Thursday, January 28, 2010

காதலியும் அவளே! மனைவியும் அவளே!!

" என்ன விஷ்ணு க்ரீட்டிங்க்ஸ் மறைச்சி வச்சிருக்கே? எனக்கும் காட்டுடா." என்ற சக்தியின் ஆவலுக்கு....

"போடா, உனக்கு இல்லே இதெல்லாம் என்னோட அவளுக்கு" என்ற பெருமிதத்துடன் தாமரையின் இருப்பிடம் அடைந்தான் விஷ்ணு.




"இந்தாம்மா இந்த இரண்டு க்ரீட்டிங்க்ஸ் கார்டும் உனக்குத்தான், என் உயிர் நண்பனுக்கு கூட காட்டலை.."

"அவ்வளவு ஒன்னும் நல்லா இல்லே.. ஏதோ கொஞ்சம் பரவா இல்லே!"

"ஏன் சொல்லமாட்டே? எவ்வளவு அலைஞ்சி திரிஞ்சி வாங்கியாந்தேன். வேணும்! எனக்கு நல்லா வேணும்!.."

"சரி, மூஞ்சியை தூக்கி வச்சிக்காதீங்க. நல்லாதான் இருக்கு. என்ன விஷ்ணு இன்னைக்கு எங்கே போகலாம்"

"எங்கே வேணும்னாலும் போலாம்டா"

"நான் ஒரு இடத்திற்கு அழைத்துப் போகிறேன் சரியா? வேலை முடிந்தவுடன் சீக்கிரமா வந்திடுங்க, நான் உங்களுக்கு முன்பாகவே சென்று வெளியே காத்திருக்கின்றேன்" என்றாள் தாமரை.

"சரிம்மா"

"இங்கே பாருங்க உங்க மேனேஜர் கூப்பிடறாரு, அவங்க கூப்பிடறாங்க, இவங்க கூப்பிடறாங்கன்னு மொக்கை போடக் கூடாது. நான் வெளியே காத்திருககேன்னு பயம் இருக்கணும்"

"ச்ச்சே!! இதுக்கு போய் ஏம்மா கோவப்பட்டு பல்லை கடிக்கறே"

"தேவை இல்லாமே பேசாதீங்க... கண்டிப்பா நான் சீக்கிரம் வந்திடுவேன்"

"இப்போ நான் என்னோட வேலையை பார்க்கலாமா? ரொம்ப நேரமா இங்கேயே நின்னுகிட்டு இருக்கீங்க எல்லாரும் நம்பளையே பாக்கறாங்க"

"என்னை போகச் சொல்றே அவ்வளவுதானே!"

"இல்லங்க , யாராவது வேலையே செய்யலைன்னு தப்பா நினைக்கப் போறாங்க அதான் சொன்னேன்"

"சரி சாயங்காலம் சீக்கிரம் கிளம்பிடுவோம். இப்போ நான் போறேன்"

மாலை விஷ்ணுவிற்காக காத்திருந்த தாமரை மனதிற்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தாள் "எவ்வளவு நேரம் நிக்கறது. இவனுக்கு கொஞ்சம் கூட நம்ம கிட்டே பாசமே (பயமே) இல்லை. அதான் சீக்கிரம் வராமே என்னை காக்க வைக்கிறான். சரி போன் செய்து பார்க்கலாம். மணி அடித்துக் கொண்டே இருக்கிறது. விஷ்ணு ஏன் போனை எடுக்கலை. வழக்கம்போல் மேனேஜெர் கிட்டே மாட்டிகிட்டானோ? இன்னும் ஒரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு சென்று விடலாம்" இந்த எண்ணம் மனதில் ஓடிய அடுத்த நிமிடம் அவன் வந்து சேர்ந்தான்.

"அப்பா, எல்லாரையும் ஏமாத்திட்டு ஒரு வழியா வந்திட்டேன்.........."

"என்ன ராகம் ரொம்ப அதிகமா இருக்கு? "

"என்னாது ராகமா? எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கேன் தெரியுமா?"

"தெரியுது! தெரியுது! சரி, சரி அதிகமா பேசாதீங்க! ரொம்ப நேரம் இங்கேயே நிக்க வேண்டாம், கிளம்புங்க! "

"சரிம்மா, இதோ வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டேன்."

"மெதுவா போங்க? என் இவ்வளவு வேகம்? எனக்கு பயமா இருக்கு.."

"ஹி! ஹி! இல்லே நீ என்னை நல்லா பிடிச்சிக்கோ அதுக்குதான்.."

"ரொம்ப வழியாதீங்க! மெதுவாவே போலாம் அவசரம் இல்லே."

"சரிம்மா ஒரு இருபதுலே போகவா? போதுமா??"

"ரொம்ப நடிக்காதீங்க... ஒழுங்கான வேகத்துலே வண்டியை ஓட்டுங்க."

"சரிம்மா! நீ சொல்றமாதிரியே ஓட்டுறேன், சரி, எங்கே போகலாம் சொல்லவே இல்லே"

"என்னோட பிரண்டு விமலா சொல்லி இருக்கேன் இல்லே, அவளுக்கு பர்த்டே. அந்த பார்ட்டிக்குத்தான் போறோம்."

"ஓ! இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லலை? நல்ல டிரஸ் போட்டுக்கிட்டு வந்திருப்பேன். சதி பண்ணிட்டியேடி கள்ளி. சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.. உன்னோட பிரண்டு அழகா இருப்பாங்களா?"

"என்னா???..."

"இல்லே! இல்லே! சும்மா உன்னே கலாய்க்கத்தான் கேட்டேன். அவங்க எப்படி இருந்தா எனக்கு என்ன? சரி மூஞ்சியை உம்முன்னு வச்சுக்காதே. ஏன் முட்டை கண்ணை போட்டு உருட்டறே? கொஞ்சமா சிரிக்கக் கூடாதா?"

"சொல்றதையும் சொல்லிட்டு என்ன...!"

சில மாதங்களுக்கு பிறகு

திருமணம் முடிந்து விடுகிறது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க........

"என்னாங்க சாயங்காலம் சீக்கிரமா வீட்டுக்கு வந்திடுங்க."

"என்ன விஷயம்? "

"சொன்னாதான் வருவீங்களா? என்ன கேள்வி எல்லாம் பலமா இருக்கு? "

"அதெல்லாம் ஒண்ணுமில்லை விஷயத்துக்கு வா மொதல்லே"

"இல்லே! கோவிலுக்கு போகலாம்னு வரச் சொன்னேன்..."

"சரி, உங்களுக்கு அதிகமா வேலை இருந்தா பாத்துட்டு வாங்க. நாம அடுத்தவாரம் கோவிலுக்குப் போனா போச்சு."

"அவளே வேண்டாம்னு சொல்லிட்டா.. இன்னைக்கு எப்படியும் வேலையை முடிச்சிட்டு வரணும். என்று மனதிற்குள் ஒரு முடிவிற்கு வந்த விஷ்ணுவால் நம்பவே முடியவில்லை. வரமுடியாதுன்னு சொன்னா சண்டை போடும் தாமரை இப்போ எப்படி இப்பூடி...?"


"என்னாங்க ஏதோ யோசனையா இருக்கீங்க? கிளம்பலையா?பரவா இல்லை நான் கோவிச்சுக்கலை. நீங்க கிளம்புங்க.... "

"அட இங்கே பாருய்யா இன்னமும் என்னை சமாதானப் படுத்துறா.."

"ஏங்க முழிச்சி முழிச்சி பாக்கறீங்க.. கிளம்புங்க.... "

"ம்ம்ம்ம்... நான் வரேன்...."

மனது கேட்காமல் சாயங்காலம் சீக்கிரமே கிளம்பி வந்துட்டான் விஷ்ணு.

"வாங்க! வாங்க! சீக்கிரமா வந்துட்டீங்க? வேலை முடிஞ்சி போச்சா!"

"வேலை முடியலைம்மா! நீ கோவிலுக்கு போகணும்னு சொன்னியா அதான் சீக்கிரம் வந்துட்டேன்."

"பரவா இல்லீங்க! இன்னொரு நாள் போகலாம்.."

"தாமரை நான் ஒண்ணு கேட்பேன் உண்மையை சொல்லணும் சரியா.. "

"இதென்னாங்க கேள்வி.. என்ன வேணும்னாலும் கேளுங்க சொல்றேன்.."

"நீ சொன்ன நேரத்துலே வரலேன்னா முந்தி எல்லாம் ரொம்ப கோவப் படுவே... எதுக்கு எடுத்தாலும் திட்டுவே இப்ப எல்லாம் ரொம்ப மாறிட்டியே எப்படிம்மா?"

"உங்களை திட்டினா எனக்குதான் கஷ்டமா இருக்கும். அப்போ எல்லாம் எங்க வீட்டுக்கு தெரியாம உங்களை சந்திப்பேன். வீட்டுக்கு போற அவசரம் அதான் ரொம்ப கோவம் வரும். இப்போ அப்படி இல்லையே. அவங்களே நம்மை சேர்த்து வச்சிட்டாங்களே!"

பயபுள்ளே ரொம்ப வெவரமாத்தான் நடந்திருக்கா.. நாமதான் புரிஞ்சிக்கலை...... (மனதிற்குள் புலம்பிக் கொண்டான் விஷ்ணு)

டிஸ்கி:என்னதான் அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளுடன் அலைந்தாலும், நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை. என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்...

48 comments :

ப்ரியமுடன் வசந்த் said...

//"அவ்வளவு ஒன்னும் நல்லா இல்லே.. ஏதோ கொஞ்சம் பரவா இல்லே!"//

எது வாங்கி கொடுத்தாலும் என்னிக்கி நல்லாருக்குன்னு சொல்லியிருக்காக பொண்ணுக....

திருப்தியடையாத அழகான பிசாசுங்க...!

ப்ரியமுடன் வசந்த் said...

//"பரவா இல்லீங்க! இன்னொரு நாள் போகலாம்.."//

ம்ஹ்ஹும் நான் நம்ப மாட்டேன்....!

ப்ரியமுடன் வசந்த் said...

என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்...//

சே சே எப்டிக்கா இப்டில்லாம்?

வெற்றி said...

ஆரம்பத்தில அந்த பொண்ண என் இப்படி கோபக்காரங்களா காண்பிக்கிறீங்கன்னு வருத்தமா இருந்துச்சு..ஆனா இறுதியில் வந்த திருப்புமுனை அற்புதம் ! முதலில் வந்த எண்ணத்தை மாற்றி விட்டது :)

வெற்றி said...

//உன்னோட பிரண்டு அழகா இருப்பாங்களா?"

"என்னா???..."

"இல்லே! இல்லே! சும்மா உன்னே கலாய்க்கத்தான் கேட்டேன். //

எப்படிங்க..கூட இருந்து கேட்ட மாதிரியே எழுதுறீங்க :) :)

நசரேயன் said...

//என்னதான் அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளுடன் அலைந்தாலும், நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை. என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.//

மறக்கலை தாயீ .. மறக்கலை

நட்புடன் ஜமால் said...

ஆமாம் தாயீ ஆமாம் (மேலே சொல்லியிருப்பதையும் சேர்த்துக்கோங்க)

நட்புடன் ஜமால் said...

காதலுக்கு முன் காதலுக்கு பின்

ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்து இருக்கீங்க - ஆப்டிமிஸ்ட்டிக்

அப்பாவி முரு said...

//நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை.//

நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த பின்னுட்டம்....



எப்பூடி...

ஆ.ஞானசேகரன் said...

//டிஸ்கி:என்னதான் அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளுடன் அலைந்தாலும், நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை. என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்...///

கண்டுகிட்டேன்.... என்னையும் கொஞ்சம் கவனியுங்கள்

சந்தனமுல்லை said...

என்ன ரம்யா..ரொம்ப நாளா ஆளைக் காணொமே ப்லாக் பக்கம்? கலர்புல்லா இருக்குங்க உங்க ப்லாக்!

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல்...

Anonymous said...

என்னங்க அம்மணி இருக்கீங்களா? ஊரில்.....

கதை நல்லாயிருக்கு ரம்யா..புது கோணத்தில் அணுகியிருக்கீங்க..மாற்றத்திற்கு சொல்லப்பட்ட காரணம் நல்லாயிருக்கு இதுவரை யாரும் இதை யோசித்தது இல்லைன்னு நினைக்கிறேன்....

Anonymous said...

மறந்தால் என்ன விட்டுடுவீங்களா என்ன? போனைப் போட்டு வையமாட்டேளா......

கார்க்கிபவா said...

அதானே ஆணி உங்களுக்கு.. ஆப்பூ எங்களுக்கா ? :)))))))))

உங்களையெல்லாம் சும்மா இருக்க விட்டா இன்னும் எப்படியெல்லாம் யோசிப்பிங்க.? முடியல

அ.மு.செய்யது said...

கதை நல்லா இருக்கு..வழக்கம் போலவே ரொம்ப எதார்த்தமா எழுதியிருக்கீங்க..

ஆனா இன்னும் சில குறைகளை நீங்கள் நிவர்த்தி செய்யவே இல்லை.

//சீக்கிரமா வந்திடுங்க, நான் உங்களுக்கு முன்பாகவே சென்று வெளியே காத்திருக்கின்றேன்//

சீக்கிரமா வந்திடுங்க --இது பேச்சு வழக்கு.

நான் உங்களுக்கு முன்பாகவே சென்று வெளியே காத்திருக்கின்றேன்--இது எழுத்து வ‌ழ‌க்கு.

ஏன் இந்த‌ எழுத்து மாறாட்ட‌ம்.ஒன்று அப்ப‌டி எழுதுங்க‌ள்.இல்லை இப்ப‌டி எழுதுங்க‌ள்.ரெண்டும் க‌ல‌ந்து க‌ட்டி அடித்தால் க‌தையோடு ஒன்றி விட‌ முடிவ‌தில்லை.அவ‌ச‌ர‌ம் வேண்டாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கப்பா.. :)
படிச்சதும் கிஃப்ட் ஆஃப் தெ மேகி கதை நியாபகம் வந்தது.

துபாய் ராஜா said...

காதலிக்கும், மனைவிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கும் அருமையான கதை அருமை.

சிங்கக்குட்டி said...

வாவ் மிக அருமை (என் வாழ்கையை போலவே) ...

என்னதான் சொல்லுங்க!... காதலிதாங்க மனைவி!.

"தருகின்ற பொருள் காதல் இல்லை, தந்தாலே காதல், காதல் இல்லை :-) "

சூப்பர் பகிர்வுக்கு நன்றி!.

RAMYA said...

//
பிரியமுடன்...வசந்த் said...
//"அவ்வளவு ஒன்னும் நல்லா இல்லே.. ஏதோ கொஞ்சம் பரவா இல்லே!"//

எது வாங்கி கொடுத்தாலும் என்னிக்கி நல்லாருக்குன்னு சொல்லியிருக்காக பொண்ணுக....

திருப்தியடையாத அழகான பிசாசுங்க...!
//


ஹா! ஹா! அழகான பிசாசுங்க, நல்லா இருக்கு வசந்த்..

இந்த வார்த்தை நான் மறக்க மாட்டேன்... நேரேம் வரும்போது
சொல்லிடலாம் :)

RAMYA said...

//
பிரியமுடன்...வசந்த் said...
என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்...//

சே சே எப்டிக்கா இப்டில்லாம்?
//

நன்றிங்க தம்பி :)

RAMYA said...

//
வெற்றி said...
ஆரம்பத்தில அந்த பொண்ண என் இப்படி கோபக்காரங்களா காண்பிக்கிறீங்கன்னு வருத்தமா இருந்துச்சு..ஆனா இறுதியில் வந்த திருப்புமுனை அற்புதம் ! முதலில் வந்த எண்ணத்தை மாற்றி விட்டது :)
//

வாங்க வாங்க வெற்றி, ரசனைக்கு மிக்க நன்றி!

RAMYA said...

//
வெற்றி said...
//உன்னோட பிரண்டு அழகா இருப்பாங்களா?"

"என்னா???..."

"இல்லே! இல்லே! சும்மா உன்னே கலாய்க்கத்தான் கேட்டேன். //

எப்படிங்க..கூட இருந்து கேட்ட மாதிரியே எழுதுறீங்க :) :)
//

சும்மா ஒரு கற்பனைதான் :)

RAMYA said...

//
நசரேயன் said...
//என்னதான் அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளுடன் அலைந்தாலும், நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை. என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.//

மறக்கலை தாயீ .. மறக்கலை
//

நன்றி நசரேயன் :)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஆமாம் தாயீ ஆமாம் (மேலே சொல்லியிருப்பதையும் சேர்த்துக்கோங்க)
//

ஹா! ஹா! ஜமால் வாங்க வாங்க நன்றி நன்றி :)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
காதலுக்கு முன் காதலுக்கு பின்

ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்து இருக்கீங்க - ஆப்டிமிஸ்ட்டிக்
//

ஏதோ ஒரு சின்ன கற்பனைதான். நன்றி நண்பா!

RAMYA said...

//
அப்பாவி முரு said...
//நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை.//

நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த பின்னுட்டம்....



எப்பூடி...
//

SUPER...........!!!:)

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
//டிஸ்கி:என்னதான் அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளுடன் அலைந்தாலும், நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை. என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்...///

கண்டுகிட்டேன்.... என்னையும் கொஞ்சம் கவனியுங்கள்
//

நானும் கண்டுகிட்டேன்....

RAMYA said...

//
சந்தனமுல்லை said...
என்ன ரம்யா..ரொம்ப நாளா ஆளைக் காணொமே ப்லாக் பக்கம்? கலர்புல்லா இருக்குங்க உங்க ப்லாக்!
//

வாங்க முல்லை, வேலைதான்..!

நன்றி இன்னும் கொஞ்ச நாள் ஆகும் வேலைகள் அனைத்தும் முடிய
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி முல்லை.......!

RAMYA said...

//
தமிழரசி said...
என்னங்க அம்மணி இருக்கீங்களா? ஊரில்.....

கதை நல்லாயிருக்கு ரம்யா..புது கோணத்தில் அணுகியிருக்கீங்க..மாற்றத்திற்கு சொல்லப்பட்ட காரணம் நல்லாயிருக்கு இதுவரை யாரும் இதை யோசித்தது இல்லைன்னு நினைக்கிறேன்....
//

ஊரிலே தான் இருக்கேன். உங்களின் ரசனைக்கு நன்றி நன்றி நன்றி!

RAMYA said...

//
தமிழரசி said...
மறந்தால் என்ன விட்டுடுவீங்களா என்ன? போனைப் போட்டு வையமாட்டேளா......
//

அதானே அந்த பயம் இருக்கட்டும் :)

RAMYA said...

//
கார்க்கி said...
அதானே ஆணி உங்களுக்கு.. ஆப்பூ எங்களுக்கா ? :)))))))))

உங்களையெல்லாம் சும்மா இருக்க விட்டா இன்னும் எப்படியெல்லாம் யோசிப்பிங்க.? முடியல
//

விட்டுதான் பாருங்களேன்!

கார்க்கி காக்டெயில் மாதிரி ரம்யா காக்டெயில் ஆரம்பிச்சிட மாட்டேனா:)

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
கதை நல்லா இருக்கு..வழக்கம் போலவே ரொம்ப எதார்த்தமா எழுதியிருக்கீங்க..

ஆனா இன்னும் சில குறைகளை நீங்கள் நிவர்த்தி செய்யவே இல்லை.

//சீக்கிரமா வந்திடுங்க, நான் உங்களுக்கு முன்பாகவே சென்று வெளியே காத்திருக்கின்றேன்//

சீக்கிரமா வந்திடுங்க --இது பேச்சு வழக்கு.

நான் உங்களுக்கு முன்பாகவே சென்று வெளியே காத்திருக்கின்றேன்--இது எழுத்து வ‌ழ‌க்கு.

ஏன் இந்த‌ எழுத்து மாறாட்ட‌ம்.ஒன்று அப்ப‌டி எழுதுங்க‌ள்.இல்லை இப்ப‌டி எழுதுங்க‌ள்.ரெண்டும் க‌ல‌ந்து க‌ட்டி அடித்தால் க‌தையோடு ஒன்றி விட‌ முடிவ‌தில்லை.அவ‌ச‌ர‌ம் வேண்டாம்.
//


நன்றி செய்யது. வரவிற்கும் நன்றி!

RAMYA said...

//
முத்துலெட்சுமி/muthuletchumi said...
ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கப்பா.. :)
படிச்சதும் கிஃப்ட் ஆஃப் தெ மேகி கதை நியாபகம் வந்தது.
//

முத்து அக்கா வாங்க! வாங்க! உங்கள் வரவிற்கும் உங்களின் ரசனைக்கும் மிக்க நன்றிக்கா!

RAMYA said...

//
துபாய் ராஜா said...
காதலிக்கும், மனைவிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கும் அருமையான கதை அருமை.
//

வரவிக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி துபாய் ராஜா!

RAMYA said...

//
சிங்கக்குட்டி said...
வாவ் மிக அருமை (என் வாழ்கையை போலவே) ...

என்னதான் சொல்லுங்க!... காதலிதாங்க மனைவி!.

"தருகின்ற பொருள் காதல் இல்லை, தந்தாலே காதல், காதல் இல்லை :-) "

சூப்பர் பகிர்வுக்கு நன்றி!.
//

அட உங்கள் வாழ்க்கையிலும் இந்த நிகழ்வு உண்டா:)

வருகைக்கும் ரசனைக்கும் மகிழ்ச்சி.

மிக்க நன்றி சிங்கக்குட்டி!

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு அக்கா!!

RAMYA said...

//
Mrs.Menagasathia said...
ரொம்ப நல்லாயிருக்கு அக்கா!!
//

மிக்க நன்றி சகோதரி!

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்த டிஸ்கிய நான் ரொம்ப வன்மையா ஆட்சேபிக்கிறேன்..:-))))

RAMYA said...

//
கார்த்திகைப் பாண்டியன் said...
அந்த டிஸ்கிய நான் ரொம்ப வன்மையா ஆட்சேபிக்கிறேன்..:-))))
//

அன்பின் கார்த்தி, உண்மையை எப்படி கண்டிக்க முடியும் :-)

R.Gopi said...

ம்ம்ம்.... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஒரு இடுகையோடு தானே வந்திருக்கீங்க ரம்யா...

//என்னதான் அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளுடன் அலைந்தாலும், நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை. என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.//

தோழமைகள் யாரையும் மறக்கும் பழக்கம் எனக்கு இல்லை...

நலம் நலமறிய ஆவல்...

S.A. நவாஸுதீன் said...

ஆகா, ரம்யா இடுகை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.

கதை நல்லா இருக்கு. செய்யது சொன்னதை கவனத்தில் கொள்ளவும். ஒரு காமெடி ஸ்பெஷல் போடுங்கப்பு.

மே. இசக்கிமுத்து said...

நானும் இருக்கிறேன், உங்கள் இடுக்கைகளை வாசித்துக்கொண்டு!!

Unknown said...

Hai...Kathai Super

RAMYA said...

//
ஸ்ரீ said...
நல்லா இருக்கு.
//

ரசனைக்கு நன்றி ஸ்ரீ :)

RAMYA said...

//
R.Gopi said...
ம்ம்ம்.... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ஒரு இடுகையோடு தானே வந்திருக்கீங்க ரம்யா...

//என்னதான் அலுவலகத்தில் அளவில்லா ஆணிகளுடன் அலைந்தாலும், நானும் இருக்கேன் என்பதிற்கு இந்த இடுகை. என்னை மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்.//

தோழமைகள் யாரையும் மறக்கும் பழக்கம் எனக்கு இல்லை...

நலம் நலமறிய ஆவல்...
//

நலம் கோபி
வரவிற்கும் ரசனைக்கும் நன்றி கோபி
துபாய் எப்படி இருக்கு ?

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
ஆகா, ரம்யா இடுகை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.

கதை நல்லா இருக்கு. செய்யது சொன்னதை கவனத்தில் கொள்ளவும். ஒரு காமெடி ஸ்பெஷல் போடுங்கப்பு.
//


நன்றி நவாஸுதீன் , காமெடி எழுத நேரேம் கிடைத்தவுடன் இடுகை போடுகிறேன்..

ரசனைக்கும் மிக்க நன்றி நவாஸுதீன் :)

RAMYA said...

//
Ravi said...
Hai...Kathai Super
//

வாங்க ரவி!

முதல் வரவிற்கும், ரசனைக்கும் மிக்க நன்றி ரவி!!