Tuesday, December 9, 2008

தொலைந்த காதலனின் கனவுகள்!!!

தீபத்து ஒளியிலே
தென்பட்ட உன்முகம்
கோடி மின்னல்களை கொண்டிருக்க
ஒளி தாங்காமல் திகைத்த நான்

வெளியே வந்து மதியை நோக்க
அங்கே மதி தன் ஒளி மங்கி நிற்க
மதியின் ஒளி மங்கைக்கு இடம் பெயர
அதனால் மதியின் குளிர்ச்சி குறைந்து
இயற்கை திகைத்து நிற்க

மங்கையின் மதி வதனத்தில் மயங்கிய நான்
அப்படியே அந்த அழகு சிலையை
சித்திரமாக வடிக்க
வடித்த சித்திரத்தில் மயங்கி நின்ற நான்
என்னிலை மறந்தேன்

நாட்கள் பல ஓடின
மாதங்கள் சில ஓடின
என்னை மறந்த நிலையை
நான் விலக்கி விட்டு

ஓடோடி வந்தேன் உன்னை காண
விதியின் கொடுமை என்னவென்பேன்
கால சக்கர சுழற்சியில்
என் கை நழுவி போனாய் நீ

மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
நீ சிரித்தால் தீபாவளி
நான் அழுதால் கண்வலி

உன் வழியில் நான் வந்து
முடிந்த என் ஒரு தலை காதலை
புதுப்பிக்க நியாயம் இல்லையே
மறக்க வேறு எதை நினைக்க
உன்னையே நினைக்க மனம் ஏங்குதே

மறக்க வருடங்கள் பல ஆகலாம்
தினம் தினம் வரும் உன் நினைவு
தரும் தொல்லைகளை
நான் என்ன செய்ய

உன்னை பார்த்த அந்த முதல் நாள்
மதி மயங்கிய அந்த ஒருநிமிடம்
மீண்டும் மீண்டும் வேண்டும்
என்கிறது என் மனம்

மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்

நான் உணர்ந்த இந்த உண்மையை
உறதி செய்தேன் ஒரு நாள்
தாடியை வளர்க்கவில்லை ஆனால்
நான் ஒரு கலியுக தேவதாஸ்

உன்னையே நினைத்து உருகி உருகி
காதலால் மனம் கசிந்து
என்னை மறந்து,
என் நினைவுகள் துறந்து...

அடுத்து ஒரு தீப ஒளிக்காக காத்திருக்கிறேன் ......

மொக்கையானாலும் ஒட்டு போடுங்க

52 comments :

RAMYA said...

வாங்க வாங்க, முதல்லே வந்தவங்களுக்கு முதல் வணக்கமுங்கோ

நசரேயன் said...

/*மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்*/


தண்ணி எல்லாம் நல்லா அடிப்பீங்க போல.

RAMYA said...

//
/*மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்*/


தண்ணி எல்லாம் நல்லா அடிப்பீங்க போல.

//

எல்லாம் நீங்க கத்து கொடுத்துதானுங்கோ

குடுகுடுப்பை said...

தாடி வெக்காத தேவதாஸ், உனக்கு கவிதை கூட எழுதத்தெரியுமா

RAMYA said...

//
தாடி வெக்காத தேவதாஸ், உனக்கு கவிதை கூட எழுதத்தெரியுமா

//


எழுத தெரியுமே, இது சும்மா ஒரு சாம்பிள்
எப்படி பயமுருத்தறேன்னு பார்த்தீங்கள

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் ஏழாவது !!!!!!!!!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆமாம், இது கவிதையா இல்ல கவுஜையா ?? விளக்கம் தேவை

http://urupudaathathu.blogspot.com/ said...

விளக்கம் இருந்தால் தான் எங்களால் ( என்னால் ) கும்மி அடிக்க முடியும்

http://urupudaathathu.blogspot.com/ said...

பெக் ??? என்னாது இது ??
சொல்லவே இல்ல??

http://urupudaathathu.blogspot.com/ said...

///மொக்கையானாலும் ஒட்டு போடுங்க///











மொக்கையா இருப்பதால் தான் ஒட்டு போடுகிறேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

//அடுத்து ஒரு தீப ஒளிக்காக காத்திருக்கிறேன் .....///

அப்படியா??
என்ன விஷயம் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போதைக்கு போறேன்.. அப்புறமா வாரேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

திரும்பவும் வந்துடோம்ல??

http://urupudaathathu.blogspot.com/ said...

வந்த சும்மா இருக்க முடியுமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி சரி விடுங்க கோப படாதீங்க!!!!!!!
நாளைக்கு வரேன்

RAMYA said...

//
நான் தான் ஏழாவது !!!!!!!!!!!
//


சமத்து...........

RAMYA said...

//
ஆமாம், இது கவிதையா இல்ல கவுஜையா ?? விளக்கம் தேவை
//

என் பார்வையில் இது கவுஜை, உங்கள் பார்வையில் இது கவிதை
இந்த விளக்கம் போதுமா இன்னும்கொஞ்சம் வேணுமா

RAMYA said...

// உருப்புடாதது_அணிமா said...
விளக்கம் இருந்தால் தான் எங்களால் ( என்னால் ) கும்மி அடிக்க முடியும்
//

விளக்கம் கூறிவிட்டேன். தொடரவும் கும்மியை

RAMYA said...

//
தாடி வெக்காத தேவதாஸ், உனக்கு கவிதை கூட எழுதத்தெரியுமா
//

எதோ நீங்கள் இருக்கிற தைரியம்,
அடிக்க வந்தால் காப்பத்த மாட்டேங்களா என்னா

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
பெக் ??? என்னாது இது ??
சொல்லவே இல்ல??

//

அய்யோ அது நான் இல்லே, ஏமாந்த காதலன் அடிச்சது
இப்படி எல்லாம் தப்பு தப்பா முடிவு பண்ணக்கூடாது...........

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///மொக்கையானாலும் ஒட்டு போடுங்க///

மொக்கையா இருப்பதால் தான் ஒட்டு போடுகிறேன்
//

நீங்கள் வருங்காலா முதல்வர் மட்டும்மில்லை
எங்களுக்கு எல்லாம் ஒரு நீங்கள் ஒரு விடிவெள்ளி

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//அடுத்து ஒரு தீப ஒளிக்காக காத்திருக்கிறேன் .....///

அப்படியா??
என்ன விஷயம் ??
//

ஏதாவது சிக்காதா என்று ஒரு சிறு ஏக்கம் தான்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இப்போதைக்கு போறேன்.. அப்புறமா வாரேன்
//

மீண்டும் வருக, வந்ததிருக்கு வாழ்த்துக்கள்
உங்கள் வருகை எங்களைபோல் உள்ளவர்களுக்கு நல்வரவு ஆகுக

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
திரும்பவும் வந்துடோம்ல??

//

நாங்களும் வந்ததிருக்கு நன்றி சொல்லிட்டோமில்லே
வாங்க வங்கா
வந்து நிறைய பிண்ணுட்டம் போட்டுட்டு போங்க

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
வந்த சும்மா இருக்க முடியுமா??
//

கும்மி அடிக்க்கத்தான் ஆளை காணோம்ன்னு தேடி கொண்டிருந்தோம் இல்லே

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
சரி சரி விடுங்க கோப படாதீங்க!!!!!!!
நாளைக்கு வரேன்
//

நாளை எப்போ வெள்ளிகிழமைக்கு அடுத்த நாளா ?
சொல்லவே இல்லை

நட்புடன் ஜமால் said...

\\மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
நீ சிரித்தால் தீபாவளி
நான் அழுதால் கண்வலி \\

நல்ல ஹாஸ்யம் உங்களுக்கு

அத்திரி said...

//மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன் //


ஆண்களுக்கு காதல் தோல்வி என்றால் தண்ணிதானா???

அப்போ உங்களுக்கு?

தமிழ் அமுதன் said...

////RAMYA said...

//
/*மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்*/


தண்ணி எல்லாம் நல்லா அடிப்பீங்க போல.

//

எல்லாம் நீங்க கத்து கொடுத்துதானுங்கோ///

''சைடு டிஷ்'' என்னங்க ஊறுகாயா? முட்டை பொடிமாசா?
இல்ல வாழை பழமா? இது சம்பந்தமா எதாவது
டிப்ஸ்,அல்லது வேற ஏதாவது உதவி வேணும்னா?
என் கிட்ட தயங்காம கேளுங்க!

உதவ நான் ரெடி!

நட்புடன் ஜமால் said...

\\உன்னை பார்த்த அந்த முதல் நாள்
மதி மயங்கிய அந்த ஒருநிமிடம்
மீண்டும் மீண்டும் வேண்டும்
என்கிறது என் மனம் \\

அருமை

RAMYA said...

//
//மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன் //


ஆண்களுக்கு காதல் தோல்வி என்றால் தண்ணிதானா???

அப்போ உங்களுக்கு?

//



எங்களுக்க இன்னும் மருந்து ஒன்றும்
கண்டுபிடிக்கலயாம்,
கண்டுபிடிக்கலயாம் சொல்லி
மறியல் பண்ணலாம்னு இருக்கோம்

கார்க்கிபவா said...

ஆஜர்..ஆஜர்..ஆஜர்

புதியவன் said...

கவித அருவியா கொட்டுது...

//வெளியே வந்து மதியை நோக்க
அங்கே மதி தன் ஒளி மங்கி நிற்க
மதியின் ஒளி மங்கைக்கு இடம் பெயர
அதனால் மதியின் குளிர்ச்சி குறைந்து
இயற்கை திகைத்து நிற்க

மங்கையின் மதி வதனத்தில் மயங்கிய நான்
அப்படியே அந்த அழகு சிலையை
சித்திரமாக வடிக்க
வடித்த சித்திரத்தில் மயங்கி நின்ற நான்
என்னிலை மறந்தேன் //

அழகான வரிகள்...

//மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன் //

கவிதையிலும் காமெடியா...?
வாழ்த்துக்கள்...கவிதாயினி ரம்யா...

RAMYA said...

//
ஜீவன் said...
////RAMYA said...

//
/*மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்*/


தண்ணி எல்லாம் நல்லா அடிப்பீங்க போல.

//

எல்லாம் நீங்க கத்து கொடுத்துதானுங்கோ///

''சைடு டிஷ்'' என்னங்க ஊறுகாயா? முட்டை பொடிமாசா?
இல்ல வாழை பழமா? இது சம்பந்தமா எதாவது
டிப்ஸ்,அல்லது வேற ஏதாவது உதவி வேணும்னா?
என் கிட்ட தயங்காம கேளுங்க!

உதவ நான் ரெடி!
//

தெல்லாம் வேணாம்
உறுக்காய் மட்டும் போதுமே....

ஹிஹிஹிஹிஹி

RAMYA said...

//
ஜீவன் said...
////RAMYA said...

//
/*மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்*/


தண்ணி எல்லாம் நல்லா அடிப்பீங்க போல.

//

எல்லாம் நீங்க கத்து கொடுத்துதானுங்கோ///

''சைடு டிஷ்'' என்னங்க ஊறுகாயா? முட்டை பொடிமாசா?
இல்ல வாழை பழமா? இது சம்பந்தமா எதாவது
டிப்ஸ்,அல்லது வேற ஏதாவது உதவி வேணும்னா?
என் கிட்ட தயங்காம கேளுங்க!

உதவ நான் ரெடி!
//

தெல்லாம் வேணாம்
உறுக்காய் மட்டும் போதுமே....

ஹிஹிஹிஹிஹி

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\உன்னை பார்த்த அந்த முதல் நாள்
மதி மயங்கிய அந்த ஒருநிமிடம்
மீண்டும் மீண்டும் வேண்டும்
என்கிறது என் மனம் \\

அருமை

//

நன்றி ஜமால், உங்களுக்கு அந்த வரிகள் பிடிக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்

DHANS said...

kaalam ellavatraiyum kadathividum,

aduttha oliyai kaana valtthukkal

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மலர்ந்து சிரிக்கின்றாய்
நீ சிரித்தால் தீபாவளி
நான் அழுதால் கண்வலி \\

நல்ல ஹாஸ்யம் உங்களுக்கு
//

நன்றி ஜமால்,

RAMYA said...

//
கார்க்கி said...
ஆஜர்..ஆஜர்..ஆஜர்

/

வாங்க வாங்க கார்க்கி
உங்கள் வரவு நல் வரவு ஆகுக

RAMYA said...

//
புதியவன் said...
கவித அருவியா கொட்டுது...

//வெளியே வந்து மதியை நோக்க
அங்கே மதி தன் ஒளி மங்கி நிற்க
மதியின் ஒளி மங்கைக்கு இடம் பெயர
அதனால் மதியின் குளிர்ச்சி குறைந்து
இயற்கை திகைத்து நிற்க

மங்கையின் மதி வதனத்தில் மயங்கிய நான்
அப்படியே அந்த அழகு சிலையை
சித்திரமாக வடிக்க
வடித்த சித்திரத்தில் மயங்கி நின்ற நான்
என்னிலை மறந்தேன் //

அழகான வரிகள்...

//மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன் //

கவிதையிலும் காமெடியா...?
வாழ்த்துக்கள்...கவிதாயினி ரம்யா...
//


வாங்க வாங்க புதியவன், நன்றி, உங்கள் வரவு நல் வரவு ஆகுக

RAMYA said...

// DHANS said...
kaalam ellavatraiyum kadathividum,

aduttha oliyai kaana valtthukkal

//
வாங்க வாங்க DHANS,
முதல் தடவையா என் பதிவிற்கு வந்திருக்கீங்க
வந்ததிற்கு நன்றி,
உங்கள் வரவு நல் வரவு ஆகுக

ஆதவன் said...

thanks for your support.

thamizhstudio.com

RAMYA said...

//
Chuttiarun said...
thanks for your support.

thamizhstudio.com
//

Thanks

அமிர்தவர்ஷினி அம்மா said...

இங்க யாரோ ரம்யான்னு ஒரு மொக்கையம்மா இருந்தாங்க, அவங்கள காணோமே.

தீபத்து ஒளியிலே
தென்பட்ட உன்முகம்
கோடி மின்னல்களை கொண்டிருக்க
ஒளி தாங்காமல் திகைத்த நான்

வெளியே வந்து மதியை நோக்க
அங்கே மதி தன் ஒளி மங்கி நிற்க
மதியின் ஒளி மங்கைக்கு இடம் பெயர
அதனால் மதியின் குளிர்ச்சி குறைந்து
இயற்கை திகைத்து நிற்க//
ஹைய்யோ கவிதாயினி வந்துட்டாங்கப்பா

அடுத்து ஒரு தீப ஒளிக்காக காத்திருக்கிறேன் ......//
பொண்ணு பேரு தீபாவா...

மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்//
என்னது எம்.சியா, நெப்ஸா
ப்ராண்ட் சொல்லியிருக்கலாம்ல.

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
இங்க யாரோ ரம்யான்னு ஒரு மொக்கையம்மா இருந்தாங்க, அவங்கள காணோமே.

தீபத்து ஒளியிலே
தென்பட்ட உன்முகம்
கோடி மின்னல்களை கொண்டிருக்க
ஒளி தாங்காமல் திகைத்த நான்

வெளியே வந்து மதியை நோக்க
அங்கே மதி தன் ஒளி மங்கி நிற்க
மதியின் ஒளி மங்கைக்கு இடம் பெயர
அதனால் மதியின் குளிர்ச்சி குறைந்து
இயற்கை திகைத்து நிற்க//

//
ஹைய்யோ கவிதாயினி வந்துட்டாங்கப்பா//


நாங்க வந்துட்டோமில்லே, நீங்களும் வந்துட்டீங்கள்ளே

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said
அடுத்து ஒரு தீப ஒளிக்காக காத்திருக்கிறேன் ......//

//பொண்ணு பேரு தீபாவா...//


நீங்க ரொம்ப அறிவு கொளுந்துங்க,
பேரு எல்லாம் கண்டுபிடிச்சிட்டேங்க?
அந்த தீபாவை தெரியுமா?

RAMYA said...

//அமிர்தவர்ஷினி அம்மா said
மறக்க எனக்கு வேண்டும் ஒரு பெக்
அடித்த பெக் ஆவியாகி போக
நினைவில் நின்ற உன்னை
எப்படியடி மறப்பேன்//

என்னது எம்.சியா, நெப்ஸா
ப்ராண்ட் சொல்லியிருக்கலாம்ல
//

பிராண்ட் எல்லாம் எனக்கு தெரியாது
தெரிஞ்சா கொஞ்சம் சொல்லி கொடுங்க
ஆனா சொல்லறது யாருக்கும் தெரியக்கூடாது

கார்க்கிபவா said...

::))))))))))))))))

கார்க்கிபவா said...

எப்படி வந்து 50 அடிச்சேன் பாருங்க..

RAMYA said...

//
கார்க்கி said...
எப்படி வந்து 50 அடிச்சேன் பாருங்க
//

நீங்க கில்லின்னு எனக்கு தெரியும் இல்லே

தமிழ் said...

அருமை

C.NATARAJ said...

நான் ரசித்த கவிதைகள் AT

http://nataraj-kadhalkavithaigal.blogspot.com/