விருது தருபவர் : பூர்ணிமா சரண்
விருது பெறுபவர்: ரம்யா தேவி
பட்டாம்பூச்சி விருது கொடுத்த பூர்ணிமா சரணுக்கு ம்ம்ம்ம் எவ்வளவு நன்றி சொல்லறது கோடிக்கும் மேலே நன்றிகள். எனக்கு செவாலியே விருது கிடைத்த உணர்வு.
இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கலாம் என்று தேர்வு செய்திருக்கேன். புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் வகையாக (நேரம், ம்ம் இல்லைன்னா நாங்க பாபுலர் பிகர் ஆகமாட்டோம் பாருங்க இதெல்லாம் நம்ம தலையழுத்து அப்படீன்னு நினைக்கிறீங்களா, ஹி ஹி பரவாஇல்லை)
இதோ நான் தேர்ந்தெடுத்திருக்கும் மூன்று பேர்:
அண்ணன் வணங்காமூடி: துள்ளும் இளமையுடனும், புதுமையான பல குறும்பு டிப்ஸ்களை அள்ளி விடுகிறார்.
தமிழ் தோழி: திகில் கதை சொல்லவதில் மிகவும் கைதேர்ந்த நிபுணி. பயமுறுத்துவாங்க அவ்வளவுதான்.
ராகவன்: பின்னுட்டம் மட்டும் எழுதி நம்மை அசத்தியவர். இப்போ என்னா பண்ண போறார்னு பாப்போம். (ஹையா மாட்டிவிட்டுட்டேன்).
இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது
*** இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போடணும்.
*** உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த பூர்ணிமாவை மறக்காதீங்க
*** முடிஞ்சா அப்பப்போ என் ப்லோக் படிச்சு நிறைய பின்னுட்டம் எழுதனும்
*** எனக்கு மட்டும் கள்ள ஒட்டு அதிகமா போடணும். பூர்ணிமாவுக்கு அல்ல (ஹி ஹி ஹி ஹி ஹி ஹி)
டிஸ்கி 1: பூர்ணிமா சரியா எழுதி இருக்கேனா.
டிஸ்கி 2: பூர்ணிமா பெரிய மனது பண்ணி எனக்கு இந்த விருதை கொடுத்திருக்காங்க. ரொம்ப நன்றி பூர்ணிமா.
ஒரு ஆளுயர மாலை கழுத்தில் விழுந்தமாதிரி ஒரே சந்தோசம் தான்......
வாங்க வாங்க எல்லாரும் வாங்க - விருது வாங்கிட்டேன் ....


