Showing posts with label ரம்யா. Show all posts
Showing posts with label ரம்யா. Show all posts

Monday, August 24, 2009

நண்பர்கள் குழாம் சந்திப்பு!! (சேர்ந்து பேசிக்கறாங்கலாமா)

முக்கியமான விவாதமா இருக்கலாம் வாங்க என்னான்னு தெரிஞ்சிக்குவோம்!

சந்திப்பில் பங்கு பெறுபவர்கள், நண்பர் ஜீவன், நண்பர் ஜமால், நண்பர் வால்பையன், நண்பர் கார்த்திகைப் பாண்டியன்.

நாம எல்லாரும் இப்படி ஜாலியா சந்திச்சு எவ்வளவு நாளாச்சு. ரொம்பநாள் கழிச்சு எல்லாரும் ஒன்னா சேர்ந்து சுத்தப் போறோம் இல்லே. எங்கே போலாம்? கேள்வியின் நாயகன் கார்த்திகை பாண்டியன்.


தோ! இங்கே ஒரு காம்போண்டு சுவரு இருக்கு பாரு! அதுலே ஏறி உக்காந்துக்கலாம். அப்படியே உக்காந்துகிட்டு எங்கே போகலாம்னு ஒரு முடிவிற்கு வரலாம். ஐடியாவின் நாயகன் வால்பையன்.

சரி வாங்க ஜீவன், இவரு சொல்றதும் சரியாதான் இருக்கு. வாங்க அந்த காம்போண்டு சுவற்றின் மேலே ஏறி உக்காரலாம்.

எனக்கு இப்படி எல்லாம் ஏறி பழக்கம் இல்லையே!


அநியாயத்துக்கு அப்பிராணியா இருக்கீங்களே ஜீவன்! நான் மொதல்லே ஏறி உக்காரேன். பாருங்க! அப்படியே என்னை மாதிரியே நீங்களும் ஏறி உக்காருங்க.


உனக்கு வாலு இருக்கு, அதான் இவ்வளவு வேகமா ஏறுரே! மவனே இருடி இறங்கும்போது பிடிச்சி தள்ளி விடறேன். மனதிற்குள் ஜமால் கருவிக் கொள்கிறது கண்களில் தெரியுது. என்ன செய்ய லேசா கொஞ்சம் பூசினமாதிரி குண்டாயிட்டோமேன்னு ஒரு வேதனைதான் காரணமா இருக்குமோ? இருக்கலாம் இருக்கலாம்.

அதற்குள் ஜமாலின் கைபேசி சிணுங்குகிறது. ஹல்லோ!!

ஐயோ! தங்கமணி, என்ன இந்த நேரத்துலே போன் பண்ணறாங்க?

ஏங்க உங்க தங்கமணிகிட்டே அவ்வளவு பயப்படறீங்க! வெளியே பாக்க தைரியமானா ஆளு போல இருக்கீங்க?

என்னோட தங்கமணிகிட்டே நான்தான் பயப்பட முடியும். இதென்ன கேள்வி வாலு?

ஏங்க நான் இங்கே பேசிகிட்டு இருக்கேன், நீங்க வேறே யாருகிட்டேயோ பேசிகிட்டு இருக்கீங்களே. என்ன சங்கதி?

அண்ணே! அண்ணி ரொம்ப கோவமா இருக்காங்க!

அதெப்படி தெரியும் உனக்கு?

நீங்கதான் ஒரு மாதிரி முழிக்கிரீங்களே! வேர்த்து வேறே கொட்டுது பாருங்க! மொதல்லே அதெ தொடைச்சுக்கோங்க!

பாண்டி! சும்மா இரு அவ காதுலே விழுந்தா நான் சென்னையிலே இருக்கறதை கண்டுபிடிச்சிடுவா!

என்னாங்க சொல்றீங்க நான் கண்டுபிடிச்சுடுவேனா??

இல்லேம்மா இங்கே பேசிகிட்டு இருக்கேன்....

நான் இங்கே லைன்லே இருக்கேன். உங்களுக்கு அங்கே என்ன பேச்சு??

சரி! சரி! இரு வரேன் பேசிகிட்டு இருக்கவங்களை அடிக்கவா முடியும்? கொஞ்சம் யோசி!

ஏங்க இவ்வளவு கோவப்படறீங்க? எப்பவும் இப்படி பேசமாட்டீங்களே?

அண்ணே நல்லா மாட்டுனீங்க? நீங்க அண்ணிக்கு கொடுத்திருக்கிற போன் நம்பெர் இந்தியா வந்தவுடன் பேசும் சிம் கார்டோடது. அதெ இன்னும் அவங்க கவனிக்கலை போல இருக்கு.

பாண்டி! வேண்டாம் வெவரம் பேசாதே! பெரிய பிரச்சனையாயிடும்? இதெல்லாம் உன் கிட்டே நான் கேட்டேனா? அதுவும் இப்போதான் நீ சொல்லனுமா?

இல்லேண்ணே! உஷாரா பேசுங்கன்னு சொல்ல வந்தேன். ஹி ஹி ஹி ஹையா! எப்படி சமாளிக்கப் போறாரோ? வேடிக்கை பார்க்க ஒரே ஜாலியா இருக்கு!

பாண்டி! ஜமால் வீட்டுக்கு தெரியமல் முன்னமேயே சென்னைக்கு வந்திட்டாரு. எதுக்கு? நண்பர்களை பார்க்க. இது நல்ல விஷயம்தானே! தங்கமணிகிட்டே சொல்லி இருக்கலாம். ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லலை போல. அதுனாலே நீங்க சத்தமா பேசாதீங்க. இது வாலுவோட அட்வைஸ்.

வாலு! சத்தமா பேசாதீங்க, அவங்க காதுலே விழப்போகுது! கிசுகிசுத்தார் ஜமால்

என்னாங்க, என்னாங்க நான் பேசறது காதிலே விழலையா?

விழுது என்னான்னு சொல்லும்மா?

ஆமா! இந்த மாசம் ஹாஜரை பார்க்க வரேன்னு சொன்னீங்களே எப்போ வரீங்க?

அதைத்தான் இன்னும் ஒரு நாளில் முடிவு பண்ணனும், இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே?

என்ன பேச ஆரம்பிக்கலையா? யாரு கிட்டே பேசணும்? யாரு முடிவு பண்ணனும்? ஏங்க ஒரு மாதிரி பேசறீங்க? ஹல்லோ! ஹல்லோ! நான் பேசறது காதிலே விழுதா?

என்ன சொன்னே சரியா கேக்கலையே? என்ன செய்ய? ஹல்லோ! ஹல்லோ! சரி நான் அப்புறமா பேசறேன், சிக்னல் சரி இல்லே போல இருக்கு. வச்சிடும்மா!

இல்லே! இல்லே! வைக்காதீங்க, நீங்க பேசறது எனக்கு நல்லா காதிலே விழுது. பேசுங்க எப்போ வரப்போறீங்க? டிக்கெட் வாங்கிட்டீங்களா?

இன்னும் இல்லேம்மா, எனக்கு கொஞ்சம் டைம் கொடு யோசிச்சு சொல்றேன். ஹல்லோ! ஹல்லோ! மறுபடியும் காதிலே விழலை, போனை வச்சிடும்மா!

என்ன கெடுபிடி அதிகமா இருக்கு போல ஜமால்? நீங்க இந்தியா வந்தது உங்க வீட்டுலே தெரியாதா?

இல்லே ஜீவண்ணே! எனக்கு நண்பர்கள் நிறைய பேரு இங்கே இருக்காங்க. எல்லாரையும் பார்த்திட்டு மூன்று நாட்கள் கழித்து ஊருக்கு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கேன். அதுக்குள்ளே போன் போட்டு அவசரப் படுத்தறாங்க.

நான் கூட வீட்டுலே வெவரம் சொல்லிட்டு வரலை. ஆபீஸ் வேலையா போறேன்னு மட்டும் சொன்னேன்.

சும்மா அப்படி சொன்னா விட்டுடுவாங்களா வாலு?

இல்லைங்க ஜீவன் உண்மையை சொல்லிட்டா அவ்வளவுதான் என்னை இப்போ வர விட்டிருக்க மாட்டங்க.

பேசிக்கொண்டிருக்கும் போதே வால்பையனின் கைபேசி செல்லச் சினுங்கலை வெளிப்படுத்த, எடுத்தால் வெகுமதியுடன் வந்த திருமதி.

என்னம்மா இப்போ பேசறே?

ஏன் நான் இப்போ பேசக் கூடாதா?

இல்லே இந்த நேரத்துலே உன்னோட போனை எதிர் பார்க்கலை!!

அப்போ வேறே யாரோட போனை எதிர்பார்த்தீங்க!

இங்கே பாரு உனக்கு இப்போ என்ன வேணும்? சட்டுன்னு சொல்லு, எனக்கு நிறைய வேலை இருக்கு.

அதெல்லாம் இருக்கட்டும் இன்னைக்கு எங்க அம்மா வருவாங்கன்னு சொல்லி இருந்தேன் இல்லே! அவங்க வரலையாம். நீங்க சென்னையிலே தானே இருக்கீங்க! அப்படியே போயி ஓரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க.

இங்கே பாரு நான் வந்திருக்கிறதோ அலுவலக வேலையாக, நான் அதெ பார்க்கிறதா? இல்லே உங்க அம்மா வீட்டுக்கு போறதா?

என்னாங்க பேச்சு ஒரு மாதிரி போகுது. யாரு இருக்கா பக்கத்துலே! நிஜம்மாவே ஆபீஸ் வேலையாத்தானே போனீங்க?

ஆபீஸ் வேலையாதான் வந்தேன்! அதுலே உனக்கென்னா சந்தேகம்?

இல்லே எனக்கு சந்தேகமாவே இருக்கு. ஏன் பேசும்போது குரல் விட்டு விட்டு வருது?

அதுக்கு நான் என்னம்மா செய்ய முடியும்? ஏர்டெல் கம்பெனியைத்தான் கேக்கணும்!

அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஒழுங்கா பேசுங்க!

இல்லேம்மா நான் எப்பவும் போலதானே பேசறேன், சரி பாப்பா நல்லா இருக்காளா?

நான் கேட்டதுக்கு நேரடியா பதிலை காணோம் என்ன பாப்பா பீப்பான்னுகிட்டு.

இல்லேம்மா நான் அலுவலக வேலையாதான் வந்திருக்கேன். நீ தேவை இல்லாம சந்தேகப் பட்டு உயிரை வாங்காதே. வேலை முடிஞ்சவுடனே நானே உன்னை போனிலே கூப்பிடறேன். தோ! இங்கே மீட்டிங் ஆரம்பிக்கப் போறாங்க. நீ முடிச்சுக்கோ! அப்பா எவ்வளவு சமாளிக்க வேண்டியிருக்கு.

ஐயோ என்னாச்சு பயங்கர டெரர்ரா இருப்பாங்க போல இருக்கே? வீட்டுக்கு போனால் சண்டை போடுவாங்களா வாலு.

இல்லே ஜீவன் ஆபீஸ் வேலைன்னு சொன்னேன், அவங்களுக்கு நான் சொன்ன விதம் நம்பிக்கையா இல்லே. நண்பர்களை பார்க்கப் போறேன்னு சொன்னா, அவங்களை வெளியே கூட்டிகிட்டு போகலைன்னு சொல்லுவாங்க. அதான் நைசா வந்துட்டேன். ஜமால் வர்றதே அரிது. அதான் வராருன்னு சொன்னவுடனே கிளம்பிட்டேன். அவரும் அவரு திருமதிகிட்டே பொய்தான் சொல்லி இருக்காரு. நானும் பொய்தான் சொல்லி இருக்கேன். பொய் சொல்லிட்டு தப்பா பண்றோம். நண்பர்கள் சேர்ந்து எங்கேயாவது வெளியே போகலாம்னு முடிவு பண்ணினோம்.

வலையிலே சந்திக்கவா முடியுது பின்னூட்டம் போடுவதோடு சரி. நேரே சந்திச்சாதான் இன்னும் விரிவா பேச முடியும். அப்பபோ சாட் பண்ணிக்கறோம், என்னாதான் ச்சாட்டினாலும் நேரே பேசறது போல ஆகுமா? இந்த பொண்டாட்டிங்களுக்கு இது தெரியவே மாட்டேங்குது ஜீவன். என்ன ஜமால் அமைதியா இருக்கீங்க நான் சொல்றது சரிதானே!

சரிதான்.... ஆனா சரி இல்லாத.... மாதிரி இருக்குங்க வாலு. உண்மையை சொல்லிட்டு வந்திருக்கணும்.

யோவ்! வந்த வேலையை கவனிக்கலாம். இன்னமும் பேசிகிட்டேதான் இருக்கோம். சரக்கு வாங்கிகிட்டு எங்கேயாவது போய் அமைதியான இடத்துலே உக்காந்து பேசுவோம்.

கிளம்புற நேரம் பார்த்து அலைபேசியின் செல்ல சிணுங்கல் ஜீவன் பாக்கெட்டில் இருந்து வந்தது. இப்போ ஜீவனின் அலைபேசி சிணுங்க.

ஹல்லோ! ஹல்லோ யாரு பேசறது??

நான்தான் உங்க சிங்கமணி பேசறேன். குரல் தெரில? என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு?

அம்மணி இப்போதானே எனக்கு வெளியே அவசர வேலை இருக்குன்னு சொல்லிட்டு வந்தேன். அதுக்குள்ளே ஏம்மா போன் பண்றே?

அவசர வேலைன்னு சொல்லிட்டுதானே போனீங்க. அந்த வேலையை இன்னும் ஆரம்பிக்கலை இல்லையா? அப்புறம் என்னா பேச தயக்கம், கேள்வி கேக்கறீங்க??

ஐயோ! அண்ணே அண்ணிகிட்டே கோவபடாமா மெதுவா பேசுங்க.

ஜமால் குரல் குடுக்காதீங்க சிங்கமணி சந்தேகப் படுவாங்க.

என்னாங்க அங்கே சத்தத்தையே காணோம், நான் கேட்டுகிட்டே இருக்கேன்ல்லே.

இரு வரிசையா கேள்விதான் கேக்கறே, மனுஷனை பேச விட்டாதானே என்னோட நிலைமை தெரியும்.

ஜீவன்! இன்னும் ஆரம்பிக்கவே இல்லே அதுக்குள்ளே நிலைமையை பத்தி பேசி சந்தேகத்தை வரவழைச்சிடாதீங்க. அண்ணி ரொம்ப உஷாரா பேசர மாதிரி தெரியுது.

இல்லே வாலு நான் என்ன சொன்னாலும் நம்பிடுவாங்க. என் மேலே அவ்வளவு நம்பிக்கை. இருங்க முடிச்சிட்டு வாரேன்.

என்னாங்க எதை முடிப்பீங்க? என்ன சொல்றீங்கன்னே புரியலே!

இல்லேம்மா கிராஸ் டாக்குன்னு நினைக்கறேன், எனக்கு கூட யாரோ நடுவிலே பேசர மாதிரி குரல் கேக்குது... உனக்கும் அதே குரல்தான் கேக்குது போல...எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க வாலு!

என்னாங்க மறுபடியும் கிராஸ் டாக்கா, ஆனா அதுவும் உங்க குரல் மாதிரியே இருக்கே? உண்மையை சொல்லிடுங்க எங்கே போய் இருக்கீங்க?

இல்லேம்மா பதிவர்கள் சேர்த்து அவசரக் கூட்டம் போட்டிருக்காங்க. அதுக்கு முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கப் போகுது. அதுக்கு முன்னே சிலர் கூடி பேசி தேர்தலை எப்படி நடத்தலாம்னு ஆலோசனை நடத்ததான் வந்திருக்கோம்.

ஓ அப்படியா! நான் கூட உங்களை சந்தேகப் பட்டுட்டேனுங்க. நல்லா ஆலோசனை பண்ணுங்க உருப்படியா எதானச்சும் செஞ்சா சரிதான். சரிங்க கூட்டம் முடிஞ்ச உடனே நேரா வீட்டுக்கு வரணும். சாயாங்காலம் வெளியே போகணும். பிள்ளைங்க பீச்சுக்கு கூட்டிகிட்டு போக சொல்றாங்க. கடை பக்கம் போய்டாதீங்க. போனீங்க எனக்கு கெட்ட கோவம் வரும். ஆமாம் சொல்லிட்டேன். இப்போ போனை வச்சிடறேன். சரியா??

சரிம்மா நேரா வீட்டுக்குத்தான் வருவேன். கவலைப் படாதே. இங்கே எனக்கு வேலை அதிகமா இருக்கு. சீக்கிரம் போனை வச்சுடு. அப்பா எவ்வளவு கஷ்டம் சிங்கமணியை சமாளிச்சுட்டா வேறே எதை சமாளிக்கறதும் கஷ்டமே இல்லே.

மறுபடியும் அலைபேசியின் சிணுங்கல், அய்யய்யோ அண்ணே! நான் கிளம்பறேன், இப்போ யாரு திட்டு வாங்கபோராங்கன்னு விளங்கலை.

ஹையோ! ஹையோ! ஜமால்ண்ணே! போன் எனக்குண்ணே!!

ஹல்லோ! ஹல்லோ! அம்மா என்னாம்மா வேணும்? நான் நாளைக்கு வந்திடறேன். சரி, சரி, சரி, சரி, நீங்க சொன்னதெல்லாம் வாங்கிகிட்டு வரேன்.

என்னா தம்பி இவ்வளவு சரி சொல்றீங்க?

ஜமால்ண்ணே எங்க அம்மா சில பொருட்களை இங்கே இருந்து வாங்கி வரச்சொல்லி இருக்காங்க. அதான்.........

இங்கே பாரு பாண்டி அம்மாங்கிறது எல்லாம் சும்மாதானே. ஏதோ பிகருகிட்டே தானே பேசினே. பொய் சொல்லாம சொல்லணும்.

என்னா ஜமாலு! சந்தேகமா கேக்குறமாதிரி இருக்கு??

ஆமாம் வாலு எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு!

அதானே கார்த்திகை பாண்டியன் உண்மையை சொல்லிடுப்பா! போன்லே யாரு?

ஜீவண்ணே! உண்மையாகவே எங்க அம்மாதான் போன் பேசினாங்க. நீங்கள்லாம் இவ்வளவு நேரம் போனிலே பட்ட அவஸ்தையை பார்த்தேனே! ரொம்ப யோசிக்கணும் போலிருக்கே. ஆனா இவ்வளவு வெவரமா என்னாலே சமாளிக்க முடியுமான்னு தெரியலை.

அதெல்லாம் பழக்கம் ஆனா தானா வந்திடும் தம்பி... சோகக் குரலில் ஜமால்..

ஆமா எங்களை போட்டு இப்படி தாளிக்கிறியே நீ எப்போ கலியாணம் செஞ்சுக்கப் போறே பாண்டி?

ஜீவன் அண்ணே! திருமணம் என்ற வட்டத்துக்குள்ளே வரனும்னா சில விஷயங்களை நான் விட்டத்து மேலே உக்காந்து யோசிச்சு முடிவு எடுக்கணும்!!! நீங்க எல்லாரும் பட்ட அவஸ்தையை பார்த்து நானே என்னோட சொந்த முடிவுலே ஒரு முடிவிற்கு வந்துட்டேன். இப்போதைக்கு என்னை விட்டுடுங்க....... என்றார் கார்த்திகைப் பாண்டியன்.



Tuesday, January 27, 2009

காதலன் காதலிக்கு சமர்பித்த.......

காதலன்: கண்மணி உனக்கு நான் ஒரு அருமையான கவிதை எழுதி வச்சிருக்கேன் படிக்கட்டுமா??


காதலி: ம்ம்ம்ம் படிங்க கேப்போம்



விளைநிலம் இல்லேன்னா விவசாயி இல்லே
விவசாயி இல்லேன்னா விளைச்சல் இல்லே
விளைச்சல் இல்லேன்னா வருமானம் இல்லே
வருமானம் இல்லேன்னா வாழ்வே இல்லே

சிந்தனை இல்லேன்னா சிறப்பு இல்லே
கவிஞர்கள் இல்லேன்னா கவிதை இல்லே
அறிவியல் இல்லேன்னா நவீனம் இல்லே
நவீனம் இல்லேன்னா நாகரீகம் இல்லே


செடி இல்லேன்னா மரம் இல்லே
மரம் இல்லேன்னா பூ இல்லே
பூ இல்லேன்னா காய் இல்லே
காய் இல்லேன்னா கனி இல்லே


மலர் இல்லேன்னா மகரந்தம் இல்லே
மகரந்தம் இல்லேன்னா வண்டு இல்லே
தேனீ இல்லேன்னா தேன்கூடு இல்லே
தேன்கூடு இல்லேன்னா தேன் இல்லே

கணினி இல்லேன்னா வலைப்பூ இல்லே
வலைப்பூ இல்லேன்னா வலைப்பதிவு இல்லே
வலைப்பதிவு இல்லீன்னா பிண்ணுட்டம் இல்லே
பிண்ணுட்டம் இல்லேன்னா நண்பர்கள் இல்லே

குறும்பு இல்லேன்னா இளமை இல்லே
ஆரோக்கியம் இல்லேன்னா சந்தோஷம் இல்லே
சந்தோஷம் இல்லேன்னா சிரிப்பு இல்லே
சிரிப்பு இல்லேன்னா எதுவுமே இல்லே


இசை இல்லேன்னா பாட்டு இல்லே
பாட்டு இல்லேன்னா ஆட்டம் இல்லே
ஆட்டம் இல்லேன்னா அரங்கம் இல்லே
அரங்கம் இல்லேன்னா ஆட்கள் இல்லே


காற்று இல்லேன்னா உயிர் இல்லே
கண்கள் இல்லேன்னா கண்ணீர் இல்லே
கண்ணீர் இல்லேன்னா காதல் இல்லே
காதல் இல்லேன்னா உலகமே இல்லே




என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????

காதலி:
சீக்கிரம் சொல்லுங்க எங்கப்பா வீட்டுக்கு வரதுக்குள்ளே வீடு போயி சேரனும் ரொம்ப "இல்லே" சொல்லிட்டீங்க கேட்டுகிட்டு தானே இருக்கேன்.


என்னை புகழ்ந்து ஒரு கவிதை சொல்லறேன்னு சொல்லிட்டு இதெல்லாம் நல்லாவா இருக்கு ??


உங்களை நம்பி நானும் சொல்லுங்கன்னு சொன்னேனே என்னை நானே எதையாவது எடுத்து .....................

இதுலே என்னா நீ இல்லேன்னா??? ஒரே இழுவையா இருக்கு சொல்லி தொலைங்க.



காதலன்:
நீ ரொம்ப பேசிட்டே. ஏம்மா அவசரப்படறே. இரு சொல்லறேன். நீ இப்படி எல்லாம் சொன்னேன்னா நான் சொல்ல வந்ததை மறந்துடுவேன். கொஞ்சம் அமைதியா இரு. இதோ இப்போ சொல்லிடறேன்.

பாரு உனக்காக ஒரு ரோஜா கொண்டு வந்துள்ளேன் இதுக்கு முன்னாடி எவ்வளவு ரோஜா கொடுத்து இருக்கேன். எப்பவும் சந்தோஷமா மொகத்தை வச்சுக்கோ. இஞ்சி தின்ன .............. மாதிரி.........





என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????








வண்டலூர் ஜூ இல்லே !!!!

காதலி:

நீயும் ஒரு காதலனா ???

வண்டலூரில் இருக்கும் என்னை எப்படியடா காதலித்தாய்??

அங்கேயே உன்னை வெளிக்கொணர்ந்தாய் நீயும் வண்டலூர் வரவுன்னு??

டிஸ்கி: இதை யார் மனதையும் புண் படுத்த அல்ல சும்மா ஒரு தமாசு அவ்வளவுதான்.

Sunday, December 21, 2008

வைகை புயலும் - பார்த்திபனும்

மற்றொரு சந்திப்பு

வைகை: ராஜா... ராஜாதி ராஜா...., தூக்காதெ வேறு எங்கும் கூஜா..... கூஜா அட தூக்காதெ வேறு எங்கும் கூஜா...... எதிரே பார்த்திபன் கையில் தூக்கு கொண்டு வருவதை பார்த்ததும் பாட்டு சத்தம் குறைகிறது. ஐயோ இவன் இல்லே வாரான். சிக்கினோம்னா அவ்வளவு தான். சரி அப்படியே திரும்பிரலாம். வேலு வேணாண்டா இவன் சகவாசம் உனக்கு.

பார்த்திபன்: ஏய் நில்லு, சைக்கிளை எங்கே திருப்பரே? சைக்கிளை ஓரமா நிறுத்து

வைகை: இவன் நம்பளை பாத்தா ஒடனே டிராபிக் போலீஸ் மாதிரி நம்ப சைக்கிளை வேறே நிருத்தர்ரன்ப்பா. இவனோட பெரும் தொல்லையா போச்சு. எங்கிட்டு போனாலும் முன்னே இவன் மொகம் தான் தெரியுது.

பார்த்திபன்: டேய் என்னடா அண்ணனை கண்டுக்காம போறே? என்னா பாட்டு இது? நான் தூக்கு எடுத்து கிட்டு டீ வாங்க போறதெ பாத்ததும் உனக்கு பாட்டு பீறிட்டு வருதில்லே?

வைகை: ஆத்தி அப்படி எல்லாம் ஒன்னும் இல்லே. நாம்பாட்டுக்கு பாடிகிட்டு வாறேன். உனக்கு என்னா போச்சு, ஏன் என் சைக்கிளை நிறுத்தினே ? (மனுசுக்குள்ளே) இவனை ஒரு நாளு...

பார்த்திபன்: கேக்குறேன் இல்லே, மனசுக்குள்ளே என்னைய திட்டிட்டு என்னா யோசிக்கிற மாதிரி நடிக்கிறே?

வைகை: ஆத்தாடி உள்ளே நினைக்கறதை அப்படியே சொல்லறானே

பார்த்திபன்: ம்ம்ம்ம் என்ன விஷயம் சொல்லு...

வைகை: சரி இன்னைக்கு அவ்வளவுதான். நம்ப சந்தோஷத்திற்கு சங்குதான். என்ன திட்டபோறானோ. இவன் என்ன நம்பள சுத்தி சுத்தி வரானா இல்லை நம்பதான் இவன் போற வழியா போறோமா? இதை மொதல்லே கவனிக்கணும். பாக்கலாம் இன்னைக்கு நிலைமை என்னான்னு?

பார்த்திபன்: அறிவுகெட்ட முண்டம் எதிரிலே தெரிஞ்சவன் வரானே, அவனுக்கு வணக்கம் சொல்லுவோம், இல்லைனா சிரிச்சாவது வைப்போம்ன்னு யோசிக்கமாட்டே? சாதராண மரியாதை கூட தெரியாத ஜென்மமா நீ ?

வைகை: இந்தாப்பா நீ என்னைய ரொம்ப கேவெலமா பேசறே, அப்புறம் எனக்கு கோவம் வரும் ஆமா சொல்லிப்பிட்டேன்.. இவன் நம்பகிட்டே வம்பு பண்ணற மாதரிதான் தெரியுது. கையிலே தூக்கு, கண்ணுலே கூலிங்க்ளாஸ், பச்சை சட்டை, காக்கி பான்ட். வேஷம் போட்ட மாதிரி வந்துட்டு என்னய்யா திட்டறே. இருடி...

பார்த்திபன்: என்னாடா நான் பாட்டுக்க கேட்டுகிட்டே இருக்கேன், நீ என்னடான்னா என்னையே முறைச்சு பாக்கறே

வைகை: நீ வந்ததை, நா ஒன்னும் கவனிக்கலை, எம்பாட்டுக்க போய்கிட்டு இருக்கேன். சரி உனக்கு இப்போ என்னா வேணும்?

பார்த்திபன்: உனக்கு காது கேக்காதா, என்னா பாட்டுன்னு கேக்கறேன்

வைகை: ம்ம்ம்ம் அதுவா வந்து.....

பார்த்திபன்: என்னாடா வந்து போயி, சட்டுன்னு சொல்லு, எனக்கு வேலை நிறைய இருக்கு. நான் என்னா உன்னைய மாதிரி வெட்டி பயலா ?

வைகை: நம்பளை மறுபடியும் ரொம்ப கேவலமா பேசறனோ? வந்து.. வந்து .. கமல் பாட்டு பாடினேன், அதுக்கு என்னா இப்போ? அதெல்லாம் நான் பாடக்கூடாதா?

பார்த்திபன்: இல்லே மரியாதையை தெரியாதவனா இருக்கியே, உன்னே என்னா பண்ணலாம்னு யோசிக்கிறேன், என்னாடா என்னா வேணும்னா கேட்டே? நீ என்னா ஹோட்டல் வச்சிருக்கியா? நான் சாப்பிடவா வந்தேன்? சூடா ஒரு மசால் தோசை கேட்டா குடுப்பியா? மூஞ்சியை பாரு. என்னை பாத்து ஏண்டா இந்த பாட்டை பாடினே? நான் டீ வாங்கபோறது உனக்கு அவ்வளவு கேவலமா இருக்கு. ம்ம் உனக்கு எவ்வளவு அசட்டு தைரியம் இருந்தா நீ இந்த பாட்டை என்னை பாத்து பாடுவே? சொல்லுடா? அட சொல்லுடான்னா?

வைகை: முன்னே போன கடிக்கிறான், பின்னே வந்தா உதைக்கிறான். நாம்ப பாட்டுக்க பாடிக்கிட்டு தானே வந்தோம், இவனை பார்த்து நா ஏன் பாடனும்? இவன் டீ வாங்கினா எனக்கு என்னா? காப்பி தண்ணி வாங்கினாதான் எனக்கு என்னா? பொல்லாதவனா இருக்கானே.

பார்த்திபன்: என்னா நான் கேட்டுகிட்டு இருக்கேன், நீ பாட்டுக்க வானத்தை பார்த்து யோசிக்கிறே? பதில் சொல்ல மாட்டியா? என்னை பார்த்தா கழுதை மாதிரி தெரியுதா?

வைகை: அட இங்கே பாருய்யா நம்ப நினைச்சதை அப்படியே சொல்லறான். இவனை சமாளிக்கவே தனியா படிக்கணும் போல? சரி எப்படியோ சமாளிக்கலாம். சரி என்னாப்பா....

பார்த்திபன்: என்னா சரி என்னா என்னாப்பா... ஒழுங்கா பேச தெரியாதா உனக்கு. 8 கழுதை வயசு ஆவுதுல்லே. யோசிக்க வேண்டாம். ஏண்டா என்னைய பார்த்து அப்படி பாடினே?

வைகை: இல்லேப்பா, நானு முதல்லே இருந்தே அந்த பாட்டுதானே பாடிகிட்டு வந்தேன்.

பார்த்திபன்: எப்போ என் தலை பாத்த முதல்லே இருந்தா?

வைகை: என்னா வந்து சிக்கிட்டோமோ, அப்படித்தான் நினைக்கிறேன். சின்னா பின்னமாக்கி விடுவானோ? இருக்கட்டும், இருக்கட்டும். பேசி சமாளிக்காம்.

பார்த்திபன்: டேய் நான் இங்கே ஒருத்தன் நின்னு பேசிகிட்டு இருக்கேன், அப்பப்போ நீ பாட்டுக்கு திரும்பி நின்னு பேசிகிட்டு இருக்கே, நீ என்னாடா லூசா?

வைகை: ஏம்பா, இதுக்குபோய் லூசு அது இதுன்னு சொல்லிக்கிட்டு. நான் பாட்டுக்க, என் வாயிலே வந்ததை பாடிகிட்டு வந்தேன், அந்த நேரம் பார்த்து நீ வந்தியா, உனக்கு தப்பா படுது. அம்புட்டுதான்.

பார்த்திபன்: நான் என்னா சும்மாவா உன்னே லூசுன்னு சொன்னேன், நெஜமாவே நீ லூசுதாண்டா, இவ்வளவு ஒயரம் வளர்ந்திருக்கியே, ரோட்லே என்னடா பாட்டு உனக்கு? அதுவும் நான் வரும்போது. போன தடவையே பாடினதை கேட்டு நாயி தொரத்த, நீ ஓட கடைசியிலே நாயி ஜெய்ச்ச்டிச்சு இல்லே. உன் வேட்டி நாயி வாயிலே இருந்தது மறந்து போச்சா ?

வைகை: அதெல்லாம் ஏம்பா இப்போ போய் பேசிகிட்டு, சரி சரி விடு. பிரச்சனையை பண்ணாதே

பார்த்திபன்: நான் பிரச்சனையை பண்ணறேனா? இந்த மாதிரி சில்லாவளித்தனம் எதுவும் என்கிட்டே வச்சிகாதேன்னு சொன்னேனா இல்லையா? மொதல்லே அதெ சொல்லு.

வைகை: அதில்லே, வந்து, வந்து என்னா வார்த்தை கிடைக்க மாட்டேங்குது. பேச முடியலியே. ஆண்டவா இன்னைக்கு யாரு மூஞ்சியிலே முளிச்சொமோ? இப்பவே கண்ணு மங்கலாயிடுசே.. நானு என்னா செய்வேன். எப்படி இவன் கிட்டே இருந்து தப்பிக்க போறேனோ, ஒண்ணுமே புரியலையே.

பார்த்திபன்: ஏண்டா ஒண்ணுமே பேசாமே எருமை மாதிரி நிக்கிறே?

வைகை: ஏம்பா இப்படி எல்லாம் பேசறே. எனக்கு அப்பறம் கோவம் வந்துடும். உனக்கு இப்போ என்னா பிரச்சனை?

பார்த்திபன்: சரி எனக்கு வேண்டாதவன் ஒருத்தன் அந்த டீ கடையிலே உக்காந்து இருக்கான்.

வைகை: அதனாலே?

பார்த்திபன்: அதென்ன சொல்லி முடிக்கறதுக்குள்ளே, கேள்வி? பட் என்று

வைகை: ஏம்பா வாய் பேச்சு வாயில் இருக்கும்போதே கை நீட்ரே?

பார்த்திபன்: போ போய் நான் சொன்னதே மொதல்லே செய். டீ வாங்கிட்டு வா. என்னடா மொறைக்கிரே. ஒரு அறை போதாதா? அந்த கன்னத்திலேயும் கொடுக்குனுமா? போறியா? இல்லையா?

வைகை: இவனை ஒரு நாளைக்கு சரியா கவனிக்கணும். வரவன் போறவன் எல்லாரும் போட்டு மொத்தரான்களே. நானு என்னா "இரவல்லே தாலாட்டி வந்தவனா" ? இவனுகளை எல்லாம் யாருன்னே தெரியாமே போட்டு அடி பிண்ணிடனும். முதல்லே ஒரு கோணி ரெடி பண்ணனும். எங்காவது படுக்காமவா போயிடபோறான். அப்போ இவனோட தலையை கோணிக்குள்ளே போட்டு மூடி யாருன்னே தெரியாமே நொங்குன்னு நொங்குன்னு நொங்கிடனும் ஆமா. தொணைக்கு யாரானும் கூட்டிக்கணும். சுப்பிரமணியை கூப்பிடலாமா. யோசிச்ச்ச்சு கச்சிதமா காரியத்தை முடிக்கணும். இருடி உனக்கு இருக்கு. இப்போ டீ வாங்கி குடுத்து தப்பிசிக்குவோம்.

பார்த்திபன்: என்னாடா டீ வாங்கிவான்னா ஒரே யோசனையா இருக்கே. போக மாட்டியா? இந்தா தூக்கு, எடுத்துக்கிட்டு போடா.

வைகை: ஒரு வார்த்தை பேசரதுகுள்ளே ஒன்பது டா சொல்லறான். இருக்கட்டும் இருக்கட்டும். சரி தூக்கை கொடு. டீ வாங்கியாறேன். யாரை பாத்து பயப்படறான். அதே மொதல்லே கண்டு பிடிக்கணும். ஏம்ப்பா அங்கே யாரு உனக்கு வேண்டாதவ்ன்னு சொன்னே?

பார்த்திபன்: ஏண்டா கொடுத்தது போதாதா? தொங்கற நாக்கை தோள்லே போட்டுக்கிட்டு வம்புக்கு அலையறே. வந்தேன்னா..... நல்லா திட்டிடுவேன்.......... ஆமா!!

வைகை: ஆத்தாடி நமக்கு வாயி கொஞ்சம் நீளம்தான், நல்ல வேளை தள்ளி நின்னோம் தப்பிச்சோம், இல்லைன்னா பல்லை உடைச்சிருப்பானோ? சரி எதுக்கு இந்த ஆராயிச்சி. மொதல்லே இவனுக்கு டீ வாங்கி கொடுத்துடுவோம். ஆமா அங்கே என்னா இரெண்டு நாய் நிக்குது, ஒரு நாய்ன்னாவே எனக்கு பயமான பயம். இரெண்டு வேறேயா?

பார்த்திபன்: முண்டம் அங்கே நிக்கிறது ஒரு நாய்தான். ஏண்டா இப்படி தப்பு தப்பா யோசிக்கறே.

வைகை: நீ அடிச்சதில்லே காதுக்குள்ளே குயிய்ன்னு ஒரு சத்தம் கேட்டுது, காது கேக்கலை, கண்ணு முன்னாடி ஒரே வண்டா பறக்குது. அவ்வளவுதான்.

பார்த்திபன்: லூசு அது வண்டு இல்லே. வண்டா இருந்தா இந்நேரம் உன் முழியை நோண்டிருக்கும் . நீ இப்போ போகப்போறியா இல்லையா ?

பார்த்திபனின் தந்தையின் நண்பர்: என்னப்பா நல்லா இருக்கியா இங்கே என்ன பண்ணறே அதுவும் இவன் கூட ?

பார்த்திபன்: நல்ல இருக்கேன் சார், ஒன்னும் இல்லே சும்மா டீ வாங்க வந்தேன்.

பார்த்திபனின் தந்தையின் நண்பர்: வேலைக்கு போகபோறேன்னு சொன்னே, எப்போ போறே? போறதுக்கு முன்னாடி வந்து என்னைய பாத்திட்டு போ என்ன? அது சரி இந்த லூசு பயலோட உனக்கு என்ன பேச்சு வார்த்தை நடக்குது.

பார்த்திபன்: அது ஒன்னும் இல்லை சார் நான் டீ வாங்க வந்தேன் வந்த இடத்தில் என்னைய வம்புக்கு இழுக்கிறான்.

பார்த்திபனின் தந்தையின் நண்பர்: சரி சீக்கிரம் வீடு போய் சேரு, இவன மாதிரி காவாலி பயலோட சகவாசம் வச்சிக்காதே

வைகை: என்னாது காவாலி பயலா நானா, நல்லா இருங்கப்பு நல்லா இருங்க, ஏன் எல்லாரும் ஒரு மார்க்கமாகவே திரியறானுங்க. வயசுக்கு ஏத்த மாதிரியா பேசறானுங்க, இவங்களுக்குதான் மருவாதியே தெரியலை. ஆனா எனக்கு மருவாதி இல்லைன்னு இங்கே நிக்கறவன் கூட சொல்லறான். இதுக்கு மேலே இங்கே நின்னா அவ்வளவுதான்.
சீக்கிரம் இடத்தை காலி பண்ணனும். இவன் முகத்திலே இன்னமே முழிக்கவே கூடாது சாமி.

பார்த்திபன்: நின்னது போதும், போய் டீ வாங்கிட்டு வர வழியை பாரு

வைகை: இதா போறேன் இல்லே, அண்ணே 2 பார்சல் டீ போடுங்கண்ணே. இந்தாங்க தூக்கு.

மாடாசாமி: ஏலே வேலு இங்கே என்னா பண்ணறே?

வைகை: அண்ணே மாடசாமியண்ணே நல்லா இருக்கிறீங்களா? ஆமா போன மாசம் எங்கோ ஊருக்கு போனதா சொன்னாங்க. எப்பண்ணே வந்தீங்க?

மாடாசாமி: சரி இங்கே உக்காரு, எப்படி இருக்கே, எப்ப கல்யாணம் செய்துக்க போறே? இன்னும் அக்கா வீட்ட்லேதான் இருக்கியா?

வைகை: இல்லேண்ணே இப்படியே அக்கா வீட்டுலயே செட்டில் ஆக வேண்டியதுதான். எனக்கு அக்கான்னா அம்புட்டு உசுருண்ணே. அதை விட்டுட்டு நான் எங்கே போவேன் ? எனக்கு என்னா பொழைக்க தெரியும்? அக்கா வீட்டிலேயே இருப்பதா முடிவு பண்ணிட்டேண்ணே.

மாடசாமி: சரி டீ யாருக்கு உங்க அக்கா வீட்டுக்கா ? ஏன் அக்காவுக்கு உடம்பு சரியா இல்லையா?

வைகை: இல்லைண்ணே, என்னோட சிநேகிதன் ஒருத்தனுக்கு டீ வாங்க வந்தேன்.

மாடசாமி: ஏன் அவன் வந்து வாங்க மாட்டானாமா? நீ என்னாடா அவனுக்கு வேலைக்காரனா? அறிவு இருக்காடா உனக்கு? அன்னைக்கி நான் என்னா சொன்னேன்.

வைகை: என்னாண்ணே சொன்னீங்க ?

மாடசாமி: யாருக்கும் எடுபிடி வேலை செய்யாதே, அப்போதான் எல்லாரும் உன்னைய மதிப்பாங்கன்னு சொன்னேன் இல்லையா. ஏண்டா எதே சொன்னாலும் கேக்க மாட்டியா? அறிவு கெட்டவனே

வைகை: என்னா இவரும் ஆரம்பிச்சிட்டாரு. இம்புட்டு நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்தாரு. என்னா ஆச்சு இவருக்கு. அண்ணே மாடசாமி அண்ணே ஏண்ணே ஒரு மாதிரி பேசறீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலையே?

மாடசாமி: என்னடா முறைக்கிறே ?

வைகை: முறைக்கலேண்ணே, உங்க கிட்டே தான் பேசி கிட்டு இருக்கேன்.

மாடசாமி: என்ன சொன்னே நான் உனக்கு அண்ணனா? எட்டி ஒரு உதைச்சென்னா தெரியும் சேதி. என்னைய என்னான்னு நினைச்சுகிட்டு இருக்கே. கிறுக்கு பயலே.

வைகை: ஆத்தி இவரும் நம்பளை உதைப்பேன்னுட்டு சொல்லறாரே. இந்த கூலிங்கிளாஸ் போட்ட பய எதுனாச்சும் மாடசாமி கிட்டே சொல்லி இருப்பானோ? அதனால தான் தூக்கை என்கிட்டே கொடுத்து அனுப்பி இருக்கிறானா? இந்த வெவரம் எனக்கு இல்லாம போச்சே. எத்தினை பேருடா என்னை அடிப்பீங்க?

மாடாசாமி: டேய் நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் டீ வாங்கிடுவியா, அதையும், பாக்கறேன்.

வைகை: என்னாச்சு இவருக்கு. நான் ஒண்ணுமே சொல்லலையே, டீ கொண்டு போகலின்னா அவன் அடிப்பான், டீ வாங்கினாவே இவன் அடிப்பேன்கிறானே, அட ஒரு கூட்டமே கிளம்பிருச்சா. சரி இந்த மாடசாமி கிட்டே வம்பு கிம்பு ஒன்னும் வச்சுக்காமே சீக்கிரம் இங்கிருந்து தூக்குகோடா நழுவிடனும்.ஆத்தி ஒரு நாள் தள்ளறதே ஒரு யுகமா இருக்கேப்பா?

டீ கடைகாரர்: எலே வேலு இங்கே வா. கிட்டே வா காதுலே ஒரு விஷயம் சொல்லறேன். மாடசாமி சரி இல்லை. அதுக்குதான் போன மாதம் ஆஸ்பத்திரிக்கி கூட்டிகிட்டு போனாங்க. அவருக்கு புத்தி பிசகிடிச்சாம் இங்கே எல்லாரும் அப்படிதான் பேசிக்கிறாங்க. அதனாலே சத்தம் போடாமே இந்தா டீ வாங்கிகிட்டு போய் சேர்.

வைகை: என்னா மாடசாமி அண்ணனுக்கு புத்தி சரி இல்லையா? இவ்வளவு நேரம் என்கிட்டே நல்லா தானே பேசினாரு. நீ என்னா பொய் சொல்லறயா? அண்ணங்கிட்டே சொல்லட்டுமா? எனக்கு எம்புட்டு பழக்கம்? என்னா இது சின்னபிள்ளைதனமா இருக்கு?

டீ கடைகாரர்: டேய் வேலு ஒழுங்கா டீ எடுத்துகிட்டு போ. அலம்பல் பண்ணினா சுடுதண்ணி எடுத்து முஞ்சியிலே ஊத்திடுவேன். ஓடி போய்டு ஆமா சொல்லிட்டேன்.

வைகை: எனாது சுடுதண்ணி ஊத்துவியா என்னாங்கடா ஆச்சு எல்லாரும் தப்பு தப்பா பேசறிங்க? சரி இவ்வளவு சொல்லறே நானு நபறேன். சுடுதண்ணி எல்லாம் வேணாம் நானே கிளம்பறேன்.

டீ கடைகாரர்: போவியா வந்துட்டான். மாடசமியோ அமைதியா ஒக்காந்து இருக்கான். எந்த நேரம் அவன் என்னா பண்ணுவாநோன்னு நான் பயந்து கிட்டே டீ ஆத்தறேன். இதுலே இவன் வேறே மாடசாமி கிட்டே பேச்சு வார்த்தை நடத்தாரான். வந்துட்டானுக தூக்கை தூக்கிகிட்டு.

பார்த்திபன்: என்னடா சீக்கிரம் வந்துட்டே. மாடசாமி அண்ணனை பாக்கலை?

வைகை: இவன் எல்லாம தெரிஞ்சுகிட்டே கேக்கரானா? அப்போ இந்த செட்டப் கூட இவனோடதுதான். இந்த பய பிள்ளைக்கு இப்ப தானே புரியுது.

பார்த்திபன்: என்னா நடந்துச்சு அங்கே ? மாடசாமி கிட்டே பேசிகிட்டு இருந்தே

வைகை: சும்மா அவரு என்னைய நலம் விசாரிச்சாரு, நானும் அவரை விசாரிச்சேன் வேறே ஒன்னும் இல்லயே. அம்புட்டுதான்.

பார்த்திபன்: இல்லை அவரு உன்னைய பாத்து கையை ஆட்டி ஆட்டி பேசினாரு, காலை வேறே தூக்கி காட்டினாரு. இப்படித்தான் நலம் விசாரிப்பாங்களா ? மரியாதையா சொல்லு அங்கே என்னா நடந்தது?

வைகை: டி ஆறுதுப்பா, அவசரமா போனும் சொன்னியே, கிளம்புப்பா. நான் அப்புறமா வரேன், சாகவாசமா பேசுவோம் சரியா. கிளம்பு.... கிளம்பு....

பார்த்திபன்: எண்டா என்னைய விரட்டரே? எனக்கு ஒன்னும் அவசரமா போகவேண்டாம். இன்னும் ஒரு மணி நேரம் நான் ப்ரீ தான். அதுக்குள்ளே நாம்ப எல்லாத்தையும் முடிச்சிடலாம்.

வைகை: எல்லாத்தைன்னா, என்னாப்பா, அங்கே ஒண்ணுமே நடக்கல. டீ கடைக்காரர் கூட என்னை ஒன்னும் திட்டலை. ஐய்யயோ நாம்பளே எல்லாத்தையும் உளற ஆரம்பிசிட்டோமே. என்னா நடக்க போகுதோ?

பார்த்திபன்: சரி சொல்லு டீ கடைகாரர் என்ன திட்டினார். மாடசாமி என்னா சொன்னாரு?

வைகை: ஒன்னும் சொல்லலை. உனக்கு டீ வேலை முடிஞ்சுது. அப்போ நான் கிளம்பறேன்

பார்த்திபன்: அண்ணே மாடசாமி அண்ணே வேலு உங்களை கூப்பிடறான்

வைகை: அடபாவி நான் எங்கேடா!!!

மாடசாமி: அறிவு கெட்ட முண்டம் இப்பதானே உதைப்பேன்ன்னு சொன்னேன் அங்கே போய் நின்னுகிட்டு அலம்பலா பண்ணறே.

வைகை: ஆத்தி கல்லு எடுக்குறானே. ஏம்பா ஏம்பா உன்னைய கும்புட்டுகறேன்பா அவனை அங்கேயே ஆப் பண்ணுப்பா மாடசாமிக்கு மன நிலை சரி இல்லேப்பா, ப்ளீஸ் பா ...

பார்த்திபன்: நான் கேட்டபோதே இதை சொல்லி இருக்கலாம் இல்லே. என்னா சில்லாவளித்தனமா பண்ணறே? எனக்கு தெரிஞ்சு தானே உன்னைய டீ வாங்க அனுப்பினேன்.

வைகை: தெரிஞ்சுதானா? வெளங்கிடும். மத்தவனை அழவக்கிரதுலெ என்னா அம்ம்புட்டு சந்தோசம் இருப்பூ இரு......

பார்த்திபன்: உனக்கு மட்டும்தான் பாட தெரியுமா இப்ப்போ நான் பாடறேன் பாரு போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு...

வைகை: இவனுமா??? சட்டி சுட்டதடா கை விட்டதடா நெஞ்சு சுட்டதடா.... நெஞ்சு சுட்டதடா....

பார்த்திபன்: எச்சுச்மி, எனி ஹெல்ப் ???

வைகை: ம்ம்ம் ஒன்னும் வேணாம் நாங்களே பாத்துக்குவோம்மில்லே.. .

பிடிக்கிதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா !!!!