Showing posts with label கண்ணீர். Show all posts
Showing posts with label கண்ணீர். Show all posts

Tuesday, December 30, 2008

கண்ணீரில் கரைந்த காதல்



















உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்

வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன

உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன

அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ
ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி


காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி


காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி


வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது


இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......