Thursday, January 22, 2009

வைகைப்புயலும் / சின்னக்கலைவாணரும்

வைகை: அப்பாடா ஒருவழியா சந்தைக்கு போயிட்டு வந்தாச்சு. இன்னைக்கு தான் மாமா சொன்ன வேலையை சரியா செஞ்சிருக்கோம். இன்னைக்கு மாமாவும் திட்டாது, அக்காவும் திட்டாது. நிறைய நேரம் இருக்குதே. வீட்டுக்கு இவ்வளவு சீக்கிரமாவா போறது? கையிலே வேறே நிறைய பணம் இருக்கு. சரி போய்டலாம். எதுக்கு வம்பு. ஆனா சந்தையிலே அலைஞ்சதுலே தலைய வேறெ வலிக்குதே. ம்ம்ம் ஆ அதோ ஒரு டீ கடை இருக்கே. அங்கே போயி ஒரு சிங்கிள் டீ அடிச்சாதான் தலை வலி போகும். என்னா, இந்த கடையிலே ஒரே கூட்டமா இருக்கு! சரி, வெறும் டீ மட்டும்தானே! பெஞ்சியிலே ஒக்காரா எடம் கெடைக்குமா? முயற்சி பண்ணலாம். டேய், கொஞ்சம் தள்ளி உக்காரு.

சீனி: என்னா டேயா? உடம்பு எப்படி இருக்கு? பேரு தெரியாது. அத வச்சு கூப்பிடு.

வைகை: இதென்னடா! வந்த இடத்திலே தலை வலி போயி திருகு வலி வந்திடும் போல இருக்கே! வேலு, கொஞ்சம் அடக்கி வாசி. சரிடா சீனி, கொஞ்சம் தள்ளி உக்காரு. அண்ணனுக்கு உடம்பு சரி இல்லை.

சீனி: என்னாது மறுபடியும் 'டாவா'? மரியாதையா பேசு. இல்லேன்னா கை கால் இடம் மாறிடும்.

வைகை: ஆத்தி கை காலை எடம் மாத்திடுவியா? எப்பிடி நடப்பேன், எப்படி டீ குடிப்பேன்? அது சரி, இவனுக மாதிரி ஆளுங்க கிட்டே தைரியமா பேசணும். நீ என்னாடா கசாப்பு கடையிலையா வேலை செய்யறே? என்னைய பாத்தா வேறெ மாதிரி தெரியுதா? ஏண்டா? எல்லாரும் தப்பு தப்பா பேசறீங்க?

சீனி: உக்காந்து தொலை .

வைகை: கொஞ்சம் இடம் கிடைச்சிடுச்சு. எவனுக கிட்டேயும் சிக்காம சீரளியாமே இன்னக்கு நேரத்தை ஓட்டனும்.

சின்னக்கலைவாணர்: என்னா எல்லாரும் இங்கே வந்து டேரா போட்டு இருக்கீங்க. எது மேலேயோ எதுவோ மொய்க்கிற மாதிரி. ஒரு அடுப்பு, அது மேலே ஒரு பாத்திரம், இரெண்டு பேப்பர், இரெண்டு பெஞ்சி இது இருந்தா போதும், வந்து உக்காந்திருவீங்களே!வாசு, உனக்கும் வேலை வெட்டி எதுவும் கிடையாதா? இங்கே என்னா பண்ணறே?என்னா குடிக்கிறே?

வாசு: ம்ம் கண்ணு தெரியலை ராவாவா அடிக்கறேன்? டீ தானே குடிக்கிறேன். வந்தோமா வேலையை பாத்தோமான்னு இருக்கணும். வெட்டி வம்பு இழுக்கக் கூடாது.

சின்னக்கலைவாணர்: வாசு, நீ ரொம்ப பேசிட்டே. படிப்பு வருதோ இல்லையோ பேச்சு நல்லா வருது. தள்ளி உக்காரு. என்னாது கையிலே. தினத்தந்தி பேப்பரா?

வாசு: இல்லே தினமலர். என்னோடது இல்லே, அந்த அண்ணா கொடுத்தாரு.

சின்னக்கலைவாணர்: சரி சரி அடங்கு யாருதா இருந்தா என்னா. கொஞ்சம் இப்படி குடு. ஆ ஐயோ!! என்னடா இது? தாம்பரத்திலே தாலி / செயின் இரண்டையும் அறுத்துட்டாங்களா? குரோம்பேட்டைலே கத்தி குத்தா? பல்லாவரத்திலே முகம் தெரியாத பாடி கிடக்குதா? மொதல்ல ரெண்டும் சரி எப்படியாவது கண்டு பிடிச்சிடுவாங்க. பல்லாவரம் கேசு எப்படி? முகம் அடையாளம் தெரியாமே பாவம் நம்ப போலிசு. அடுத்து என்னா, என்னாது பெரம்பூரில் பிரபல ரவுடி Encounter இல் சுட்டு கொல்லப்பட்டான். இது சரியான தீர்ப்பு.

வாசு: என்னா ஒரே அதிர்ச்சி அடையற மாதிரி நடிக்கரே, படிச்சது போதும்! பேப்பரை குடு. மத்தவங்க படிக்கவேணாம்?

சின்னக்கலைவாணர்: என்னாடா எல்லாருமே ஓசி பேப்பர் படிக்கத்தானே டீ கடைக்கு வரானுங்க. நானும் அதுக்குதான் வந்திருக்கேன். கொஞ்சம் பொறு. படிச்சிட்டு தரேன்.

வாசு: வேணாம் எனக்கு ரொம்ப கோவம் வரும். அழிச்சாட்டியம் பண்ணாதே. இதோ அங்கே இருக்காரே அவருதான் மொதல்லே இந்த பேப்பரை கையிலே எடுத்தாரு. அதுக்குள்ளே ஒவ்வொருத்தரா படிச்சிகிட்டே போறாங்க. அவருக்கு கொடுக்கத்தான் நான் கையிலே வச்சிருந்தேன். கொடு, அவரு கிட்டே குடுத்திடலாம்.

சின்னக்கலைவாணர்: என்னாடா மறுபடியும் சொல்லறேன் இது ஓசி பேப்பர் யாரு வேணாலும் படிக்கலாம். கொஞ்சம் இரு. முக்கியமான செய்தி.

வாசு: அண்ணே இவரு பேப்பர் தர மாட்டேங்கிறாரு.

சின்னக்கலைவாணர்: என்னாடா மெட்ராஸ் சிட்டிலே அட்ராசிட்டி பன்னரவங்களை படிக்கலாம்னு வந்தா நீ ரொம்ப டார்ச்சர் பண்ணறியே?

வைகை: என்னா எதிர்லே இருக்குற பெஞ்சிலே ஒரே சத்தமா இருக்கு. யாரு அது பேசிகிட்டே இருக்காங்க. ம்ம்ம்ம்.... யாரு அவன் எதிரிலே உக்காந்து இருக்கிறவன், ம்ம் ஐயோ ஆத்தி இவனா? அன்னைக்கே நம்பளை தேவை இல்லாமே அடி வாங்க வச்சிட்டானே. சரி தெரியாத மாதிரி இருந்துக்கரலாம்.

சேது: ஏண்ணே, ஒருமாதிரி இருக்கீங்க?

வைகை: சும்மா இருடா, ஒரே நொயிய் நொயிய்ன்னுகிட்டு.

வைகை: தலைலே துண்ட போட்டு மூடிக்கிரலாம். சுத்தி சுத்தி பாக்கறானே. நாம்ப இங்கே இருக்கிறது தெரிஞ்சிருக்குமோ? ம்கும் பாக்கரானோ? பாத்தா அப்படியும் தெரியலை. அப்பப்பா, அந்த பக்கம் சீனி, இந்த பக்கம் சேது போட்டு இடிச்சி தள்ளுறாங்க. சேது கொஞ்சம் தள்ளி உக்காருப்பா. அண்ணனுக்கு கால் ஒரு பக்கமா வலிக்குது.

சின்னக்கலைவாணர்: இந்தாடா பேப்பேர், சரி எனக்கு ஒரு டீ குடுங்கோ, டீக்கு காசு கொடுக்க எவனாவது இருக்கானா. ஒரு மூஞ்சியும் தெரிஞ்ச மாதிரி இல்லையே. சரி குடிச்சி முடிக்கறதுகுள்ளே மாட்ட மாட்டானுங்களா என்னா. ஆமா எதிரிலே யாரு தல மேலே துண்டு போட்டுக்கிட்டு. அட நம்ம வேலு. பாத்துட்டு பாக்காத மாதிரி நடிக்கிறானே. சரி ஒரு ஆளு கிடைச்சிட்டான். சீக்கிரம் டீ குடுங்கடா, அவன் போறதுக்குள்ளே மடக்கனும்.

சேது: ஏண்ணே தலையிலே துண்ட போட்டு மூடறீங்க?

வைகை: ம்ம் தலையிலே செரங்கு. அப்படியே விட்டா ஈ மொய்க்கும். அதான் மூடறேன். வாயை மூட்றா. நான் என்னா செஞ்சா உனக்கு என்னா போச்சு. வந்து எவ்வளவு நேரம் ஆகுது, டீ தர மாட்டேங்கிறானேன்னு தவிச்சு கிட்டு இருக்கேன். இதுலே கேள்வி கேட்டு அறுக்கறே.

சேது: ஏண்ணே கோவிச்சுக்கிரீங்க மேலுக்கு நல்லா இல்லையா? இந்த நேரத்துலே எங்கே போயிட்டு வரீங்க.

வைகை: ம்ம்ம் சந்தைக்கு (அன்பா கேக்கரான தெனாவெட்டா கேக்கரான. ஒருத்தனையும் எடை போட முடியலை) .

சேது: ஏதாவது யாவரமா அண்ணே?

வைகை: ஆமா பத்து கோழி, பத்து ஆடு வித்துட்டு வரேன் போதுமா. இல்லே இன்னும் ஏதாவது தெரியனுமா. வந்துட்டானுக.

சேது:
அண்ணே ஆடு என்னா விலைக்கு வித்தீங்க? கோழி என்னா விலைக்கு வித்தீங்க?

சின்னக்கலைவாணர்: எனக்கு தெரிய கூடாதுன்னு தலையிலே துண்டு ம்ம்... நான் யாருடா. இரு உன் துண்டு இப்போ நான் வெக்கற வேட்டுல பறக்குது பாரு. என்னா பக்கத்திலே பரிவர்த்தனை பண்ணறான். கொஞ்சம் ஒட்டு கேட்டு வெப்போம். எதுக்கும் உதவும்.

வைகை: ம்ம்ம்... ஆடு ஒன்னு ரூவா 2500ன்னு பத்து ஆடும், கோழி ஒன்னு ரூவா 850ன்னு 10 கோழியும் வித்துட்டு துட்டை எடுத்துகிட்டு வந்திருக்கேன். அதுக்கு என்னா இப்போ?

சின்னக்கலைவாணர்: அட இவ்வளவு பணத்தோட இவனை வீட்டுக்கு அனுப்பலாமா? அது சரியாகுமா? ஆகவே ஆகாது. டீ கடைக்காரரே உன்னோட பாக்கியும் தரேன். ஸீ பாய்ஸ் லுக் அட் மீ, இன்னைக்கி உங்க எல்லாருக்கும் என்னோட treat. என்னா வேணாலும் வாங்கி சாப்பிடுங்க. எல்லாத்துக்கும் நானே பணம் பைசல் பண்ணிடறேன். சீக்கிரம் டீ குடு. கை நம நமங்குதே.

சேது:என்னாண்ணே! இவ்வளவு அசால்டா துட்டு வச்சிருக்கேன்னு சொல்லறீங்க. காலம் கெட்டு கெடக்குது. ஆமா துட்ட எங்கே வச்சிருக்கீங்க?

வைகை : நான் எங்கே வச்சிருந்தா உனக்கு என்னாடா? வயசுக்கு தகுந்த மாதிரி பேச்சு இருக்கணும் சரியா. என்னாதிது கை தன்னால பணம் இருக்குற இடத்துக்கு போகுது. அதெ இந்த பயபிள்ளே வேறே பாக்கறானே. ஒன்னும் இல்லேடா கொஞ்சம் அரிக்குது. அதான் சொரியறேன்.

சேது: நான் ஒன்னும் கேக்கலையே அண்ணே (மனசுக்குள்ளே - அண்ணே. பணம் அங்கே தான் வச்சிருக்கீங்களா?)

வைகை: ஏண்டா குறுகுறுன்னு பாக்கறே?

சேது: ஒன்னும் இல்லேண்ணே சும்மாதான் பாத்தேன்.

சின்னக்கலைவாணர்: ஹல்லோ வேலு, இங்கே பாரு நாந்தான் உன் நண்பன். என்னா பாத்தும் பாக்காத மாதிரி உக்காந்து இருக்கே?

வைகை: ஆஹா கண்டு பிடிச்சிட்டானே, இப்போ என்னா செய்யலாம்! ம்ம்ம்... இங்கனக்குள்லேயே திரும்பி உக்காரலாம்.

சின்னா அண்ட் கோ: ஒரு கூட்டம் சின்ன கலைவாணரை நோக்கி வேகமாக வருகிறது.

சின்னக்கலைவாணர்: வாங்க வாங்க டீ சாப்பிடவா வந்தீங்க? உங்களுக்கு உக்கார சீட் இல்லே ஆனா டீ இருக்கு. உங்களுக்கும் சேர்த்து நானே காசு கொடுக்கிறேன். சாப்பிடுங்க சாப்பிடுங்க.

சின்னா அண்ட் கோ: எங்களுக்கே டீ கொடுக்கிறியா? அல்வா தான் குடுக்கத் தெரியும்னு நினைச்சோம்.

சின்னக்கலைவாணர்: யார்ரா நீங்க? அது சரி இதெல்லாம் ஏன் என்கிட்டே பேசறீங்க. டீ குடிக்க வந்தா டீ குடிச்சிட்டு போகாம? என்னாங்கடா? கூட்டமா வந்தா நான் பயந்திடுவேனா? எண்ணி 10 Days தான் அப்புறம் நான் இருப்பது எங்கே தெரியுமா?

சின்னா அண்ட் கோ: எங்கேடா இருப்பே? காயலாங் கடையிலே தான் இருப்பே! அது தெரியுமா உனக்கு?

சின்னக்கலைவாணர்: டேய்! என்னாங்கடா, நானும் வந்ததிலே இருந்து பாக்கறேன். ஏதோ பேசிகிட்டே இருக்கீங்க? இன்னைக்கு தான் நான் இங்கே. அடுத்த வாரம் நான் அமெரிக்காலே இருப்பேன். போங்க போங்க யாருன்னு தெரியாமே விளையாட்டு வச்சிக்காதீங்க.

வைகை: அப்போ இன்னைக்கி நான் தப்பிச்சேனா? அவன் மாட்டிகிட்டானா? இனிமே துண்டு எதுக்கு. சேது தள்ளி உக்காரு. இப்போ தான் ஜமா களை கட்டுது. நீயும் வேடிக்கை பாரு. அவனை பொரட்டி எடுக்கப் போறாங்க.

சேது: யாருண்ணே அது?

வைகை: அவனை எனக்கு கொஞ்சமா தெரியும் அவ்வளவுதான். ஆனா ரொம்ப தெரியாது. இந்த பதில் இப்போ போதும் உனக்கு. பேசாமே வேடிக்கை பாரு.

சேது: அண்ணே தெரியும்னு சொல்லிட்டு ஏண்ணே சும்மா உக்காந்து இருக்கீங்க? போயி அந்த கூட்டத்தை என்னான்னு கேளுங்க. அவங்களை பாத்தா ரொம்ப பயந்து வருது.

வைகை: டேய் சும்மா இரு. என்னை யாரு கிட்டேயும் கோத்து விடாதே. இன்னைக்கு நான் ஒழுங்கா வீடு போயி சேரனும்.

சின்னக்கலைவாணர்: இதோ எதிரிலே உக்காந்து இருக்காரே அவரும் என் நண்பர் தான். அவரு பேரு வேலு. அவருகிட்டே என்னை பத்தி கேட்டு பாருங்கடா. எடுங்கடா என் தோள் மேலே இருந்து கையை. கன்ட்ரி ப்ரூட்ஸ்.

வைகை: ஆத்தி! விதி வில்லங்கமா இல்லே வேலை செய்யுது. ஏண்டா ஏண்டா என்னைய எல்லாரும் அப்படி பாக்குறீங்க. உங்களுக்கும் அவனுக்கும் என்னா பிரச்சனயோ அதை பேசி தீத்துக்குங்க. என்னைய அப்படி எல்லாம் பாக்காதீங்கடா.

சின்னா அண்ட் கோ: என்னடா நீ எங்க கிட்டே பணம் வாங்கினே. அமெரிக்கா போனவுடன் டாலர் அனுப்பறேன்னு சொன்னே. ஆனா உன்னைய பாத்தா அமிஞ்சிகரையே தாண்ட மாட்டே போல இருக்கு. பணமும் வரலை வட்டியும் வரலை. கண்டுக்கலாம்னு வந்தா, எவனையோ கை காட்டறே.

வைகை : கேளு! கேளு! நல்லா கேளு! ஏலே அங்கிட்டு திரும்பி நாக்கை பிடுங்கிக்கோ. கடன் வாங்கிகிட்டு என் நண்பன்னு சொல்லி கிட்டா திரியறே.

சின்னா அண்ட் கோ: அவனை பாத்தா ஆடு திருடின கள்ளனாட்டமா முழிக்கிறான். கூட்டமா அலையறீங்களா?

சேது: அண்ணே இவரு ஆடு திருடலை. ஆடு வித்துட்டு வந்திருக்காரு.

வைகை: டேய் இதை அவன் உங்கிட்டே கேட்டானா. ஏண்டா தேவை இல்லாம இதெல்லாம் சொல்லறே. ஆரம்பம் ஆயிடுச்சா. ம்ம்.. இன்னைக்கு அவ்வளவுதான்!!!!

சின்னா அண்ட் கோ: ஒ அப்படியா!! என்னா இதெல்லாம் ??

சின்னக்கலைவாணர்: இல்லே நான்தான் பத்து ஆடு குடுத்து சந்தையிலே வித்துட்டு வரச்சொன்னேன். கோழி கூட விக்க சொன்னேன். அந்த பணத்திலே தான் உங்களுக்கும் குடுத்திட்டு டீ கடைக்கு செட்டில் பண்ணிட்டு அமெரிக்கா போகணும். அவன் கொடுத்துடுவான் போயி அவன் கிட்டே வாங்கிக்கங்க.

வைகை: இவ்வளவு வெவரம் அவனுக்கு எப்படி தெரிஞ்சிது. ஆத்தி மாமா வெட்டி ஊறுகா போட்டிடுவாறே! தலைய வலிக்கிதுன்னு ஒதுங்கினேன். இங்கே ஒரு சனி ஒதுங்கும்னு தெரியாம போச்சே! எல்லாம் போச்சே! எல்லாமே போச்சே!!

சின்னா அண்ட் கோ: டேய் எட்றா பணத்தை

வைகை: ம்ம்... ஏன் மிரட்டறீங்க. என் கிட்டே பணம் இல்லே.

சேது: அண்ணே! பணத்தை அண்ணன் டவுசருகுள்ளே முடிஞ்சி வச்சிருக்காரு

வைகை: படு பாவி, ஏண்டா காட்டி குடுக்குரே

சேது: பாவம்ண்ணே உங்க நண்பர் குடுத்துடுங்கண்ணே!

வைகை: யாரு வீட்டு பணத்தை யாருகிட்டே கொடுக்க சொல்லறே?இதுக்குதான் வெவரம் கேட்டியா? வாடா, உன்னைய ஒரு நாள் வெச்சிக்கறேன்!

சின்னா அண்ட் கோ: பணத்தை எட்றா மொதல்லே.

சின்னக்கலைவாணர்: வேலு குடுத்திருடா, நான் கண்டிப்பா திருப்பி தந்துடறேண்டா.

வைகை: ஆத்தி இது எங்க அக்கா பணம். எங்க மாமா அவ்வளவுதான்!

சின்னா அண்ட் கோ: என்னங்கடா டிராமாவா போடறீங்க. பிடிடா அவனை. துட்டை எடுடா. ம்ம்ம்... என்னடா பணம் குறையுதே. தகிடு தத்தம் வேலை பண்ணறியா? நீ வாங்கின பணம் முழுவதும் இல்லே. ஆமா அன்னைக்கி என்னா திட்டினே?

சின்ன கலைவாணர்: என்னா திட்டினேன்! எப்போ திட்டினேன்! ஒண்ணுமே புரியலையே!

சின்னா அண்ட் கோ: நல்லா யோசி பனியன் போட்ட....

சின்னக்கலைவாணர்: பனியன் போட்ட சனியனுங்களான்னு சொன்னேன் அது வேறே ஆளுங்க இல்லே, அதுவும் நீங்களாடா???

சின்னா அண்ட் கோ: அதுக்கு இன்னொரு நாள் வந்து கவனிச்சிக்கறோம். மீதி எப்போ தாரே?

சின்னக்கலைவாணர்: வேலு மீதி எப்போ கொடுக்கலாம்?

வைகை: மீதியா! ஏண்டா பீதியை கிளப்பரே, உன் சகவாசமே எனக்கு வேண்டாம். நான் உன் நண்பனே இல்லே!

132 comments :

நசரேயன் said...

me the first

நசரேயன் said...

படிச்சிட்டு திரும்பிவாரேன்

RAMYA said...

வாங்க நெல்லை புயலே!!

நிதானமா படிச்சிட்டு
வாங்க!!

RAMYA said...

நெல்லை புயல்
வைகைபுயலை படிக்க
போயிருக்காரமாம்!!!

தாரணி பிரியா said...

me the second

படிச்சிட்டு திரும்பி வாரேன்

RAMYA said...

//
தாரணி பிரியா said...
me the second

படிச்சிட்டு திரும்பி வாரேன்

//

வாங்க ஆஹா அஹஹா
இப்போதான் களை கட்டுது!!!

குடுகுடுப்பை said...

கலக்கிட்டேள் ரம்யா. அப்படியே என்கிட்ட வாங்கின காச தாரணிபிரியாகிட்ட கொடுத்துருங்க

நசரேயன் said...

/*வாசு: ம்ம் கண்ணு தெரியலை ராவாவா அடிக்கறேன்?*/
ஆமா அது "ரம்" yeah

நசரேயன் said...

/*குடுகுடுப்பை said...
கலக்கிட்டேள் ரம்யா. அப்படியே என்கிட்ட வாங்கின காச தாரணிபிரியாகிட்ட கொடுத்துருங்க
*/
என்கிட்டே வாங்கினதையும் சேத்து கொடுக்கணும்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
கலக்கிட்டேள் ரம்யா. அப்படியே என்கிட்ட வாங்கின காச தாரணிபிரியாகிட்ட கொடுத்துருங்க

//


வாங்க குடுகுடுப்பையாரே
நன்றி குடுகுடுப்பையாரே

RAMYA said...

//
நசரேயன் said...
/*வாசு: ம்ம் கண்ணு தெரியலை ராவாவா அடிக்கறேன்?*/
ஆமா அது "ரம்" yeah

//

இத எழுதும் போதே
நசரேயனைதான் நினைத்தேன்
சரியா அதை பிடிச்சிட்டாரு
அவரு யாரு ம்ம்ம் யாரு ??

RAMYA said...

//
நசரேயன் said...
/*குடுகுடுப்பை said...
கலக்கிட்டேள் ரம்யா. அப்படியே என்கிட்ட வாங்கின காச தாரணிபிரியாகிட்ட கொடுத்துருங்க
*/
என்கிட்டே வாங்கினதையும் சேத்து கொடுக்கணும்

//

படுபாவிங்களா ஒரு கூட்டமே அலையுதா ??

இராம்/Raam said...

நல்லாயிருக்கு தாயீ.... பதிவு'லே சவ்வுமிட்டாயி கலரு'லே இருக்கிறத எடுத்து விடுங்க... :)

RAMYA said...

//
இராம்/Raam said...
நல்லாயிருக்கு தாயீ.... பதிவு'லே சவ்வுமிட்டாயி கலரு'லே இருக்கிறத எடுத்து விடுங்க... :)

//

வாங்க ராம் நன்றி
பாத்து எடுக்கறேன்!!!

நசரேயன் said...

/*தாம்பரத்திலே தாலியை அறுத்துட்டாங்களா? குரோம்பேட்டைலே கத்தி குத்தா? பல்லாவரத்திலே முகம் தெரியாத பாடி கிடக்குதா? */
எல்லாத்துக்கும் காரணம் "ரம்" யா

RAMYA said...

//
நசரேயன் said...
/*தாம்பரத்திலே தாலியை அறுத்துட்டாங்களா? குரோம்பேட்டைலே கத்தி குத்தா? பல்லாவரத்திலே முகம் தெரியாத பாடி கிடக்குதா? */
எல்லாத்துக்கும் காரணம் "ரம்" யா
//

நான் ஒரு அப்பாவி !!!

இராகவன் நைஜிரியா said...

ஆரம்பம்பிச்சுடாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க...

இத்தன நாளா அடி வாங்கிட்டு இருந்தாரு, இப்போ பணத்தையும் கொடுக்க ஆரம்பிச்சுடாரா?

அய்யோ பாவம்.

இராகவன் நைஜிரியா said...

// ஆனா சந்தையிலே அலைஞ்சதுலே தலைய வேறே வலிக்குதே. ம்ம்ம் ஆ அதோ ஒரு டீ கடை இருக்கே. அங்கே போயி ஒரு சிங்கிள் டீ அடிச்சாதான் தலை வலி போகும். //

இதுதான் விதி என்பது?

S.R.Rajasekaran said...

கெளம்பிட்டாருய்யா சின்ன கலைவாணி

RAMYA said...

.//
இராகவன் நைஜிரியா said...
ஆரம்பம்பிச்சுடாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க...

இத்தன நாளா அடி வாங்கிட்டு இருந்தாரு, இப்போ பணத்தையும் கொடுக்க ஆரம்பிச்சுடாரா?

அய்யோ பாவம்.

//

அமாம் அண்ணா ரொம்ப பாவம்
எல்லா பணத்தையும் ஏமாத்தி
வாங்கிட்டாங்க
இஃகி இஃகி இஃகி இஃகி இஃகி

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// ஆனா சந்தையிலே அலைஞ்சதுலே தலைய வேறே வலிக்குதே. ம்ம்ம் ஆ அதோ ஒரு டீ கடை இருக்கே. அங்கே போயி ஒரு சிங்கிள் டீ அடிச்சாதான் தலை வலி போகும். //

இதுதான் விதி என்பது?

//

விதி வில்லங்கமாவே வேலை செய்தது போல

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
கெளம்பிட்டாருய்யா சின்ன கலைவாணி

//

வாங்க வாங்க
ஆமா கிளம்பிட்டாங்க!!!

S.R.Rajasekaran said...

என்ன அம்மிணி பொங்கல் எல்லாம் பேஷா முடிஞ்சுதா .நான் நினைச்சேன் உங்க பிரென்ட் கூட ஏற்காடு ,ஏலகிரின்னு போய் தங்கிட்டிங்கலோன்னு நினச்சேன்

S.R.Rajasekaran said...

\\\விதி வில்லங்கமாவே வேலை செய்தது போல\\\


எப்படி தானா உங்ககிட்ட நாங்க மாட்டுற மாதிரியா

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
என்ன அம்மிணி பொங்கல் எல்லாம் பேஷா முடிஞ்சுதா .நான் நினைச்சேன் உங்க பிரென்ட் கூட ஏற்காடு ,ஏலகிரின்னு போய் தங்கிட்டிங்கலோன்னு நினச்சேன்
//

நண்பர்கள் ஆஹா
அவங்க எல்லாம்
அங்கேயாதான் இருக்காங்க
பொங்கல் சூப்பர் ஒ சூப்பர் !!!

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\விதி வில்லங்கமாவே வேலை செய்தது போல\\\


எப்படி தானா உங்ககிட்ட நாங்க மாட்டுற மாதிரியா

//

அப்படிதான் நினைக்கிறேன்!!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

S.R.Rajasekaran said...

\\\பொங்கல் சூப்பர் ஒ சூப்பர்\\\


ஜல்லிகட்டுல நீங்களும் களம் இறங்கியதா கேள்விபட்டோம்

RAMYA said...

// S.R.ராஜசேகரன் said...
\\\பொங்கல் சூப்பர் ஒ சூப்பர்\\\


ஜல்லிகட்டுல நீங்களும் களம் இறங்கியதா கேள்விபட்டோம்

//

நாங்க ஜெய்ச்சுட்டோம் இல்லே !!!

ஹேமா said...

ரம்யா,இப்போதான் வேலையால களைச்சுப்போய் வந்திருக்கேன்.இந்த நகைச்சுவை எல்லாம் ஆறுதலா ஒரு கொறிக்கடியோட படிக்கவேணும்.
வரேன் வரேன்.

priyamudanprabu said...

//
எது மேலேயோ எதுவோ மொய்க்கிற மாதிரி.
//

கலக்குறீன்ங்க
நல்லயிருக்கு

நட்புடன் ஜமால் said...

அடி ஆத்தி

நான் இம்புட்டு லேட்டா

நட்புடன் ஜமால் said...

வைகையும் - சின்னக்கலைவாணருமா

ஆஹா புச்சாக்கீதே ...

நட்புடன் ஜமால் said...

வைகை - ன்னு பேர் வச்சாலும் வச்சாரு வாரவன் போரவன்லாம் கை-வைக்கிறாய்ங்க

நட்புடன் ஜமால் said...

பின்னி பெடெலெடுத்தது பத்தாதுன்னு இப்ப பணத்தையுமா ...

நட்புடன் ஜமால் said...

காட்சிகள் அப்படியே கண் முன்னே விரியுது

அற்புதமான சிகிரிப்ட் ரம்யா.

புதியவன் said...

ஆஹா...என்ன ஜோடி மாறிப் போச்சு...

வைகையும் - சின்னக்கலைவாணருமா...

ம்...கலக்குங்க ரம்யா...

புதியவன் said...

//தாம்பரத்திலே தாலி / செயின் இரண்டையும் அறுத்துட்டாங்களா? குரோம்பேட்டைலே கத்தி குத்தா? பல்லாவரத்திலே முகம் தெரியாத பாடி கிடக்குதா? //

என்ன ஒரே ரணகளமா இருக்கு...?

சிரிப்பு தாங்க முடியல ரம்யா...

புதியவன் said...

//வேலு மீதி எப்போ கொடுக்கலாம்?//

மீதியா...?...இன்னுமா...?

உங்கள் நகைச்சுவைப் பயணம் தொடர வாழ்த்துக்கள் ரம்யா...

RAMYA said...

//
ஹேமா said...
ரம்யா,இப்போதான் வேலையால களைச்சுப்போய் வந்திருக்கேன்.இந்த நகைச்சுவை எல்லாம் ஆறுதலா ஒரு கொறிக்கடியோட படிக்கவேணும்.
வரேன் வரேன்.
//


வருகை தந்ததிற்கு நன்றி ஹேமா!!!

ஹேமா வாங்க இன்னுமா
கொறிக்கடியோட கிடைக்கவில்லை
சீக்கிரம் வாங்க !!

RAMYA said...

//
பிரபு said...
//
எது மேலேயோ எதுவோ மொய்க்கிற மாதிரி.
//

கலக்குறீன்ங்க
நல்லயிருக்கு

//

வருகை தந்ததிற்கு நன்றி பரபு
நன்றி நன்றி நன்றி !!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அடி ஆத்தி

நான் இம்புட்டு லேட்டா

//

பரவா இல்லை வாங்க வாங்க
லேட் ஆனாலும் லேட்டேச்டா தானே
வருவீங்க கவலை வேண்டாம் நண்பா!!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
வைகையும் - சின்னக்கலைவாணருமா

ஆஹா புச்சாக்கீதே ...
//

இன்னும் நிறைய இருக்குது !!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
வைகை - ன்னு பேர் வச்சாலும் வச்சாரு வாரவன் போரவன்லாம் கை-வைக்கிறாய்ங்க

//

ஆமா அவரு நெம்ப நல்லவரு அதுதான்!!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
பின்னி பெடெலெடுத்தது பத்தாதுன்னு இப்ப பணத்தையுமா
//

அவுரு கையிலே பணம் நிறைய இருந்திச்சே !!!

அதான் ஹி ஹி ஹி ஹி

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
காட்சிகள் அப்படியே கண் முன்னே விரியுது

அற்புதமான சிகிரிப்ட் ரம்யா.

//

நன்றி ஜமால்.
வந்து வாழ்த்தியதிற்கும் நன்றி.

RAMYA said...

//
புதியவன் said...
ஆஹா...என்ன ஜோடி மாறிப் போச்சு...

வைகையும் - சின்னக்கலைவாணருமா...

ம்...கலக்குங்க ரம்யா...

//

வாங்க புதியவன்.
வருகை தந்ததிற்கு நன்றி புதியவன்.

RAMYA said...

//
புதியவன் said...
//தாம்பரத்திலே தாலி / செயின் இரண்டையும் அறுத்துட்டாங்களா? குரோம்பேட்டைலே கத்தி குத்தா? பல்லாவரத்திலே முகம் தெரியாத பாடி கிடக்குதா? //

என்ன ஒரே ரணகளமா இருக்கு...?

சிரிப்பு தாங்க முடியல ரம்யா...

//

சிரிங்க சிரிங்க வாய் விட்டு சிரிச்சா
நோய் விட்டு போகும்ன்னு பெரியவங்க
சொல்லி இருகாங்க அதை இந்த
ரம்யாவும் ஆதரிக்கிறேன்!!!

RAMYA said...

//
புதியவன் said...
//வேலு மீதி எப்போ கொடுக்கலாம்?//

மீதியா...?...இன்னுமா...?

உங்கள் நகைச்சுவைப் பயணம் தொடர வாழ்த்துக்கள் ரம்யா
//

வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி!!!

Vijay said...

நெசமாவே ஒரு வடிவேலு விகேக் காமெடியைப் பார்த்த மாதிரி இருக்கு :-)

RAMYA said...

//
விஜய் said...
நெசமாவே ஒரு வடிவேலு விகேக் காமெடியைப் பார்த்த மாதிரி இருக்கு :-)

//

வாங்க வாங்க விஜய்
வருகை தந்ததிற்கு நன்றி விஜய்!!!

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

பதிவு எல்லாம் இருக்கட்டும். ஏதோ எனக்கு காசு குடுக்க சொல்லியிருக்காங்களே அது எங்க?

தாரணி பிரியா said...

//ஒரு சிங்கிள் டீ அடிச்சாதான் தலை வலி போகும்//

அப்ப டீ குடிக்க வேண்டாமா அடிச்சா போதுமா

தாரணி பிரியா said...

//வெட்டி வம்பு இழுக்கக் கூடாது.
//

இது நம்ம விஜய் சாரை சொல்லலை தானே

தாரணி பிரியா said...

//தினமலர். என்னோடது //

பத்திரிக்கைகாரன் வந்து உதைக்க போறான் வெயிட் ரம்யா. அப்ப என் பேரை சொல்லுங்க‌



எனக்கு தரவேண்டியதும் சேர்ந்து உங்களுக்கு கிடைக்கும் :)

தாரணி பிரியா said...

//ஒருத்தனையும் எடை போட முடியலை) .//

ஏன் அங்க வெயிட் மெசின் இல்லையா

தாரணி பிரியா said...

//உன் சகவாசமே எனக்கு வேண்டாம். நான் உன் நண்பனே இல்லை.
//

என்ன ரம்யா கடைசியில இப்படி சொல்லிட்டிங்க. நாந்தான் உப்புமா சாப்பிட்டேனே :)

தாரணி பிரியா said...

சூப்பர் ரம்யா நீங்க பார்ம்க்கு வந்தாச்சுப்பா.

RAMYA said...

//
தாரணி பிரியா said...
பதிவு எல்லாம் இருக்கட்டும். ஏதோ எனக்கு காசு குடுக்க சொல்லியிருக்காங்களே அது எங்க?

//

அவங்க எல்லாம் அப்படித்தான்
தப்பு தப்பா பேசுவாங்க தாரிணி
அதை எல்லாம் தப்பு தப்பா
புரிஞ்சிகிட்டு ..................................
என்ன சின்ன பிள்ளைதனமா இருக்கு
காசு தானே தாரிணிக்கு இல்லாதது
வேறு யாருக்கு ???
ம்ம்ம்ம்ம் சொல்லுங்க!!!

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//ஒரு சிங்கிள் டீ அடிச்சாதான் தலை வலி போகும்//

அப்ப டீ குடிக்க வேண்டாமா அடிச்சா போதுமா

//

கோவை குசும்பே ட்ரை பண்ணி பாருங்க!!!

அடிச்சா நல்லா இருக்குமா??
குடிச்சா நல்லா இருக்குமா??

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//வெட்டி வம்பு இழுக்கக் கூடாது.
//

இது நம்ம விஜய் சாரை சொல்லலை தானே

//

இப்படி எல்லாம் தோழியை
சிண்டு முடிக்கக் கூடாது!!!

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//தினமலர். என்னோடது //

பத்திரிக்கைகாரன் வந்து உதைக்க போறான் வெயிட் ரம்யா. அப்ப என் பேரை சொல்லுங்க‌



எனக்கு தரவேண்டியதும் சேர்ந்து உங்களுக்கு கிடைக்கும் :)

//

எனக்கு எது கிடைச்சாலும்
அதில் சரிபாதி தாரிணிக்கு
கண்டிப்பா உண்டு
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் (இதை பாண்டு ஸ்டைலில் படிக்கவும்)

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//ஒருத்தனையும் எடை போட முடியலை) .//

ஏன் அங்க வெயிட் மெசின் இல்லையா

//

அது சந்தை பக்கத்திலே
இருந்திச்சா அங்கே
வெயிட் மிஷன் எல்லாம்
இல்லைன்னு சொல்லிப்பிடாங்க!!!

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//உன் சகவாசமே எனக்கு வேண்டாம். நான் உன் நண்பனே இல்லை.
//

என்ன ரம்யா கடைசியில இப்படி சொல்லிட்டிங்க. நாந்தான் உப்புமா சாப்பிட்டேனே :)

//

எனக்கு கொடுக்காமே
சாப்பிட்டீங்க இல்லே
அதான் ஒரு கொல வெறி
ஹா ஹா ஹா ஹா ஹா!!!

தாரணி பிரியா said...

அடப்பாவி அப்பாவி மகளே உப்புமா எல்லாம் ஒரு டிபன். அதை குடுக்காம சாப்பிட்டேன் அப்படின்னு கோபம் வேற :) என்ன கொடுமை ரம்யா இது?

RAMYA said...

//
தாரணி பிரியா said...
சூப்பர் ரம்யா நீங்க பார்ம்க்கு வந்தாச்சுப்பா.

//

நன்றி தாரிணி நீங்க துணையா
இருக்குபோது எனக்கு என்னாப்பா கவலை???

எல்லாம் நீங்க கொடுக்கிற ஊக்கம் தான்.....

நன்றி நன்றி நன்றி இது போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா ????

RAMYA said...

//
தாரணி பிரியா said...
அடப்பாவி அப்பாவி மகளே உப்புமா எல்லாம் ஒரு டிபன். அதை குடுக்காம சாப்பிட்டேன் அப்படின்னு கோபம் வேற :) என்ன கொடுமை ரம்யா இது?

//

நாங்க எல்லாம் அப்படித்தான்
உப்புமா உப்புமா தானே!!

உப்பு இல்லாத மா இல்லயே
என்னா தாரிணி இன்னைக்கும்
உப்புமா தானா?
அம்மா வாழ்க வாழ்க

RAMYA said...

தாரிணி எனக்கு மொதல்லே
ஓட்டு போட்டீங்களா
இல்லையா ???
போட்டா சரி
இல்லன்னா உப்புமாதான்!!!
hahahahhahaha

தாரணி பிரியா said...

உப்புமாவாஆஆஆஆஆஆஆஆஆஆஅ? இதுக்கு நான் கள்ள ஒட்டு போட்டுட்டு ஜெயிலுக்கு போய் களி திங்க கூட ரெடி

RAMYA said...

//
தாரணி பிரியா said...
உப்புமாவாஆஆஆஆஆஆஆஆஆஆஅ? இதுக்கு நான் கள்ள ஒட்டு போட்டுட்டு ஜெயிலுக்கு போய் களி திங்க கூட ரெடி
//

களி திங்க அங்கே ஏன் போகணும் கண்மணி.

நான் கிண்டி தாரேன், நல்லா கிண்டுவேன்.

ஆமா சொல்லிபிட்டேன்

தாரணி பிரியா said...

//களி திங்க அங்கே ஏன் போகணும் கண்மணி.

நான் கிண்டி தாரேன், நல்லா கிண்டுவேன்.

ஆமா சொல்லிபிட்டேன்//

இதுக்கு பயந்துதானே நான் ஜெயில்லுக்கு போறேன்னு சொன்னது :)

நட்புடன் ஜமால் said...

ஆமா ஆமா

உப்புமான்னு பேர் வச்சா

களி தான்

ரம்யா கடையில

நட்புடன் ஜமால் said...

ஜெயிலே தேவலாம்

நட்புடன் ஜமால் said...

குடிச்சிட்டு


அடிச்சா

இன்னும் நல்லாயிருக்கும்

என்ங்க அம்னீ ...

நட்புடன் ஜமால் said...

சரி கிளம்புறேனுங்கோ

அப்பாலிக்கா வாரேன் ...

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//களி திங்க அங்கே ஏன் போகணும் கண்மணி.

நான் கிண்டி தாரேன், நல்லா கிண்டுவேன்.

ஆமா சொல்லிபிட்டேன்//

இதுக்கு பயந்துதானே நான் ஜெயில்லுக்கு போறேன்னு சொன்னது :)

//

ச்சே ச்சே ஒரு வயசு பிள்ளே
அப்படி எல்லாம் சொல்ல கூடாது
நான் இருக்க பயமேன்?

இந்த மாதிரி களி கிண்டி குடுக்க
ரொம்பா நாளா ஒரு ஆளை தேடிகிட்டு
இருந்தேன் இப்போதான் கிடைச்சு இருக்கு.

சந்தர்பத்தை நழுவ விட நான் இல்லை

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஆமா ஆமா

உப்புமான்னு பேர் வச்சா

களி தான்

ரம்யா கடையில

//

நான் நல்லா உப்புமா கிண்டுவேன்
இதை நம்பனும் ஆமா சொல்லிபிட்டேன்!!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஜெயிலே தேவலாம்

//

ரம்யாவின் அன்பு சிறையை விடவா
அட ஆண்டவா இந்த பிள்ளைங்களுக்கு
புத்தி பேதலிச்சி போச்சுதே
காப்பாத்துப்பா !!!

உனக்கு 108 தேங்காய் உடைக்கிர்றேன்பா!!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
குடிச்சிட்டு


அடிச்சா

இன்னும் நல்லாயிருக்கும்

என்ங்க அம்னீ
//

நசரேயன் உங்களைதான்
தேடிகிட்டு இருக்காரு
அவருக்கு சியர்ஸ் சொல்ல
ஆளு குறையுதாமாம் !!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
சரி கிளம்புறேனுங்கோ

அப்பாலிக்கா வாரேன்
//

பசிக்குது அதான் சாப்பிட கிளம்பிட்டீங்க
அதெல்லாம் சரியாதான் நடக்குது போல ???

கார்க்கிபவா said...

காலைல சிரிக்க வச்சதுக்கு தாங்க்ஸ்

RAMYA said...

//
கார்க்கி said...
காலைல சிரிக்க வச்சதுக்கு தாங்க்ஸ்
//

வாங்க கார்க்கி
நன்றி கார்க்கி!!!!!!!

Vidhya Chandrasekaran said...

சூப்பர் காமெடி ரம்யா:)
ஆனா பதிவின் நீளம் கொஞ்சூண்டு ஜாஸ்தி.

RAMYA said...

//
வித்யா said...
சூப்பர் காமெடி ரம்யா:)
ஆனா பதிவின் நீளம் கொஞ்சூண்டு ஜாஸ்தி.

//

வாங்க வித்யா
ரொம்ப நன்றி

நட்புடன் ஜமால் said...

கடையில ஆளுக்கீதா ...

நட்புடன் ஜமால் said...

\\ //
நட்புடன் ஜமால் said...
குடிச்சிட்டு


அடிச்சா

இன்னும் நல்லாயிருக்கும்

என்ங்க அம்னீ
//

நசரேயன் உங்களைதான்
தேடிகிட்டு இருக்காரு
அவருக்கு சியர்ஸ் சொல்ல
ஆளு குறையுதாமாம் !!!

January 23, 2009 10:11 AM
Blogger RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
சரி கிளம்புறேனுங்கோ

அப்பாலிக்கா வாரேன்
//

பசிக்குது அதான் சாப்பிட கிளம்பிட்டீங்க
அதெல்லாம் சரியாதான் நடக்குது போல ???\

4:30 மணிக்கு தான் சாப்பிட்டேன் ...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
கடையில ஆளுக்கீதா
//

Finshed Lunch and tiffin at a time?

தமிழன்-கறுப்பி... said...

கலக்குங்க..:))

தமிழன்-கறுப்பி... said...

90!

RAMYA said...

//
தமிழன்-கறுப்பி... said...
கலக்குங்க..:))

//

Thanks a lot

ஹேமா said...

ரம்யா,கொறித்தீனி தின்னுக்கிட்டே தூங்கிட்டேன்.அப்பாடி கலக்கிறீங்கப்பா!எல்லாருமா சேர்ந்து ஒரே கூத்துதான்.சந்தோஷமாயிருக்கு.என்ன ரம்யா என் பக்கமும் ஒருக்கா வந்து பாத்திட்டுப் போகலாம்தானே!வாங்கப்பா.

அது என்ன களி,உப்புமா?

RAMYA said...

//
ஹேமா said...
ரம்யா,கொறித்தீனி தின்னுக்கிட்டே தூங்கிட்டேன்.அப்பாடி கலக்கிறீங்கப்பா!எல்லாருமா சேர்ந்து ஒரே கூத்துதான்.சந்தோஷமாயிருக்கு.என்ன ரம்யா என் பக்கமும் ஒருக்கா வந்து பாத்திட்டுப் போகலாம்தானே!வாங்கப்பா.

அது என்ன களி,உப்புமா?

//

துக்கமா என்னாதிது
சின்ன பிள்ளைதனமா இருக்கு
நாங்க எல்லாம் இங்கே உக்காந்து
ராத்திரி எல்லாம் துங்காமே
பதிவு எழுதறோம் யாருக்காக?
நீங்க என்னடான்னா துங்கிட்டீங்களா?
யாரங்கே, சீக்கிரம் வாங்க
ஹேமாவை என்னான்னு கேளுங்க!!!

RAMYA said...

//
அது என்ன களி,உப்புமா?
//

கள்ள ஒட்டு போட்டுட்டு
களி திங்க போறேன்னு
தாரிணி சொன்னாங்க
சரியா!!!!

உப்புமா அவங்க அம்மா
எனக்கு செய்து கொடுத்தாங்க
சூப்பர் ஆ இருந்திச்சு
சரியா?

ஹேமா said...

ஓ...இதுதானா களி.உப்புமா!

//யாரங்கே, சீக்கிரம் வாங்க
ஹேமாவை என்னான்னு கேளுங்க!!!//

நான் யாருக்கும் சரியா பதில் சொல்லமாட்டேனே!ஜமால்,புதியவன்,தமிழன்,நசரேயன்,
இராகவன் தவிர!

Muthusamy Palaniappan said...

Nalla Irukunga Intha Thoguppu

RAMYA said...

//
ஹேமா said...
ஓ...இதுதானா களி.உப்புமா!

//யாரங்கே, சீக்கிரம் வாங்க
ஹேமாவை என்னான்னு கேளுங்க!!!//

நான் யாருக்கும் சரியா பதில் சொல்லமாட்டேனே!ஜமால்,புதியவன்,தமிழன்,நசரேயன்,
இராகவன் தவிர!

//

ஒ அவங்கதானே நீங்க
அதான் ஒரு மார்க்காமாவே
பேசறீங்களா ????
இஃகி இஃகி இஃகி இஃகி

RAMYA said...

//
Muthusamy said...
Nalla Irukunga Intha Thoguppu

//

வாங்க முத்துசாமி
வந்ததிற்கும் படித்து
ரசித்ததிற்கும் மிக்க
நன்றி நன்றி நன்றி !!!

Anonymous said...

ready srart 99....

Anonymous said...

me the 100.

தாரணி பிரியா said...

99

தாரணி பிரியா said...

ஆனந்த் அண்ணாத்தே இது அடுக்குமா நான் 100 போட நினைக்கும் போது எப்படி கரெக்டா :(

Anonymous said...

நண்பா நசரேயன் நீ 1. நான் 100 ஹி...ஹி...ஹி.

Anonymous said...

தாரணி பிரியா உங்களையும் முந்திட்டேனா...
அய்யோ...அய்யோ. திட்டாதீங்க!

S.R.Rajasekaran said...

பெரிய "பூ"- வா சுத்திட்டான்யா

RAMYA said...

//
கடையம் ஆனந்த் said...
ready srart 99....
//

Thanks கடையம் ஆனந்த்

RAMYA said...

// தாரணி பிரியா said...
ஆனந்த் அண்ணாத்தே இது அடுக்குமா நான் 100 போட நினைக்கும் போது எப்படி கரெக்டா :(

//

Thanks a lot Dhaarini!!!

RAMYA said...

//
கடையம் ஆனந்த் said...
நண்பா நசரேயன் நீ 1. நான் 100 ஹி...ஹி...ஹி.

//

இது சூப்பர் கவிதை கடையம் ஆனந்த்!!

RAMYA said...

// கடையம் ஆனந்த் said...
தாரணி பிரியா உங்களையும் முந்திட்டேனா...
அய்யோ...அய்யோ. திட்டாதீங்க!

//

அவங்க ரொம்ப நல்லவங்க
திட்ட மாட்டாங்க!!

குடுகுடுப்பை said...

என்ன நடக்குது இங்கெ

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
பெரிய "பூ"- வா சுத்திட்டான்யா
//

கையிலே பூவோட இருக்காரா?

குடுகுடுப்பை said...

கும்மியடிப்பெண்ணே கும்மியடி
அப்படிங்கறது இதுதானா

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
என்ன நடக்குது இங்கெ
//

ஒண்ணுமே நடக்கலை
இஃகி இஃகி இஃகி
இதெல்லாம் சும்மா

RAMYA said...

// குடுகுடுப்பை said...
கும்மியடிப்பெண்ணே கும்மியடி
அப்படிங்கறது இதுதானா

//

இதே தான் ஸ்டார்ட் மியூசிக் !!!

ஹேமா said...

//ஒ அவங்கதானே நீங்க
அதான் ஒரு மார்க்காமாவே
பேசறீங்களா ????
இஃகி இஃகி இஃகி இஃகி//

என்ன தோழி ரம்யா இப்பிடிச் சொல்லலாமா!அவங்க எல்லாருமே நம்ம தோழர்கள்தானே!அதுக்கு இப்பிடி ஒரு பயங்கரச் சிரிப்பு வேறயா!

பாருங்க...பாருங்க நான் எங்கே ஆனந்த்ன்னு தேடிட்டு இருக்கேன்.இங்க அவர் 100 அடிச்சிட்டு இருக்கார்.

ஹேமா said...

ஹையா...நான்தான் 115.

sa said...

அருமையான பதிவு. தங்கள் பதிவுகளுக்கு நன்றி. www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்த்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் புக் மார்கிங் சைட். நன்றி

RAMYA said...

//
ஹேமா said...
//ஒ அவங்கதானே நீங்க
அதான் ஒரு மார்க்காமாவே
பேசறீங்களா ????
இஃகி இஃகி இஃகி இஃகி//

என்ன தோழி ரம்யா இப்பிடிச் சொல்லலாமா!அவங்க எல்லாருமே நம்ம தோழர்கள்தானே!அதுக்கு இப்பிடி ஒரு பயங்கரச் சிரிப்பு வேறயா!

பாருங்க...பாருங்க நான் எங்கே ஆனந்த்ன்னு தேடிட்டு இருக்கேன்.இங்க அவர் 100 அடிச்சிட்டு இருக்கார்.

//

ஆனந்த் எவ்வளவு பெரிய நல்ல காரியம்
செய்து இருக்காரு அவரை distrub
பண்ணக்கூடாது ஆமாம் தோழி!!

RAMYA said...

//
கவின் said...
:)

//

வாங்க கவின்
வந்து சிரித்ததிற்கு(Smile)
போட்டதிற்கு நன்றி !!!

RAMYA said...

//
viji said...
அருமையான பதிவு. தங்கள் பதிவுகளுக்கு நன்றி. www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்த்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் புக் மார்கிங் சைட். நன்றி
//

வாங்க விஜி
வந்ததிற்கும் வந்து
ரசித்ததிற்கும் மிக்க நன்றி.

நீங்கள் கூறியது போல்
எனது பதிவை www.newspaanai.com
இணைத்து விட்டேன்
நன்றி நன்றி நன்றி !!!

ers said...

புகுந்து விளையாடுங்க ரம்யா. உங்களுக்குள் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கிறது. இன்னும் நிறைய எழுதினால் மேம்பட்ட நகைச்சுவை எழுத்தாளராகலாம். நன்றி.

RAMYA said...

//
tamil cinema said...
புகுந்து விளையாடுங்க ரம்யா. உங்களுக்குள் நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கிறது. இன்னும் நிறைய எழுதினால் மேம்பட்ட நகைச்சுவை எழுத்தாளராகலாம். நன்றி.

//

வாங்க தமிழ் சினிமா
வந்ததிற்கும், வந்து ரசித்ததிற்கும்
மிக்க நன்றி, ஒரு padippaali எப்போ
சந்தோஷப் படுகிறான்
அவனுடைய எழுத்துக்கள்
ஏற்றுக் கொள்ளப்ப்படும்போதுதான்
அந்த நிறைவை நான்
இப்போ உணர்கிறேன்
மிக்க நன்றி நன்றி!!!

gayathri said...

first unga blog vanthu iruken.

comedy nallairuku pa

gayathri said...

me they 125

RAMYA said...

//
gayathri said...
first unga blog vanthu iruken.

comedy nallairuku pa

//

வாங்க காயத்ரி
முதல் வரவிற்கும்
முதல் வாழ்த்துக்கும்
முதல் ரசிப்புக்கும்
மிக்க நன்றி
ம்ம்ம் எவ்வளவு
முதல் பாத்தீங்களா

RAMYA said...

அடிக்கடி வாங்க காயத்ரி
முடிந்த வரை சிரிக்க
வைக்கிறேன்
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகும்
நோயற்ற வாழ்வு எல்லாருக்கும்
கொடுக்கணும் அதுதான்
எனது நோக்கம்.

RAMYA said...

காயத்ரி உங்களுக்கு ப்லாக் இல்லையா??
ட்ரை பண்ணினேன் அல்லொவ் பண்ணலை.

ராமலக்ஷ்மி said...

பார்த்தேன் படித்தேன் சிரித்தேன்:))))!
சிரிப்புத் தேனுக்கு நன்றி ரம்யா!

//வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகும்
நோயற்ற வாழ்வு எல்லாருக்கும்
கொடுக்கணும் அதுதான்
எனது நோக்கம்.//

செய்யுங்கள் ரம்யா. என் வாழ்த்துக்கள்!

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
பார்த்தேன் படித்தேன் சிரித்தேன்:))))!
சிரிப்புத் தேனுக்கு நன்றி ரம்யா!

//வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகும்
நோயற்ற வாழ்வு எல்லாருக்கும்
கொடுக்கணும் அதுதான்
எனது நோக்கம்.//

செய்யுங்கள் ரம்யா. என் வாழ்த்துக்கள்!

//

வாங்க ராமலக்ஷ்மி
முதல் வரவிற்கு மகிழ்ச்சி
ரசித்ததிற்கு மிக்க மகிழ்ச்சி
வாழ்த்தியதிற்கு அதை விட மகிழ்ச்சி
வாழ்த்துக்களும், ரசிப்புக்களும் தான்
என்னோட முழு சந்தோஷமே
அதைவிட வேறு பெரிதல்ல எனக்கு
என் பணி ஆற்ற உங்களைபோல்
உள்ளவர்கள் வாழ்த்தினால் போதும்
விண்ணைகூட வில்லாக வளைத்திடுவேனே!!

ராமலக்ஷ்மி said...

//விண்ணைகூட வில்லாக வளைத்திடுவேனே!!//

நன்று நன்று:))

விண்ணை வில்லாக வளைத்து
வலைப் பூவாக்கி-ஒளிவீசும்
பால் நிலவை பந்தாகப் பிடித்து
பதிவெனத் தாங்கள் தர-படித்து..
மின்னும் நட்சத்திரங்களாய்
பின்னூட்டங்கள் ஒளிரட்டும்.


வாழ்த்துக்கள் ரம்யா:)!

நிஜமா நல்லவன் said...

படிச்சும் முடிக்க முடியாம சிரிச்சும் முடிக்க முடியாம....எப்படியோ கஷ்ட்டப்பட்டு படிச்சி நல்லா சிரிச்சேன்.....ரொம்ப நல்லாவே எழுதுறீங்க...:)

RAMYA said...

//
ராமலக்ஷ்மி said...
//விண்ணைகூட வில்லாக வளைத்திடுவேனே!!//

நன்று நன்று:))

விண்ணை வில்லாக வளைத்து
வலைப் பூவாக்கி-ஒளிவீசும்
பால் நிலவை பந்தாகப் பிடித்து
பதிவெனத் தாங்கள் தர-படித்து..
மின்னும் நட்சத்திரங்களாய்
பின்னூட்டங்கள் ஒளிரட்டும்.

வாழ்த்துக்கள் ரம்யா:)!


பால் நிலவை பந்தாக பிடித்து
அதன் ஒளியில் படைத்த
என் பதிவு நட்சத்திரங்களாய்
மின்னிட உங்கள் முத்தான
வாழ்த்த்துக்கள் துணை வருமே
என்றென்றும் என்னுடன்

நன்றி நன்றி நன்றி !!!

RAMYA said...

//
நிஜமா நல்லவன் said...
படிச்சும் முடிக்க முடியாம சிரிச்சும் முடிக்க முடியாம....எப்படியோ கஷ்ட்டப்பட்டு படிச்சி நல்லா சிரிச்சேன்.....ரொம்ப நல்லாவே எழுதுறீங்க...:)
//

ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சு
முடிச்சி சிரித்ததிற்கு நன்றி
அடிக்கடி உங்களை இப்படி
சிரிக்க வைத்து கஷ்டப்
படுத்தினால் என்ன என்று
நான் யோசிக்கிறேன் நீங்க
என்ன சொல்லறீங்க ?