வாழ்வதே எனக்கு சாதனைதான் அட்டையில் எழுதிய இந்த வாக்கியம் எனக்கு சொந்தமானது!!
ஒரு நிஜமான மறு பிறவி இந்த வார்த்தையும் எனக்கு சொந்தமானது!
தன்னம்பிக்கையுடன் வாழும் பெண்களை நேர்த்தியான முறையில் உலகுக்கு கொண்டு வருகின்றனர் தேவதை குடும்பத்தினர்!
அறிமுகம் என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் தருகின்றனர்.
ஒவ்வொரு இதழிலும் நம் வலைபூக்களில் ஏதாவது ஒரு பெண் வலைப்பதிவு தேவதையை அலங்கரிக்கிறது!
சகோதரி ராமலக்ஷ்மி அவங்களோட வலையும் தேவதையின் "வலையோடு விளையாடு" என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கு. ராமலக்ஷ்மி சகோதரியுடன் நானும் தேவதையில் இடம் பெற்றதிற்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. சகோதரியும் அவர்கள் வலையில் இடுகையிட்டு என்னையும் அன்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி சகோதரி!
வளம் பெற வரம் தரும் தேவதை. இதுதான் இன்று மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி மாதம் இரு முறை வரும் பத்திரிகை. பெண்களை முதன்மைப் படுத்தி பல கட்டுரைகள் கொடுக்கிறார்கள். அந்த வரிசையில்தான் என்னையும் அணுகினார்கள். நான்தான் சிறிது தாமதப்படுத்திவிட்டேன்.
தேவதை முத்தான மூன்று புத்தகங்களை கொடுக்கிறார்கள். அதில் சத்தான பல விஷயங்களும் அடக்கம். முதலில் ஆசிரியர் எனது வலைபற்றி எழுத விவரம் கேட்டார். கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு என்னைப்பற்றியே வெவரம் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் யோசித்துச் சொல்வதாக கூறினேன். ஆனால் அவர்களுக்கு அவர்கள் கேட்ட நேரத்தில் என்னால் பேட்டி கொடுக்க இயலவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டேன். அதனால்தான் தேவதையில் நான் சற்றே தாமதம்.
தேவதையில் எழுதினது கடுகளவுதான்.மலையளவு மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் பசுமையாக என்னைச் சுற்றுகின்றனவே!!
எப்பவோ கொடுத்திருக்க வேண்டிய பேட்டி இது! பல பத்திரிகைகளில் என்னை கேட்டும் இருக்கிறாகள். நான்தான் நாட்களை கடத்திக் கொண்டே வந்தேன், இறுதியில் தேவதையில் வந்தேன், நண்பர்கள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் அனுமதி இல்லாமலே புகுந்துவிட்டேன்.
தேவதையின் பணி சிறக்க வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே!!
தேவதை குடும்பத்தாருக்கு நன்றி!
நன்றி திரு. நவநீதன் சார்!
நன்றி செல்வி. காவ்யா!
நன்றி திரு. ரவி! (போட்டோ எடுத்தவர்)