வைகை: அப்பாடா ஒருவழியா சந்தைக்கு போயிட்டு வந்தாச்சு. இன்னைக்கு தான் மாமா சொன்ன வேலையை சரியா செஞ்சிருக்கோம். இன்னைக்கு மாமாவும் திட்டாது, அக்காவும் திட்டாது. நிறைய நேரம் இருக்குதே. வீட்டுக்கு இவ்வளவு சீக்கிரமாவா போறது? கையிலே வேறே நிறைய பணம் இருக்கு. சரி போய்டலாம். எதுக்கு வம்பு. ஆனா சந்தையிலே அலைஞ்சதுலே தலைய வேறெ வலிக்குதே. ம்ம்ம் ஆ அதோ ஒரு டீ கடை இருக்கே. அங்கே போயி ஒரு சிங்கிள் டீ அடிச்சாதான் தலை வலி போகும். என்னா, இந்த கடையிலே ஒரே கூட்டமா இருக்கு! சரி, வெறும் டீ மட்டும்தானே! பெஞ்சியிலே ஒக்காரா எடம் கெடைக்குமா? முயற்சி பண்ணலாம். டேய், கொஞ்சம் தள்ளி உக்காரு.
சீனி: என்னா டேயா? உடம்பு எப்படி இருக்கு? பேரு தெரியாது. அத வச்சு கூப்பிடு.
வைகை: இதென்னடா! வந்த இடத்திலே தலை வலி போயி திருகு வலி வந்திடும் போல இருக்கே! வேலு, கொஞ்சம் அடக்கி வாசி. சரிடா சீனி, கொஞ்சம் தள்ளி உக்காரு. அண்ணனுக்கு உடம்பு சரி இல்லை.
சீனி: என்னாது மறுபடியும் 'டாவா'? மரியாதையா பேசு. இல்லேன்னா கை கால் இடம் மாறிடும்.
வைகை: ஆத்தி கை காலை எடம் மாத்திடுவியா? எப்பிடி நடப்பேன், எப்படி டீ குடிப்பேன்? அது சரி, இவனுக மாதிரி ஆளுங்க கிட்டே தைரியமா பேசணும். நீ என்னாடா கசாப்பு கடையிலையா வேலை செய்யறே? என்னைய பாத்தா வேறெ மாதிரி தெரியுதா? ஏண்டா? எல்லாரும் தப்பு தப்பா பேசறீங்க?
சீனி: உக்காந்து தொலை .
வைகை: கொஞ்சம் இடம் கிடைச்சிடுச்சு. எவனுக கிட்டேயும் சிக்காம சீரளியாமே இன்னக்கு நேரத்தை ஓட்டனும்.
சின்னக்கலைவாணர்: என்னா எல்லாரும் இங்கே வந்து டேரா போட்டு இருக்கீங்க. எது மேலேயோ எதுவோ மொய்க்கிற மாதிரி. ஒரு அடுப்பு, அது மேலே ஒரு பாத்திரம், இரெண்டு பேப்பர், இரெண்டு பெஞ்சி இது இருந்தா போதும், வந்து உக்காந்திருவீங்களே!வாசு, உனக்கும் வேலை வெட்டி எதுவும் கிடையாதா? இங்கே என்னா பண்ணறே?என்னா குடிக்கிறே?
வாசு: ம்ம் கண்ணு தெரியலை ராவாவா அடிக்கறேன்? டீ தானே குடிக்கிறேன். வந்தோமா வேலையை பாத்தோமான்னு இருக்கணும். வெட்டி வம்பு இழுக்கக் கூடாது.
சின்னக்கலைவாணர்: வாசு, நீ ரொம்ப பேசிட்டே. படிப்பு வருதோ இல்லையோ பேச்சு நல்லா வருது. தள்ளி உக்காரு. என்னாது கையிலே. தினத்தந்தி பேப்பரா?
வாசு: இல்லே தினமலர். என்னோடது இல்லே, அந்த அண்ணா கொடுத்தாரு.
சின்னக்கலைவாணர்: சரி சரி அடங்கு யாருதா இருந்தா என்னா. கொஞ்சம் இப்படி குடு. ஆ ஐயோ!! என்னடா இது? தாம்பரத்திலே தாலி / செயின் இரண்டையும் அறுத்துட்டாங்களா? குரோம்பேட்டைலே கத்தி குத்தா? பல்லாவரத்திலே முகம் தெரியாத பாடி கிடக்குதா? மொதல்ல ரெண்டும் சரி எப்படியாவது கண்டு பிடிச்சிடுவாங்க. பல்லாவரம் கேசு எப்படி? முகம் அடையாளம் தெரியாமே பாவம் நம்ப போலிசு. அடுத்து என்னா, என்னாது பெரம்பூரில் பிரபல ரவுடி Encounter இல் சுட்டு கொல்லப்பட்டான். இது சரியான தீர்ப்பு.
வாசு: என்னா ஒரே அதிர்ச்சி அடையற மாதிரி நடிக்கரே, படிச்சது போதும்! பேப்பரை குடு. மத்தவங்க படிக்கவேணாம்?
சின்னக்கலைவாணர்: என்னாடா எல்லாருமே ஓசி பேப்பர் படிக்கத்தானே டீ கடைக்கு வரானுங்க. நானும் அதுக்குதான் வந்திருக்கேன். கொஞ்சம் பொறு. படிச்சிட்டு தரேன்.
வாசு: வேணாம் எனக்கு ரொம்ப கோவம் வரும். அழிச்சாட்டியம் பண்ணாதே. இதோ அங்கே இருக்காரே அவருதான் மொதல்லே இந்த பேப்பரை கையிலே எடுத்தாரு. அதுக்குள்ளே ஒவ்வொருத்தரா படிச்சிகிட்டே போறாங்க. அவருக்கு கொடுக்கத்தான் நான் கையிலே வச்சிருந்தேன். கொடு, அவரு கிட்டே குடுத்திடலாம்.
சின்னக்கலைவாணர்: என்னாடா மறுபடியும் சொல்லறேன் இது ஓசி பேப்பர் யாரு வேணாலும் படிக்கலாம். கொஞ்சம் இரு. முக்கியமான செய்தி.
வாசு: அண்ணே இவரு பேப்பர் தர மாட்டேங்கிறாரு.
சின்னக்கலைவாணர்: என்னாடா மெட்ராஸ் சிட்டிலே அட்ராசிட்டி பன்னரவங்களை படிக்கலாம்னு வந்தா நீ ரொம்ப டார்ச்சர் பண்ணறியே?
வைகை: என்னா எதிர்லே இருக்குற பெஞ்சிலே ஒரே சத்தமா இருக்கு. யாரு அது பேசிகிட்டே இருக்காங்க. ம்ம்ம்ம்.... யாரு அவன் எதிரிலே உக்காந்து இருக்கிறவன், ம்ம் ஐயோ ஆத்தி இவனா? அன்னைக்கே நம்பளை தேவை இல்லாமே அடி வாங்க வச்சிட்டானே. சரி தெரியாத மாதிரி இருந்துக்கரலாம்.
சேது: ஏண்ணே, ஒருமாதிரி இருக்கீங்க?
வைகை: சும்மா இருடா, ஒரே நொயிய் நொயிய்ன்னுகிட்டு.
வைகை: தலைலே துண்ட போட்டு மூடிக்கிரலாம். சுத்தி சுத்தி பாக்கறானே. நாம்ப இங்கே இருக்கிறது தெரிஞ்சிருக்குமோ? ம்கும் பாக்கரானோ? பாத்தா அப்படியும் தெரியலை. அப்பப்பா, அந்த பக்கம் சீனி, இந்த பக்கம் சேது போட்டு இடிச்சி தள்ளுறாங்க. சேது கொஞ்சம் தள்ளி உக்காருப்பா. அண்ணனுக்கு கால் ஒரு பக்கமா வலிக்குது.
சின்னக்கலைவாணர்: இந்தாடா பேப்பேர், சரி எனக்கு ஒரு டீ குடுங்கோ, டீக்கு காசு கொடுக்க எவனாவது இருக்கானா. ஒரு மூஞ்சியும் தெரிஞ்ச மாதிரி இல்லையே. சரி குடிச்சி முடிக்கறதுகுள்ளே மாட்ட மாட்டானுங்களா என்னா. ஆமா எதிரிலே யாரு தல மேலே துண்டு போட்டுக்கிட்டு. அட நம்ம வேலு. பாத்துட்டு பாக்காத மாதிரி நடிக்கிறானே. சரி ஒரு ஆளு கிடைச்சிட்டான். சீக்கிரம் டீ குடுங்கடா, அவன் போறதுக்குள்ளே மடக்கனும்.
சேது: ஏண்ணே தலையிலே துண்ட போட்டு மூடறீங்க?
வைகை: ம்ம் தலையிலே செரங்கு. அப்படியே விட்டா ஈ மொய்க்கும். அதான் மூடறேன். வாயை மூட்றா. நான் என்னா செஞ்சா உனக்கு என்னா போச்சு. வந்து எவ்வளவு நேரம் ஆகுது, டீ தர மாட்டேங்கிறானேன்னு தவிச்சு கிட்டு இருக்கேன். இதுலே கேள்வி கேட்டு அறுக்கறே.
சேது: ஏண்ணே கோவிச்சுக்கிரீங்க மேலுக்கு நல்லா இல்லையா? இந்த நேரத்துலே எங்கே போயிட்டு வரீங்க.
வைகை: ம்ம்ம் சந்தைக்கு (அன்பா கேக்கரான தெனாவெட்டா கேக்கரான. ஒருத்தனையும் எடை போட முடியலை) .
சேது: ஏதாவது யாவரமா அண்ணே?
வைகை: ஆமா பத்து கோழி, பத்து ஆடு வித்துட்டு வரேன் போதுமா. இல்லே இன்னும் ஏதாவது தெரியனுமா. வந்துட்டானுக.
சேது: அண்ணே ஆடு என்னா விலைக்கு வித்தீங்க? கோழி என்னா விலைக்கு வித்தீங்க?
சின்னக்கலைவாணர்: எனக்கு தெரிய கூடாதுன்னு தலையிலே துண்டு ம்ம்... நான் யாருடா. இரு உன் துண்டு இப்போ நான் வெக்கற வேட்டுல பறக்குது பாரு. என்னா பக்கத்திலே பரிவர்த்தனை பண்ணறான். கொஞ்சம் ஒட்டு கேட்டு வெப்போம். எதுக்கும் உதவும்.
வைகை: ம்ம்ம்... ஆடு ஒன்னு ரூவா 2500ன்னு பத்து ஆடும், கோழி ஒன்னு ரூவா 850ன்னு 10 கோழியும் வித்துட்டு துட்டை எடுத்துகிட்டு வந்திருக்கேன். அதுக்கு என்னா இப்போ?
சின்னக்கலைவாணர்: அட இவ்வளவு பணத்தோட இவனை வீட்டுக்கு அனுப்பலாமா? அது சரியாகுமா? ஆகவே ஆகாது. டீ கடைக்காரரே உன்னோட பாக்கியும் தரேன். ஸீ பாய்ஸ் லுக் அட் மீ, இன்னைக்கி உங்க எல்லாருக்கும் என்னோட treat. என்னா வேணாலும் வாங்கி சாப்பிடுங்க. எல்லாத்துக்கும் நானே பணம் பைசல் பண்ணிடறேன். சீக்கிரம் டீ குடு. கை நம நமங்குதே.
சேது:என்னாண்ணே! இவ்வளவு அசால்டா துட்டு வச்சிருக்கேன்னு சொல்லறீங்க. காலம் கெட்டு கெடக்குது. ஆமா துட்ட எங்கே வச்சிருக்கீங்க?
வைகை : நான் எங்கே வச்சிருந்தா உனக்கு என்னாடா? வயசுக்கு தகுந்த மாதிரி பேச்சு இருக்கணும் சரியா. என்னாதிது கை தன்னால பணம் இருக்குற இடத்துக்கு போகுது. அதெ இந்த பயபிள்ளே வேறே பாக்கறானே. ஒன்னும் இல்லேடா கொஞ்சம் அரிக்குது. அதான் சொரியறேன்.
சேது: நான் ஒன்னும் கேக்கலையே அண்ணே (மனசுக்குள்ளே - அண்ணே. பணம் அங்கே தான் வச்சிருக்கீங்களா?)
வைகை: ஏண்டா குறுகுறுன்னு பாக்கறே?
சேது: ஒன்னும் இல்லேண்ணே சும்மாதான் பாத்தேன்.
சின்னக்கலைவாணர்: ஹல்லோ வேலு, இங்கே பாரு நாந்தான் உன் நண்பன். என்னா பாத்தும் பாக்காத மாதிரி உக்காந்து இருக்கே?
வைகை: ஆஹா கண்டு பிடிச்சிட்டானே, இப்போ என்னா செய்யலாம்! ம்ம்ம்... இங்கனக்குள்லேயே திரும்பி உக்காரலாம்.
சின்னா அண்ட் கோ: ஒரு கூட்டம் சின்ன கலைவாணரை நோக்கி வேகமாக வருகிறது.
சின்னக்கலைவாணர்: வாங்க வாங்க டீ சாப்பிடவா வந்தீங்க? உங்களுக்கு உக்கார சீட் இல்லே ஆனா டீ இருக்கு. உங்களுக்கும் சேர்த்து நானே காசு கொடுக்கிறேன். சாப்பிடுங்க சாப்பிடுங்க.
சின்னா அண்ட் கோ: எங்களுக்கே டீ கொடுக்கிறியா? அல்வா தான் குடுக்கத் தெரியும்னு நினைச்சோம்.
சின்னக்கலைவாணர்: யார்ரா நீங்க? அது சரி இதெல்லாம் ஏன் என்கிட்டே பேசறீங்க. டீ குடிக்க வந்தா டீ குடிச்சிட்டு போகாம? என்னாங்கடா? கூட்டமா வந்தா நான் பயந்திடுவேனா? எண்ணி 10 Days தான் அப்புறம் நான் இருப்பது எங்கே தெரியுமா?
சின்னா அண்ட் கோ: எங்கேடா இருப்பே? காயலாங் கடையிலே தான் இருப்பே! அது தெரியுமா உனக்கு?
சின்னக்கலைவாணர்: டேய்! என்னாங்கடா, நானும் வந்ததிலே இருந்து பாக்கறேன். ஏதோ பேசிகிட்டே இருக்கீங்க? இன்னைக்கு தான் நான் இங்கே. அடுத்த வாரம் நான் அமெரிக்காலே இருப்பேன். போங்க போங்க யாருன்னு தெரியாமே விளையாட்டு வச்சிக்காதீங்க.
வைகை: அப்போ இன்னைக்கி நான் தப்பிச்சேனா? அவன் மாட்டிகிட்டானா? இனிமே துண்டு எதுக்கு. சேது தள்ளி உக்காரு. இப்போ தான் ஜமா களை கட்டுது. நீயும் வேடிக்கை பாரு. அவனை பொரட்டி எடுக்கப் போறாங்க.
சேது: யாருண்ணே அது?
வைகை: அவனை எனக்கு கொஞ்சமா தெரியும் அவ்வளவுதான். ஆனா ரொம்ப தெரியாது. இந்த பதில் இப்போ போதும் உனக்கு. பேசாமே வேடிக்கை பாரு.
சேது: அண்ணே தெரியும்னு சொல்லிட்டு ஏண்ணே சும்மா உக்காந்து இருக்கீங்க? போயி அந்த கூட்டத்தை என்னான்னு கேளுங்க. அவங்களை பாத்தா ரொம்ப பயந்து வருது.
வைகை: டேய் சும்மா இரு. என்னை யாரு கிட்டேயும் கோத்து விடாதே. இன்னைக்கு நான் ஒழுங்கா வீடு போயி சேரனும்.
சின்னக்கலைவாணர்: இதோ எதிரிலே உக்காந்து இருக்காரே அவரும் என் நண்பர் தான். அவரு பேரு வேலு. அவருகிட்டே என்னை பத்தி கேட்டு பாருங்கடா. எடுங்கடா என் தோள் மேலே இருந்து கையை. கன்ட்ரி ப்ரூட்ஸ்.
வைகை: ஆத்தி! விதி வில்லங்கமா இல்லே வேலை செய்யுது. ஏண்டா ஏண்டா என்னைய எல்லாரும் அப்படி பாக்குறீங்க. உங்களுக்கும் அவனுக்கும் என்னா பிரச்சனயோ அதை பேசி தீத்துக்குங்க. என்னைய அப்படி எல்லாம் பாக்காதீங்கடா.
சின்னா அண்ட் கோ: என்னடா நீ எங்க கிட்டே பணம் வாங்கினே. அமெரிக்கா போனவுடன் டாலர் அனுப்பறேன்னு சொன்னே. ஆனா உன்னைய பாத்தா அமிஞ்சிகரையே தாண்ட மாட்டே போல இருக்கு. பணமும் வரலை வட்டியும் வரலை. கண்டுக்கலாம்னு வந்தா, எவனையோ கை காட்டறே.
வைகை : கேளு! கேளு! நல்லா கேளு! ஏலே அங்கிட்டு திரும்பி நாக்கை பிடுங்கிக்கோ. கடன் வாங்கிகிட்டு என் நண்பன்னு சொல்லி கிட்டா திரியறே.
சின்னா அண்ட் கோ: அவனை பாத்தா ஆடு திருடின கள்ளனாட்டமா முழிக்கிறான். கூட்டமா அலையறீங்களா?
சேது: அண்ணே இவரு ஆடு திருடலை. ஆடு வித்துட்டு வந்திருக்காரு.
வைகை: டேய் இதை அவன் உங்கிட்டே கேட்டானா. ஏண்டா தேவை இல்லாம இதெல்லாம் சொல்லறே. ஆரம்பம் ஆயிடுச்சா. ம்ம்.. இன்னைக்கு அவ்வளவுதான்!!!!
சின்னா அண்ட் கோ: ஒ அப்படியா!! என்னா இதெல்லாம் ??
சின்னக்கலைவாணர்: இல்லே நான்தான் பத்து ஆடு குடுத்து சந்தையிலே வித்துட்டு வரச்சொன்னேன். கோழி கூட விக்க சொன்னேன். அந்த பணத்திலே தான் உங்களுக்கும் குடுத்திட்டு டீ கடைக்கு செட்டில் பண்ணிட்டு அமெரிக்கா போகணும். அவன் கொடுத்துடுவான் போயி அவன் கிட்டே வாங்கிக்கங்க.
வைகை: இவ்வளவு வெவரம் அவனுக்கு எப்படி தெரிஞ்சிது. ஆத்தி மாமா வெட்டி ஊறுகா போட்டிடுவாறே! தலைய வலிக்கிதுன்னு ஒதுங்கினேன். இங்கே ஒரு சனி ஒதுங்கும்னு தெரியாம போச்சே! எல்லாம் போச்சே! எல்லாமே போச்சே!!
சின்னா அண்ட் கோ: டேய் எட்றா பணத்தை
வைகை: ம்ம்... ஏன் மிரட்டறீங்க. என் கிட்டே பணம் இல்லே.
சேது: அண்ணே! பணத்தை அண்ணன் டவுசருகுள்ளே முடிஞ்சி வச்சிருக்காரு
வைகை: படு பாவி, ஏண்டா காட்டி குடுக்குரே
சேது: பாவம்ண்ணே உங்க நண்பர் குடுத்துடுங்கண்ணே!
வைகை: யாரு வீட்டு பணத்தை யாருகிட்டே கொடுக்க சொல்லறே?இதுக்குதான் வெவரம் கேட்டியா? வாடா, உன்னைய ஒரு நாள் வெச்சிக்கறேன்!
சின்னா அண்ட் கோ: பணத்தை எட்றா மொதல்லே.
சின்னக்கலைவாணர்: வேலு குடுத்திருடா, நான் கண்டிப்பா திருப்பி தந்துடறேண்டா.
வைகை: ஆத்தி இது எங்க அக்கா பணம். எங்க மாமா அவ்வளவுதான்!
சின்னா அண்ட் கோ: என்னங்கடா டிராமாவா போடறீங்க. பிடிடா அவனை. துட்டை எடுடா. ம்ம்ம்... என்னடா பணம் குறையுதே. தகிடு தத்தம் வேலை பண்ணறியா? நீ வாங்கின பணம் முழுவதும் இல்லே. ஆமா அன்னைக்கி என்னா திட்டினே?
சின்ன கலைவாணர்: என்னா திட்டினேன்! எப்போ திட்டினேன்! ஒண்ணுமே புரியலையே!
சின்னா அண்ட் கோ: நல்லா யோசி பனியன் போட்ட....
சின்னக்கலைவாணர்: பனியன் போட்ட சனியனுங்களான்னு சொன்னேன் அது வேறே ஆளுங்க இல்லே, அதுவும் நீங்களாடா???
சின்னா அண்ட் கோ: அதுக்கு இன்னொரு நாள் வந்து கவனிச்சிக்கறோம். மீதி எப்போ தாரே?
சின்னக்கலைவாணர்: வேலு மீதி எப்போ கொடுக்கலாம்?
வைகை: மீதியா! ஏண்டா பீதியை கிளப்பரே, உன் சகவாசமே எனக்கு வேண்டாம். நான் உன் நண்பனே இல்லே!