Wednesday, November 26, 2008

வைகைபுயலும் பார்த்திபனும்

வைகை: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளி வரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே, ஹேய் என்னதான் நடக்கும்ம்ம்ம், அடுத்த வரி என்னா, மறந்து போச்சே, என்னதான்....

பார்த்திபன்: டேய், டேய் வேலு இங்கே வாடா, வாடான்னா போய்கிட்டே இருக்கே?

வைகை: ஆத்தி இவரா, இங்க என்னா பண்னறாரு, மாட்டுனோம்னா கிண்டி கிழங்கு எடுத்து, நோன்டி நொங்குஎடுத்துருவாறே ம் என்னா செய்யலாம், கூப்பிடறாரே காதுலே விழாதமாதிரி போய்ட்டா என்னா ம்ம்ம், சரி இன்னொருதடவை கூப்பிடட்டும்.

பார்த்திபன்: கிட்ட வந்து தலையில் தட்ட,

வைகை: எனப்பா தலையிலே அடிக்கிறே ?

பார்த்திபன்: பின்னே என்னடா கூப்பிட்டா வரமாட்டியா, என்னா அப்படியே எருமை மாடு மாத்ரி நிக்கறே. உனக்கெல்லாம் அவளளவு ஏத்தம் ஆயிடுச்சு இல்லே?

வைகை: என்னாப்பா நானு எதோ யோசனையா போய்கிட்டு இருந்தேன். நீ கூப்பிட்டதை சத்தியமா கவனிக்கலைப்பா.

பார்த்திபன்: சரி எத்தனை அப்பா போடுவே ? என்னா பேச்சு இது? உனக்கு எவ்வளவு சொன்னாலும் ஒன்னும் புரியாத எருமையாட நீ?

வைகை: ஏப்பா எப்ப பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்கே. நான் என்னப்பா பண்ணினேன் உன்னைய?

பார்த்திபன்: மறுபடியும் அப்பாவா? சரி அதென்ன கண்ணுலே கருப்பு கண்ணாடி?

வைகை: கைதட்டிபடி, ஹையோ ஹையோ இது கூடவா உனக்கு தெரியாது? இதைதான் கூலிங்க்ளாஸ்ன்னு சொல்லுவாங்க.

பார்த்திபன்: யாரு சொல்லுவாங்க?

வைகை: எல்லாரும் அப்படித்தான்பா சொல்லுவாங்க.

பார்த்திபன்: எல்லரும்ன்னா யாரெல்லாம்?

வைகை: எல்லாரும்னா எல்லாரும் தான்

பார்த்திபன்: கேட்ட கேள்விக்கும் மட்டும் பதில் வரணும், தெரியுதா தேவை இல்லாமே கொக்கரிக்கக் கூடாது.

பார்த்திபன்: அதே எதுக்கு கண்ணிலே போட்டிருக்கே?

வைகை: வேணா மறுபடியும் சொல்லறேன், இத எல்லாரும் போடுவாங்க, நீ ஏதோ என்னைய வம்பிற்கு இழுக்கிற மாதிரி தெரியுது. இது சரி இல்லை.

பார்த்திபன்: நான் எங்கே இருக்கிறேன், உனக்கும் எனக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கு சொல்லுடா.

வைகை: ம்ம்ம் ஒரு 10 அடி இருக்கும்.

பார்த்திபன்: அப்புறம் நானு உன்னையே எப்படி இழுக்க முடியும்.

வைகை: என்ன இவன் என்னா பேசினாலும் ஒரு கொக்கி போடறானே, இவனை எப்படி சமாளிச்சு இடத்தை காலி பண்ணறது, வகையா சிக்கிட்டோமோ? கடவுளே காப்பாத்தப்பா, காலைலே கோவில் வாசல்லே கண்டெடுத்த 10 ரூவாயிலே ஒரு 2 ரூவா உன் உண்டியலில் போட்டுடறேன். என்னைய இவன் கிட்டே இருந்து காப்பாத்து.

பார்த்திபன்: என்னா நான் கேட்டுகிட்டே இருக்கேன், ஒன்னும் பதிலே இல்லே, தனியா பேசிக்கிறே, நீ என்னா லூசா?

வைகை: என்னாப்பா கேட்டே, எனக்கு ஒரே குழப்பமா போயிடுச்சு?

பார்த்திபன்: அதான் லூசான்னு கேட்டேன்.

வைகை: வேண்டாம்ப்பா ரெம்ப கேவலமா பேசறே, என் மாமன் பொண்ணுங்க வர நேரம், நான்தான் துணைக்கு வீடு வரை போகணும். என்னைய விட்டிரு.

பார்த்திபன்: நான் என்னா உன்னைய பிடிச்சா வச்சிருக்கேன்? உன்னைய கடத்திக்கொண்டா வந்திருக்கேன்? ஏண்டா இப்படி எல்லாம் உளர்றே.

வைகை: என்னது உளர்றறேனா? ஏம்ப்பா டார்ச்சர் பண்ணறே, சரி உன் கேள்வி என்னா?

பார்த்திபன்: நான் என்னா உனக்கு பரிச்சையா வைக்கிறேன். என்னா கேள்வின்னு கேக்கறே? அறிவுகெட்ட முண்டம். எதுக்கு கூலிங்க்ளாஸ் போட்டிருக்கே ?

வைகை : அதெல்லாம் ஒன்னும்மில்லேப்பா கண்ணுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருக்கட்டுமேன்னுதான் போட்டிருக்கிறேன்.

பாத்திபன்: குளிர்ச்சியா, அப்படீன்னா?

வைகை : அடிக்கிற வெயிலுக்கு அப்படியே குளுகுளுன்னு இருக்கும். அவ்வளவுதான்.

பார்த்திபன்: அதெப்பிடி குளுகுளுன்னு இருக்கும், கண்ணாடி உள் பக்கம் ஐஸ் ஓட்ட வச்சிருக்கியா? சொல்லுடா, சொல்லுடான்னா

வைகை: என்ன இவன் இப்படி கேள்வி கேட்டே அலம்பல் பன்னரானே எப்படி சமாளிக்கிறது, வசமா மாட்டிகிட்டோம்ன்னு மட்டும் தெரியுது, தப்பிக்க தான் தெரியலை.

பார்த்திபன்: கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னடா திரு திருன்னு முழிக்கிறே.

வைகை: இல்லேப்பா உனக்கு இப்படி புரியவைக்கிறதுன்னு எனக்கு புரியலை.

பார்த்திபன்: நான் என்ன உன்னைய மாதிரி லூசா, சொல்லு எனக்கு எல்லாம் புரியும்.

வைகை: கூலிங்க்ளாஸ் போட்டா வெயில் தெரியாமே கண்ணுக்கு குளுமையா இருக்கும். அதான்பா போட்டிருக்கேன்.

பார்த்திபன்: அதென்னடா அதுலே A.C . பொருத்தி வச்சிருக்கே, குளுமையா இருக்கிறதுக்கு. நொள்ளைக்கண்ணு இருந்தாதான் இதை போடுவாங்க.

வைகை: அது சரி கேள்வி எலாம் பெரிசாத்தான் இருக்குது. நீ ஏம்ப்பா கூலிங்க்ளாஸ் போட்டிருக்கே ?

பார்த்திபன்: நான் நல்லா படிச்சவன், என் persanolity க்கு இது எடுப்பா இருக்குதுன்னு கூலிங்க்ளாஸ் போட்டிருக்கேன்.

வைகை : persanolity அதுவும் இவருக்கு, இருக்கட்டும் இருக்கட்டும், எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ உன்னைய பேசிக்கிறேன்.

பார்த்திபன்: என்னடா முறைக்கிறே. தானே முனுமுனுக்கிரே

வைகை: அதெல்லாம் சரி, கேள்வி எல்லாம் நல்லாத்தான் கேக்குறே, உனக்கு வேலே வெட்டி எதவும் கிடையாதா?

பார்த்திபன்: அதென்னடா வேலை - வெட்டி, சொல்லுடா

வைகை : வேலைன்னா வேலை வெட்டின்னா......

பார்த்திபன்: பேசத்தெரியாத லூசுதாண்டா நீ, கேள்விக்கும் பதில் சொல்ல தெரியாத பரதேசிதாடா நீ, போ போ எங்காவது போய் தொலை, என் முன்னாடி இதெல்லாம் போட்டுக்கிட்டு வந்து நிக்காதே. பயமா இருக்குது.

வைகை: லூஸ் அதுவும் நானு, நல்லா இருப்பா ரொம்ப நல்லா இரு, வந்துட்டானுங்க காலைலே வம்புக்கின்னே. அப்பா தப்பிச்சோம், சரி நம்ப பாட்டை தொடரலாம். அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே,.....

பார்த்திபன்: என்னா சத்தம் இன்னும் நீ போகலையா ?

வைகை: இல்லேப்பா போய்கிட்டு தானே இருக்கேன்......

ரம்யா


நல்லா இல்லைன்னாலும் ஓட்டு போடுவீங்க

56 comments :

நசரேயன் said...

நான் தான் முதல்ல

RAMYA said...

முதல்ல வந்ததிற்கு நன்றி நண்பா

நசரேயன் said...

அடுத்த வடிவேலு பார்த்தீபன் படம் ரெடி, யாரவது தாயரிப்பாளர் இருக்கீங்களா?
ரெம்ப நல்லா இருக்கு

Anonymous said...

நான் தான் இரண்டாவது.. இல்ல மூனாவது.. பார்திபன் .. வடிவேலு படிச்சதுல நம்ம குழம்பி போய்டேம்பா.. இப்படியா இந்த ரம்யா பொண்ணு நம்ம குழப்பிடுச்சே.. சே.. ரொம்ப மோசம்பா.. சரி சரி இப்போ போறேன்.. பின்ன மத்த பின்ண்ட்டத்த பார்த்திட்டு கும்மி அடிக்கலாம்.

RAMYA said...

காத்திருக்கிறேன், யாரவது படம் எடுத்தால் நான் ரெடி கமெடி Track எழுத . எப்படிங்க இருக்கு? பரவா இல்லலையா !!

Anonymous said...

மூணாவதுன்னு சொன்னது தப்பாயிடுச்சுப்பா.. இது அஞ்சாவதுப்பா.. வேக வேகமா டைப் அடிக்க கத்துகிடணும்.. இல்லன்ன பய புள்ளைங்க நமக்கு முன்னாடி ஏதாவது போட்டுறாங்கப்பா...

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
நான் தான் இரண்டாவது.. இல்ல மூனாவது.. பார்திபன் .. வடிவேலு படிச்சதுல நம்ம குழம்பி போய்டேம்பா.. இப்படியா இந்த ரம்யா பொண்ணு நம்ம குழப்பிடுச்சே.. சே.. ரொம்ப மோசம்பா.. சரி சரி இப்போ போறேன்.. பின்ன மத்த பின்ண்ட்டத்த பார்த்திட்டு கும்மி அடிக்கலாம்.

//

வாங்க ராகவன் சார், இரண்டாவதாக வந்து பிண்ணுட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி நண்பா.

RAMYA said...

//
நசரேயன் said...
அடுத்த வடிவேலு பார்த்தீபன் படம் ரெடி, யாரவது தாயரிப்பாளர் இருக்கீங்களா?
ரெம்ப நல்லா இருக்கு
//

நசரேயன், நீங்களே தயாரிக்கலாமே, ஒரு காமெடி படம் எடுத்த நல்ல பெயர் கிடைக்கும் அல்லவா? யோசிங்கள்., நம் ராகவன் சாரையும் Consult செய்து கொள்ளுங்கள்.

Anonymous said...

சகோதரி உங்கள் அனுமதி பெறாமலேயே, Tamilish - ல் இந்த பதிவை இணைத்துவிட்டே. தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

rapp said...

ரம்யா, எவ்ளோ சூப்பரா எழுதறீங்க:):):) நான் என்னமோ நீங்க சீரியஸ் ஆளுன்னு நெனச்சேன், கலக்குறீங்க போங்க:):):) சூப்பரோ சூப்பர்:):):)

Anonymous said...

//நசரேயன், நீங்களே தயாரிக்கலாமே, ஒரு காமெடி படம் எடுத்த நல்ல பெயர் கிடைக்கும் அல்லவா? யோசிங்கள்., நம் ராகவன் சாரையும் Consult செய்து கொள்ளுங்கள். //

நான் ரெடி.. நான் தாப்பா கணக்கு பிள்ளை.. வரவு, செலவு கணக்கு எழுதுவதற்கு நான் ரெடி. யார் யார் எல்லாம் படம் எடுக்க இருக்கீங்களோ, என்னிடம் எல்லா பணத்தையும் கொண்டு வந்து கொடுத்திடுங்க.. எனக்கு தம்பி உருப்பிடாதது அணிமாவும், சகோதரி ரம்யாவும் காரண்டி கொடுப்பார்கள்.

குடுகுடுப்பை said...

பார்த்திபன்: என்னா சத்தம் இன்னும் நீ போகலையா ?

வைகை: இல்லேப்பா போய்கிட்டு தானே இருக்கேன்......

ரம்யா : ????

//
ரம்யா ஏன் ஒன்னும் சொல்லல.

நீங்க தான் இவங்களுக்கு எழுதிக்கொடுக்கிரதா.

RAMYA said...

//
சகோதரி உங்கள் அனுமதி பெறாமலேயே, Tamilish - ல் இந்த பதிவை இணைத்துவிட்டே. தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

//

ராகவன் என்ன நினைத்தீர்கள் என்னை பற்றி நான் நண்பர்கள் என்றால் உயிரை விடுபவள். உங்களை தவறாக நினைப்பேனா. No No proceed

RAMYA said...

// rapp said...
ரம்யா, எவ்ளோ சூப்பரா எழுதறீங்க:):):) நான் என்னமோ நீங்க சீரியஸ் ஆளுன்னு நெனச்சேன், கலக்குறீங்க போங்க:):):) சூப்பரோ சூப்பர்:):):)

//

வாங்க ராப், எனது பதிவிற்கு முதல் முதலாக வந்திருக்கிறீர்கள், எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை, வந்ததிற்கு மிக்க நன்றிங்க. பாரட்டியதிற்கும் மிக்க நன்றி.

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//நசரேயன், நீங்களே தயாரிக்கலாமே, ஒரு காமெடி படம் எடுத்த நல்ல பெயர் கிடைக்கும் அல்லவா? யோசிங்கள்., நம் ராகவன் சாரையும் Consult செய்து கொள்ளுங்கள். //

நான் ரெடி.. நான் தாப்பா கணக்கு பிள்ளை.. வரவு, செலவு கணக்கு எழுதுவதற்கு நான் ரெடி. யார் யார் எல்லாம் படம் எடுக்க இருக்கீங்களோ, என்னிடம் எல்லா பணத்தையும் கொண்டு வந்து கொடுத்திடுங்க.. எனக்கு தம்பி உருப்பிடாதது அணிமாவும், சகோதரி ரம்யாவும் காரண்டி கொடுப்பார்கள்.
//

ராகவன் சார் பொய் கணக்கு எழுதக்கூடாது. கணக்கு கணக்கா இருக்கணும், சரியா

Anonymous said...

சரியான, காமெடியான, விறுவிறுப்பான, வேடிக்கையான .. இன்னும் பல நிறைந்த மொக்கை பதிவுங்க.. நண்பர்களே.. உங்கள் பொன்னான வாக்குகளை இந்த பதிவுக்கு அளித்து இந்த பதிவை மிக மேன்மையுற செய்யுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன். அய்யா வாங்க, அம்மா வாங்க.. உங்க பொன்னான வாக்கை பதிவு செய்யுங்கள். இருந்தும் மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்து விடாதீர்கள்

Anonymous said...

// ராகவன் சார் பொய் கணக்கு எழுதக்கூடாது. கணக்கு கணக்கா இருக்கணும், சரியா //

ஏம்மா உன் சகோதரன் பொய் கணக்கு எழுதுவானா.. நிச்சயம் எழுதமாட்டேன்.. (காமெடிக்கு நடுவில் ஒரு செண்டிமெண்ட்.. இது எப்படி இருக்கு)

RAMYA said...

//
வருங்கால முதல்வர் said...
பார்த்திபன்: என்னா சத்தம் இன்னும் நீ போகலையா ?

வைகை: இல்லேப்பா போய்கிட்டு தானே இருக்கேன்......

ரம்யா : ????

//
ரம்யா ஏன் ஒன்னும் சொல்லல.

நீங்க தான் இவங்களுக்கு எழுதிக்கொடுக்கிரதா.
//

வாங்க வருங்கால முதல்வர் அவர்களே, ரொம்ப நாலா எனக்கு ஒரு ஆசை. உங்கள் கச்சியில் எனக்கு ஒரு கொ.ப.செ பதவி கொடுப்பிங்கள?

இது போல் நிறைய திறமை என்னுள் ஒளிந்து கொண்டுள்ளது. ஒன்னொன்னா எடுத்து விட்டு உங்களை டார்ச்சர் செய்யப்போறேன்.

வந்து வாழ்த்தியதிற்கு நன்றி, நன்றி, நன்றி

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
சரியான, காமெடியான, விறுவிறுப்பான, வேடிக்கையான .. இன்னும் பல நிறைந்த மொக்கை பதிவுங்க.. நண்பர்களே.. உங்கள் பொன்னான வாக்குகளை இந்த பதிவுக்கு அளித்து இந்த பதிவை மிக மேன்மையுற செய்யுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன். அய்யா வாங்க, அம்மா வாங்க.. உங்க பொன்னான வாக்கை பதிவு செய்யுங்கள். இருந்தும் மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்து விடாதீர்கள்
//

ராகவன் உங்களை மாதிரி எனக்கு இப்படி ஒரு கொள்கை பரப்பு செயலாளர் கிடைத்ததிற்கு நான் மிக்க பெருமை படுகிறேன். எனக்காக ஒட்டு வேட்டைக்கு கிளமிபிட்டாருப்பா !!கிளமிபிட்டாருப்பா!!

Anonymous said...

//ராகவன் உங்களை மாதிரி எனக்கு இப்படி ஒரு கொள்கை பரப்பு செயலாளர் கிடைத்ததிற்கு நான் மிக்க பெருமை படுகிறேன். எனக்காக ஒட்டு வேட்டைக்கு கிளமிபிட்டாருப்பா !!கிளமிபிட்டாருப்பா!!//

பின்னே சகோதரன் அப்படின்னு சொன்னா போதாது.. செயல்ல காட்டணுமில்ல .. எனக்கு தான் எழுத் வராது.. எழுதுபவர்களை பின் வாங்க வைக்காமல் நாம தானே ஊக்கு விக்கணும்.

Anonymous said...

//வாங்க ராப், எனது பதிவிற்கு முதல் முதலாக வந்திருக்கிறீர்கள், எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை, வந்ததிற்கு மிக்க நன்றிங்க. பாரட்டியதிற்கும் மிக்க நன்றி. //

கை காலெல்லாம் ஒடப்பிடாது.. அது அது அங்கங்கேயே இருக்கணும். தனித்தனியா ஒடிச்சுன்னா ரொம்ப கஷ்டம்..

RAMYA said...

//
//ராகவன் உங்களை மாதிரி எனக்கு இப்படி ஒரு கொள்கை பரப்பு செயலாளர் கிடைத்ததிற்கு நான் மிக்க பெருமை படுகிறேன். எனக்காக ஒட்டு வேட்டைக்கு கிளமிபிட்டாருப்பா !!கிளமிபிட்டாருப்பா!!//

பின்னே சகோதரன் அப்படின்னு சொன்னா போதாது.. செயல்ல காட்டணுமில்ல .. எனக்கு தான் எழுத் வராது.. எழுதுபவர்களை பின் வாங்க வைக்காமல் நாம தானே ஊக்கு விக்கணும்.

//

மிக்க நன்றி சகோதரர், அணிமா எங்கே, ஆளே காணோம். எனக்காக ஒட்டு சேகரிதமைக்கு மிக்க நன்றி.

நீங்க இர்ருக்கும்போது எனக்கு கவலையே இனி இல்லை, நான் பாட்டுக்க எழுதி கொண்டே இருப்பேன். ஒட்டு வேலைகளை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள்.

Anonymous said...

// மிக்க நன்றி சகோதரர், அணிமா எங்கே, ஆளே காணோம். எனக்காக ஒட்டு சேகரிதமைக்கு மிக்க நன்றி.//

அணிமா நாளை வருவார் என நினைக்கின்றேன். மாதக்கடைசி அல்லவா.. வேலை அதிகமாக இருக்கும் என நினைக்கின்றேன் (வேலை.. அப்படின்னு எதாவது இருக்கான்னு கேட்ககூடாது)

RAMYA said...

// இராகவன், நைஜிரியா said...
//வாங்க ராப், எனது பதிவிற்கு முதல் முதலாக வந்திருக்கிறீர்கள், எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை, வந்ததிற்கு மிக்க நன்றிங்க. பாரட்டியதிற்கும் மிக்க நன்றி. //

கை காலெல்லாம் ஒடப்பிடாது.. அது அது அங்கங்கேயே இருக்கணும். தனித்தனியா ஒடிச்சுன்னா ரொம்ப கஷ்டம்..

//


ஒடுச்சே!! என்ன பண்ணறது ?

Anonymous said...

If you are on gtalk, please come on gtalk. my mail id is raghavpadur@gmail.com

Anonymous said...

திரு. அணிமா அவர்களுக்கு அனுப்பிய மெசெஜ் இத்துடன் தங்கள் மேலான பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...
//
http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_25.html
http://ramya-willtolive.blogspot.com/2008/11/blog-post_25.html
யப்பா .. உனக்கு என்ன ஆச்சு.. இரண்டு பதிவுலேயும் உன்னைப்பற்றி கேட்கின்றார்கள். உடனே பதிவுக்கு போய் எதாவது பின்னூட்டம் போட்டுவிடப்பா..
எம்பேர காப்பாத்தனும் புரிஞ்சுதா !!//

Anonymous said...

Hi Raghavan,

Congrats!

Your story titled 'வைகைபுயலும் பார்த்திபனும்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th November 2008 09:58:58 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/15087

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Message received from Tamilish.. for information please

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// மிக்க நன்றி சகோதரர், அணிமா எங்கே, ஆளே காணோம். எனக்காக ஒட்டு சேகரிதமைக்கு மிக்க நன்றி.//

அணிமா நாளை வருவார் என நினைக்கின்றேன். மாதக்கடைசி அல்லவா.. வேலை அதிகமாக இருக்கும் என நினைக்கின்றேன் (வேலை.. அப்படின்னு எதாவது இருக்கான்னு கேட்ககூடாது)

//

மாத கடைசிலே மட்டும் வேலை செய்கிறார் என்று சொல்லுகிறீர்களா. இல்லை போன வாரம் கூட வேலை செய்தாரமாம். அதே சொல்லலையா?

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
திரு. அணிமா அவர்களுக்கு அனுப்பிய மெசெஜ் இத்துடன் தங்கள் மேலான பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...
//
http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_25.html
http://ramya-willtolive.blogspot.com/2008/11/blog-post_25.html
யப்பா .. உனக்கு என்ன ஆச்சு.. இரண்டு பதிவுலேயும் உன்னைப்பற்றி கேட்கின்றார்கள். உடனே பதிவுக்கு போய் எதாவது பின்னூட்டம் போட்டுவிடப்பா..
எம்பேர காப்பாத்தனும் புரிஞ்சுதா !!//
//

அணிமா அவர்களுக்கு அனுப்பியதற்கு மிக்க நன்றி சகோதரரே!!

நாடோடி இலக்கியன் said...

கலக்கலா இருக்குங்க.

RAMYA said...

// நாடோடி இலக்கியன் said...
கலக்கலா இருக்குங்க
//

வாங்க நாடோடி இலக்கியன் முதன் முறையா வந்திருக்கீங்க, வந்து பிண்ணுட்டம் அளித்ததிற்கு மிக்க நன்றி.

பாபு said...

நல்லா இருந்தது ,ரசித்தேன்,தொடரவும்

துளசி கோபால் said...

கலக்கிப்புட்டீங்க:-))))))

RAMYA said...

//
பாபு said...
நல்லா இருந்தது ,ரசித்தேன்,தொடரவும்

//


வாங்க பாபு, முதன் முறையா வந்து பிண்ணுட்டம் அளித்தமைக்கு நன்றி, அடிக்கடி வாங்க

RAMYA said...

//
துளசி கோபால் said...
கலக்கிப்புட்டீங்க:-))))))//

வாங்க துளசி கோபால், முதன் முறையா வந்து பிண்ணுட்டம் அளித்தமைக்கு நன்றி, அடிக்கடி வாங்க

தமிழ் அமுதன் said...

தொடர்ந்து கலக்குறீங்க!

''சரி போன பதிவுல அந்த சிறுவனோட அக்கா''

''இந்த பதிவுல வடிவேலோட மாமன் பொண்ணு''

இந்த கேரக்டர் யாரு? ஒருவேளை அது ......ஹி...ஹி

புதியவன் said...

//லூஸ் அதுவும் நானு, நல்லா இருப்பா ரொம்ப நல்லா இரு, வந்துட்டானுங்க காலைலே வம்புக்கின்னே. அப்பா தப்பிச்சோம்//

ஏங்க ரம்யா வடிவேலுவ வம்புக்கு இழுக்கிறதுன்னா ரொம்பப் புடிக்குமோ
ஏன் கேட்டேன்னா அவரோட காமெடி எனக்கும் புடிக்கும் அது தான். இதையெல்லாம் ஆபீஸ்ல வச்சுப் படிக்க முடியலங்க இங்க படிச்சுட்டு சிரிச்சா வேற மாதிரி நினைப்பாங்க...நல்லா எழுதுறீங்க ரம்யா வாழ்த்துக்கள்.

RAMYA said...

//
ஜீவன் said...
தொடர்ந்து கலக்குறீங்க!

''சரி போன பதிவுல அந்த சிறுவனோட அக்கா''

''இந்த பதிவுல வடிவேலோட மாமன் பொண்ணு''

இந்த கேரக்டர் யாரு? ஒருவேளை அது ......ஹி...ஹி

//

வாங்க ஜீவன் வாழ்த்தியதிற்கு நன்றி,
அதென்னா அக்கா பொண்ணு....., மாமன் மக..........
தங்கமணி இந்த ரம்யா ப்லாக் கொஞ்சம் லுக் விடுங்கோ,
உங்க மாமா என்னவெல்லாமோ கேக்குறாரு..............

RAMYA said...

//
புதியவன் said...
//லூஸ் அதுவும் நானு, நல்லா இருப்பா ரொம்ப நல்லா இரு, வந்துட்டானுங்க காலைலே வம்புக்கின்னே. அப்பா தப்பிச்சோம்//

ஏங்க ரம்யா வடிவேலுவ வம்புக்கு இழுக்கிறதுன்னா ரொம்பப் புடிக்குமோ
ஏன் கேட்டேன்னா அவரோட காமெடி எனக்கும் புடிக்கும் அது தான். இதையெல்லாம் ஆபீஸ்ல வச்சுப் படிக்க முடியலங்க இங்க படிச்சுட்டு சிரிச்சா வேற மாதிரி நினைப்பாங்க...நல்லா எழுதுறீங்க ரம்யா வாழ்த்துக்கள்.

//

வாங்க புதியவன் வாழ்த்தியதிற்கு நன்றி,
தானே சிரிக்கிறீங்க இல்லையே கம்ப்யூட்டரை பார்த்துதானே சிரிக்கிறீங்க...
யப்பா நம்ப புதியவன் அவர்களை யாரும் தப்பா நினைக்கதீங்கப்பா

SK said...

ஆஹா இங்கே வடிவேலு பார்த்திபன் ஒரு புது கட்செறியே போய்கிட்டு இருக்கு..

இது ரம்யா ப்ளாக் தானே. நான் சரியா தானே வந்து இருக்கேன் :) :)

SK said...

அய்யகோ இது என்ன சத்திய சோதனை. நான் தனிய இருக்கற கடைல அதுவும் நாப்பதுலே வந்து பின்னோட்டம் நிக்கலாமா

SK said...

நிக்கலாமா :) :)

SK said...

நிக்கலாமா :) :)

SK said...

இது தான் எக்கோ எபக்ட் :) :)

SK said...

// வாங்க ராப், எனது பதிவிற்கு முதல் முதலாக வந்திருக்கிறீர்கள், எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை, வந்ததிற்கு மிக்க நன்றிங்க. பாரட்டியதிற்கும் மிக்க நன்றி. //

கை தனிய ஓடுதா

கால் தனியா ஓடுதா :) :)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாவங்க ஒடம்பு :) :)

SK said...

ராப் அவுங்களுக்கு இப்படி ஒரு ரசிகையா :) :)

ஏதோ நல்ல இருந்த சரி தான்

SK said...

// கை காலெல்லாம் ஒடப்பிடாது.. அது அது அங்கங்கேயே இருக்கணும். தனித்தனியா ஒடிச்சுன்னா ரொம்ப கஷ்டம்.. //

ரிப்பீட்டு

SK said...

// ஒடுச்சே!! என்ன பண்ணறது ? //

புடிச்சு நிறுத்துங்கோ :) :)

SK said...

இங்கே யாரும் ஒளிஞ்சு இருக்க மாட்டங்கன்னு தான் நினைக்குறேன் :) :)

சோ ஒக்காந்து அம்பது அடிக்கலாம் :) :)

SK said...

50

ambathu

fifty

fünfzig

SK said...

ஒக்காந்து டி ஆத்தினா அண்ணனுக்கு ஒரு ஒ போடுங்கப்பா :) :)

RAMYA said...

50 தாண்டவைத்த (வயது அல்ல, பதிவு ஹி ஹி ஹி he) தம்பி S.K. வாழ்க, வாழ்க.
நன்றி, நன்றி, நன்றி

குடுகுடுப்பை said...

வடிவேலுவை வாழவக்கும் ரம்யா வாழ்வாங்கு வாழ்க

வடிவேலு தலைமை ரசிகர் மன்றம்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வடிவேலுவை வாழவக்கும் ரம்யா வாழ்வாங்கு வாழ்க

வடிவேலு தலைமை ரசிகர் மன்றம்

//

வாங்க குடுகுடுப்பையாரே, எங்கே ஆளை காணோமேன்னு பார்த்தேன், வாழ்த்தியதற்கு மிக்க நன்றிங்கோ, தலைமை ரசிகர் மன்றத்திற்கும் நன்றிங்கோ, தலைமை ரசிகர் மன்ற தலைவரே நீங்கதானோ?

மங்களூர் சிவா said...

வடிவேலு - பார்த்திபன் காமெடி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

RAMYA said...

//
வடிவேலு - பார்த்திபன் காமெடி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
//

நன்றி சிவா............