
உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்
வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன
உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன
அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ
ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி
காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி
காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி
வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது
இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......


