Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Wednesday, June 23, 2010

கோனே ஃபால்ஸ்!!

இந்த படம் நாங்க எடுக்கலை அங்கே இருந்து வாங்கி வந்தேன். ஏன்னா நாங்க சென்ற போது கொஞ்சமாகத்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

திருக்காரிக்கரை (காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' . என்றாயிற்று) தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர்.

அழகிய பசுமை நிறைந்த ஊராகத் திகழ்கிறது.

பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவ தலம் என்று போற்றப்படுகிறது.

இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது. இங்கிருந்து கோனே ஃபால்ஸ் பயணமானோம்.

செல்லும் வழி எல்லாம் நண்பர்கள் பட்டாளம். அவர்களை பார்த்தவுடன் மனதிற்குள் ஒரே குஷியாகிப் போனது. பாருங்க குழந்தையை எவ்வளவு அழகா வச்சிக்கிட்டு இருக்காங்க.

இவர்கள் தண்ணீர் குடிக்கும் அழகை இன்றெல்லாம் ரசிக்கலாம். இந்த தண்ணீர் கோனே ஃபால்ஸ்சில் இருந்து வருகின்றது.


அம்மா தண்ணீர் அருந்தும் போது குழந்தையும் சேர்ந்து தண்ணீர் குடித்ததை காண மிகவும் அழகாக இருந்தது..

போட்டோ எடுக்கறதை பார்த்து பயந்துட்டாங்க போல. இல்லே அந்த குட்டியை தூக்கிகிட்டு வந்திடுவோம்னு மொறைக்கிறாங்க.


நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர் இப்படி குளமாகிறது. அதில் எல்லாரும் குளிக்கறாங்க!!



NOTE: கோனே ஃபால்ஸ் ஆந்திராவைச் சேர்ந்த அருமையான சுற்றுலா தளம். சென்னையில் இருந்து சுமார் 60KM தொலைவில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த புத்தூரில் இருந்து 10KM தொலைவில் அமைந்துள்ளது. நுழை வாயிலில் அழகிய வளவு அமைத்திருக்கிறார்கள். அதில் "கைலாசானாதா கோனே ஃபால்ஸ்" என்று எழுதி இருக்கும்.





Monday, March 23, 2009

கொடைக்கானலின் கொஞ்சும் கொஞ்ச அழகு இன்னும் சில!!!

கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!
இன்னும் சில படங்கள் உங்களுக்காக!!

வானம் எது, பூமி எது, மரம் எது, செடி எது, நீர் எது
சந்தேகமா இருக்கின்றது இல்லையா?? அதுதான் இந்த படத்தின் சிறப்பே !!

வானம், நிலம், நீர் இங்கே சத்தமில்லாமல் மொத்தமா அரங்கேறி இருக்கின்றன!!

அதோ தெரியுது பாருங்க தண்ணீர் அந்த தண்ணீர் குடிக்க ரொம்ப அருமையா இருக்கும்!!

இது இயற்கையின் அழகு நிறைந்த ஒரு இடம் உங்களுக்காக!!


இதுவும்தான் இயற்கையின் அழகு நிறைந்த ஒரு இடம் உங்களுக்காக


பச்சை பசேல் என்று பச்சை கம்பளம் விரித்தார் போன்று பசுமையான புல் தரை அமர்ந்து யோசித்தால் பல பதிவுகள் எழுதலாமே??


அட இங்கே பாருங்க!!
மலை அரசி மேகத்தை மறைக்க பார்க்கிறான்!!



இயற்கையின் எழில் சூழ குருஞ்சியாண்டவர் கோவிலின் தோற்றம்!!


தீப்பெட்டிகளாகத் தெரிகின்றதே!! நேர்த்தியாக இயற்கை அழகுடன் அமைந்திருக்கும் வீடுகள்!!


இன்னும் கொஞ்சம் பின்னால் தள்ளி நின்று எடுத்த படம் உங்களுக்காக !!


மற்றொரு கோணத்தில் அதே வீடுகளின் காட்சி உங்களுக்காக!!

ஆஹா!! அங்கே என்னா சிவப்பாய்??
ஒன்றும் இல்லை அழகான ஒட்டு வீடுகளின் அணிவுகுப்பு!!



இதுவும் ஒரு கோணம்தான் இயற்கையின் மறு பரிமாணம் உங்களுக்காக!!



மரம், செடிகளுக்கு பின்னால் இருந்து மலை அரசியை ரசித்த காட்சி!!

இந்த படம் இயற்கையின் வளம் நிறைந்த, வனப்பு மிகுந்த ஒரு காட்சி!!



பூங்காவிற்குள் புகுந்து பிடித்த படம் உங்களுக்காக!!


மலரும், மக்கள் வெள்ளமும் பூங்காவிற்குள் ஒரு இனிய அணிவகுப்பு !!


வசந்தமான மலர்களின் மாயத்தோற்றமா??
இல்லை இல்லை உண்மையான தோற்றம்தான்!!


அழகோ அழகு கொள்ளை அழகு!!
இதுதான் மதி மயக்கும் சோலையோ!!

மலர்களுக்குதான் எத்துனை மயக்கும் திறன் உள்ளது!!
இல்லை! இல்லை!!
இது மதி மயக்கும் சோலையேதான்!!

தண்ணீர் ஒட்டாத தாமிரை இலையும், அதன் அழாகான மலரும்!!


உயரமான மரங்கள் மலை மீது தோன்றும் இந்த காட்சி அழகிற்கு அழகு செய்கின்றது!!

பாருங்க இந்த பில்லர் ராக்ஸ் எவ்வளவு அழகாக இருக்கின்றது, தோளோடு தோள் உரசிக்கொண்டு நிற்கும் அழகான அமைப்பு!!

மலைக்கும், மரங்களுக்கும் இடையே நைசாக நம்மை பனி அரக்கன் எட்டிப்பார்க்கும் காட்சி!!


என்ன சத்தம் இந்த நேரம்??

ஏன் ரம்யா! பழத்தை கொடுத்துட்டு
என்னை திங்க விடாம சுத்தி சுத்தி வரே??
எனக்கு அழ அழையா வருது!!

எங்கே போனாலும் விட மாட்டியா??
மவளே இப்போ நீ மாட்டினே என் கிட்டே......

இப்போ நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறது போல உணருகின்றேனே!!




பின் குறிப்பு
===========
1. ஒட்டு போட்டீங்கன்னா !!
2. இந்த முறை உங்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்
3. ஏன்னா அவங்களே என்னை தேடிகிட்டு இருக்காங்க
4. உங்களையும் மாட்டி விடவா???







Thursday, March 19, 2009

கொடைக்கானலின் கொஞ்சும் கொஞ்ச அழகு!!!



கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!


பாருங்கள் கோடையின் இயற்கை அழகை!!


இங்கு வானமும் சேர்ந்து கொள்கின்றது நம்மை வியக்க வைக்க!!


மலை மங்கையின் மடியில் ஒரு கிராமம்!! எவ்வளவு அழகு !!

மலையரசியும் பனி மேகங்களும் நம்மை போட்டி போட்டுக் கொண்டு வியக்க வைக்கின்றன!!

ஒரு கிராமத்தை மறைத்த பனி அரக்கன்!!

மலையின் அழகும் மேகங்களின் ஓட்டங்களும்!!


மலரின் அழகோ கொள்ளை அழகு!!
மலர்களின் வண்ணங்களும் வியக்க வைக்கும் வர்ணங்களும்!!

மஞ்சள் மலரின் மலர்ச்சி!! ஒரு வேளை நமக்காக இருக்குமோ??

இங்கே பாருங்கப்பா மலர் கொத்தின் அணிவகுப்பை!!

மயங்க வைக்கும் மலர்த் தோட்டம் நமக்காக!!

இந்த வெள்ளை மலர்ச் செண்டும் நமக்காகத்தானே!!




பசுமையான குடை!! மழைக்கு ஒதுங்கலாமோ??


பாருங்கள் நம் மக்களும் ரசிக்கறாங்க!!




இது ஒரு போட்டோ கடையில் இருந்த போட்டோவை படம் பிடித்தோம்!!


மலை அரசியுடன் பின்னி பிணைந்த கிராமம் மற்றும் இயற்கையின் அழகு!!





நந்தவனத்திற்குள் அழகு மலர்கள் மற்றும் வித விதமான கைவண்ணங்களால் ஆன வடிவமைப்புக்கள்!!





நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!





விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!




பாய்ந்து அவர் தம் குட்டியை அணைக்கும் அழகை பாருங்களேன் அதையும் எடுத்துட்டோமில்லே!!






பின் குறிப்பு
============
பிடிக்குதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா!!
ஓட்டுப் போட்டவர்களின் பெயர்களை நம் நண்பர்களிடம் கூறிவிடுகிறேன்.
பெயர் கூட சொல்லி விடுகின்றேன். அப்போதுதான் நீங்கள் அங்கே செல்லும் போது உங்களை கவனிக்க அவரால் முடியும் இல்லையா??