Tuesday, October 27, 2009
நகரங்களும் நம்மளும்!!
Thursday, October 22, 2009
நான் தேடும் அவன்!!
Wednesday, October 14, 2009
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!!
பிரியமுடன்
ரம்யா.....
செல்லும் பாதை!!
வியக்க வைக்கும் இந்த வர்ணப்பாதையில் நடை பயில வாருங்கள் செல்லங்களே!!

வெள்ளைகோடுகளும் மஞ்சள் கோடுகளும் சீரான வழியை காட்டுகிறதோ!!



என்னுடன் நடக்கும் செல்லங்கள் கண்டு களிக்க மட்டும் அமைந்தவையோ!!


பார்க்கும் போதே மனம் துள்ளுகிறதே!!
நடந்து செல்லும் போது.........



Monday, October 12, 2009
நண்பர்கள் சந்திப்பு - இரெண்டாம் பாகம்!!
முதல் பாகம் படிக்க இங்கே கிளிக்கவும்.
"ஜமால் அண்ணே! எனக்கு பிடிச்ச ஐஸ் கிரீம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கீங்க. மறந்துடாதீங்க..."
"அதான் நாம வர வழியிலே பார்த்தோமே அங்கேயே போலாம் பாண்டி.
கண்டிப்பா வாங்கித் தாரேன். "
"என்ன நய்யி நய்யின்னு பேசிகிட்டு இருக்கீங்க? வாங்க கிளம்பலாம்."
"வால்பையன் நமக்கு வேண்டியதை வாங்கிட்டு நேரா கோல்டன் பீச் பக்கம் போய்டலாமா? "
"அதுவும் சரிதான் ஜீவன். என்ன ஜமாலு ரொம்ப யோசனையா இருக்கீங்க??"
"அதெல்லாம் ஒன்னும் இல்லே வாலு"
"அண்ணே ஜமால் அண்ணனோட அண்ணி ரொம்ப திட்டிட்டாங்க போல. அதான் உம்முன்னு இருக்காரு."
"திட்டலை பாண்டி! உண்மையை சொல்லி இருக்கலாமோன்னு யோசிச்சிகிட்டு இருக்கேன். "
"சரி முடிஞ்சி போச்சு இப்போ யோசிச்சு என்ன பலன்? வந்திட்டோம் வாங்க சீக்கிரமா ஆரம்பிக்கலாம்."
"என்ன வாலுண்ணே ஆரம்பிக்கணும்? கோல்டன் பீச் கிளம்பறதைத் தானே சொல்றீங்க?"
"இல்லே பாண்டி மேட்டரு வாங்கணும் அதைத்தான் சொல்றேன்"
"அட நான் போய் வாங்கிகிட்டு வந்திடறேன்"
"இல்லே ஜமால்ண்ணே தோ! மேட்டரு மீட்டர் தூரத்துலேதான் இருக்கு நான் போய் வாங்கியாறேன். அதுவரை நீங்க பாமிலி மேட்டர் பேசிகிட்டு இருங்க"
"அதெல்லாம் இருக்கட்டும். நீ போய் ஒழுங்கா நல்ல பிராண்டா பார்த்து வாங்கியாரனும் சரியா?"
"என்னாது பிராண்டா என்னங்கண்ணே சொல்றீங்க? இது கூட எனக்கு தெரியாதா? அதெல்லாம் நான் கவனிச்சு நல்லா வாங்கியாறேன்"
"சரி இந்தாங்க பாண்டி பணம்..."
"ஜீவண்ணே! என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க. பணமெல்லாம் வேணாம். என் கிட்டே பணம் இருக்குண்ணே"
"சரி பேசிகிட்டே நிக்காதே சீக்கிரம் போயிட்டு வாங்கிகிட்டு வா. வாலுவிற்கு அவசரமான அவசரம்"
"சரி வாலுண்ணே கப்பு வேணுமா கோன் வேணுமா?"
"என்னாது கப்பு! கோனா! என்னையா சொல்றே நீயி?"
"ஐயோ அண்ணே! கப்பு ஐஸ் வேணுமா? இல்லே கோன் ஐஸ் வேணுமான்னு கேக்கறேன்!"
"தம்பி மொதல்லே மேட்டரு அப்புறம்தான் ஐஸ் எல்லாம் அதுக்கு சாதா ஐஸ் போதுமே கப்பு, கோன் எல்லாம் வேணாமே!"
"ஜீவன் அண்ணே! எனக்கு சுத்தமா புரியல என்று சத்தமாக கார்த்திகைப் பாண்டியன் வெள்ளையாக கூறினார்"
"அடப்பாவி இவ்வளவு நேரம் ஐஸ்க்ரீம்தான் வாங்கி வரதா சொல்லிக்கிட்டு இருந்தியா நீயி??"
"சரி விடுங்க வாலு, நானே போய் வாங்கியாறேன்.."
"சீக்கிரமா போயிட்டு வாங்க ஜமால். இன்னும் அவ்வளவு தூரம் போயிட்டு சுருக்கா வீடு திரும்பனும்..."
"தோ! வந்துடறேன் ஜீவண்ணே!"
"வாலு அண்ணே! ஜீவன் அண்ணே இதெல்லாம் வேணாம். நாம கோல்டன் பீச்சை சுத்திப் பாத்துட்டு திரும்பிடலாம்..."
"பாண்டி! வேணாம் உசுப்பேத்தாதே! இன்னைக்கு நம்ம சந்திப்பின் நோக்கமே மேட்டருதான். என்ன ஜீவன் நான் சொல்றது?"
"இல்லே வாலு பாண்டி பயப்படறாரு போல இருக்கே! வேணா நாம சரக்கு இல்லாமல் சுத்திட்டு வீட்டுக்கு போய்டலாம்..."
"அதெல்லாம் இல்லே ஜீவன் இன்னொரு சான்ஸ் நமக்கு கிடைக்காது சும்மா இருங்க நீங்களும் பாண்டி கூட சேர்ந்துக்காதீங்க. ஜமால் வாங்கியாரட்டும். கிளம்பலாம்..."

"அண்ணே! குடி குடியை கெடுக்கும். வேணாம்ண்ணே..."
"ஜீவண்ணே! வந்துட்டேன் வாங்க வாலு, ஜீவண்ணே! பாண்டி எல்லாரும் கிளம்புவோம்..."
"அப்பாடா ஒரு வழியா கோல்டன் பீச் வந்தாச்சு. கொஞ்ச நேரம் அப்படியே காலாற நடக்கலாம் வாங்க எல்லாரும்..."
"என்ன ஜீவன்! கொஞ்சம் கூட வெவரம் இல்லாதவங்களா இருக்காங்க இந்த ரெண்டு பேரும். ஜீவன் அவங்க போகட்டும், நம்ம ரெண்டு பேரும் இப்படியே இங்கனகுள்ளே ஒதுங்கிக்கலாம்..."
"சரி வாலு, நீங்க ரெண்டு பேரும் சுத்தி பாத்துட்டு வாங்க. சரியா ரெண்டு மணிநேரம் சுத்திட்டு வந்திடனும். நாம கிளம்பிடலாம்..."
"சரி ஜீவண்ணே! பத்திரமா இருங்க, வாலு நீங்களும்தான் ரொம்ப அலம்பல் வேண்டாம் உஷாரா இருங்க. பாண்டி வாங்க அந்த ஜெயின்ட் வீல் சுத்தலாம்..."
"தோ! வாங்க ஜமால்ண்ணே போலாம், அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் இவங்க பத்திரமா இருப்பாங்களா. பயமா இருக்கு. .."
"இதுலே அவங்களுக்கு சர்வீஸ் அதிகம் பத்திரமா இருப்பாங்க பாண்டி, கவலைப் படாதீங்க வாங்க போலாம்.."
"என்ன அது ஜீவன் பாக்கெட்டுலே இருந்து எடுக்குறீங்க?"
"ஒன்னும் இல்லே வாலு வீட்டுலே இருந்து ஊறுகாய் எடுத்து வந்தேன்"
"அட என்னாங்க? கடையிலே பாக்கெட் கிடைக்குமே அதை வாங்கி இருக்கலாமே? "இதை போய் வீட்டுலே இருந்தா எடுத்து வந்தீங்க ? அண்ணி பார்க்கலை"?
இல்லே பாட்டில்லே கொஞ்சமாதான் இருந்திச்சி அதுனாலே பாட்டிலோட நைசா பாக்கெட்டுலே வச்சிக்கிட்டு வந்துட்டேன். கடையிலே வாங்கினா நமக்கு ஒத்துக்காது. அதான் வீட்டுலே இருந்து தள்ளிகிட்டு வந்துட்டேன்.
"அப்படியா எங்கே கொடுங்க அட சுவை கூட நல்லா இருக்கு ஜீவன் "
வால்பையனின் கைபேசி செல்லமாக சிணுங்கியது. யாரு ஜீவன்?
"நிம்மதியா இருக்கலாம்னு வந்தா... "ஹலோ யாரு?? யாரு தங்கமணியா? சரி அதுக்கு என்ன இப்போ?""என்னாங்க நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க?"
"இங்கே பாரு!.. நான் ஒரு முக்கியமான வேலையிலே இளுக்கேன். சரியா நீ அப்புலமா பேசு..."
"என்னாங்க சரியா பேசுங்க ஏன் உளர்ற மாதிரி பேசறீங்க? அப்படி என்ன முக்கியம் ?"
"இங்கே பாலு நானு வந்து.... ஜீவன் அந்த பாட்டிலை எழுங்க..."
"ஐயோ! யாருங்க ஜீவன்.. பாட்டிலா என் கிட்டே பொய் சொல்லிட்டு அங்கே போய் தண்ணி அடிக்கிறீங்களா?"
"ஹலோ! நீ மொதல்ல போனை கீழே வை.. நான் அப்புலமா நேத்தைக்கு பேசறேன்..."
"ஐயோ! நேத்தைக்கா? அட என்னாங்க? நீங்க நேத்து ராத்திரிதானே சென்னைக்கு வண்டி ஏறினீங்க?"
"ஜீவன் ரொம்ப பேசறா போனை வச்சிடட்டுமா???"
"சரிங்க வாலு வச்சிடுங்க.. வீட்டுக்கு போய் தங்கச்சிகிட்டே சண்டை போடுங்க. இப்போ வேணாம்...."
"இருங்க ஜீவா ஒரே ஒரு பாட்டு படிக்கறேன். எம்பொண்டாட்டிக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்..."
"அட பாட்டு பாட தெரியுமா வாலு?"
"தெரியும் தோ பாடறேன் கேளுங்க! நீயும் கேட்டுக்கோம்மா...ஊத்தி கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு! இந்த உலகமே சுத்துதடி பல ரவுண்டு""என்னாங்க என்ன பண்றீங்க அங்கே! யாரு பக்கத்திலே இருக்காங்க? எங்கே போனை கொடுங்க, அவங்க கிட்டே நான் பேசிக்கறேன்..."
"ஹேய்! என்னா என்னோட ஃப்ரெண்டை உனக்கு தெரியாது.. நீ எதுக்கு அவருகிட்டே பேசலும்..."
"வாலு என் கிட்டே கொடுங்க நான் பேசறேன்! தங்கச்சிகிட்டே. பயப்படவேனாம்னு சொல்றேன்..."
"ஜீவன் ஊறுகா நல்லா இருந்துச்சு அதான் சாப்பிட்டு முடிச்சுட்டேன்.."
"அண்ணே உங்க போன் அடிக்குது எடுத்து பேசுங்க" என்று அங்கலாயிச்சார் பாண்டி
"அட! இல்லே ஜீவன் உங்க போன்தான் அது கூடவா தெரியலை?" இது ஜமால்
"அதெல்லாம் ஒன்னும் இல்லை நான் போன் எடுத்துகிட்டு வரலை. வாலு இன்னொரு பெக் ஊத்துங்க..."
"பெக் என்ன கணக்கு ஜீவன் இருக்கறதை அப்படியே சாச்சுக்கோங்க"
"வாலு அண்ணே ஏன் எப்படி சொல்லுறீங்க ஏற்கனவே அவரோட போன் அடிக்கிறது கூட தெரியாம பேசிகிட்டு இருக்காரு"
"ஜமால் நான் என்ன பிளாட் ஆகிட்டேன்னு நினைக்கிறீங்களா, நான் எப்பவுமே ஸடடிதான்"
"ஐயோ! அண்ணே போன் விட்டு விட்டு அடிக்குது, நீங்க என்னவோ எடுக்காமே இப்படி..."
"ஓ! அட ஆமா! ஹல்லோ யாலு யாலு?"
"என்னாது என்னை தெரியலை?"
"ஆமாம் நீங்க யாலு? எதுவானாலும் நாளைக்கு பேசுங்க. நான் இப்போ பிஸி"
"என்னாது பிசியா?? என்னாங்க நான்தான் பேசறேன்""
"நான்னா யாரு தெரியலையே?"
"நான் தான்.... இன்னுமா என்னோட குரல் தெரியலை"??
"ஐயோ எங்கவீட்டு சிங்கமணி..... நீயா சரி என்ன சொல்லு!"
"டைம் என்னாச்சு ?"
"அதை அங்கே இருக்குற கடிகாரத்துலே பாறேம்மா அதை போய் ஏன் என்கிட்டே கேக்குறே??"
"இல்லே ஒரு மார்க்கமாத்தான் பேசறீங்க. எனக்கு ஒன்னும் புரியல சீக்கிரம் வீட்டுக்கு வாங்க ஆமா சொல்லிட்டேன்...."
"அதான் சொல்லிட்டே இல்லே அப்புறம் ஏன் உருமரே???"
"என்னா???"
"இல்லே வந்துடறேன்னு சொன்னேன் வை போனை! வேலை நிறைய இருக்கு.."
"தெரியும்! தெரியும்! உங்க வேலை என்னான்னு..."
"போனை வச்சிட்டாங்க! ஹா ஹா ஹா...."
"ஜீவன் அண்ணே! நீங்க ரொம்ப தைரியமா டீல் பண்ணிட்டீங்க"
"வால் எப்படி டீல் பண்ணினாருன்னு நாங்க பாக்காம போனோமே"
"நானும் பாண்டியும் வாலுவை அப்துல்லா வீட்டுலே டிராப் பண்ணிட்டு கிளம்பறோம். பாண்டிக்கு பர்ச்சஸ் பண்ண போகனுமாம்..."
"இல்லேண்ணே! அவரு(ஜீவன்) ஒன்னும் ஸடடியா இல்லே லேசா தூக்கம் வருதுன்னு சொன்னாரு . அதுனாலே கடைக்கு போக எனக்கு அவசரம் இல்லே"
"ரெண்டு பேரையும் பொறுப்பா சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்துட்டு நாம் கிளம்பலாம்..."
"மறுபடியும் ஒரு நாள் சந்திப்போம்... பை பை பை எல்லாருக்கும்"
Tuesday, October 6, 2009
தேவதையின் வரங்கள்!!
தனக்குத்தானே சட்டம் வகித்துக் கொள்ளுதல், என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த "தேவதையின் வரங்கள்" என்ற இடுகையை வெளியிட துணிந்து விட்டேன்.
சமீப காலமாக வலையுலகில் தொடர் பதிவுகள் அனைவரையும் கலக்க வைத்தது - கேள்வி பதில்கள், தேவதையின் வருகை.. இதில் "தேவதையின் வரங்கள்" என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆனால், அந்த தலைப்பில் நானே என்னை எழுத அழைத்து இதோ எழுதவும் ஆரம்பித்து விட்டேன். கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் உங்களுக்கு புரியும் (இப்படி குழப்பினா எப்படி புரியும், புரியாம எழுதறது அப்புறம் இப்படி ஒரு பிட்டை போடறது). நான் விளக்க தேவை இல்லை (அட இங்கே பாருய்யா! இந்த மாதிரி தொல்லைகள் வேறே! இப்படி நீங்க சொல்றது என் காதுலே விழுகிறது. என்ன செய்ய? கொஞ்சம் பொறுத்துக்கோங்க) .
தேவதை என் முன்னே வந்தாச்சு! என்னுடைய அழைப்பை ஏற்று ரெண்டு தேவதைகள் வந்து விட்டார்கள். ஒரு தேவதை அமைதி, ஒரு தேவதை கொஞ்சம் லேசா குறும்பு அதிகம்.
தேவதையிடம் எவ்வளவு வரம் என்றெல்லாம் விதி முறைகள் வகுத்துக் கொள்ளவில்லை. மனதில் ஏற்படும் தேவைகள் நிறைவடையும் வரை கேக்கலாமே! நீங்க என்ன சொல்லவரீங்க? சரிதானே நண்பர்களே!
இவங்கதான் குறும்பான தேவதை