை. அதான். போய்யா போன்னு மனசுக்குள்ளே சொல்லிகிட்டேன். வெளியே சிரிச்சேன்.

அப்போதான் எல்லாரும் கவனித்தோம் கட்டிலில் படுத்திருந்த ஒரு பையன் மறுபடியும் கீழே விழுந்து அப்படியே தூங்கி கொண்டிருந்தான். மற்றொருவன் கட்டிலிலேயே படுத்திருந்தான்.

பிறகுதான் என் தோழி மெதுவாக கூறினாள், இல்லேப்பா என் தம்பி கொஞ்சம் தூக்கத்திலே உளருவான் ஆனா இப்படி எல்லாம் கத்துவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை என்று மிகவும் சாதரணமாக கூறினாள். அவ்வளவுதான் எல்லாரும் அவள் மீது கொல வெறியோட பாய்ந்தோம்.

மவளே!! நாங்க உயிரை கையிலே பிடிச்சிகிட்டு எங்கே ஒளியரதுன்னு தெரியாம நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும். நொந்து நூலாயிட்டேன் என்று சொல்லி நான்தான் அதிகமா அடிச்சுட்டேன். அப்புறமா, தம்பிங்க இரண்டு பேரையும் அடிச்சு எழுப்பிட்டோம்.


மரியாதையா உன் தம்பியைக் கூட்டிகிட்டு காலையிலே மலையை விட்டு ஏறங்கிடனும் ஆமா. அப்படின்னு கண்டிஷனா சொல்லிட்டேன். அதுக்கு அந்த தம்பி அக்கா நான் இனிமேல் அதுமாதிரி எல்லாம் கத்த மாட்டேன் என்னை அனுப்பிடாதீங்க என்று கெஞ்ச ஆரம்பிச்சான.


பாத்தா பாவமா போச்சு. சரிடா தூங்கும் போது வாயில் துணியை கட்டிக்கிட்டு தான் தூங்கனும். உன்னாலே அந்த பையன் வேறே ரொம்ப கஷ்டப் பட்டான் தெரியுமா?? அப்படின்னு சொன்னேன். இப்படிதாங்க ஒரு நாள் முடிஞ்சிபோச்சு.


பிறகு எங்க அக்கா என்னை நீ ஏம்மா எல்லாரையும் விட்டுட்டு ஓடினே?? அடி விழுந்தா எல்லாருக்கும் விழட்டுமே அப்படி நினைச்சா நல்லா இருக்கும் இல்லையா என்றார்கள். அட போங்க அக்கா எனக்கு பயத்துலே ஒண்ணுமே புரியலை அதான்...........