Monday, June 14, 2010
எனது ஹாஸ்டல் அனுபவம்!!
Monday, December 21, 2009
டிசம்பர் 20 - ஈரோட்டில் பதிவர் - வாசகர் சந்திப்பு!!

அனைவரையும் நேரில் சந்தித்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும் அதே சமயத்தில் நெகிழ்ச்சியையும் கொடுத்தது என்று கூறினால் அது மிகையாகா. வருகை தந்தவர்கள் அனைவரும் முன்பே பழகியது போன்று தோன்றியதே அன்றி புதியவர்கள் என்ற எண்ணம் மனதில் எள்ளலவும் ஏற்படவில்லை.
எல்லாரும் ஒரே மாதிரி அன்பாகப் பேசினார்கள், அறிமுகப் படுத்திய விதமும் அருமை.
நிகழ்ச்சியை பதிவர் நண்பர் ஆரூரன் விஸ்வநாதான் தொகுத்து வழங்கிய விதமும் அபாரம்.
நண்பர் கதிரின் பணி வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்திருக்கிறார். நல்லதொரு ஆரம்பம் இவ்விழா என்று கூறலாம்.
சகோதரர் பழமைபேசி அவர்கள் அருமையாகப் பேசினார்கள். அவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அருமை.
வலைச்சர ஆசிரியர் சீனா அவர்களும் அருமையாக பேசி எல்லோரையும் அசத்தி விட்டார்.
சகோதரி சும்ஜலா வலைப்பூவை ஜொலிக்க செய்ய பல நுணுக்கங்களையும் தனது உறையில் தெரிவித்தார்.அந்த விஷயங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஈரோட்டு நண்பர்கள் ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி இவர்கள் அனைவருக்கும் நன்றி.
எனக்கும் மேடையில் ஒரு இடம் கொடுத்து அமரச்செய்து, என்னையும் உறையாற்றச் சொன்னார்கள். மிக்க நன்றி மக்கா!
சென்னையில் இருந்து (கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, வானம்பாடி)
திருப்பூரில் இருந்து (பரிசல், வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்)
மதுரையில் இருந்து (சீனா, கார்த்திகைப்பண்டியன் ஸ்ரீதர், தேவராஜ் விட்டலன், ஜெர்ரி)
ஈரோட்டில் இருந்து (ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி, நாமக்கல் சிபி)
அமீரகத்தில் இரண்டு நண்பர்கள் (செந்தில்வேலன், நாகா)
கோவையில் இருந்து (லதானந்த், பழமைபேசி, சஞ்சய் காந்தி)
கரூரில் இருந்து (இளையகவி, முனைவர் இரா.குணசீலன்)
மற்றும் வாசகர்களும் எங்களுடன் பங்கேற்றனர்.
சுவையான விருந்து, அன்பான வரவேற்பு நெகிழ்ந்து போனோம். எங்களை ரயில் நிலையத்திற்கே வந்து அழைத்துப் போன பாங்கு என்ன. ரயில் நிலையம் வந்து அழைத்துச் சென்ற பழமைபேசி அண்ணா மற்றும் சகோதரர் கதிர் உங்களுக்கு மிக்க நன்றி. எங்களுக்கு என்று தனி அறை. தேவைகள் அனைத்தும் பார்த்து பார்த்து கவனிக்கப் பட்டன. குறை ஒன்றும் இல்லை நண்பர்களே!
நாங்கள் ஊருக்கு திரும்பும் வரை எங்களை நல்ல முறையிலும் அக்கறையுடனும் கவனித்த உங்களின் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.
எங்களை சென்னைக்கு திரும்ப ரயில் நிலையத்தில் கொண்டு விட்ட நண்பர் பெயர் தெரியவில்லை. அவருக்கும் எங்களது நன்றி.
எல்லாவற்றிகும் மேலாக நாங்கள் ஈரோடு செல்ல முதல் காரணமாக இருந்த சகோதரர் வானம்பாடி அவர்கள்தான். அண்ணன் வானம்பாடி அவர்களுக்கும் எங்களின் நன்றிகள் பல.
வலை நண்பர்கள் அனைவருக்குமே ஒரே மாதிரி உதவும் குணம், அன்பு செய்யும் குணம், கஷ்டத்தில் பங்கேற்கும் குணம், பாசமிக்க நேசமுள்ள குணம் வேறு யாருக்கும் வராதுங்க. பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் இவை அனைத்தும் இந்த பதிவுலகத்தில்தான் கிடைக்கும்.
என்னுடன் வர இயலாமல் வருத்ததுடன் பதிவிட்ட தோழி தமிழ் உங்களுக்குமாக சேர்த்து நாங்களே சாப்பிட்டோம். ஆனால் பாருங்க நீங்கள் வராமல் போனது மனதிற்கு வருத்தமாக இருந்தது. அதையும் இங்கே பதிவிடுகிறேன்.
இந்த நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிக்க உதவிய தமிழ்மணம் மற்றும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி!!
அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!!
Thursday, December 3, 2009
தேவதையில் நான்!!

வாழ்வதே எனக்கு சாதனைதான் அட்டையில் எழுதிய இந்த வாக்கியம் எனக்கு சொந்தமானது!!
ஒரு நிஜமான மறு பிறவி இந்த வார்த்தையும் எனக்கு சொந்தமானது!
தன்னம்பிக்கையுடன் வாழும் பெண்களை நேர்த்தியான முறையில் உலகுக்கு கொண்டு வருகின்றனர் தேவதை குடும்பத்தினர்!
அறிமுகம் என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் தருகின்றனர்.
ஒவ்வொரு இதழிலும் நம் வலைபூக்களில் ஏதாவது ஒரு பெண் வலைப்பதிவு தேவதையை அலங்கரிக்கிறது!
சகோதரி ராமலக்ஷ்மி அவங்களோட வலையும் தேவதையின் "வலையோடு விளையாடு" என்ற பகுதியில் பிரசுரம் ஆகியிருக்கு. ராமலக்ஷ்மி சகோதரியுடன் நானும் தேவதையில் இடம் பெற்றதிற்கு மிக்க மகிழ்ச்சியா இருக்கு. சகோதரியும் அவர்கள் வலையில் இடுகையிட்டு என்னையும் அன்புடன் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி சகோதரி!
வளம் பெற வரம் தரும் தேவதை. இதுதான் இன்று மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகி மாதம் இரு முறை வரும் பத்திரிகை. பெண்களை முதன்மைப் படுத்தி பல கட்டுரைகள் கொடுக்கிறார்கள். அந்த வரிசையில்தான் என்னையும் அணுகினார்கள். நான்தான் சிறிது தாமதப்படுத்திவிட்டேன்.
தேவதை முத்தான மூன்று புத்தகங்களை கொடுக்கிறார்கள். அதில் சத்தான பல விஷயங்களும் அடக்கம். முதலில் ஆசிரியர் எனது வலைபற்றி எழுத விவரம் கேட்டார். கொஞ்ச நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு என்னைப்பற்றியே வெவரம் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் யோசித்துச் சொல்வதாக கூறினேன். ஆனால் அவர்களுக்கு அவர்கள் கேட்ட நேரத்தில் என்னால் பேட்டி கொடுக்க இயலவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டேன். அதனால்தான் தேவதையில் நான் சற்றே தாமதம்.
தேவதையில் எழுதினது கடுகளவுதான்.மலையளவு மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் பசுமையாக என்னைச் சுற்றுகின்றனவே!!
எப்பவோ கொடுத்திருக்க வேண்டிய பேட்டி இது! பல பத்திரிகைகளில் என்னை கேட்டும் இருக்கிறாகள். நான்தான் நாட்களை கடத்திக் கொண்டே வந்தேன், இறுதியில் தேவதையில் வந்தேன், நண்பர்கள் உங்கள் அனைவரின் இல்லத்திலும் அனுமதி இல்லாமலே புகுந்துவிட்டேன்.
தேவதையின் பணி சிறக்க வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே!!
தேவதை குடும்பத்தாருக்கு நன்றி!
நன்றி திரு. நவநீதன் சார்!
நன்றி செல்வி. காவ்யா!
நன்றி திரு. ரவி! (போட்டோ எடுத்தவர்)
Thursday, August 20, 2009
நாகராஜனுடன் ஒரு அரிய சந்திப்பு!!
ஒரு வருட காலம் சக்கரை ஆலை ஒன்றில் ப்ராஜெக்ட் பண்ணும் சூழ்நிலை எனக்கு அமைந்தது. வேலை அதிகமா இருந்த போதிலும் அரசாங்கத்துக்கு செய்யறோமேன்னு ஒரு திருப்தி மனதிற்கு கிடைத்ததனால் ப்ராஜெக்ட் செய்ய சம்மதித்தேன்.
பயத்திலே இயந்திரம் இல்லாமலே கை கால்கள் டைப் அடிக்க, எனது உதறல்கள் கழுத்திலே இருந்தவருக்கு புரியல போல. புரிந்திருந்தால் அன்னைக்கே போட்டு தள்ளி இருப்பாரு. இந்த பயந்த பொண்ணு நாட்டுக்கு தேவையே இல்லை என்று முடிவு பண்ணி இருப்பாரு. என்னா நான் சொல்றது சரிதானே நண்பர்களே!
Friday, June 12, 2009
கல்லூரி கலாட்டாக்களில் ஒரு பகுதி !!
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது முக்கியமான சில தோழிகளுடன் இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். எல்லா தலைப்புகளும் வந்து போகும். அனைத்துமே சிரிப்பைத் தழுவி இருக்கும். அதனால் மழைமேகம் போல் வந்த வேகத்தில் மறைந்தும் போகும். எல்லாம் சிரிப்பான அனுபவங்கள்தான் அதிகமா பேசுவோம். எங்க செட்டுலே இல்லாதவங்களுக்கு நாங்க தனிப் பேரு வெப்போம். அதெ வெச்சிதான் எங்களுக்குள்ளே பேசிக்குவோம்.
நாங்க பட்டப்பெயர் வச்ச விஷயம் அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா அவ்வளவுதான்! எங்களை குழி தோண்டி புதைச்சிடுவாங்க. பெரும்பாலும் எல்லாம் சிரிப்பா ரகசியமாத்தான் பேசிக்குவோம்.
அப்படிதான் ஒரு நாள் எங்க பேச்சு தடம் மாறிப் போய்டுச்சு. என்ன பயந்துட்டீங்களா?
வேறே ஒண்ணும் இல்லே! நான் ரொம்ப பயப்படறது பேய் பத்திதான். ஒரு தோழி நாங்கள் தங்கி இருந்த விடுதியில் நடந்ததாக கேள்விப்பட்ட ஒரு பேய்க் கதையை அவிழ்த்து விட்டாள். எனக்கு உள்ளூர பயம்தான். இருப்பினும் எல்லாரும் வட்டமாத்தான் உக்காந்திருந்தோம்.
கதை ஆரம்பிச்சவுடனே நான் நட்ட நடுவிலே எல்லாரையும் இடிச்சிட்டு
உக்காந்துட்டேன். ஏன்னா பயம்தான் காரணம்! அப்படியாவது கேக்கனுமான்னு ஒரு தோழி என்னை திட்டினாள். நான் அதெல்லாம் காதிலே வாங்கிக்கவே இல்லை.
சரி மேலே சொல்லு அப்படின்னு ஒரே சுவாரசியமா கேட்க ஆரம்பிச்சிட்டோம். இதை எழுதும் போதுகூட எனக்கு ஒரே பயம்தான். அக்காவை பக்கத்துலே உக்கார வச்சிக்கிட்டுதான் எழுதறேன். என்ன செய்ய! உடம்பு பூரா ஒரே கொழுப்பு அப்போ. இந்த மாதிரி கதை கேட்டு பல இரவுகள் தூங்காமே பினாத்தி இருக்கேன். பல நாட்கள் ஜுரம் வந்துவிடும். கல்லூரிக்கு மட்டம் போட்டுட்டு தூங்குவேன்.
தோழிகளில் யாருக்காவது கொஞ்சம் பயப்படறமாதிரி ஏதாவது விஷயம் கிடைச்சால் என்கிட்டே தான் மொதல்லே சொல்லுவாங்க. ரொம்ப தைரியசாலிதான் போங்க. என்னோட பயம் எனது தோழிகள் முதல் எனது பேராசிரியர்கள் வரை மிகவும் பிரபலம்!
அப்படிதான் அன்னைக்கும் நட்ட நடுவிலே உக்காந்து உம் கொட்ட கூட பயந்து கதை கேட்டுக் கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு இரவின் லேசான குளிரிலும் எனக்கு ரொம்ப வியர்த்துப் போச்சு. நீங்களும் அந்த கதையை கேளுங்க கொஞ்சம். என்னை திட்டாதீங்க!
நாங்க தங்கி இருந்த விடுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், எங்களுக்கு முன்னாடி படிச்ச வினிதா என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவங்க ஆவி இரவில் அட்டகாசம் செய்வதாகவும் சொன்னாங்க.
என்ன அட்டகாசம் செய்யறாங்கன்னு நான் கேட்டேன். ஒண்ணுமே இல்லே, நல்லா கவனிச்சு கேட்டா இரவு பன்னிரெண்டு மணிக்குமேல் சலங்கை சத்தம் கேட்கும், நாங்க எல்லாம் வினிதா நடமாடராங்கன்னு தெரிஞ்சிகிட்டு விளக்கெல்லாம் அணைச்சிடுவோம்ன்னு சொன்னாங்க. ரொம்ப பழக்கப் பட்ட மாதிரி பேசினாங்க. எனக்கு ஈரக்குலையே நடுங்கிப் போய்டுச்சு. ஏன்னா, அப்போ மணி பன்னிரெண்டரை. என்னோட ரூமிலே தங்கி இருந்த பொண்ணு ஊருக்குப் போய்ட்டாங்க. நான் தனியாதான் படுக்கணும். அதெல்லாம் நினைவிற்கு வந்தவுடன் ரொம்ப அழ ஆரம்பிச்சுட்டேன்.
ஒரு தோழி சத்தம் போடாதேன்னு எனது வாயை பொத்தினாள். அதையும் மீறி நான் அழ ஆரம்பிக்க! அப்போது பார்த்து அந்த நிசப்தத்தில் சலங்கை ஒலி கேட்க ஆரம்பித்தது. நாங்க முன் பக்கமா உக்காந்து இருந்தோம். சத்தம் டைனிங் ஹாலுக்கும், சமையல் கட்டுக்கும் இடையே கேட்டுச்சு.
அவ்வளவுதான்! எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போய்டுச்சு!! ஆனா உடனே அருகே இருந்த எனது தோழியின் காதில் ரகசியமா ஒரு ஐடியா சொன்னேன். என்னான்னு? உடனே போலீசுக்கு போன் பண்ண சொல்லி. பளார்ன்னு ஒரு அறை விட்டாள் என் கன்னத்துலே. அறிவு "கெட்ட முண்டம் இங்கே என்னா திருடனா வந்திருக்கான்? போலீசுக்கு சொல்ல? வந்திருக்கறது பேய். வாயை மூடிகிட்டு கொஞ்சம் நேரம் பேசாமா இரு என்றாள்". இன்னொரு தோழி நாம் இங்கே இருக்கிறது நல்லது இல்லே, அவங்க அவங்க ரூமிற்கு போயிடலாம்ன்னு சொன்னாங்க.
ஆனால் நான் போகமாட்டேன்னு அழ ஆரம்பிச்சுட்டேன். தனியா ரூம்லே படுக்க பயம்.
சரி போய் உன்னோட தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துகிட்டு வந்திடு. அதுவரை நாங்க எல்லாம் இங்கேயே நிக்கறோம்னு சொன்னாங்க.
நானும் சரின்னு மெதுவா ரொம்ப மெதுவா "இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க" ன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி அடிபிரதச்சனம் பண்ணி என்னோட ரூமை அடைந்தேன். விளக்கை போட பயம். மெதுவா தண்ணி பாட்டில் எடுத்து தண்ணீர் குடிச்சேன். தண்ணீரை குடிச்சிட்டு நேரா இருந்த ஜன்னலை பார்த்தேன். சரி அதையும் மூடி விடலாம்னு நினைச்சி ஜன்னல் கிட்டே போனேன். அவ்வளவுதான், அங்கே ஒரு உருவம் என்னைப் பார்த்து கையை அசைத்தது. நான் அவ்வளவுதான்!! கத்த கூட தெரியாமல் பே பேன்னு சத்தம் போட்டேன். அதுக்குள்ளே எங்க வார்டன் எழுந்திட்டாங்க. லைட் போட்டாங்க.
நான் பயத்திலே வெளியே ஓடி வந்திட்டேன். கத்திகிட்டே ஓடி வந்தேனா! வந்த வேகத்திலே கீழே விழுந்துட்டேன். அதுக்குள்ளே வார்டன் கதவைத் திறந்து நான் விழுந்த இடத்திற்கு வந்திட்டாங்க.
"என்னாடி இங்கே வந்து கிடக்கறே? எங்கே உன்னோட பரிவாரங்கள் எல்லாம்? படிக்காதீங்க! எப்போ பார்த்தாலும் கூட்டமா உக்காந்துகிட்டு ரந்து பண்ணுங்க. உங்களை எல்லாம் நிக்க வச்சி தோலை உரிக்கனும்னு" திட்டினாங்க. நான் அழுகையை நிறுத்தலை. அழுதுகிட்டே இருந்தேன்.
"சரி சொல்லித் தொலை ஏன் அழறே என்ன நடந்தது?"
அவங்களுக்கு எப்பவுமே என் மீது கொஞ்சம் அன்பு உண்டு. ஏன்னா பத்து தேதிகுள்ளே கணக்கு எல்லாம் கொஞ்சம் பார்க்கச் சொல்லுவாங்க. மெஸ் கூட அவங்கதான் பார்ப்பாங்க. அந்த கணக்கையும் நான் சரி பண்ணி கொடுப்பேன். அதனால் நான் பண்ற தப்பை கண்டிப்பாங்க, ரொம்ப திட்ட மாட்டாங்க. அப்புறமா நான் நடந்ததை சொன்னேன். சரின்னு அவங்களும் என்னோட அறைக்கு வந்து ஜன்னல் வழியா பார்த்தாங்க. ஒண்ணுமே அப்போது தெரியலை. நான் என்ன சொல்லியும் அவங்க என்னை நம்ப தயாரா இல்லே.
சலங்கை சத்தம் பற்றி கூட சொன்னேன். அதையும் அவங்க நம்பலை. ஆனா பாருங்க வார்டன் கிட்டே சொல்லும் போது சலங்கை சத்தமும் கேட்கலை, அங்கே அமர்ந்திருந்த என்னோட தோழிகள் ஒருவரையும் காணலை.
அதனால் வார்டன் "சரி என் ரூமிலே வந்து படுத்துக்கோ. மீதி எல்லாம் காலையிலே பேசிக்கலாம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு சீக்கிரமா கட்டறேன்னு" கருவிகிட்டாங்க. ஆனா ஒருத்தி கூட நான் என்ன ஆனேன்னு வெளியே வந்து பார்க்கலை. எனக்கும் எல்லார் மேலேயும் ஒரே கோவமா வந்தது.
வார்டன் ரூமிலேயே படுத்துக்கறதா முடிவெடுத்தப் பிறகு பயம் கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருந்தது. ஆனாலும் அந்த ஜன்னல் காட்சி மனதை நெருடிக் கொண்டிருந்தது. அதையே மறுபடியும் அசைப் போட்டுக் கொண்டே தூங்கப் போனேன்னு நினைக்கின்றேன். திடீர்ன்னு பேய் பேய்ன்னு தூக்கத்திலே கத்த.. வார்டன் என்னை அடிச்சு எழுப்ப... ஒரே அமர்க்களம் ஆகிவிட்டது. எழுந்து உக்காந்துகிட்டே இருந்தேன். வார்டன் மறுபடியும் தூங்கிட்டாங்க.
இப்படியே விடிஞ்சிடுச்சு. என்னோட அறைக்குப் போனவுடன் முதல் காரியம் என்னோட ஜன்னலைப் பார்த்தேன். யாருமே அங்கே இல்லே. காலையிலே ஆறு மணிக்கு பேய் போய்டும்னு நினைச்சிகிட்டு வரப் போகும் இருட்டிற்கு பயந்தவாறு கல்லூரிக்குப் போனேன். என்னோட தோழிகள் ஒருவருடனும் நான் பேசவில்லை. என்னை அநியாயத்திற்கு கழட்டி விட்டுட்டாங்கன்னு அவங்க மேலே கோவம்.
கல்லூரிக்கு போகுமுன் எல்லாரும் ஒரு இடத்திலே சேர்ந்து கொஞ்ச நேரம் இருப்போம். அப்புறமாதான் கல்லூரிக்குள்ளே போவோம். ஆனா அன்னைக்கி நான் அந்த இடத்துலே நிக்காமல் அவங்களை பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் அவங்களையும் தாண்டிப் கல்லூரிக்குள்ளே போயிட்டேன். என்னையும் தாண்டி வேகமாக ஓடி வந்தவர்கள் என்னை ஒரு மார்க்காமா அடிக்க வரமாதிரி பாத்தாங்க.
சாயங்காலம் வாடி ரூம் பக்கம், காலை உடைக்கறோம். வார்டன் கிட்டே எங்களைப் போட்டா கொடுக்கறேன்னு சொல்லிகிட்டே முறைச்சாங்க. அடி பாவிங்களா, நான் ஒண்ணுமே சொல்லலை, என்னை நம்புங்கடின்னு சொல்லியும் கேட்கலை.
எல்லாமே எங்க தோழிங்களோட செட்டப்புன்னு ஒரு தோழி எனக்கு உணமையானவளா உண்மையை ஒத்துகிட்டா. என்னோட பயம் அவங்களுக்கு தெரிந்ததாலே என்னை போட்டு பயமுறித்தி தாளிச்சிட்டாங்க.
அவங்களோட மறுபடியும் சகஜ நிலைமைக்கு வர கொஞ்ச நாட்கள் ஆனது. அப்புறம் என்ன? மறுபடியும் சேர்ந்து உக்காந்து பேச ஆரம்பிச்சிட்டோமில்லே!
டிஸ்கி: இது போல் பல நிகழ்வுகள் எங்களைச் சுற்றி நிகழ்ந்துள்ளது. இதைப் படிக்கும் எனது கல்லூரி தோழிகளே! என்னை திட்டாதீங்க. இன்னும் நிறைய சொல்லுவேன் நமது கலாட்டாக்களை.
டேக் இட் ஈசிம்மா!!
Tuesday, April 28, 2009
கல்லூரி கலாட்டாக்களின் நடுவே ஒரு சுற்றுலா!!
கல்லூரி கலாட்டாக்களில் திக் திக் பகுதியின் ஒரு தொகுப்பு!!
நாங்க கல்லூரியில் இறுதியாண்டு படிச்சுட்கிட்டு இருந்தோம். எல்லா தோழிகளுடனும் நான் எப்பவுமே ரொம்ப நெருக்கமான நெருக்கம்தான் .
தோழிகளுக்குள்ளே அரசியல் எல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. தொகுதி உடன்பாடு இல்லாமலே அட்டகாசமா அரசியல் பண்ணுவாங்கன்னு கேள்வி. நான் அதில் எல்லாம் தலையிட மாட்டேன். ஆனா எல்லார் கூடவும் நட்பா இருப்பேன்; அன்பா பழகுவேன்; எனக்கு தெரிந்தது அவ்வளவுதான் .
அதனால் என் மிக நெருங்கிய தோழிகள் எனக்கு கூறும் அறிவுரை, உனக்கு ரோஷமே இல்லை! அவர்கள் எல்லாம் இதுமாதிரி, அதுமாதிரி நீ அவர்களுடன் போய் இவ்வளவு சாதரணமா பேசறேன்னு திட்டுவாங்க.
உப்பு கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கன்னு சொல்லுவாங்க. என்ன செய்யறது. விதி வலியது. யாராவது திட்டினா எனக்கு விரைவில் மறந்து போய்டும். அது என்னோட குணம். அதனாலே எல்லாருடனும் எப்போதும் நட்புதான்.
சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம்! கல்லூரி இறுதி ஆண்டு. அந்த இறுதி ஆண்டு முடிவதற்குள், வானத்தையே வில்லா வலைச்சிடனம்னு மனதிற்குள் ஒரு ஆசை. கடற்கரை, சினிமா இப்படி சுத்துவோம். நிறைய பேரு இல்லை சும்மா ஒரு 8 பேருதான். அதுலே நான் தான் அறுந்த வாலு. வால் நம்பர் ஒண்ணு.
எல்லாரும் சேர்ந்து கேரளா டூர் போனோம். கேரளாவில் ஒரு தோழியின் வீடு உள்ளது. அவங்க வீட்டில் தங்கி நல்லா ஊரு சுத்தினோம். மறுபடியும் சென்னைக்கு ரயில் பயணம். இரவு ஒரே அமர்க்களம்தான். தடை இல்லாத பேச்சுதான். ஒரு வழியா இரவு உணவு முடிந்தவுடன், மறுபடியும் பேசிக் கொண்டிருந்தோம். எங்க Compartment எல்லாரும் உறங்கி விட்டார்கள்.
அதனால் நாங்களும் தூங்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்தோம். ரொம்ப நல்ல முடிவுதான் என்று நானும் நினைத்துக் கொண்டேன். அப்போதான் சாப்பிட்ட கை கழுவலை என்று நினைவிற்கு வந்தது. தனியா போக பயம், அதனாலே ஒரு தோழியை அழைத்துக் கொண்டு போனேன். கையை கழுவிட்டு எங்க இடத்துக்கு வந்தா?? போங்க! ஒரே திக் திக் திகில்தான். சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க! அவ்வளவு ஒரு பயங்கரம் அரங்கேற்றம். சினிமா காட்சி தோற்றுப் போய்விட்டது போங்க.
ஒரு ஆளு முகமூடி போட்டுக்கிட்டு கையிலே கத்தியோட எனது தோழிகிட்டே கழுத்தில் இருந்த சங்கிலியை கழற்ற சொல்லி மிரட்டிகிட்டு இருந்தான். எனக்கு ஒண்ணுமே புரியலை கண்ணு இருட்டிடுச்சு. வாழ்க்கையிலே படிச்சு கூட முடிக்கலை. அதுக்குள்ளே அகால மரணமா? அப்படீன்னு யோசிச்சேன். என் உடன் இருந்த தோழி கத்துவான்னு அவ கத்தாம இருக்க சைகையால் அடக்கிவிட்டேன்.
ஏற்கனவே தனது கழுத்தில், கையில், காதுகளில் இருந்து பறிகொடுத்த தோழிகள் திரு திரு என்று சத்தம் போடாமல் விழித்துக் கொண்டிருந்தனர். நான் கை கழுவ போய் இருந்ததால் விளக்கை அணைக்கவில்லை. எங்களைப் பார்த்தவுடன் எனது தோழிக்கு கண்களில் ஒரு பிரகாசம். எப்படியும் நான் காப்பாற்றி விடுவேன் என்று. நான் எங்கே காப்பாற்றுவது! நானே கால்கள் நடுங்க அடுத்த அடி எடுத்து வைத்தால் திருடன் என் பக்கம் திரும்பி விடுவானோன்னு ஒரே பயம்.
ஆனாலும் வினாடிக்கும் குறைவாகத்தான் யோசித்தேன். உடனே என்னோட சால்வை எடுத்து அந்த முகமூடி திருடனின் முகத்தின் மேல் பின்னால் இருந்து போட்டு இறுக்கி பிடித்துக் கொண்டே கத்தினேன். எல்லாரும் எழுந்து விட்டார்கள், விளக்கும் போட்டார்கள், ஆனால் ஒருவரும் அருகே வரவில்லை.
ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்து விட்டேனோ என்ற பயம் என்னை ரொம்ப நோக வைத்து விட்டது. பின்னால் இருந்து கண்களை துணியால் மூடியவுடன், அந்த திருடன் ஆவேசமானான். கத்தியை காற்றில் சகட்டு மேனிக்கு வீசினான். அதில் என் கைகளிலும் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் பயத்துடனேயே சால்வையை இருக்கப் பிடித்துக் கொண்டு கத்தினேன். எனது தோழிகள் இருந்த இடம் தெரிய வில்லை.
ஆனாலும் பிடியை தளர்த்த வில்லை.உள்ளூர ஒரே பயம்! ஆனாலும் அசட்டு தைரியம்தான். எங்களோட போராட்டத்தை பார்த்து இரெண்டு இளைஞர்கள் உதவிக்கு வந்தார்கள். கட்டுவதற்கு கயறு இல்லை. ஒரு இளைஞன் தேடும் படலத்தில் ஈடுபட்டான். அருகில் ஒருவர் தலையில் துண்டு கட்டி இருந்தார், அதை கேட்டால் தர மறுத்தார். நான் அந்த துண்டை உருவச்சொல்லி அந்த துண்டை வைத்து திருடனின் கைகளை கட்டுமாறு கூறினேன். ஒரு இளைஞன் நான் கூறியதுபோல் செய்தான், மற்றொரு இளைஞனை ரயிலின் சங்கிலியை பிடித்து இழுக்கச் செய்தனர் என் தோழிகள். ரயிலு நின்னுடுச்சு. உடனே முக்கியமான நிர்வாகிகள், எங்க TTR எல்லாரும் எங்க இடத்துக்கு வந்துட்டாங்க.
ஒரு ஊரு வந்தவுடன் அங்கே அந்த திருடனை இறக்கி, எங்களையும் ரயில்லே இருக்கற போலீஸ்காரங்க போலீஸ் ஸ்டேஷன் வரை வரச்சொன்னாங்க. எனக்கு ஒரே பயமா போச்சு. ஏன்னா வீட்டுக்கு தெரியாம டூர் வந்திருக்கேன் அது முதல் பயம்! அப்புறமா போலீஸ் என்றால் அதைவிட ரொம்ப பயம். நான் எல்லாம் வரமாட்டேன் என்று அடம் பிடிச்சேன்.
அப்புறமா எல்லாரும் தைரியம் கூறி அனுப்பிவைத்தார்கள். ஆனால் திருடனோட கண்ணில் கட்டி இருக்கும் துணியை கழட்ட கூடாது. கழட்டினால் அவன் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு அப்புறம் வந்து கத்தியாலே குத்தி விடுவான் என்று ஒரு போலீஸ்காரரிடம் சொன்னேன். அவரு சரி என்றார்.
ஸ்டேஷன் போய் எனது தோழிகளின் நகைகளை கேட்டோம். போலீஸ்காரங்க தரமாட்டோம், அவன் பையிலே நிறைய நகைகள் இருக்கு.
அதுனாலே நீங்க அப்புறமா சொல்லி அனுப்பறோம், அடையாளம் சொல்லி வாங்கி செல்லுங்கள் என்றார்கள். நாங்களும் உடனே கிளம்பிட்டோம்.
மறுபடியும் கல்லூரியில் சகஜமான வாழ்க்கை ஆரம்பித்து விட்டது. மனதில் ஒரு திகிலாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தோம்.
இரெண்டு மாதங்கள் கழித்து ஒரு அரசு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அழைப்பு எனது பெயருக்கு தான் வந்தது. எனக்கு ஒரே பயம், எனது தோழிகள் தைரியம் கூறி அந்த விழாவிற்கு அழைத்துச் சென்றார்கள்.
நிறைய பெரியவங்க எல்லாம் வந்திருந்தாங்க. எங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது, முக்கியமான பெரியவங்க பக்கத்துலே உக்கார்ற பாக்கியம் கிடைச்சுது. எல்லாரும் எங்களையே பாக்கறமாதிரி ஒரு உணர்ச்சி. வெக்கம் வெக்கமா இருந்திச்சு.
நல்ல முறையில் வேலை செய்த போலீஸ்காரங்க, பல துறையில் வேலை செய்தவங்க, நேர்மையான முறையில் பல லட்சங்களை தனது ஆட்டோவில் வைத்து சென்ற பணத்தை போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர், இப்படி பலர். அவர்களின் நடுவே நாங்களும் ஏன் என்று தெரியாமல் அமர்ந்திருந்தோம்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் நல்ல செயல்களுக்கு ஏற்ப பரிசுகள் வழங்கினார்கள். பார்த்துக் கொண்டே இருக்கும் போது இப்போது "வீர மங்கை" என்ற விருது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு வழங்கப் போகிறோம். என்று, அந்த ரயிலில் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறினார்கள். கொஞ்சம் தாமதமாகத் தான் எனக்கு உரைத்தது அது நான்தான் என்று. எல்லாரும் கைதட்ட என்னை மேடைக்கு எனது தோழிகள் புடை சூழ அழைத்துச் சென்றார்கள். பரிசும் தந்தார்கள். பரிசு பெற்றவுடன் இறங்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தேன்.
ஆனால் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அக்கா என்னை பேச அழைத்தார்கள். நான் பேச மாட்டேன் என்று மறுப்பு சொல்ல எனக்கு உரிமை வழங்க வில்லை. கால்கள், கைகள் தந்தி அடிக்க மைக் முன்னால் போய் நின்றேன். நான் போய் வீர மங்கையாம். நான் சொல்லலை, அவங்க சொன்னாங்க. ஏதோ உளறி கொட்டி கிளறி மூடிட்டு வந்துட்டேன். இந்த விஷயம் சும்மா இருக்குமா? வெளியே சத்தமில்லாமல் சுத்தமாக எங்க வீட்டுக்கு தெரிந்து விட்டது. எங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. எங்க அண்ணா உடனே வந்துட்டாரு. திட்டுதான். என்ன செய்ய?? நாளிதல்லே படிக்கும் பொண்ணோட போட்டோ வந்ததுன்னா சும்மாவா??
இப்படி ஒரு கதை நடந்து முடிஞ்சும் போச்சு!!
இந்த எனது தைரியத்துக்காவது ஓட்டு போடுங்கப்பா!!
Wednesday, April 1, 2009
ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!
சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் ரூமிற்கு வந்தார். ரூமில் எல்லாம் வசதியா இருக்கான்னு பார்க்க வந்ததாக கூறினார். அதற்கு அக்கா கூறினார்கள், நாங்களே இன்னும் ரூமை பார்க்கவில்லை, இருங்க குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருக்கின்றதா என்று பார்க்கின்றேன் என்றார்கள்.
இருந்தாலும் நாம safety ஆகிவிடலாம்னு முடிவெடுத்த அடுத்த கணத்தில் எதுக்கும் இருக்கட்டும்னு ஐயோ!! திருடன் திருடன் என்று என் பங்கிற்கு நானும் கத்திட்டு, ஒரே தாவு தான் அங்கே ஒரு சோபா இருந்தது அதற்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டு விட்டேன்.
மவளே!! நாங்க உயிரை கையிலே பிடிச்சிகிட்டு எங்கே ஒளியரதுன்னு தெரியாம நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும். நொந்து நூலாயிட்டேன் என்று சொல்லி நான்தான் அதிகமா அடிச்சுட்டேன். அப்புறமா, தம்பிங்க இரண்டு பேரையும் அடிச்சு எழுப்பிட்டோம்.
பிறகு எங்க அக்கா என்னை நீ ஏம்மா எல்லாரையும் விட்டுட்டு ஓடினே?? அடி விழுந்தா எல்லாருக்கும் விழட்டுமே அப்படி நினைச்சா நல்லா இருக்கும் இல்லையா என்றார்கள். அட போங்க அக்கா எனக்கு பயத்துலே ஒண்ணுமே புரியலை அதான்...........
Tuesday, March 31, 2009
ஊட்டி அனுபவம் நண்பர்களுடன் !!
இது வரை குழந்தைகளுக்கு எழுதி வந்தேன். சில நாட்கள் நட்புகளுக்காக எழுதலாம்னு இப்போ இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.
எங்களுடன் வந்தவர்கள் அனைவருமே அறுந்த வாலுங்க(என்னையும் சேர்த்துத்தான் ஹி ஹி ஹி). ரயில்வே ஸ்டேஷன்லே எல்லாரும் கூடியவுடனே ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே கலாட்டாதான். ஆனா இந்த வாலுங்களுக்கு எங்க அக்கான்னா கொஞ்சம் பயம்.
அக்கான்னா நீங்க அந்த அக்காவை என்று நினைக்க வேண்டாம். அதான் என் பதிவை படிச்சிட்டு கூட தூங்கினாங்களே அந்த அக்கா இல்லே. இவங்க என்னோட அக்கா. இப்போ குழப்பம் ஒன்னும் இல்லையே?? சரி இப்போ தொடருகிறேன்.
எல்லாரும் ரயிலுக்குள்ளே ஏறிட்டோம். எங்க எல்லாருக்கும் ஒரே இடத்தில் இருக்கைகள் அமையவில்லை. சிலர் ஒண்ணா இருந்தோம். சிலர் கொஞ்சம் தனித்தனியா இருந்தாங்க. உள்ளே போனவுடன் அப்படி அவங்க எல்லாம் தனியா இருப்பாங்களா? அதெப்படி முடியும். எல்லாரும் எங்க இடத்துலே வந்து அட்ஜஸ்ட் பண்ணி உக்காந்துகிட்டாங்க. பேச்சு பேச்சு தான் ஒரே கும்மாளம். பாட்டு, டான்ஸ் இப்படி பொழுதை தள்ளினாங்க (போக்கினோம்).
பக்கத்திலே இருக்கறவங்களை பற்றி கவலையா?? அப்படீன்னா என்னா? ஒன்னும் இல்லை. ஒரே ஆட்டம் தான் compartment சும்மா அதிர்ந்து போச்சில்லே அப்படீ ஒரே சத்தம். TTR உள்ளே வந்து அந்த ஜோதியிலே ஐக்கியம் ஆகி நொந்து விட்டார்.
Tuesday, March 24, 2009
ரம்யாவின் சோகம் - PART - II !!
ஆமாம்பா இது ஒரு மாதிரி சோகம்தான் ஆனா எனக்கு இல்லே!!
வால்பையனின் கேள்விகள், ரம்யாவின் பதில்கள்.
அந்த அக்காவின் -- மறு விமரிசனம்
===================================
3.அருமையான கேள்விகள் அதற்கு தகுந்த பதில்கள்தான்.
4.கேள்விக் கேட்டாதானே பதில், இதுவும் அருமையான முடிவு.
5.இதை நானும் வரவேற்கின்றேன்.
Thursday, January 8, 2009
வாங்க ஏலகிரிக்கு சுற்றுலா போகலாம்
.
நண்பர்கள் ஏனோ வெட்கி எதையோ தேடுகிறார்கள் ஒரு வேளை இருவரும் சேர்ந்து இழந்து விட்ட இளமையை தேடுகிறார்கள் போல


