Sunday, May 31, 2009

ஜில் என்று ஒரு காதல் / நிறைவுப் பகுதி!!

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

அனைவரும் ஒருவழியாக மகனுடன் பெங்களூருக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். ராஜா அங்குதானே வேலை பார்க்கின்றான்.

"வாங்கப்பா! என்னோட ரூம் கொஞ்சம் அசிங்கமா இருக்கும். நான் இருந்தாதான் சுத்தமா வச்சிருப்பேன். எனது நண்பர்கள் கொஞ்சம் சோம்பேறிங்க. பாருங்க, எப்படி எல்லாம் புத்தகங்களும் துணிகளும் இறைந்து கிடக்கின்றன". இதில் பாதி நம்பளோடதுன்னு இவங்களுக்கு தெரியவா போகுது?

"டேய் என்னாடா இவ்வளவு கேவலமா ரூம் வச்சிருக்கீங்க? நாங்க ஹோட்டல்லே தங்கிக்கறோம். அப்பாவும் இதைதான் விரும்புவாங்க"

"சும்மா இருங்கம்மா இதெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க. ரெண்டு நாளுக்காக ஹோட்டல்லே போய் தங்குவாங்க? என்கூட தங்கி இருக்கிற நண்பர்கள் எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க. ஒருத்தன்தான் இருக்கான். அவனும் அலுவலகம் போய் இருக்கான். ராத்திரிதான் வருவான். ரொம்ப நல்ல பையன். அவனைத்தான் நாம பொண்ணு பார்க்க அழைத்துச் செல்லப் போகிறோம். நீங்க ரெண்டு பேரும் குளிங்க. நான் டிபன் வாங்கி வருகிறேன். அப்புறம் எல்லா பேசிக்கலாம்"

"சரிப்பா நீயும் குளி, சாமி கும்பிட்டப்புறம் சாப்பிடலாம்"

"என்ன சாமி கும்பிட போறீங்களா? அம்மா இது பேச்சிலர்ஸ் தங்கற ரூம். இங்கே அப்படி எல்லாம் வசதி இல்லை"

"சரி சரி நீ போய் குளிக்கவாவது செய்யலாம் இல்லையா? பேச்சிலர்ஸ் ரூம்ன்னா என்ன ஒரு பிள்ளையார் படம் கூடவா வச்சுக்க மாட்டீங்க? நல்ல பிள்ளைங்க போங்க!"

"இருங்க நான் ஒரு போன் பேசிட்டு வரேன் அதுக்குள்ளே நீங்களும் அப்பாவும் குளிச்சிட்டு வந்திடுங்க போங்கம்மா"

"ஏண்டா இப்படி வெரட்டரே? அவகிட்டே பேசனுமா? அதெ நேரா சொல்லிட வேண்டியதுதானே?"

"ஐயோ அம்மா இப்பவே மாமியார் மருமகள் சண்டை ஆரம்பமா? நாம்ப வந்ததை அவளுக்கு சொல்ல வேண்டாமா? சொன்னால் தானே அவளோட அப்பனை ஒரு இடத்துலே இருக்கச் சொல்ல முடியும்"

"ஏண்டா அவங்க அப்பா அவ்வளவு கோபக்காரரா? அப்பா இப்போதான் உடம்பு தேறி வந்திருக்காரு. எனக்கு பயமா இருக்குடா. இதுக்குதான் எங்க அண்ணன் மகளைக் உனக்கு கட்டலாம்ன்னு இருந்தேன். உங்க அப்பாவும் கேக்கலை, நீயும் உன் இஷ்டத்துக்கு ஆடறே! என்னமோ போங்க எனக்கு ஒன்னும் புரியலை"

"என்னா வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா? எப்படியாவது உங்க அண்ணன் மகளை கொண்டு வந்திடம்னு முடிவோட இருந்தே. அது வாயிலே மண்ணு! சரி, போய் குளிக்கிற வேலையைப் பாரு. அவனை வம்பிழுக்காதே"

"ஆமாங்க நான் வம்பிழுக்கத்தான் வந்திருக்கேன் பாருங்க! ஏதோ என்னோட ஆற்றாமையை சொன்னேன் அவ்வளவுதான்"

"சரி இப்படியே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருங்க, இதோ நான் வந்திடறேன்" என்று அலைபேசியை எடுத்துக் கொண்டு தனிமையை நோக்கி ஓடினான் ராஜா.

"ஹேய் நான்தான்! எங்கே இருக்கே? வீட்டிலேயா இல்லே வெளியேவா? உங்கப்பன் முன்னாடியா?"

"இங்கே பாருங்க போன் பண்ணினா என்ன விஷயம்ன்னு மட்டும் சொல்லணும். தேவை இல்லாம எங்கப்பாவை திட்டக்கூடாது, இங்கே வந்திட்டீங்களா? இல்லே ஊரிலேயே இருக்கீங்களா?"

"ஏய் அதை சொல்லதாண்டி போன் பண்ணினேன், அதுக்குள்ளே ரொம்ப அலட்டிகிறியே! ரொம்ப அலட்டாதே உடம்புக்கு நல்லதில்லை"

"என்னது டீயா? உடம்பு இப்படி இருக்கு? சரி அவங்க எல்லாம் வந்திட்டாங்களா?"

"அவங்களா? எவங்க? உங்க வீட்டு வேலைக்காரங்களா? உன்னோட மாமியாரு! மாமனாரு! அந்த மரியாதையோட பேசணும். சரியா?"

"ரொம்ப கொக்கரிக்காதீங்க! உங்க அம்மாவும் அப்பாவும் நல்லபடியா எங்க அப்பா கிட்டே சம்மதம் கேக்கட்டும். மீதி எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்"

"இங்கே பாரு நல்லவிதமா நாலு வார்த்தை பேசலாம்னு வந்தா ரொம்ப அதிகாரமா பேசுறியே! கல்யாணம் ஆனா உனக்கு ரொம்ப எகத்தாளமா போய்டும் போல இருக்கே?"

"என்ன எகத்தாளமா? யாருக்கு எனக்கா? இங்கே பாருங்க ரொம்ப ஓவரா பேசறீங்க. இப்போ எனக்கே பயமா இருக்கு, உங்களுக்கே இவ்வளவு வாய்ன்னா உங்க அம்மாவுக்கு எவ்வளவு வாய் இருக்குமோன்னு. நான் எப்படி அவங்களை சமாளிப்பேன்னு தெரியலை"

"சரி சரி அடங்கு, உங்க வீட்டு குட்டி பிசாசை வெளியே அனுப்பிடு. அதே வச்சிக்கிட்டு எல்லாம் நல்ல காரியம் பேசமுடியாது, உங்கவீட்டு பன்னு அட தப்பா சொல்லிட்டேனோ? அதான் சின்னு அதையும் பிசாசோட வெளியே விரட்டி விட்டுடனும். சரியா?"

"இங்கே பாருங்க இப்பவும் ரொம்ப அதிகமா பேசரமாதிரிதான் இருக்கு! உங்க அம்மா அப்பா மட்டும் வந்தா போதும்ன்னு நினைக்கின்றேன். நீங்க வந்து மறுபடியும் எங்க அப்பாவை வெறுப்பேத்தாதீங்க"

"சரி வை வேறே போன் வருது"

"ராஜா என்னப்பா எங்கே இருக்கே? நாங்க ரெண்டு பெரும் குளிச்சி தயாராகிவிட்டோம். எப்போ கிளம்பப்போறோம்? உன்னோட நண்பன் எப்போ வரான்? கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டி இருக்கு. நீ வாங்கி வந்திடறயா?"

"அம்மா நான் வேண்டிய பொருட்கள் அனைத்தும் வாங்கிதறேன். ஆனா ஒரு சின்ன விஷயம் நீங்க ரெண்டு பெரும் அவங்க வீட்டுக்கு மொதல்ல போய்டுங்க. நான் என் நண்பனை அழைத்துக் கொண்டு நேரா வந்திடறேன்"
"என்னடா கடைசியிலே இப்படி சொல்றே நான் எப்படி தனியா போறது?"

"ஏம்மா உங்க கூடத்தான் அப்பா வராரு இல்லே எப்படி அது தனியாகும்?"

"என்ன பிரச்சனை? ரெண்டு பேரும் இங்கே இருந்து பேசிகிட்டு இருக்கீங்க?"

"இதுதான் விஷயமா? ராஜா நீ உன்னோட நண்பனை அழைத்துக் கொண்டு நேரா அவங்க வீட்டுக்கு வந்திடு.நீ கொடுத்த முகவரிக்கு நாங்க போயிடறோம். உங்க அம்மா சொல்லறதை கேட்டு நீ ஒண்ணும் கவலைப் படாதே"

"சரிப்பா தேவையான பொருட்கள் வாங்கி வருகின்றேன் அதுக்குள்ளே அங்கே டிபன் வாங்கி வச்சிரிக்கேன். சாப்பிட்டவுடன் நீங்க கிளம்ப தயாராகுங்க"

"சரிப்பா போயிட்டு வா"

"அப்பா கால்டாக்ஸி அழைத்து வந்திருக்கேன் தயாரா இருக்கீங்களா?"

"இதோ வந்திட்டோம், சரி நீ உனது நண்பனை அழைத்துக் கொண்டு உடனே வந்திடு பத்திரமா வந்து சேரு".
"கடவுளே சின்னு, குட்டிபிசாசு இவங்களாலே எந்தப் பிரச்சனை வரக்கூடாது" என்று மனதுக்குள்ளே வேண்டிக் கொண்டு நண்பனை பார்க்க புறப்பட்டான் ராஜா.
ஒரு வழியா சரியான முகவரிக்கு வந்து சேர்ந்தார்கள். "வீடு பெருசாதான் இருக்கு. நம்ம பைய இதெ பார்த்துதான் மயங்கிட்டானோ? ச்சேசே அப்படி எல்லாம் இருக்காது"என்று மனதிற்குள்ளே பேசிக்கொண்டு கணவனின் முகபாவத்தை பார்த்தாள் மானசா.

"என்ன மானசா நம்ம பையன் நல்ல பெரிய இடமாத்தான் பிடிச்சிருக்கான் போல"

"இங்கே பாருங்க, நம்மளும் நல்லாதான் இருக்கோம். வீட்டை எல்லாம் பார்த்து வழியக் கூடாது. உள்ளே போய் மனுஷாளை பார்த்து அப்புறமா பெருமையா சிரிங்க"

சரி சரி என்று மனைவியை ஆசுவாசப் படுத்துவதற்குள் சின்னு ஆவேசமா பாய்ந்து வந்தது.

சின்னு கத்தியதை கேட்டு காஜோல் வெளியே ஓடி வந்தாள். அங்கே இருவரையும் பார்த்து புரிந்து கொண்டாள். வாங்க அம்மா! வாங்க அப்பா!" என்று வரவேற்பு கொடுத்திட்டு "அம்மா!" என்று கத்திக் கொண்டே உள்ளே ஓடினாள். ஓடும் வேகத்தில் சின்னுவை அழைத்து செல்லாததால் அவர்கள் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

சத்தம் கேட்டு காஜோலின் அப்பா வெளியே வேகமாக வந்தார். வந்த வேகத்தில் சின்னுவை அதட்டினார். சின்னு அமைதியானது. பிறகுதான் நிற்பவர்களை நிமிர்ந்து பார்வை இட்டார்.

"உள்ளே வரலாமா நாங்க ராஜாவோட அம்மா, அப்பா வந்திருக்கோம்" என்றார்.

"வாங்க வாங்க தைரியமா வாங்க சின்னு ஒன்னும் பண்ண மாட்டான்"

"ரொம்ப நல்லாவராதான் தெரியுது" கணவனின் காதோரம் மானசா கிசுகிசுத்தாள்.

"ம்ம்ம் பேசாம வா! அவசரப்பட்டு எந்த முடிவிற்கும் வந்திடாதே"

"கல்யாணி! யார் வந்திருக்கான்னு பாரு"

"இதோ வந்திட்டேங்க!"

"வரும்போது குடிக்க தண்ணி எடுத்துகிட்டு வா"

"சரிங்க....."

"இந்தாங்க தண்ணி குடிங்க! என்றவள் வந்திருப்பவரைப் பார்த்து உறைந்து போனாள்" கல்யாணி.

பார்த்த ராஜாவின் அப்பாவும் திகைப்பின் உச்சத்தில் "நீயா?" என்றார்

"அண்ணா என்னை மன்னிச்சுடுங்க. இவரும் நானும் கல்லூரியில் படிச்சப்பவே காதலிச்சோம். அதை அம்மாகிட்டேயும் சொன்னேன். அவங்களும் ஒத்துக்கலை அப்பாவும் ஒத்துக்கலை. ஆனா நீயோ எனக்காக ஒண்ணுமே பரிந்து பேசலை. பிறகுதான் நானே முடிவெடுத்து இவருடன் வந்துட்டேன். பிறகு இவரோட நண்பர்களின் உதவியால் திருமணம் செய்து கொண்டோம். எனது கணவர் நம் பிரிவினர் இல்லை என்றாலும், என்னை இன்று வரை எந்த குறையும் இல்லாமல் அன்பா பாத்துக்கறாரு எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவதான் இதோ இங்கே நிக்கறா. சின்னவ உள்ளே இருக்கா. இதோ கூப்பிடறேன், "காஜோல், சாராவை கூப்பிடு". அவங்க வீட்டுலே எங்களை ஏத்துகிட்டாங்க. நம்ம வீட்டுலேதான் யாருமே என்னை தேடி வரலை. அம்மா மற்றும் அப்பா நல்லா இருக்காங்களா அண்ணா?"


"இதென்னா வந்த இடத்திலே இப்படி ஒரு கூத்து. என்னாங்க இதுதான் ஓடிப்போன உங்க தங்கச்சியா"?

"ஏய் அநாகரீகமா பேசாதே! அவங்க காதுலே விழுந்திடப் போவுது"

"நீ வீட்டை விட்டு போனவுடன் அம்மா அப்பா எல்லாரும் ரொம்ப மனசு விட்டுடாங்க, யாருகிட்டேயும் பேசாம சரியா சாப்பிடாம இருந்தாங்க. மாமாதான் எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. இதோ இவதான் என்னோட மனைவி. இவ வந்தப்புறம்தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமா துக்கத்திலே இருந்து வெளியே வந்தாங்க. ராஜா பிறந்தவுடன் ரொம்பவும் சந்தோஷமா இருந்தாங்க. அவர்கள் உலகமே ராஜாவாகிப் போனது. உன் நினைவு அவர்களுக்குள் இருந்து கொண்டேதான் இருந்தது. உன் வயது ஒத்தவர்களைப் பார்த்தால் அம்மாவின் கண்கள் கலங்கும். எனக்குப் புரிந்தாலும் நான் எதுவுமே கண்டுக்கமாட்டேன். சந்தோஷாமாத்தான் இருந்தாங்க. அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து ரொம்ப கஷ்டபட்டு போராடியும் அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அந்த வேதனையிலேயே மனதிற்குள்ளேயே அழுதழுது அம்மாவும் ஆறு மாதத்தில் அப்பாவுடன் ஐக்கியமாகி விட்டார்கள். நீ ஒரு முறை குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர்களை வந்து பார்த்திருக்கலாம். காலம் அவர்களின் வெறுப்பை மாற்றி இருக்கலாம் இல்லையா?இறக்கும் போது அம்மா ஒரு பெட்டியைக் கொடுத்து உன்ன்னிடம் சேர்க்கும்படி கூறினார்கள்.அடுத்த முறை வரும்போது கொண்டு வருகின்றேன்" என்று கூறி முடிக்கும் போது கண்கள் கலங்கியதை நாசுக்காக மறைத்துக் கொண்டார் ராஜாவின் தந்தை"

"என் மனைவின்னு ஏண்ணா சொல்றீங்க? என்னோட அண்ணின்னு சொல்லுங்க"

"அண்ணா இவருதான் என்னோட அவரு"

"இவ்வளவு வயசானப்புரமும் அவருதானா? ஏம்மா அப்பா பேரை சொல்ல மாட்டீங்களா?" இது சாரா...

"அம்மா இவங்க எல்லாம் யாரு? நமக்கு தெரிஞ்சவங்களா? இதுவரை இங்கே வந்ததே இல்லை" என்றாள் சாரா

"இவங்க உங்க மாமாவும் அத்தையும், வெளியூரிலே இருந்தாங்க அதான்... " என்று கல்யாணிக்கு அதுக்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இதுக்கு மேல் சாராவை பேச விட்டால் சரியா வராதென்பதை கல்யாணி புரிந்து கொண்டு தனது கணவனுக்கு கண்களால் ஜாடை காட்டி அவர்கள் அருகே போய் அமரச் செய்தாள்.

இவ்வளவு கலாட்டாவிற்கு நடுவே என்னவாகி இருக்குமோ என்று பயந்து கொண்டே உள்ளே வந்தான் ராஜா. நண்பன் வரமுடியாதலால் தனியா வந்துட்டோமே என்று பயம் வேறு. மெதுவா ஒவ்வொருவரின் முகத்தையும் பார்வையிட்டான். என்ன, காஜோல் அப்பா ரொம்ப சாதுவா உக்காந்து இருக்காரு! அதுவும் நம்ப அப்பா பக்கத்துலே! என்ன நடக்குது இங்கே? ஒண்ணுமே புரியலை.காஜோலுக்கு கண்களால் ஜாடை காட்டி என்னாச்சு என்று கேட்டான், அவள் சட்டையே பண்ணலைன்னு ஆத்திரமா வந்தது . யாரு கிட்டே இருந்தும் பதில் வரதாதால் அவனே பேச ஆரம்பித்தான்.

"என்னப்பா இங்கே ஒரே மயான அமைதியா இருக்கு? இஷ்டம் இருந்தா அவங்க பொண்ணை கொடுக்கட்டும்,இல்லைன்னா வாங்க நாம கிளம்பாலாம்" என்றான் மிகவும் கோபத்துடன். ஒரே அமைதியா இருக்காங்க. இந்தாளு சண்டை போட்டிருப்பாரோ நம்ப அப்பாகிட்டே. முழிக்கரதைப் பாரு திரு திருன்னு!

"என்னடா அபசகுனமா பேசறே? இவங்க யாரு தெரியுமா? இவங்க உங்க அப்பாவோட தங்கச்சியாம்"என்று மானசா மகனுக்கு புரிய வச்சிட்டாங்க.

"என்னப்பா இதெல்லாம்? இது வரை இப்படி ஒரு அத்தை இருந்ததா சொல்லவே இல்லை?"

"அதெல்லாம் ஒரு கதைப்பா, சரி எல்லாம் மறந்திடுவோம். இப்போ நீங்க என்ன முடிவெடுக்கப் போறீங்க.ரெண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் முறையாகி விட்டனர்.உங்களுக்கு சம்மதம் என்றால் எங்களுக்கும் சம்மதம்தான். என்ன மானசா நான் சொல்றது சரிதானே?"

"ஆமாங்க நீங்க சொல்றது சரிதான், உங்க தங்கச்சி பொண்ணை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்குங்க. குத்து விளக்கு மாதிரி இருக்கா"

"அம்மா குத்து விளக்கா? அப்போ கோவில்லே கொண்டு ஏத்தி வைங்க"

"வாயை மூடுடா உனக்கு எப்பவுமே கொழுப்பு கொஞ்சம் அதிகம்தான்"

"என்ன சார்? நாங்க எல்லாரும் பேசிகிட்டே இருக்கோம். நீங்க வாயையே திறக்க மாட்டேங்கிறீங்க?"

"அட நீங்க என்னாங்க எனக்கு ஒண்ணுமே புரியலை. எனக்கு என்னோட மகள் சந்தோசம் தான் ரொம்ப முக்கியம். உங்க மகன் அன்னைக்கு இங்கே வந்தாரு இல்லையா? அப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. நேரா வந்து என்கிட்டே பொண்ணு கேட்டார். அந்த நேர்மை எனக்கு பிடிச்சுபோச்சு. பெரியவர்களைப் பார்க்கனும்ன்னு சொன்னதே என்னோட பொண்ணு நல்ல சந்தோஷமா இருக்கணும்.அப்புறம் முறைன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? அதான் அழைத்து வரச்சொன்னேன். கடைசிலே நம்பளே ஒருவருக்கொருவர் முறையாகிப் போனோம். என்ன கொஞ்சம் குறும்பு அதிகம். நீங்க உங்க தங்கச்சி மகளைத்தானே சம்பந்தம் பேச வந்திருக்கீங்க? அவ எங்க வீட்டு மகாராணிதான் அழைச்சிகிட்டு போங்க" என்று கடைசியாக பேசி முடித்தார் காஜோலின் தந்தை.

அப்புறம் என்ன.... அறுசுவை விருந்துதான்......

சில மாதங்களில் திருமணம்தான்........

சுபம்


ரம்யா...




Thursday, May 28, 2009

ஜில் என்று ஒரு காதல் / ஆறாம் பகுதி!!

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

"டாக்டர் நல்லா பார்த்து சொல்லுங்க இவருக்கு என்னாச்சுன்னு. வெறும் ஜுரம்தான் திடீர்னு பார்த்தா மயக்கம் வந்திடுச்சு இவருக்கு" என்று அழமாட்டாத குறையா அம்மா!


"நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே இருங்க" என்றார் டாக்டர்.
ராஜாவுக்கு ஒண்ணுமே புரியலை! "அம்மா வெளியே வாங்க. டாக்டர் முழுவதுமாக பரிசோதனை பண்ணட்டும். அதுவரை வெளியே காத்திருப்போம் வாங்க" என்று வெளியே அழைத்து வந்து விட்டான்.


டாக்டர் வெளியே வந்து "ஒன்னும் இல்லைம்மா பயப்படாதீங்க. ஜுரம் கொஞ்சம் அதிகமா இருக்கு. ஊசி போட்டிருக்கேன் நன்றாக தூங்குகிறார். பயப்பாடாதீங்க. அவரை எழுப்ப வேண்டாம். ராஜா நீ மட்டும் இங்கே இரு. அம்மாவை வீட்டுக்கு அனுப்பிவிடு" என்றார் டாக்டர்.
"இல்லை டாக்டர் நானும் இங்கேயே இருக்கேன். வீட்டுக்கு போனாலும் நிம்மதியா இருக்க முடியாது"


"சரிம்மா வாங்க இப்படி வந்து உக்காருங்க." அந்த நேரத்தில் ராஜாவின் அலைபேசி ஒலித்தது. "சொல்லும்மா, நானா நான் இங்கே மருத்துவமனையில் இருக்கின்றேன். இல்லே இல்லே எனக்கு ஒன்றும் இல்லை, அபாவுக்குதான்... இல்லே ஒண்ணும் சீரியஸ் இல்லே. ஜுரம் அதான் மருத்துவமனையில் சேர்த்திருக்கோம்"


"யாருடா போனிலே, இவ்வளவு வெவரம் சொல்லறே?"


சிறிது நேரம் கனத்த மனதுடன் வெளியே இருந்தார்கள். அப்போது ஒரு சிஸ்டர் வந்து உள்ளே வரச்சொல்லி அழைத்தார்கள்.


"உன்னோட மருமகதான் பேசறான்னா சொல்ல முடியும்? என்னோட நண்பன்மா" அம்மா இப்போ இருக்கும் நிலையில் உண்மையை சொல்லி குழப்ப வேண்டாம்.சரி வாங்கம்மா அப்பா அழைப்பதாக ஒரு சிஸ்டர் வந்து சொன்னாங்க. உள்ளே போலாம்"


அப்பா கொஞ்சம் பரவா இல்லைபோல் இருந்தார். அம்மா தான் பதறிட்டாங்க. "என்னாங்க உங்களுக்கு என்னாச்சு? எதையும் சொல்லாமல் மூடி மறைச்சே உங்களுக்கு பழக்கம் ஆயிடுச்சு"


"அம்மா அப்பா இப்போதான் கண்களை முழிச்சிருக்காரு. ஏன் இப்படி பதறிபோய் பேசறீங்க. அப்பாவுக்கு ஒண்ணும் இல்லை"


"சரியா சொன்னேடா ராஜா, எனக்கு ஒண்ணும் இல்லை. லேசா தலை சுத்திச்சு அவ்வளவுதான். நீ ஏண்டா ஊருக்கு போகலை? அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிட்டியா? எனக்கும் விடுப்பு சொல்லிட்டியா?"


"ஏங்க இப்படி மூச்சு விடாம பேசறீங்க? எல்லாம் அவன் பார்த்துக்குவான். நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. ராஜா கொஞ்சம் பால் வாங்கி வா ஹார்லிக்ஸ் போட்டு தரலாம் அப்பாவுக்கு"

" சரிம்மா இதோ வாங்கிட்டு வாரேன்"

ரெண்டு நாட்கள் வேகமாக நகர்கின்றன. ஸ்ரீநிவாசன் தேறிட்டார்.


"அம்மா டாக்டர் இன்னைக்கு அப்பாவை அழைத்துப் போகச் சொல்லிட்டாரு, நீங்க எல்லாம் எடுத்து வைத்து கொண்டு தயாரா இருங்க. நான் பணம் கட்டிட்டு வந்து அழைத்தச் செல்கின்றேன்" என்றான் ராஜா.

"அப்பா நல்லபடியா வீத்துக்கு வந்தாச்சு, இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கப்பா" என்றான் ராஜா"

"சரி நீ எப்போ ஊருக்கு போறே?"



"நானாப்பா இன்னும் முடிவு பண்ணலையே? உங்களுக்கு வேறு உடல் நலம் சரி இல்லே, அதான் எப்போ போறதுன்னு ஒரே யோசனையா இருக்கு"


"அதெல்லாம் ஒன்னும் இல்லை சரியாகிப் போய்டும், இரு மானசா இங்கே வா, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு நானும் நீயும் போயி அந்த பொண்ணைப் பார்த்துட்டு வரலாம்"


"இல்லைங்க என்னோட அண்ணனை வரச்சொல்லனும் இல்லையா? திடீர்னு எப்படி வரச்சொல்லறது? அடுத்த வாரம் போகலாமே?"


"வேண்டாம் அவன் வந்தா குட்டையை குழப்பிடுவான்"


"இல்லீங்க நான் அண்ணன்கிட்டே உன் பொண்ணை எங்க வீட்டு மருமகளா அனுப்புவியான்னு கேட்டுட்டேனே? இப்போ இந்த விஷயம் தெரிஞ்சா அண்ணா வருத்தப் படமாட்டாரா"


"நீ என் கிட்டே என்ன சொன்னே? கேட்கலாமான்னுதானே சொன்னே! அவன் கிட்டே கேட்டேபிட்டியா? அட இங்கே பாருடா உங்காம்மாவை! ரொம்ப கில்லாடியா இருக்கா! என் கிட்டே ஒன்னு சொல்லிட்டு வேறே ஒன்னு செஞ்சிருக்கா, இதெல்லாம் சரியே இல்லை!"
"இல்லைங்க இவன் திடீர்னு இந்த மாதிரி இடியை தூக்கி நம்ம தலையிலே போடுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"


"சரி அதை விடு, அதே பேசிகிட்டு இருக்காதே நமக்கு நம்பளோட பையன் வாழ்க்கைதான் முக்கியம். ஒரு பையன் அவன் சந்தோசம்தான் நம்ம சந்தோஷமும் கூட. இதுலே உன் வீட்டு சொந்தம் எல்லாம் வேண்டாம், சரி விடு, அடுத்த வேலையை பார்க்கலாம். ராஜா நீ இரு நம்ப எல்லாரும் சேர்ந்தே போகலாம்"


"இல்லீங்க போகும்போது மூணு பேரா போகக் கூடாது"


"அதுசரி இது வேறேயா? இதுக்கு போயி யாரை கூட்டு சேர்க்கறது. நம்பளா பொண்ணு பார்க்க போறோம் ? ஏற்கனவே பார்த்து வச்ச பொண்ணை சும்மா பார்க்கபோறோம். அதுவும் வெறும் சம்பிராயத்துக்காக"


"இல்லேப்பா நான் என்னோட நண்பனை என்னுடன் அழைத்து வருகின்றேன். அப்போ நாலு பேரு இல்லையா?" (அப்பா நம்மளை தாக்கிட்டாரே!)


"அப்பா ஒரு சின்ன விஷயம் நம்ம எல்லாரும் புறப்படற விஷயத்தை காஜோலுக்கு போன் செய்து சொல்லிடவா?"


"எதுக்கு அப்போதான் அவங்க அப்பா நம்பளை உள்ளே விடுவானா?"


"அது இல்லேப்பா சொல்லிட்டு போறதுதானே நல்லது. அவங்க அப்பாவும் எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பாரு"


"ஏங்க அவன் சொல்லறதும் சரிதான், சொல்லிடட்டும்"


"உங்க அம்மாவே சொல்லிட்டா போ இனிமேல் ஒரு பிரச்சனையும் இல்லே"


"இருங்கப்பா போனிலே சிக்னல் இல்லே, வெளியே போயி பேசிட்டு வரேன்" அப்பா இந்த சந்தோஷ செய்தியை தனியா சொன்னாதான் கொஞ்சம் நமக்கு சந்தோஷமா இருக்கும்.



"பொய் சொல்லறான் பாரு போனிலே சிக்னல் இல்லையாம். அதெப்படி திடீர்னு சிக்னல் போய்டும்?"



"அட! அதெல்லாம் கண்டுக்ககூடாது. உங்களுக்கு வெவஸ்தையே இல்லை. அவன் எதிரில் இதெல்லாம் பேசி வைக்காதீங்க"



"ஹேய் என்ன பண்ணிக்கிட்டு இருக்கே, உங்க அப்பா பக்கத்திலே இருக்காரா? கொஞ்சம் உள்ளே போய் உங்க அம்மாவுக்கு அடுப்படியிலே உதவி செய்யச் சொல்லு. எந்த நேரமும் உன்னை கவனிச்சிக்கிட்டு இருக்கறதுதான் அவரோட வேலையா?"
"இங்கேதான் இருக்காரு! போனிலே யாருன்னு கேக்கறாரு?" என்றாள் காஜோல்.
"இருக்கட்டும் நான் ஒன்னும் திருட்டுத்தனமா உங்கிட்டே பேசலைன்னு சொல்லு. தைரியமா இரு. எங்க அப்பாவும் அம்மாவும் உன்னை பொண்ணு கேட்டு வரதா சொல்லிட்டாங்க உங்க அப்பாகிட்டே இதை சொல்லு. அப்புறம் ஒரு விஷயம் எங்க வீட்டுலே உங்க வீட்டுக்கு வரும்போது உன்னோட தங்கச்சி அந்த ராச்சஸி வீட்லே இல்லாம பாத்துக்க. காசு கொடுத்து சினிமாவுக்கு அனுப்பி வச்சிடு. அவ இருந்தா அவ்வளவுதான். எங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப நல்லவங்க"


"அப்போ எங்க அம்மா அப்பா ரொம்ப கெட்டவங்களா? என்ன பேசறீங்க? என் தங்கச்சி இங்கேதான் இருப்பா! அவ சின்ன பிள்ளைதானே! அதை கூட உங்க வீட்டுலே புரிஞ்சிக்க மாட்டாங்களா? அதுக்காக அவளை ஒளிச்சா வைக்கமுடியும்?"


"அதுசரி ஆரம்பிச்சிடாதே தாயே! எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. உன்னையும் உன்னோட மாமியார் அந்த லிஸ்ட்லே சேர்த்திடக் கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம்தான்"


"சரி உங்க வீட்லே சொல்லிடு, நாங்க அங்கே வந்தவுடன் போன் பண்ணறேன். சரியா?"



"சரி போன் பண்ணுங்க, நான் அப்பா அம்மாகிட்டே சொல்லிடறேன், சரி நான் வச்சிடறேன்"
"கொஞ்சம் சிரிச்சிகிட்டே இதை சொல்லக் கூடாதா? எல்லாம் என்னோட தலை விதி ஒரு கடுவன் பூனைக்கு நான் தாலிகட்டப் போறேன்" என்ன சத்தத்தையே காணோம் அடிப்பாவி அதுக்குள்ளே போனை வச்சிட்டியா" இவளை அப்புறமா கவனிச்சுக்கலாம்.





தொடரும்...
ரமயா





Tuesday, May 26, 2009

கேள்வியும் பதிலும் ரம்யா!!


என்னை நம்பி இந்தத் தொடர் ஆட்டத்துக்கு அழைத்தவர்கள் நிஜமாவே கொஞ்சம் தைரியம் உள்ளவர்கள்தான்.

பலர் இந்த தொடர் ஆட்டத்தில் தங்கு தடை இன்றி கலந்து கொண்டு வெற்றிவாகையும் சூடி உள்ளனர். இப்போது இருவர் இந்த ஆட்டத்தில் என்னை களம் இறக்கி உள்ளனர்.

அருமையான நண்பர், பாசக்கார நண்பர், அக்கறையான நண்பர், சிறிய வயதானாலும் அபாரமான அறிவைப் படைத்தவர். எந்த தலைப்பைக் கொடுத்தாலும் பிச்சி பிச்சி எடுத்திடுவார். அந்த அளவிற்கு பலவிதமான ஞானங்களைப் பெற்றவர். இது மிகைபடுத்திக் கூறியது அல்ல. செய்யதிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் கூறி இருப்பது நன்றாகத் தெரியும். இவர் நல்ல கதை எழுதக் கூடியவர். மற்றவர்கள் எழுதுவதும் நல்ல முறையில் வரவேண்டும் என்ற நல்ல மனம் படைத்தவர். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் இந்த நண்பரைப் பற்றி ஆராயலாம்.

"என்ன பாசம்தான் காரணம். தங்கச்சியாச்சே... அப்புறம் அவரின் எழுத்துத் திறமை. நேசம் காட்டும் பண்பு... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்".

இராகவன் அண்ணாவின் இந்த வரிகளைப் படித்து எனது கண்கள் பனித்துவிட்டன. பாசத்திற்கு நன்றி என்ற சொல் வலுவிழந்து விட்டது அண்ணா!

வலையுலகத்தில் எனக்கு கிடைத்த அருமையான உடன் பிறப்பு. அக்கறையான, அன்பான அண்ணா. வேலைப் பளுவின் காரணமாக நான் இப்போது GMail வருவது இல்லை. நண்பர்களாகிய நாம் தொடர்பு கொள்வதே ஜிமெயில் சாட்டிங் வழியாகத்தானே! தொடர்ந்து சில நாட்கள் என்னை காணவில்லை என்றால் அடுத்து அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். என்னம்மா ஆச்சு என்றுகொடுத்த கேக்கும்போதே அந்த குரலில் அன்பு, அக்கறை குழைந்து வரும். இது போல் பல நல்ல உள்ளங்களைக் கொடுத்த இந்த வலைப்பதிவிற்கு நான் மிகவும் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
எனதருமை நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள்

எனக்கு அலுவலக வேலை அதிகமாக இருப்பதாலும்,போதிய நேரமின்மையாலும் எனது நண்பர்களின் இடுகைகளை படிக்க முடியவில்லை. என்னை தவறாக நினைக்காமல் எனது அன்பு நெஞ்சங்களான நீங்கள் என்னை மன்னித்து தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களில் எனது வேலைப் பளு குறைந்துவிடும் பழையபடி உங்கள் ரம்யா வலையுலா வர ஆரம்பித்து விடுவேன் என்று நம்புகின்றேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள் தோழர்களே! மற்றும் தோழியர்களே!

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனக்கு இந்தப் பெயரை வைத்தது எங்க பாட்டி. என்னை ரொம்ப அன்பா வளத்தாங்க. என்னோட ஒவ்வொரு செயலையும் ரசிச்சு அதிலே அமிழ்ந்து இந்தப் பெயரை எனக்கு செல்லமாக வைத்ததாக கூறுவார்கள். நான் இருக்கும் சூழலில் மிகவும் அழகாக வைத்துக் கொள்வேனாம், அந்த இடம் மிகவும் ரம்மியமாக இருக்குமாம் (ரொம்ப பீலா விடறமாதிரி இருக்கு இல்லே?? என்ன செய்ய பாட்டி சொன்னதை நான் அப்படியே இங்கே கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேனே!) அதனால் இந்தப் பெயர் வைத்ததாகவும் கூறுவார்கள். இந்த பெயர் விளக்கம் எனது ஏழாவது வயதில் கேட்டறிந்தது. மறுபடியும் இந்த பெயர் காரணத்தை பின்னோக்கி போகச் செய்த எனதன்பு நண்பர் செய்யதுக்கு மிக்க நன்றி.இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனது பெயரிலேயே போதை இருக்குன்னு என் நண்பர்கள் கூறுவார்கள். அது நிஜமா??

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசியாக நான் அழுதது! என்னை எனது வலை நண்பர்கள் வீட்டில் சந்தித்துவிட்டு, சென்று வருகின்றோம் என்றார்களே அப்போது அழுதேன் மனதிற்குள்ளே. வெளியே சிரித்தேன். "உள்ளே அழுகிறேன் வெளியே சிரிக்கின்றேன் என்ற பாடல் அன்று எனது வாழ்க்கையில் உண்மையாகிப் போனது இல்லையா நண்பர்களே?? "

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும்! கையெழுத்திற்காக பல பரிசுகள் வாங்கி இருக்கேன். என்னப்பா சிரிக்கிறீங்க? ஐயோ மெய்யாலுமேதான்! (ஆனா இப்ப எப்படின்னு கேக்காதீங்க! எல்லாம் கணினியே நமஹா!)

4.பிடித்த மதிய உணவு என்ன?
ம்ம்ம்.... வத்தக்குழம்பு, அப்பளம், உருளைக்கிழங்கு வதக்கல், கத்தரிக்காய் வதக்கல், தயிர் சாதம் அதனுடன் மாங்கா ஊறுகாய். (இதை எழுதும்போதே பசிக்குதே)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நட்பு உடனே நமக்கு வராதுங்கோ. நண்பர்களின் பேச்சோட தன்மை பொறுத்துதான் நான் நட்பை வளர்த்துக்குவேன். பார்த்தவுடனே பழகிட மாட்டேன். இவர்கள் உனது நண்பர்கள் என்று என் மனது என்று சொல்லுகின்றதோ அன்றில் இருந்து அந்த நட்பை எனது உயிரின் மேலான நட்பாகக் கருதுவேன். மறக்க மாட்டேன். நிறைய சண்டை போடுவேன். அடிக்கடி கோபித்துக் கொள்வேன். இதெல்லாம் என்னோட ஸ்பெஷல் காரெக்டர்! யாருகிட்டேயாவது மேலே கூறி இருக்கும் ஸ்பெஷல் ஐட்டங்களை காண்பித்து இருந்தால் இதை படித்த பிறகு என் மீது கோபம் இருக்காதுன்னு ஒரு அசட்டு நம்பிக்கைதான்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ரெண்டிலேயும் குளிக்கப் பிடிக்கும்!

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்களின் பேச்சுக்கேற்ற முகபாவத்தை அதில் ஏற்படும் உணர்வுகளை வெகுவாக ரசிப்பேன்.

அப்புறம் என்ன? நான் பேச ஆரம்பித்துவிடுவேன்ல்லே!! பேசலைன்னா எனக்கு நெஞ்சு வலிக்கும். அதான் நான் எப்போதும் பேசிகிட்டே இருப்பேன். பாவம் என் நண்பர்கள் மற்றும் என் சகோதரி.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம் கோபம் வந்த அடுத்த நிமிடம், கோபமும் மறந்து போகும், அதன் காரணமும் மறந்து போகும். இந்த எனது உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். பிடிக்காத விஷயம் சிறிய விஷயங்கள் கூட எனது மனதை பாதித்துவிடும். அவ்வாறு இருக்கக் கூடாது என்று நினைத்தாலும் என்னால் அது மட்டும் முடியாது. சில நிமிடங்கள் அமைதியாக இருக்க முயலுவேன் பாதிப்பை மறக்க. அந்த சில நிமிடங்கள் வரை பாதித்தது பாதித்ததுதான். அமைதி ஒரு நல்ல தீர்வை எனக்குக் கொடுக்கும்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
எனக்கு சரி பாதி என்கின்ற உறவு இல்லைங்கோ! அதனால் இந்த கேள்வியில் இருந்து தப்பிச்சேன். ஹி ஹி ஹி ஹி!

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னை வளர்த்த பாட்டிங்க. ஏனென்றால் இன்று நான் இருக்கும் இந்த நிலைமை அவர்கள் பார்த்தால் ரொம்ப சந்தோஷப் படுவாங்க. அவங்க பெரிய மேதை, புத்திசாலி, தைரியசாலி. அவர்கள் இப்போது என்னை பார்க்க உயிருடன் இல்லையே என்ற வருத்தம் தான்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?வெளிர்நீலம் கலரிலே ஜீன்ஸ் நேவிப்ளூ டி ஷர்ட்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமா இந்த பதில்களை எழுதிக் கொண்டிருக்கின்றேன். கணினியைதான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கேட்க ஒன்றும் இல்லை.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு வர்ணமாக மாற ஆசை.

14.பிடித்த மணம் ?
மல்லிகையின் மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
எல்லோருமே எனதருமை நண்பர்கள்தான். அதில் சிலரைத்தான் நான் இங்கு அழைத்திருக்கின்றேன். மற்றவர்களை மீதி உள்ளவர்கள் அழைக்கட்டும் என்ற ஒரு நல்ல எண்ணம்தான். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்கள். எனது உயர்வில் பங்கேற்பவர்கள். எனக்கு எல்லா நேரத்திலும் உறுதுணையாக இருப்பவர்கள். இப்படி கூறிக் கொண்டே போனால் எவ்வளவு வேண்டுமானாலும் கூறலாம். அதற்கு முடிவே இல்லை.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
அ.மு.செய்யது மற்றும் இராகவன் நைஜீரியா
இருவரின் எல்லா பதிவுகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?
நான் கல்லூரியில் வாலிபால் விளையாட்டிலே பெரிய பிஸ்தா(பீலா இல்லே உண்மைதான்). பிடிச்சதுன்னு ஒன்னும் இல்லை. எல்லாமே பிடிக்கும்.
18.கண்ணாடி அணிபவரா?
ஆமாம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவை மிக்க படங்கள்தான் ரொம்ப பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன் (எனக்குப் பிடிக்கவே இல்லை. அந்த படம் பார்த்து ஒரு வாரம் தூங்கவே இல்லை)

21.பிடித்த பருவ காலம் எது?
இளவேனிற் காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போ எந்த புத்தகமும் படிக்க நேரம் இல்லைங்க. ஆனா எனதன்புத் தோழி அமிர்தவர்ஷிணி அம்மா பரிசாகக் கொடுத்தது சிவசங்கரி அம்மா எழுதின "சிறு கதை தொகுப்பு" என்ற புத்தகம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துக் கொடுள்ளேன்.
23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
படமே வைப்பதில்லைங்க. வைத்தால்தானே மாற்றுவது!

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் நான் பாடுவது. (என்ன செய்ய மற்றவர்கள் சொல்ல மாட்டாங்க அதான் நானே சொல்லிக்கறேனாக்கும்). பிடிக்காத சத்தம் யாராவது சத்தமா சண்டை போட்டால்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
அமெரிக்கா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் நானே தொடர்ந்து பேசுவது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து யாராவது செய்தால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படி எதுவும் எனக்குள்ளே இருப்பது போல் எனக்கு தெரியவில்லையே.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அடிக்கடி செல்ல நினைப்பது கொடைக்கானால்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மதர் தெரிசாவில் ஒரு ரவை அளவு இருக்கவேண்டும் என்று ஆசை.

31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
கணவன் என்கின்ற உறவு எனக்கு இல்லை. அப்படி கூட செய்வாங்களா? (கணவருக்குத் தெரியாமல்). அப்படி இருந்திருந்தால் தெரியாமல் எதுவுமே செய்ய மாட்டேன். 50/50 என்ற ஆன பிறகு மறைப்பதில் அர்த்தம் இல்லை அல்லவா? இது எனது சொந்த கருத்து. மறைக்க ஆரம்பித்தால் குழப்பம்தான் அதிகமாகும். இது இரு பாலாருக்கும் பொருந்தும். மறைத்து வாழ்ந்தாலும் உண்மையான வாழ்வு என்னவாகும்? நினைத்தாலே பயமா இருக்கு.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வு! அது ஒரு அழகான காவியம். ரசனையுடனும், புரிதலுடனும் வாழ்ந்தால் வாழ்வு ஒரு சொர்க்கம். இதுதான் வாழ்வு பற்றி என்னோட கணிப்பு.
தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைப்ப‌து
============================


Tuesday, May 19, 2009

ரம்யாவின் "Will To Live" ஒரு வயது!


"WILL TO LIVE" வின் ஆண்டு நிறைவு!!


வலையுலகத்திற்குள் கால்கள் பதித்து இன்றோடு வருடம் ஒன்று ஆகிவிட்டது. எனக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகமானதற்கு காரணம் யார்? பெரிய கேள்விக்குறி? இல்லை! இல்லை! என்னோட வலைப்பதிவான "WILL TO LIVE" இவங்க தான் காரணம்.
நன்றி! "WILL TO LIVE"

ஒரு வயது முடிந்துவிட்ட நிலையில் இன்று என்னைச் சற்றே திரும்பி பார்க்க வைக்கின்றது எனது "Will To Live".

என்ன சாதித்தேன்! எதை அடைந்தேன்! இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் கண்டிப்பாகச் சொல்ல முடியும். சாதித்தது பலரின் நெருங்கிய தோழியாகிப் போனது, அடைந்தது சகோதர மற்றும் சகோதரிகளின் மனதில் நீங்கா அன்பு மற்றும் அக்கறை.

நிறைய நண்பர்கள், சகோதரிகள் இந்த வலையுலகத்தில் கிடைக்கப் பெற்றேன். அதற்கு உதவியாக இருந்த இந்த "Will To Live" என்ற எனது வலைப்பதிவிற்கு வாழ்க! என்ற ஒற்றைச் சொல் போதுமா? இல்லை நன்றி என்ற ஒற்றைச் சொல்தான் போதுமா? போதாது. எந்த ஒற்றைச் சொல்லும் நிறைவைத் தராது.

உங்களின் அனைவரின் நட்பும், அன்பும், வாழ்த்துக்களும் என்னுடன் வரும் வரை நானும் எனது "Will To Live" உங்களுக்கு நன்றி கூறிக் கொண்டே இருப்போம்!

எனது நண்பர்கள், சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும்
"Will To Live" வழியாக ரம்யா நன்றி கூறிக் கொள்கின்றேன்.


நன்றி! நன்றி! நன்றி!



Monday, May 18, 2009

ஜில் என்று ஒரு காதல் / ஐந்தாம் பகுதி

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!


ராஜாவின் குடும்பம்
=============
ராஜாவின் அம்மா: மானசா
ராஜாவின் அப்பா: ஸ்ரீநிவாசன்

"ஹாய் அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க?"

"டேய் என்னாடா திடீர்ன்னு வந்திருக்கே? வரேன்னு ஒரு தகவல் கூட இல்லாமல் வந்திருக்கே ?"

"இல்லைங்கம்மா என்னவோ உங்களை எல்லாம் பாக்கணும் போல இருந்ததா உடனே கிளம்பி வந்துட்டேன்."

"ஏண்டாப்பா மகனே? நான் ஒருத்தன் குத்துக்கல்லு மாதிரி உக்காந்திருக்கேன்! நீ என்னாடான்னா உங்க அம்மா கிட்டேயே கொஞ்சிகிட்டு இருக்கியே ?"ஆற்றாமையுடன் அப்பா.

"அப்பா இருங்க மொதல்லே அம்மாகிட்டே பேசிட்டு அப்புறமா உங்க கிட்டே வரேன். ஆமா நீங்க என்ன குண்டாகிகிட்டே போறீங்க? அம்மா பலமா சாப்பாடு தராங்களா? கொஞ்சமா சாப்பிடுங்கப்பா! "

"அடி செருப்பாலே, நானே உடம்பு சரி இல்லாமல் இருக்கேன், இதுலே கிண்டல் வேறேயா? "

"என்ன உடம்பு சரி இல்லையா? ஏன்ப்பா என் கிட்டே சொல்லவே இல்லே? சரி என்னாச்சு? அதெ மொதல்லே சொல்லுங்க"

"இல்லேப்பா மழை ஒரு நாள் அடிச்சுதா அதுலே கொஞ்சமா நனைஞ்சிட்டேன் அதுதான் லேசா காய்ச்சல் அடிக்குது"

"என்னங்கப்பா இது? டாக்டர் கிட்டே போனீங்களா இல்லையா? நீங்களே ஏதாவது மாத்திரை எல்லாம் எடுக்கக் கூடாது! நான் டாக்டர் கிட்டே அழைச்சிகிட்டு போறேன், அம்மா எப்பம்மா நம்ம டாக்டர் வருவாரு?"

"டாக்டர் வர சரியா பத்துமணியாகும், அதுக்குள்ளே நீ குளிச்சிட்டு வா டிபன் சாப்பிட்டபிறகு போகலாம்"

"சீக்கிரம் டிபன் எடுத்து வைங்கம்மா இதோ வந்துடறேன் "

"வா வா ரொம்ப ஆர்பாட்டம் பண்ணாதே, லேசான ஜுரம்தான்! கஷாயம் போட்டு சாப்பிட்டா சரியாயிடும். இதுக்கு போயி எதுக்கு டாக்டர் எல்லாம். என்ன மானசா உன் பையன் ரொம்ப அக்கறை காட்டரானே! என்ன விஷயம்னு கேட்டு சொல்லு "

"ஏங்க! இது உங்களுக்கே நியாயமா இருக்கா? பையன் எவ்வளவு அக்கறையா அன்பா கேட்கறான் அதை போயி நம்பாம சந்தேகப் படறீங்களே ?"

"ஏய் இவனுகளை எப்பவுமே நம்பக் கூடாது, உனக்கு ஒன்னும் தெரியலை பைத்தியம். இப்படியே இவ்வளவு வருஷம் குப்பை கொட்டிட்டே!"

"சரி சரி பையன் வரான் கொஞ்சம் நேரம் சும்மா இருங்க "

"என்னம்மா அப்பா எதோ என்னைப் பத்தி பேசறமாதிரி இருக்கு "

"ஆமாண்டா உன்னைப் பத்திதான் எனக்கு சந்தேகமா இருக்கு ஒன்னு வந்தா சனிக்கிழமை காலையிலே வருவே இன்னைக்கு பார்த்தா ஞாயிறு வந்திருக்கே இது உன்னோட அகராதியிலே அதிசயமாப் படலே? "

"இல்லேப்பா நேற்று கூட அவசரமா வேலை இருந்தது அதான் நேற்றே வரலை " பொண்ணு பார்க்கப் போனோம்னு சொன்னா சும்மா விட்டுடுவாரா என்னா? "

"சரி டிபன் சாப்பிட்டவுடன் நேரா விஷயத்துக்கு வரணும். MBA படிப்பு என்னாச்சு? எக்ஸாம் எழுதினே ரிசல்ட் பத்தி ஒண்ணுமே சொல்லலை, ரொம்ப சகஜமா சிரிச்சு பேசறே? "

"அப்பா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கேன் அதுவும் பஸ்லே அதெ பத்தி விசாரிகாமே எப்பவுமே என் மீது சந்தேகம் தான் உங்களுக்கு. சரி சாப்பிடுங்க இன்னொரு இட்லி வைங்கம்மா அப்பாவுக்கு"

"ஐஸ் வச்சது போதும்! ஏண்டி அவனை கேட்டியா! இதெல்லாம் கேக்காதே சும்மா அவன் அம்மா லொம்மான்னா உடனே உணர்ச்சி வசப்பட்டு அவன் சொல்லறதை எல்லாம் அப்படியே நம்பு. இப்படி அவன் சொல்லறதை நம்பி நம்பித்தான் ..."

"அப்பா நான் சொல்லவே மறந்துட்டேன் பாருங்க, அதெல்லாம் நான் பாஸ் பண்ணிட்டேன். அம்மாவை ஏன் இதுக்கு போயி திட்டறீங்கப்பா?"

"பாத்தீங்களா அவன் என் பையன் புத்திசாலி எதுலே கால் வச்சாலும் அதில் அவனுக்கு வெற்றிதான். சும்மா பையனை திட்டாதீங்க"

"டேய் வாழ்த்துக்கள்டா மை சன். படிப்புலே மட்டும் நீ என்னை கொண்டிருக்கே! சரி உங்க அலுவலகத்திலே ஏதாவது ஸ்பெஷல் இருக்கா?" இவன் எதுக்கு வந்திருக்கான், ஏதோ சொல்ல வரான் மட்டும் தெரியுது, ஒருவேளை வேலையை விட்டுடானா ?

"அப்பா, அம்மா நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் வந்திருக்கேன். நீங்க ரெண்டு பெரும் கொஞ்சம் பொறுமையா நான் சொல்ல வர்றதை கேக்கணும். சரியா ?"

"ரொம்ப பீடிகை போடாதே என்ன விஷயம்னு சொல்லு மொதல்லே"

"ஏங்க கை கழுவிகிட்டு அப்படியே போய் சோபாவில் உக்காந்து பேசிகிட்டு இருங்க, நான் உங்களுக்கு கஷாயம் செய்து எடுத்து வரேன்! அப்புறம் உங்களோட கலந்துக்கறேன் சரியாடா கண்ணா?"

"சரிம்மா, முக்கியமா நீங்கதான் இருக்கணும்"

"என்னடா பொடி வச்சி பேசறமாதிரி இருக்கு"

"இல்லேப்பா அம்மாவும் வந்திடட்டும் அப்புறமா சொல்லறேன்"

"இந்தாங்க இதெ மொதேல்லே குடிங்க, சரி சொல்லுப்பா என்ன விஷயம் ?"

"இல்லே அம்மா வந்து, நீங்க ரெண்டு பேரும் என் கிட்டே ,வந்திடுங்க இங்கே தனியா இருந்து ஏன் கஷ்டப்படறீங்க? நான் பெரிய வீடு பார்க்கறேன்"

"சரி! அப்பாவோட வேலை என்னாடா பன்னறது? நீ பேசறது உனக்கே நியாயமா இருக்கா? அவருக்கு இன்னும் ஏழு வருஷம் வேலை இருக்கே! அவரோட சம்பாத்தியத்தை விட்டுட்டு உன் கூட வந்து என்ன செய்யறது சொல்லு பார்க்கலாம், என்னாங்க நான் சொல்லறது சரிதானே?"

"அதுசரி அவன் என்னவோ சொல்ல வரான்; உண்மை இது இல்லே அதெ மொதல்லே அவரு சொல்லட்டும், சொல்லு ராசா சொல்லு"
"இல்லேப்பா அம்மா ரொம்ப இளைச்சு போய்ட்டாங்க, அவங்களே தனியா எவ்வளவு வேலை செய்வாங்க, நீங்களே சொல்லுங்க அதான் நான் இந்த யோசனைக்கு வந்தேன் "

"டேய் என்னாடா எனக்கு என்ன ஆச்சு இப்போ? ஏதோ ரொம்ப வயசானமாதிரி பேசறே. நான் நல்லாத்தான் இருக்கேன். உன் பிரச்சனைதான் என்ன ?"

"அது இல்லை மானசா உண்மை வேறே! ஏதோ சொல்ல வரான். என்னான்னு கேட்போம் கொஞ்ச நேரம் சும்மா இரு அவன் பேசட்டும்"

"அப்பா, அம்மா நான் நேரடியாவே சொல்லிடறேன், நான் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே ஒரு பெண்ணை காதலித்தேன்" என்று இருவரையும் ஒரு பார்வை பார்த்தான் ராஜா.

"சரிடா அதுக்கு என்னா இப்போ ?"

"இல்லேப்பா அந்த பொண்ணையே எனக்கு கல்யாணம் பேசி முடிச்சுடுங்கப்பா பாவம் அந்த பொண்ணுக்கு வேறே இடத்திலே மாப்பிள்ளை பார்க்கறாங்களாம், அழுதுகிட்டே இருக்காம்மா " என்று இவன் அழாக் குறையாக சொன்னான்.

"என்னப்பா என்னவெல்லாமோ சொல்லறே! நான் என்னோட அண்ணன் பொண்ணை உனக்கு கேட்கலாம் என்று அப்பாகிட்டே பேசிகிட்டு இருந்தேன். உன்னோட பேச்சை கேட்டவுடன் எனக்கு ஒண்ணுமே புரியலையே?"

"அட இதெல்லாம் வேறே கற்பனையா? அதுசரி அதான் அவனே அவனுக்கு பொண்ணு பாத்துகிட்டு வந்து நிக்கறான்"

"அந்தப் பொண்ணோட பெத்தவங்களுக்கு இந்த வெவரம் தெரியுமா? "

"தெரியும் அப்பா! நேற்று அவங்க வீட்டுக்கு போனேன்."

"என்ன! அவங்க வீட்டுக்கு போனியா? நீ ஏண்டா போனே பெரியவங்க வந்து எதுவும் பேசவேணாம்? அவங்க யாரு என்னன்னு விஷயம் எல்லாம் தெரிய வேண்டாம்? எல்லாம் நீயே பேசிட்டு இப்போ எதுக்கு எங்க கிட்டே வந்து சொல்லறே?"

"சும்மா இருங்க, அவன் என்ன உங்க எதிரியா? நிதானமா பேசுங்க, சரிடா அங்கே போய் என்ன பேசினே, அதுக்கு அவங்க அம்மா அப்பா என்ன சொன்னாங்க? "

"இல்லேம்மா அவங்க உங்களை வந்து முறைப்படி பொண்ணு கேக்கச் சொன்னாங்க"

"சரி அவங்க வெவரம் எல்லாம் இந்த டைரிலே எழுதி வச்சிடு, நம்ப மாவை அழைச்சிகிட்டு போய் பேசிட்டு வரோம் "

"வேணாம்மா அவரை அழைச்சிகிட்டு போகாதீங்க. அவரு வந்தா காரியமே விளங்காது. சரி எப்போ போறீங்க? அவ கேட்டா நான் சொல்லணும் இல்லே அதான் கேக்கறேன்? "

"என்னடா அவசரம் நாள் கிழமையெல்லாம் பார்க்கவேணாமா? "

"சரி ரொம்ப தாமதிக்காமல் சீக்கிரம் புறப்பட தயாராகுங்க, ஸ்டேஷனுக்கு வந்து நான் அழைத்துச் செல்றேன் "

"சரி நானே போன் பண்ணி எப்போ வரோம்னு சொல்லறேன், என்னாங்க நான் சொல்லறது சரிதானே?"
என்ற கூறிக்கொண்டே தலையில் கையை வைத்துக் கொண்டார்.

அவரின் செய்கை வித்தியாசமாகப் படவே "அய்யோ! என்னாங்க என்னா ஆச்சு? டேய் ராஜா டாக்டர்க்கு போன் பண்ணுடா? அப்பாவுக்கு என்னமோ" என்று முடிக்குமுன்னே அழ ஆரம்பித்தாள்.

டாக்டர் கிடைக்காததால் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



தொடரும்...
ரமயா

Wednesday, May 13, 2009

ஜில் என்று ஒரு காதல் / நான்காம் பகுதி

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.
இதன் இரெண்டாம் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.
இதன் மூன்றாம் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.

************************************************************

பங்கேற்பவர்கள்
==============
கதாநாயகன் : ராஜா
கதாநாயகி : காஜோல்
கதாநாயகியின் தங்கை: சாரா
கதாநாயகியின் அப்பா : மனோ
கதாநாயகியின் அம்மா : கல்யாணி
வீட்டுச் செல்லம் : சின்னு
பாட்டி: மந்தாகினி
************************************************************

வீட்டை விட்டு வெளியே வந்த ராஜாவுக்கு மனதிற்கு ரொம்பவும் கஷ்டமா இருந்தது. இப்படி வந்தது அவமான போச்சே. நம் காதலுக்கு இப்படி ஒரு எதிரி சிம்மாசனம் போட்டு உக்காந்து இருப்பான் என்று நான் நினைக்கவே இல்லை. சரி மாலை காஜோல் கிட்டே பேசிக்கலாம்.
காஜோலை சந்திக்கும் இடத்துக்கு தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தான் ராஜா. அங்கே சோக பொம்மையாக அமர்ந்திருந்தாள் காஜோல்.

"என்னாம்மா என்னா ஆச்சு?? நான் வந்தப்புறம் உன்னை உங்க அப்பா ரொம்ப திட்டிட்டாரா. எனக்கு ரொம்ப தர்மசங்கடமா போச்சு. உங்க வீட்டுலே உங்க அப்பா மட்டும்தான் வில்லன் என்று நான் நினைச்சது தப்பா போச்சு. ஏகப்பட்ட வில்லன்ஸ் இருக்காங்க. ஏய் என்ன நான் பாட்டுக்க பேசிகிட்டே இருக்கேன். நீ என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சிக்கிட்டு உக்காந்து இருக்கே. பேச மாட்டியா??" என்றான் ராஜா.

"ஒன்னும் இல்லை" இதை சொல்லும்போதே அழுதுவிடுவாள் போல் பேசினாள் காஜோல் .

"என்ன ஒன்னும் இல்லை ரெண்டும் இல்லை, ஏதாவது சொன்னாதானே தெரியும்"....

""ஒன்னும் இல்லைன்னா சும்மா விட வேண்டியதுதானே, என்னை ஏன் வம்பிற்கு இழுக்கிறீங்க" கோவத்தின் உச்சத்தில் கத்தினாள் காஜோல்.

"இங்கே பாரு, உனக்கு இப்போ என்ன பிரச்சனை. அதெ மொதல்லே சொன்னாதானே நான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பேன்."

"கிழிச்சீங்க, நான் தான் வீட்டுலே வந்து பொண்ணு கேளுங்கன்னு சொன்னேன். எங்க வீட்டிலேயும் சீக்கிரம் என் கல்யாணத்தை முடிச்சிடனம்னு ஒரே வேகமா இருந்தாங்க. அதனாலே பயந்து போயி நான் வந்து சொன்னேன். நீங்க என்ன பண்ணிருக்கணும்? புத்திசாலியா உங்க அம்மாவையும், அப்பாவையும் அழைத்துக் கொண்டு பொண்ணு கேட்டிருந்தா எங்க அப்பா இவ்வளவு தூரம் போயி இருப்பாரா?"

"அன்னைக்கி வந்து அவ்வளவு தூரம் என் கிட்டே சண்டை போட்டே, அதனாலேதான் நான் உடனே நீ சொன்ன சனிக்கிழமையே வந்தேன்" என்று சற்றே குரல் உயர்த்திப் பேசினான் ராஜா.

"அண்ணா சுண்டல் சாப்பிடுங்க நல்ல சூடா இருக்கு" அன்னைக்குதான் இவங்ககிட்டே விக்காமல் போனோம். இன்னைக்காவது ஒரு ஐந்து பொட்டலமாவது வித்துடனும் இந்த முடிவிற்கு வந்த சுண்டல் விற்கும் பையனின் குரலில் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

"சரி ஒரு பொட்டலம் என்ன விலை?? எல்லாருக்கும் சொல்லுற விலையை எனக்கும் சொல்லக் கூடாது சரியா??"

அண்ணே எல்லாருக்கும் நான் ஒரே விலைதான் சொல்லுவேன் . ஒரு பொட்டலம் அஞ்சு ரூவா அண்ணே.

"என்ன அஞ்சு ரூபாவா? ரொம்ப அதிகமா இருக்கே?"

டேய்! ஒழுங்கா இங்கே இருந்து ஓடிப் போய்டு! இல்லைன்னா அடி விழும் உனக்கு. அன்னைக்கே உன்னை விரட்டி விட்டேன் இல்லை, இன்னைக்கு உன் தொல்லை தாங்கலைடா, நாங்க முக்கியமா பேசிகிட்டு இருக்கோம், போ! போயி வேறே எங்காவது உன் வியாபாரத்தை வச்சுக்கோ!

அவன்கிட்டே ஏம்மா கோவிச்சுக்கரே, அவனே பாவம் சுண்டல் வித்து பிழைக்கிறான். அந்த தம்பியை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. உனக்கு மனசாட்சியே இல்லையா??

ரொம்ப அதிகமா பேசாதீங்க? வந்து வீட்டுலே கலாட்ட பண்ணிட்டு இங்கே வந்தது ரொம்ப ஒழுங்கு மாதிரி ஒன்னும் நடிக்க வேணாம். நான்தான் உன் கூட ஓடி வரேன்னு சொன்னேன் இல்லையா? ஏன் என்னை அங்கேயே விட்டுட்டு போய்ட்டே??

ஐயோ அக்கா ஓடிப் போகப் போறீங்களா? வேணாம் அக்கா, இந்த அண்ணனைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. உங்களைப் பார்த்தால் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. உங்களுக்கு செட்டு இந்த அண்ணா இல்லை அக்கா. என்றான் சுண்டல் விற்கும் பையன்.

"டேய் நீ இன்னும் இங்கே இருந்து போகலையா? நீ சுண்டல் விக்க வந்தியா இல்லே அறிவுரை வழங்க வந்தியா. மரியாதையா ஓடிப் போய்டு! இல்லே உன் சுண்டல்லே மண்ணை வாரிப் போட்டுடுவேன்!

ஐயோ ! அக்கா அந்த மாதிரி செய்திடாதீங்க, அப்புறம் எங்க மொதலாளி என்னை கடல்லே தூக்கி போட்டுடுவாரு. ஏதோ தோணிச்சு சொன்னேன், விடுவீங்களா? அதுக்குப் போயி ஏன் இப்படி ஆவேசப் படறீங்க??

டேய் என்னாடா! போலீஸ்க்கு போன் போட்டு உன்னை வந்து அள்ளிகிட்டு போகச் சொல்லவா?? எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?? தப்பு பன்னறேனோ, ஒரு ஏழைப் பையனை நான் ரொம்ப திட்டறேனோ" காஜோலின் புலம்பல் அவளுக்கே நியாயமாகப் பட்டது.

ஐயோ! அக்கா அந்த மாதிரி எல்லாம் செய்யாதீங்க. நானே போறேன். சுண்டல் விக்கப் போனால் இங்கேயும் வில்லங்கமா?? நமக்கும் கொஞ்சம் வாயி அதிகம்தான். அவங்க சொந்த விஷயத்துலே தலையிட்டு இருக்கக்கூடாது.

"சரி ரொம்ப கோவமா இருக்கிறமாதிரி நடிக்காதே. சீக்கிரம் விஷயத்துக்கு வா. என்ன விஷயம். எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிருக்கறே?? அதே மொதல்லே சொல்லு"

"என்ன பேசறீங்க நீங்க! என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா? வந்து ஒரு விஷயத்தை கச்சிதமா முடிக்க துப்பு இல்லை, என்ன இங்கே வந்து ரொம்ப அலட்டற மாதிரி இருக்கு"

"இங்கே பாரு நீ சொன்னா மாதிரி எங்க அம்மாவையும், அப்பாவையும் கூட்டிகிட்டு வரணும்னு எனக்கு தெரியலை. அதுவும் அவங்களுக்கு இந்த விஷயம் இன்னும் சொல்லலை. மொதல்லே நீ அவசரப் படுத்தினதாலேதான் உங்க வீட்டுக்கு வந்து அன்னைக்கி சின்னா பின்னமானேன் அதே மொதல்லே நீ "உணரனும்" என்றான் ராஜா.

அது சரி, நீங்க வந்த பண்ணின அலம்பல்லே எங்க அப்பா உங்களை ரொம்ப திட்டிகிட்டு இருந்தாரு. சீக்கிரம் என் திருமணத்தை முடிக்கணும்னு ஒரே ஆவேசமா இருககாரு.

"உங்க அப்பனோட ஆவேசத்தைதான் அன்னைக்கே பார்த்தேனே! உங்கப்பனுக்கு தான் வயசு ஆயிடுச்சு! உன் தங்கச்சிக்கு என்ன ஆச்சு?என்ன குதி குதிக்கறா!! கொஞ்சம் கூட மரியாதை இல்லாத குடும்பமா இருக்கு. இந்த குடும்பத்திலே பொண்ணு எடுக்க எங்க அம்மா அப்பா ஒத்துக்குவாங்களான்னு தெரியலை"

"ஆமாம் இதை இன்னும் கொஞ்ச நாள் கழித்து சொல்லுங்க. காலம் தாழ்ந்து வந்த அறிவு இது. என்னை கல்லூரியில் இருந்து தொரத்தி தொரத்தி காதலிக்கும் போது இந்த அறிவு எங்கே போச்சு? நானும் எதுவும் பேச வேணாம்னு இருக்கேன். என்னை எதையும் பேச வச்சிடாதீங்க" நம்ம குடும்பத்தைப் பற்றி ரொம்ப கேவலமா பேசறானே!! காஜோலுக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.

தொடரும்.....

ரம்யா






Monday, May 11, 2009

ஜில் என்று ஒரு காதல் / மூன்றாம் பகுதி

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.
இதன் இரெண்டாம் பாகம் படிக்காதவர்கள்
இங்கே சொடுக்கவும்.

*************************************************

பங்கேற்பவர்கள்
============

கதாநாயகன் : ராஜா
கதாநாயகி : காஜோல்
கதாநாயகியின் தங்கை: சாரா
வீட்டுச் செல்லம் : சின்னு
கதாநாயகியின் அம்மா : கல்யாணி
கதாநாயகியின் அப்பா : மனோ
பாட்டி : மந்தாஹினி

*************************************************

மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா. ரொம்ப நல்லவங்கன்னு மருமகளே ஒரு சமயத்தில் சொல்லி இருக்காங்களாம். வேகமாக வெளியே வந்தவங்க, யாரு தம்பி, புதுசா இருக்கே! ஏன் எல்லாரும் ஒண்ணா உக்காந்து இருக்காங்க. ஆனா ஒருத்தர் மூஞ்சியும் சரி இல்லை! நம்ம கிட்டே விஷயம் என்னான்னு மனோ கண்டிப்பா சொல்லவே மாட்டான். நாம்பளே நேரா கேட்டுடலாம். யாருப்பா நீ?? உன்னை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே? என்ன விஷயம்?? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?

பாட்டி என்னை ஆசிர்வதிங்க. நான் உங்க பேத்தி காஜோலை பொண்ணு கேட்டு வந்திருக்கேன். உங்க மகன் என்னையும், என் காதலையும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாரு. உங்களைப் பார்த்தால் சாட்சாத் மகாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க. நல்ல வார்த்தை சொல்லி ஆசிர்வாதம் பண்ணுங்க. உங்க மகனுக்கும் கொஞ்சம் அறிவுரை கூறுங்க என்று கூறியபடியே படார் என்று பாட்டியின் காலில் விழுந்தான் ராஜா.

பாட்டிக்கு ஒன்னும் புரியலை, என்னடா காலிலே வந்து விழரே!! பரீட்ச்சை ஏதாவது எழுதப்போறியா?? மொதல்லே சொல்லு நீ யாரு??

"கிழிஞ்சிது இவங்களுக்கு காது கேக்காதா? அடபாவமே நான் காலிலே விழுந்தது அநியாயத்துக்கு வீணா போயுடுச்சே!! கடவுளே இதென்ன சோதனை??" என்று மனதிற்குள் புலம்பல். என் பெயர் ராஜான்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு.

"ஏண்டா மனோ ஏன் ஒரு மாதிரி முழிச்சிகிட்டு உக்காந்து இருக்கே? ஏதாவது பெரிய பிரச்சனையா?? அதான் எல்லாரும் சேர்ந்து பேசறீங்களா? சொல்லுடான்னா?? " என்று தன மகனைப் பார்த்து பாட்டி கேட்டாங்க.

ஆமாம்மா இது ஒரு பெரிய பிரச்சனை, நான் ஐநாசபை கூட்டி தீர்வு காணனும். வாசக் கதவை மூடி வையுங்கன்னு பல தடவை சொல்லியும் யாரும் கேக்கலை. அதான் எந்த வெவரமும் இல்லாமல் ஒன்னு வந்து உள்ளே உக்காந்து இருக்கு நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்க. ஒன்னும் புரியாம ஏதாவது சொல்லி வைக்காதீங்க. குறிப்பா இதோ நிக்கறானே அவன் கிட்டே மட்டும் எதுவும் பேசவேணாம்." என்றார் மனோ

"இந்த பாருங்க அந்த பிள்ளை யாரோ எவரோ, ஒன்னும் வெவரம் தெரியாம மரியாதை இல்லாமல் பேசாதீங்க." என்ற கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. சரியா"

அம்மா உங்களுக்குத்தான் வெவரம் தெரியலை. இந்த அங்கிள் அக்காவை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னாரு அப்பாகிட்டே! அது தெரியுமா உங்களுக்கு? அப்பா உங்ககிட்டே சொன்னாரு இல்லே. நீங்க அதுக்கு பேசாமே அந்த அங்கிள்க்கு பரிந்து பேசறீங்க. எனக்கு கூட இந்த அங்கிளை பார்த்தா பிடிக்கலை. நம்ப சின்னுவை நாய்ன்னு சொன்னாரு. " சரியான நேரத்துலே சரியான மாடுலேசன்னோட போட்டுக் கொடுத்துவிட்டாள் சாரா!

கொஞ்ச நேரம் வாயை மூட்ரயா? பெரியவங்க பேசும் போது உனக்கு இங்கே என்ன வேலை?? போ உள்ளே. அதிகப் பிரசங்கி. நான்தான் பேசிகிட்டு இருக்கேன் இல்லே, உனக்கு ஏன் அவ்வளவு ஆவேசம் வருது. உள்ளே போ, சொன்னா கூட போகாமல் இங்கேயே நின்னுகிட்டு ஏதாவது உளறிகிட்டே இருக்கே. போடி உள்ளே" என்றார் கோவத்துடன் கல்யாணி.

அத்தை ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க, பின்னால் இவங்களை வச்சே பல காரியங்களை சாதிச்சுக்கணும். என்று ஒரு மணகனக்கு ராஜாவுக்கு.

பாருங்கப்பா! அம்மா என்னை அந்த அங்கிள்க்கு முன்னாடி திட்டறாங்க. ஏற்கனவே அந்த அங்கிள் சரி இல்லை. இப்போ எனக்கு ரொம்ப இன்சல்டா இருக்கு. சாரா அழாத குறையா அப்பாவிடம் முறை இட்டாள்

இந்த குட்டிச் சாத்தானுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா இந்த அளவுக்கு பேசும். நம்ப நன்றி சொல்லலாம்னு நினைத்ததெல்லாம் தப்பு போல இருக்கே. சரி கொஞ்சம் மிரட்டி வைக்கலாம். "ஹேய் இங்கே பாரு என்ன நானும் அப்போ இருந்து பாக்கறேன், என்னை ரொம்ப கேவலமா பேசறே? சின்ன பிள்ளையா லட்சணமா நடந்துக்கோ." அப்பா எப்ப்படியோ மச்சினிச்சியை அதட்டிடோம். அடங்கிடுமா இல்லே மறுபடியும் எதுக்குமா? குடும்பமே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு என்று மசுகுள்ளே வெடித்துக் கொண்டிருந்தான் ராஜா

"ஹல்லோ என்ன எங்க வீட்டுக்குள்ளே அத்து மீறி வந்ததும் இல்லாமல் அதிகமா பேசறே நீ." இதுக்குத்தாண்டி நான் அப்பவே சொன்னேன் வாசல் கதவை மூடி வையின்னு. கேட்டியா, பொம்பளை பிள்ளைங்களை வளர்க்கிறது என்பது ஒரு சவால்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனா எனக்கே அந்த அவஸ்த்தை வரும்னு எதிர் பார்க்கலை."

ஆஹா பேச்சு ரூட்டு மாறுது. இங்கே வைக்கணும் வெட்டி பேச்சுக்கு ஒரு வேட்டு. "இங்கே பாருங்க சார் நான் உங்க பொண்ணை விரும்பறேன்; உங்க பொண்ணும் என்னை விரும்புது. கல்யாணத்துக்கு சம்மதம் கேக்கத்தான் நான் இங்கே வந்து இவ்வளவு அவமானப் பட்டுகிட்டு இருக்கேன். இதுக்கு மேலே அமைதி காத்தீங்கன்னா உங்க சின்னு கூட என்னை கேவலமா பேச ஆரம்பிச்சிடும்".

"மறுபடியும் என்னை பேச வைக்காதே. எனக்கு உன்னை பிடிக்கலை. போ வெளியே" மனோ ஆவேசமா கத்தினார்.

சுத்தறது, இதுதானே இப்போதைய உங்களோட பொழுதுபோக்கு ! என்றாங்க கல்யாணி .

அப்பா நீங்க அவரைத் திட்டாதீங்க. எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. அவரையே எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுங்கோ. காஜோல் கெஞ்சுதலாகவும் அப்படியே சற்றே அழுத்தமாகவும் தெரிவித்தாள் தன் காதலை.

"பாத்தியாடி உம்பொண்ணு பேசறதை? படிக்க வைக்க அப்பா அம்மா வேணும். வேலைக்குப் போனப்புறம் நாங்க வேண்டாம்." தொண்டை அடைக்க மனோவிற்கு மேலும் கோவம் தான் அதிகமானது.

"ஏம்ப்பா மனோ! காஜோல் என்ன சொல்லுது, அவங்க அலுவலகத்திலே டூர் போறாங்களாமா? அதுக்கு உன் கிட்டே அனுமதி கேக்கராளா?" பாட்டி பிரச்சனை பாட்டிக்கு.

"ஆஹா! ஆஹஹா இது சூப்பரு. பாட்டி டமாரச்... " ராஜாவின் மனசுக்குள்ளே மத்தாப்பு!

"ஹேய் என்ன எங்க பாட்டியை செவிடுன்னு சொல்ல வரியா? அப்பா பாருங்கப்பா? மறுபடியும் ஆரம்பிச்சுட்டான். சின்னுவை அவிழ்த்து விடவாப்பா??" சாரா வெறுப்பின் உச்சிக்கே போனாள்.

"ஏய் போடி உள்ளே நீ வேறே நொய்யி நொய்யின்னுகிட்டு, அம்மா நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்க? அம்மா நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க ப்ளீஸ்" மகனாகவும் மரியாதை இல்லே! அப்பனாகவும் மரியாதை இல்லை! புருஷனாகவும் மரியாதை இல்லை! "

என்ன மனோ சொல்லறே நீங்கே எல்லாம் ஒன்னும் குடிக்காமல் எனக்கு மட்டும் காப்பியா ?? எனக்கு !இப்போதான் சாப்பிட்டு வந்தேன். நீங்க எல்லாரும் வேணும்னா காப்பி குடிங்க"

எல்லாரும் கொல் என்று சிரிக்க, சின்னுவும் கத்த ஆரம்பித்தது.

ஐயோ ஐயோ, எல்லாரும் என்னை ஏன் இப்படி கொடுமைப் படுத்தறீங்க?மரியாதையா எல்லாரும் உள்ளே போங்க என்று கூறும்போதே நெஞ்சை பிடித்துக் கொண்டு உடகார்ந்தவரை பார்த்து எல்லாரும் பயந்து போனார்கள். மனோவிற்கு ஒண்ணுமே புரியலை தலை சுத்த அப்படியே நாற்காலியில் சாய ஆரம்பித்தார்.

சார் சாரி சார் என்னாலே தான் உங்களுக்கு பிரச்சனை. என்னை மன்னிச்சுடுங்க சார். எதுக்கும் சொல்லி வைப்போம், இல்லேன்னா சின்னு நம்பலை பிடுங்கி வச்சிடும். கடவுளே என்னை இப்போ கண்டிப்பா காப்பாத்து. நல்லா பொண்ணு கேக்க வந்தேன், கொடுமைடா சாமி! ராஜா பாவம் புலம்பலின் உச்சத்திற்கே போய் விட்டான்

அம்மா உங்க குடும்ப மருத்துவர் தொலைபேசி எண்களைக் கொடுங்க. மருத்துவரை வரவழைக்கலாம் என்றான் ராஜா காஜோல் அம்மாவிடம். நம்ப நல்ல நேரம்தான் மருத்துவரே போனை எடுத்து விவரம் அறிந்து உடனே வர சம்மதம் சொன்னார். அப்பா நல்ல வேளை மருத்துவர் உடனே வரேன்னு சொல்லிட்டார். இல்லேன்னா இவங்க எல்லாரும் நம்பளை அடிச்சே கொன்னுடுவாங்க போல. சின்னு பார்வையும் சரியா இல்லே. மெதுவாக காஜோலைப் பார்த்தான். பேசாம போனா கொன்னுடுவேன் என்று ஜாடை காட்டினாள்.

"என்ன ஆச்சு?? உங்களுக்கு ஒன்னும் இல்லை கொஞ்சம் ரத்தக் கொதிப்பு அதிகமா இருக்கு அவ்வளவுதான். அட இதுக்கு போய் ஏன் கண் கலங்கறீங்க." டாக்டர் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாரு.

இல்லே டாக்டர் நான் இன்னைக்கி செய்து முடிக்க நிறைய வேலை வைத்திருந்தேன். விடிஞ்சும் விடியாம இந்த ஏழரை எங்க வீட்டுக்குள்ளே புகுந்து ஒரே ரகளை பண்ணுது. என்று கவலையுடன் டாக்டரிடம் சொன்னார் மனோ.

யாரு இவரு, ஓ இவர்தான் எனக்கு போன் பண்ணினாரா? யாரு தம்பி நீங்க?? எந்த ஊரு? இங்கே என்ன பண்ணறீங்க? இது மருத்துவரின் கேள்வி.

இங்கே பாருங்க நான் எல்லாருக்கும் பதில் சொல்லனும்னு ஒன்னும் அவசியம் இல்லே. அவருக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை இல்லையா? அப்போ நான் கிளம்பறேன். என்னைப் பார்த்தா ஏழரைன்னு சொல்லறீங்க. சரி நான் வரேன். ராஜா மனதில் வெறுமையுடன் கிளம்பினான்.

"வராதே போ!" அவ்வளவு வெறுப்பு மனோவிற்கு.

அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட்டீங்க. நாங்க போய் கோவில்லே வச்சு கல்யாணம் பண்ணிக்கறோம். சரி வாங்க ராஜா போலாம். காஜோலின் அன்பான அழைப்பில் ஒரு கணம் தன்னை மறந்தான். அப்படியே சில விநாடிகள் தன்னை மறந்து சொக்கி நின்றான் ராஜா .

"அக்கா போகாதே இந்த அங்கிள் ரொம்ப மோசம், இவராலே அப்பாவுக்கு உடம்பு வேறே சரி இல்லே. இருக்கா! எனக்கு அழுகையா வருது." அழுகையின் உச்சத்தில் சாரா

ஏய் உன்னோட வேலையை பாரு. வாங்க போகலாம் என்றாள். அழுது அடம் பிடிக்கறது எல்லாம் அப்பாவோட நிறுத்திக்கோ. இப்போ எனக்கு வழிவிடு.

எதுவானாலும் கொஞ்சம் ஆரப் போட்டு பேசி முடிக்கலாம் காஜோல். நீயும் உங்கப்பா மாதிரி அவசரப்படாதே. உள்ளே போ காஜோல்! தம்பி இது மாதிரி விஷயம் எல்லாம் ஒரு நொடியில் பேசி தீர்க்க முடியாது. நீங்களும் அவசரப் படாதீங்க. உங்க வீட்டு பெரியவங்களை வந்து பொண்ணு கேக்கச் சொல்லுங்க. அப்போதான் எல்லாம் சரியா வரும். இப்போ நீங்க மட்டும் போயிட்டு வாங்க. பாசமா சொன்னாங்க கல்யாணி அம்மா.

என்னாடி அங்கே நின்னுகிட்டு சமரசம் பேசறயா? அவனுக்கு எல்லாம் எம்பொண்ணை கட்டி கொடுக்க முடியாது. நல்ல விதமா சொல்லி அனுப்பு. ஏய் காஜோல் போடி உள்ளே. காதலாம் காதல். வேலைக்கு போறதா சொல்லிட்டு வெட்டியா பொண்ணுங்க பின்னாடி சுத்துவானுக, அப்புறம் வந்து பொண்ணு கேப்பானாக, நாங்களும் உடனே கல்யாணம் பண்ணி வச்சிடணும். இது கொஞ்சம் கூட நியாயமா இல்லை ! அப்பாவின் குரல் அதிகமானது.

"இங்கே பாருங்க நான் கண்டிப்பா உங்க பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். ஆனா நான் இழுத்துகிட்டு போய் எல்லாம் தாலி கட்ட மாட்டேன்.எங்க வீட்டிலேயும் சொல்லி அழைத்து வரேன். நீங்க ரொம்ப சத்தம் போடாம உடம்பைப் பார்த்துக்குங்க. அம்மா, பாட்டி நான் வரேன். குட்டி பிசாசு உன்க்கும் சேர்த்துத்தான் சொல்லறேன் நான் போயிட்டு அப்புறமா வரேன். அமைதியாக சொன்னான் ராஜா. காரியம் ஆகணுமே, நமக்கே பேச தெரியலை, இந்த மாமனாரை எல்லாம் எப்படி சமாளிப்பேன்னு தெரியலையே!! ராஜா பொறுமையுடன் தான் பதில்கள் சொல்லிக் கொண்டிருந்தார்

என்ன நான் குட்டிப் பிசாசா, போ! போ! அடுத்த முறை நீ வந்தா சின்னு உன்னை நல்லா கடிச்சி வெச்சிடும். சாராவின் குரலில் இருந்து அவள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் என்பதை நன்கு அறிய முடிந்தது .

தொடரும்...
ரமயா

Tuesday, May 5, 2009

ஜில் என்று ஒரு காதல் / இரெண்டாம் பகுதி

காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !!

இதன் முதல் பாகம் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்.


பங்கேற்பவர்கள்
================
கதாநாயகன் : ராஜா
கதாநாயகி : காஜோல்
கதாநாயகியின் தங்கை: சாரா
கதாநாயகியின் அப்பா : மனோ
கதாநாயகியின் அம்மா : கல்யாணி
வீட்டுச் செல்லம் : சின்னு


காதலியின் வீட்டு நுழைவாயில்

ராஜா: வந்தேன்! வந்தேன்! ஆஹா என்ன அழகான வீடு எனது காதலியின் வீடு. நுழைவாயிலே கண்ணை அசத்துதே. நம்ப ஆளு ரொம்ப பெரிய ஆளுப்பா. பிடிச்சாலும் பிடிச்சோம் புளியம்கொம்பா பிடிச்சி இருக்கோமோ??

சேச்சே நம்ப மட்டும் என்ன குறைச்சலாவா இருக்கோம், நமக்கும் எல்லா வசதியும் இருக்கே! நம்ம வீடு கூடத்தான் அழகோ அழகு. ஆமா இதெல்லாம் யாரு நம்மகிட்டே கேட்டாங்க?மொதல்லே காஜோல் அப்பா கிட்டே நல்ல விதமா பேசுவோம். என்ன நடக்கப் போகுதோ?


அட நம்ப வரோம்னு நம்ப ஆளு நுழைவாயிலை கூட திறந்து வைத்திருக்காங்களே!இனிமேல் இப்படித்தான் மரியாதை கொடுத்து கூப்பிட வேண்டி இருக்கும்! அதுக்கு இப்பவே ஒத்திகை பாத்துக்குவோம். சரி தொறந்து இருக்கும்போது அழைப்பு மணியை எல்லாம் அழுத்த வேண்டியது இல்லே. சும்மா உள்ளே போக வேண்டியதுதான்.

ஆண்டவா எல்லாம் நல்லபடியா நடக்கணும். நல்ல படியா எல்லாம் முடிஞ்சா என் மாமனார் கையாலே 108 தேங்காய் உடைக்கச் சொல்லறேன். ஐயோ இதென்ன ஏதோ ஒண்ணு பாஞ்சு வருது, அட நாய் வளக்கிறாங்களா?? இதை சொல்லவே இல்லையே!!

இது ஓடி வர வேகத்தைப் பார்த்தா நம்ம சதையை 3 கிலோவுக்கு மிச்சமா எடுத்துடுமே! நம்ப கதி இப்படி ஆகிவிட்டதே! என்ன செய்ய! வேகமாக கேட்டின் மீது ஏறினான். அப்பா கேட் மீது ஏறி உட்கார்ந்து விட்டோம். அடுத்து என்ன செய்வது? உள்ளே இருந்து யாரு வருவாங்க நம்மளை காப்பத்த. ஒண்ணுமே புரியலையே? கள்ளி!என்னை இப்படி மாட்டி விட்டுடியே! சீக்கிரமா வந்து தொலை.

இந்த பக்கம் குதிக்கலாம்ன்னு பார்த்தா இங்கே ஒரு நாய். உள்ளே கத்திகிட்டு இருக்கறாங்களே அவங்களோட நண்பரா நீங்க? ஐயோ அப்படி முறைக்காதீங்க! நான் திருடன் இல்லே. இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்கோமே, யாராவது நம்மை வந்து காப்பாத்த மாட்டாங்களா? என்று ஒரு ஆதங்கத்தோடு உள்ளே பார்த்தான்.

உள்ளே இருந்து ஒரு புயல் வேகத்தில் ஒரு பொண்ணு வந்தது. ராஜாவுக்கு கொஞ்சமா உயிர் வந்தது போல் இருந்தது.

சாரா:ஹேய் யாருப்பா நீ எங்க வீட்டு கேட் மேலே ஏறி உக்காந்து இருக்கே?

ராஜா: ஏய் என்ன? உன் வயசு என்ன? என்னை பார்த்து யாருப்பான்னு கேக்குறே?? மொதல்லே இந்த நாயை இழுத்து கட்டு. அப்புறமா நான் யார் என்று சொல்லறேன்.

சாரா:ஹேய் என்னாடா நாய்ன்னு சொல்லறே அவனுக்கு பேரு இருக்கு, உனக்கு அவ்வளவு திமிரா அங்கே இரு எங்க அப்பாவை கூப்பிடறேன்.
ஆமா நீ யாரு

ராஜா: நான் காஜோலை பார்க்க வந்தேன்.

சாரா:என்ன காஜோலா அவங்க என்னோட அக்கா. மரியாதையா இறங்கி ஓடிப் போய்டு, இல்லே இந்த சின்னு உன்னை கடிச்சிடும். பாத்தியா சின்னுக்கு கோபம் வந்திடுச்சு. கத்துது பாரு. சின்னு கேட் மேலே கூட ஏறும் தெரியுமா?

ராஜா: அடப்பாவி சாரா மொதல்லே சின்னுவை கட்டு, உங்க அப்பாவைத்தான் நான் பார்க்க வந்திருக்கேன்.

சாரா: அது!!!!!

ராஜா:என்ன அது?வயசுக்கு தகுந்தா மாதிரியா பேசறே, சரி என்ன படிக்கறே நீ?

சாரா:அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம்.மொதல்லே அக்காவை பாக்கனும்னு சொன்னே இப்போ அப்பாவை பாக்கனும்னு சொல்லறே என்ன சங்கதி? நீ இங்கே இருந்து ஒழுங்கா போக மாட்டே போல இருக்கே! சரி இரு நான் சின்னுவை பிடிச்சுக்கறேன், இப்போ நீ உள்ளே போகலாம்!

ராஜா: கொஞ்சம் மரியாதையா பேசக் கூடாதா! மாமான்னு கூப்பிட்டா என்னா கொறைஞ்சா போய்டுவே?

சாரா: சின்னுவை கையிலே இருந்து விட்டுடவா?? இல்லே உள்ளே ஒழுங்கா போறியா?

ராஜா: இல்லே அப்படி எல்லாம் செய்திடாதே நான் ஒழுங்கா உள்ளே போறேன். என்ன ஆரம்பமே சரியா இல்லையே, அப்புறமா மச்சினிச்சியை கவனிச்சுக்கலாம். மொதல்லே வந்த வேலையை பாக்கலாம்.

சாரா: அப்பா அப்பா யாரோ உங்களை பார்க்க வந்திருக்காங்க. வாங்க சீக்கிரமா!

ராஜா:அட நம்ப மச்சினிச்சி கொஞ்சம் சிடு சிடுன்னாலும் ரொம்ப பொறுப்பா அப்பாவை கூப்பிடறாளே. சரி இருக்கட்டும் அப்புறமா நன்றி சொல்லிக்கலாம்.

மனோ: யாரு தம்பி நீங்க? புதுசா இருக்கே சரி சரி ஏன் நிக்கறீங்க உக்காருங்க. என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க? எனக்கு வெளியே அவசரமா போகணும் சீக்கிரமா சொல்லுங்க.

ராஜா:அட சனிக்கிழமை எங்கேயும் போகமாட்டாருன்னு சொன்னா, சரி எங்கேயாவது போகட்டும் நமக்கு என்ன இப்போ வந்த விஷயத்தை கச்சிதமா முடிக்கணும். இவரு மொகத்தை நேரா பார்க்கவே முடியலையே, இவருகிட்டே போய் நான் எப்படி பொண்ணு கேக்கப் போறேன். கடவுளே என்னை காப்பாத்து. தட்டி தடுமாறி பேச ஆரம்பித்தான் ராஜா. "சார் இல்லே சார் வந்து கேட் இல்லே நாய் இல்லே சின்னு கடிக்க வந்திச்சா சாரா என்னை காப்பாத்தி இங்கே கூட்டிகிட்டு வந்திச்சி"..

மனோ: என்ன சாரா உன்னை இங்கே வரச்சொன்னாளா?? ஏய் சாரா! ஏன் இவனை இங்கே வரச்சொன்னே?யாரு இவன்?

சாரா:ஐயோ அப்பா எனக்கு ஒன்னும் தெரியாது. நம்ப சின்னு கத்திச்சு போய் என்னான்னு பார்த்தா இவரு நம்ப கேட் இல்லே கேட்டு அதுமேலே உக்காந்து இருந்தாரு, உங்களைப் பார்க்கணும்தான் சொன்னாரு.

மனோ: நீ ஏன்பா அது மேலே உக்காந்து இருந்தே! என்னை பார்க்கனும்ன்னா உள்ளே வரவேண்டியது தானே! சரி உக்காரு.

ராஜா:என்னடா இவர் பயமுறுத்தற மாதிரி அதட்டராறு!சரி மொதல்ல உட்காரலாம். அப்புறம் மீதி பேசலாம். எப்படி பேச்சை ஆரம்பிக்கறது? சார் வந்து.. யாரு மாடியிலே ஓ... நம்ம ஆளு!! அப்பா! இப்போ தான் கொஞ்சம் தைரியம் வருது.இனிமேல் நாம் ஏன் பயப்படனும்? நன்றாக சாய்ந்து நாற்காலியில் அமர்ந்தான்.

மனோ:தன பெண்ணை மாடியில் அந்த பையன் பார்த்ததை கவனித்ததை கண்டவர் கடுப்பானார், ஏய் தம்பி இங்கே என்னைப் பார்த்து சொல்லு. வந்த வேலையை மட்டும் பார்க்கணும் அங்கே இங்கே கண்ணு அலை பாயக்கூடாது.

ராஜா:மறுபடியும் மேலே பார்த்தான், காதலி நம்பிக்கையுடன் நிற்பதை பார்த்தவுடன் மனதில் புது வெள்ளம் பாய்ந்தோடியது. சார் நான் உங்க பெண்ணை திருமணம் செய்ய விரும்பறேன். அப்பா!! எப்படியோ சொல்லிட்டோம். இப்போ எதுக்கும் தயாரா இருக்கணும். இவரு அடிப்பாரோ இல்லே அந்த நாயை அவிழ்த்து விடுவாரோ, ஒரே திகிலாதான் இருக்கு. காதல்ன்னா சும்மாவா? பார்ப்போம் என்ன சொல்லுவாருன்னு!

மனோ:யாரை சாராவையா அவ பத்தாவதுதான் படிக்கறா, அவளை எல்லாம் கட்டி கொடுக்க முடியாது. சரி நீ இப்போ கிளம்பலாம்.

ராஜா:சார் நான் சொல்லவந்தது காஜோலை பற்றி சாராவை பற்றி இல்லே, நீங்க என்னை தப்பா புரிஞ்சிகிட்டீங்க.

மனோ:என்ன காஜோலுக்கு நீதான் பேரு வச்ச மாதிரி சொல்லறே. அவளுக்கு நிச்சயம் ஆகிப்போச்சுது, நீ கிளம்பலாம்.

ராஜா:இல்லே நாங்க இரெண்டு பேரும் காதலிக்கறோம். நீங்க வேணா உங்க பெண்ணை கூப்பிட்டு கேளுங்க. எப்படியோ தைரியமா சொல்லிட்டோம்பா!

மனோ:யாரு எம்பொண்ணையா அவ என்கிட்டே சொல்லவே இல்லையே! திருமணத்துக்கு ஒத்துகிட்டாளே! ஏய் இங்கே வா, இவன் என்னவோ சொல்லறான் அதெல்லாம் உண்மையா? எங்கே உங்க அம்மா? கூப்பிடு சாரா..

கல்யாணி: என்னாங்க கூப்பிட்டீங்களா? யாரு இந்த தம்பி, இருங்க தம்பி நான் காப்பி கொண்டு வரேன். பிறகு எல்லாம் பேசலாம்.

மனோ:என்னாடி நான் ஒருத்தன் இங்கே மலைச்சு போய் உக்காந்து இருக்கேன், உன் பொண்ணு பண்ணிய காரியத்துக்கு உன்னை விசாரிக்க கூப்பிட்டா நீ விருந்தோம்பலா பண்ணறே. நில்லு அவளை என்னான்னு கேட்டு சொல்லு. இவன் என்னவெல்லாமோ சொல்லறான். அவளும் திருடி மாதிரி முழிச்சிகிட்டு நிக்கறா. விஷயம் என்னான்னு கேளு. விஷயம் எனக்கு எதிரா இருந்தா நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.

கல்யாணி: சும்மா இருங்க, ஏற்கனவே உங்களுக்கு ரத்தக் கொதிப்பு, சுகர் எல்லாம் இருக்கு, இப்படி ஏன் சகட்டு மேனிக்கு கத்தறீங்க?

மனோ: ஆமாண்டி இன்னும் என்னென்ன வியாதி இருக்கோ எல்லாத்தையும் எல்லாரு முன்னாடியும் சொல்லிக்கிட்டு இரு, உன்னை போய் துரத்தி துரத்தி காதலிச்சு கட்டிகிட்டேனே என்னை ஏதாவது எடுத்து அடிச்சுக்கணும்.

ராஜா: ஆஹா! ஆஹகா!! என்ன அருமையான சந்தர்ப்பம், இந்த விஷயத்தை நம்பளிடம் நம்ப ஆளு சொல்லவே இல்லை. இருக்கட்டும் அப்புறம் கவனிச்சுக்கலாம். சரி நம்ம கதை முடிய ரொம்ப கஷ்டம் இல்லை. சுபமாகவே முடிச்சுடலாம். ஆனா ஆளுதான் சரி இல்லை அதிகமா சவுண்ட் விடறாரு. மனசாட்சி கூறுகிறது "ராஜா முழிச்சுக்கோ. கப்புன்னு பேசி குப்புன்னு காரியத்தை கச்சிதமா முடிக்கணும்".




தொடரும்.....
ரம்யா