Wednesday, November 11, 2009

ரம்யாவின் நூறாவது இடுகை நிறைவு!!

நூறைத் தாண்டிய இடுகை நண்பர்களே!!





நண்பர்களே உங்களுக்கு கேக்கு வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க!





என் இதயப் பூக்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன் நண்பர்களே!!



மகிழ்ச்சியின் உச்சம் உங்களுக்கு நான் அளிக்கும் இந்த பூங்கொத்து!!


என்னுடன் சேர்ந்து அவங்களும் உங்களுக்கு நன்றி சொல்கிறார்கள்!!

எழுத ஆரம்பித்து நூறைத் தாண்டிவிட்டது "Will To Live". இது நிஜமா... இல்லே இது நிஜம்தானா... என்ற கேள்விக்கு பதில் கிடைக்க ஒரு வேள்வியையே நிகழ்த்தி விட்டேன் எந்தன் மனதிற்குள்ளே.

எழுதப்பட்ட இடுகைகள் எனக்கு மன நிறைவை கொடுத்ததா என்று பல முறை என்னையே கேட்டுக் கொள்கிறேன்! கேள்விக் குறியாகவே இன்னும் நிற்கின்றேன்.

நூறை தொடுவதற்கு உதவியது யாரு? எல்லாம் நீங்கள்தான். என்ன யோசிக்கறீங்க? நான் உண்மையைத்தான் சொல்கிறேன்!

எனக்கு பின்னூட்டம் என்ற ஊக்க மருந்தை ஊட்டி ஊட்டி வளர்த்தீர்களே! அதைத்தான் சொல்கிறேன்.

என்னை உங்களின் பாசம் என்ற நேசக் கயிற்றால் இழுத்து வந்து நூறைத் தொட வைத்தீர்களே அதைத்தான் கூறுகிறேன்!

எத்துனை நட்புகள் எத்துனை உறவுகள், எத்துனை பந்தங்கள், இவைகள் எல்லாம் எங்கே சாத்தியம்? எங்கேயும் கிடைக்காது!

நான் மேலே கூறிய பொக்கிஷங்கள் அனைத்தும் எனக்கு கிடைத்தது இந்த வலையுலகில்தான்.

வலைபூக்களின் வாடாமலர்களான் நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கும் வரை எனது வலையும் வாடாமலராக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நினைக்கவே ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. திரும்பி பார்ப்பதற்குள் நூறைத் தாண்டிவிட்டது "Will To Live" என்ற உண்மை.

பத்திரைமாத்து சொக்கத்தங்ககளான நீங்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னால் இது சாத்தியப் படுத்த முடிந்தது. சாதிக்கவில்லை ஆனால் நூறைத் தாண்டிவிட்டேன். அதை நினைக்கையில் மனதிற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த என் மகிழ்ச்சிக்கு காரணனமான உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி நண்பர்களே! மிக்க நன்றி!