வலை நண்பர்கள் ஆடும் கிரிக்கெட்!!
நண்பர்கள் அடைந்த வெற்றிச்சின்னம்

கேப்டன் டோணி
பங்கேற்பவர்கள்
============
கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்
இந்திய வீரர்களின் நிலைப்பாடு
=========================
டோணி - Middle Order Batsman, Jeevan - Fast Bowler, வால்பையன் - Spinner, நசரேயன் - Opening Batsman, குடுகுடுப்பை - Fast Bowler , உருப்படாதது அணிமா - (ஆல் ரௌண்டர்), ஜமால் - Wicket Keeper, அப்பாவி முரு - (ஆல் ரௌண்டர்) , லவ்டேல் மேடி - (ஆல் ரௌண்டர்), அ.மு.செய்யது - Opening batsman, அண்ணன் வணங்காமுடி - (ஆல் ரௌண்டர்)
ஆஸ்திரேலிய கேப்டன்: Ricky Ponting
ஆஸ்திரேலிய துணை கேப்டன்: Michael
ஆஸ்திரேலியர்கள் 320/10
இப்போது அப்பாவி முருவும், அ.மு.செய்யதும் ஜோடி சேர்கின்றனர். ஆஸ்திரேலிய வீரர் Shane Watson முருவின் பந்தை எதிர் கொள்கின்றார்.
இருவரின் பந்து வீச்சில் அதிர்ந்த ஆஸ்திரேலியர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள். பல சாகசங்கள் புரிந்து விளையாடினதால் சில ரன்கள்தான் எடுக்க முடிந்தது. இருவரும் தலா ரெண்டு விக்கெட்டை வீழ்த்தினார்கள். டோணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புதியவர்கள் எப்படி ஆடுவார்களோ என்று தவறுதலாக பயந்து விட்டோமே என்று வருத்தப் பட்டதாக விக்கெட் கீப்பர் மற்றும் சக வீரர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பௌலிங் அப்பாவி முருவும், அ.மு.செய்யதும் தலா ரெண்டு விக்கெட்டு எடுத்து தங்களது ஆறு ஓவர்களை முடித்துக் கொண்டார்கள்.
அனைத்து தரப்பிலும் இருந்து இந்தியர்களுக்கு சரமாரியான மகிழ்ச்சி ஆரவாரங்களும், உற்சாகங்களும் வந்த வண்ணம் இருந்தன.
உணவு இடைவேளை முடிந்து முதலில் மட்டை வீச வந்தவர்கள் நமது நண்பர் நசரேயன் மற்றும் அ.மு.செய்யது.
அதிரடி ஆட்டமாக அடித்து விளையாடினார்கள். பார்வையாளர்களும், சக வீரர்களும் ஏற்படுத்திய மகிழ்ச்சி அலைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. நண்பர் நசரேயன் அருமையான ஒரு கதை எழுதும் நோக்கத்துடன் வந்திருக்கிறார். ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதை உணவு இடைவேளையின் போது சக வீரர்களிடம் கூறி மிகவும் வருத்தப் பட்டிருக்கிறார். என்ன செய்யறது விதி வலியது. சாதரணமாக அவரது கனவில் வருவதைத்தான் எழுதுவாராம். ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் எழுத வந்து ஏமாந்து போன கதை ஒரு சோக கதைதானே!
நண்பர் நசரேயன் எழுத நினைத்த கதையின் தலைப்பு மட்டும் வெளியே கசிந்து விட்டதாமாம். அதாவது, "துண்டு போட்டு துடித்துப் போன கதை" இது தான் அந்த கதையின் தலைப்பு. தலைப்பே விறுவிறுப்பாக இருக்கும் போல இருக்கே! எப்போ எழுதுவாரோ அப்போ படிக்க தயாராகலாம். இப்போ அவர் விளையாடுவதை கவனிக்க வேண்டுமே! அதுனாலே தான்...........
வால்பையன் மட்டும் எதிர் கவிதைகளும் பின்னூட்டங்களும் இட்டு தனது காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டும், விளையாடியும் விட்டதாக சுற்று வட்டாரங்கள் தெரியப் படுத்தின. நண்பர் வால்பையனுக்கு எதிர் கவிதை எழுதினாலே போதும். எல்லாருக்கும் நல்லா பொழுது போகும். விளையாட்டிலும் அவர் கில்லாடி என்பதை நிரூபித்து விட்டார்.
ஆனால் அ.மு.செய்யது கதை, கட்டுரைகள் என்று எல்லா தரப்பிலும் வெளுத்து வாங்குவார். அதே போல விளையாட்டிலும்......... நசரேயன் அவர்களுக்கும் நம்ம சகோதரர் அ.மு.செய்யதுக்கும் நல்லா ஒத்துப் போகுதுன்னு சொல்லலாம். நல்ல புரிதல் இருக்கு. தவறுகள் செய்யாமல் அருமையா விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பதினைந்து ஓவர்களில் அவுட் ஆகாமல் இருவரும் சேர்ந்து எடுத்த ரன்கள் 110. நசரேயன் 60 ரன்கள். அ.மு.செய்யது 50 ரன்கள். ஆஸ்திரேலியர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் புது வியூகம் அமைத்து அதில் இருவரையும் சிங்காரமாக சிக்க வைத்து விட்டனர். (110/2)
தேநீர் இடைவேளையின் போது இந்திய வீரர்கள் இருவரும் அவுட் ஆனார்கள்.
இதை சற்றும் எதிர் பாராத டோணி மிகவும் கவலைக்குள்ளானார்.
இடைவேளைக்குப் பிறகு அடுத்து களம் இறங்கியவர்கள் லவ்டேல் மேடி, அண்ணன் வணங்காமுடி. வந்த வேகத்தில் இருவரும் சிக்சரும் பௌண்டரியுமாக அடித்துத் தள்ளினார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அரங்கத்தில் அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்து கொண்டிருந்தனர்.
மள மளவென்று ரன்கள் குவிந்தன. அதே சமயத்தில் ஆர்வத்தில் ஓடிய அண்ணன் வணங்காமுடி ரன் அவுட் ஆனார். அண்ணன் வணங்காமுடி எடுத்த ரன்கள் 35. (145/3)
மேடியுடன் இப்போது ஜோடி சேர்பவர் வால்பையன்.
வந்த வேகத்தில் மூன்று சிக்ஸ்சர்கள். அவரும் ஆஸ்திரேலியர்களிடம் சிக்கி அவுட் ஆனார். வால்பையன் எடுத்த ரன்கள் 38. (183/4)
அடுத்து களம் இறங்கியவர் கேப்டன் டோணி. ஆஸ்திரேலியர்கள் மிகவும் நிதானாக யோசித்து பீல்டிங் டைட் செய்து விட்டனர். அதனால் சிங்கிள் ரன் எடுக்கவே இந்திய வீரர்கள் தடுமாறினார்கள். ஒவ்வொரு ரன்னாக இருபது எடுத்து இறுதியில் பரிதாபமாக டோணி அவுட் ஆனார். டோணி எடுத்த ரன்கள் 20. (203/5)
லவ்டேல் மேடி களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார். இவருடன் ஜோடி சேர்ந்தவர் விக்கெட் கீப்பர் ஜமால். மூன்று சிக்ஸர் ஐந்து பௌண்டரி எடுத்தார். ரன் அவுட் ஆனது ஜமால். ஜமால் எடுத்த ரன்கள் 38. (241/6.)
லவ்டேல் மேடியுடன் ஜோடி சேர்ந்தவர் ஜீவன். இவர் ஏழாவது விக்கெட். தேவையான ரன்கள் பன்னிரண்டு. எதிர் பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது. ஏனெனில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு ரன் கூட எடுக்க அனுமதிக்கவில்லை. இந்த சூழ்நிலையை நன்றாக உள்வாங்கிய மேடி சிக்சருக்கு தூக்கினார். அது அங்கேயே விழுந்தது. ரன் எடுக்க முடிய வில்லை. அவர் நல்ல நேரம் அவுட் ஆகவில்லை. அடுத்த பந்தை எதிர்பார்ப்புடன் எதிர்கொண்டவர் ஜீவன். வந்தது வரட்டும் கடைசிநேர விளையாட்டுதானே என்று எண்ணி விட்டார் போலும். மட்டையை சுழற்றி தூக்கி அடித்தார் பாருங்கள். பந்து பறந்து வந்து அரங்கத்தில் விழுந்தது. இந்தியர்கள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தனர் என்று எல்லா தரப்பினருக்கும் நம்பிக்கை வந்து விட்டது. அதன் எதிரொலி கைதட்டல்கள்தான் . அவர்களின் மகிழ்ச்சிக்கு ஏது எல்லை!!
அடுத்த பந்திலும் அதே துணிச்சல் இதிலும் சிக்சருக்கு பந்து பறந்தது. ஜீவன் அடித்த ரன்கள் மூன்று சிக்சர்களும் ஒரு பௌண்டரியும். மொத்தமாக ஜீவன் எடுத்த ரன்கள் 22. தேவையான ரன்கள் 21.
இறுதியில் இந்தியா வெற்றியடைந்தது. அனைத்து நண்பர்களும் ஆடுகளத்தை நோக்கி ஓடினார்கள். இறுதிவரை விளையாடிக் கொண்டிருந்த மேடிக்கு சக வீரர்களிடம் இருந்து பயங்கர அப்ளாஸ் கிடைச்சுது. லவ்டேல் மேடி எடுத்த ரன்கள் 59. (322/6.)
விவேகம் நிறைந்த வேகமான விளையாட்டில் சிறந்து விளங்கிய நமது இந்திய வீரர்களை பாராட்டாதவர்களே கிடையாது. ஆஸ்திரேலிய வீரர்களும் மனதார இந்திய வீரர்களை பாராட்டினார்கள். இறுதியில் விளையாடிய அனைவரையும் கவுரவப் படுத்தும் வகையில் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் தனித் தனியாக பாராட்டினார்கள். அவருடைய சொந்த செலவில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். டோணியை பாராட்டி வெற்றிக் கோப்பையை பிரதமர் வழங்கினார்.
கோப்பையை வாங்கிய டோணி இந்த பாராட்டுதல்களுக்கு காரணமானவர்கள் புதிதாக விளையாட வந்தவர்கள்தான். வழக்கமாக விளையாடுபவர்கள் விளையாட முடியாத சூழ்நிலையில் ரிஸ்க் எடுத்து இந்த புதியவர்களை களம் இறக்கினோம். அம்பயரில் இருந்து ஆடிய அனைத்து வீரர்களுக்குமே இந்த வெற்றி சொந்தமானது.
நான் இந்தக் கோப்பையை முழு மனதுடன் புதிய இந்திய வீரர்களாக களம் இறங்கி புது மாதிரி விளையாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பிரபல வலைப்பதிவர்களுக்குதான் சொந்தமாக்கப் போகிறேன், மைதானத்தில் விளையாட்டுடன் சேர்த்து குறும்புகள் பல செய்தாலும் இறுதியில் வெற்றிக் கனியை பெற்றுத் தந்து விட்டார்கள். அதனால் அனைத்து பெருமைகளும் புது வீரர்களுக்கே! என்று டோணி வாங்கிய கோப்பையை துணை கேப்டன் ஜீவன் அவர்களிடம் கொடுத்து இது உங்கள் அனைவருக்கும் சொந்தம். இது உங்கள் விளையாட்டின் நினைவாக வலையுலகை அலங்கரிக்கட்டும் என்றார்.
அரங்கத்தில் ஏற்பட்ட பலத்த கரகோஷத்துடன் நம் வலை நண்பர்கள் வெற்றிச் சிரிப்போடு பிரியாவிடை பெற்றனர்.
***சுபம்***
நன்றி
ரம்யா....