Saturday, March 14, 2009

ரம்யாவின் சோகம் !!!


ஆமாங்க ரொம்ப சோகம்தான்!!

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார். அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன்.


நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க. சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் ஆரம்பிக்கால்ன்னு பேசாமல் அவங்க பேசறதை கேட்டுக் கொண்டு இருந்தேன். இரவு சாப்பாடு முடிஞ்சி, அக்கா வாங்க என் பதிவை பார்க்கலாம்ன்னு சொன்னேன். அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க. எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு.

கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்த உடனே ஒரே பரபரப்பு எதை மொதல்லே படிச்சு காட்டுவதுன்னு. அப்புறம் எப்படியோ எதுக்கும் சிரிக்கட்டும் என்று "வைகைப்புயலும் சுப்பிரமணியும்" என்ற பதிவை படிச்சு காட்டினேன். முகத்தில் எந்த விதமான மாறுதல்கள் ஏற்படவில்லை, சிரிக்கவும் இல்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.


ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அக்கா வேறே படிக்கவான்னு கேட்டேன், அதற்கு அவர்கள் ம்ம் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அந்த ஒற்றைச் சொல் ம்ம்ஐ சரி என்று நினைத்து விட்டு மறுபடியும் மற்றொரு நகைச்சுவை (என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.

ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. அந்த அக்காவிற்கும் ரொம்ப பிடித்து விட்டது போல என்று நினைத்தவுடன் என் குரலில் புது உற்ச்சாகம் தொற்றிக் கொண்டது. கொஞ்சம் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன். அவர்களிடம் இருந்து எந்த வித பகிர்தலும் இல்லை. மெதுவாக திரும்பி பார்த்தேன்.


அதே சிரிப்பு. ஏன் இப்படி சிரிக்கின்றார்கள் என்று நன்றாக திரும்பி பார்த்தேன்.


அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. என்ன பயந்து விட்டீர்களா?? ஒன்னும் சீரியஸ் மேட்டேர் இல்லே.


அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
எப்போ தூங்கினாங்கன்னே எனக்கு தெரியலை. தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன்.

அட அட என்ன ஒரு.....

அதை விட கொடுமை அவங்க தூங்கும்போது கூட புன்னகை மாறாமல் தூங்கராங்களே. அந்த புன்னகை தானே என்னை இப்படி தனியா அதுவும் சத்தமா என் பதிவை என்னையே படிக்க வைத்தது.


எனக்கு செம கோவம் என் மீது. ம்ம்ம் என்ன பண்ணறது. பிறகு அந்த அக்காவை தூங்க சொல்லிவிட்டு. மெயில் பாக்கலாம் என்று வந்தால், அங்கே ஒரு நண்பர் online இருந்தார்.

அவரிடம் ஒரு குறை அழுதேன் என்னாப்பா இன்னைக்கி இப்படி ஆகிடுச்சுன்னு?? அதுக்கு அந்த நண்பர் சொன்னார், ஒன்னும் இல்லை ரம்யா உங்க பதிவு கேட்டு மயக்கம் வந்து அவங்க தூங்கிட்டங்கன்னு சொன்னாரு.

சரி என் துக்கம் பகிர்ந்தவுடன் கொஞ்சம் குறைந்து விட்டது.

காலையில் எங்கே போகப்போறாங்க, எப்படியும் நம் பதிவில் ஒன்றாவது அவங்க படிச்சே ஆகவேண்டும் என்று என் மனது கட்டாயமாக கூறி விட்டது. அந்த விஷயம் அவங்களுக்கு எப்படி தெரியும்.


பாவம் அவங்க 8 மணிக்குத்தான் நித்திரையில் இருந்து விழித்தார்கள். இரவில் போட்ட மாத்திரையில் ஓவர் நித்திரை போல இருக்கு.

நானோ குட்டி போட்ட பூனை போல் சுற்றிக் கொண்டிருந்தேன். அவர்கள் எழுந்தவுடன் காபி கொடுத்து ஒரே உபசரிப்பு. (உபசரிப்பு எப்போதும் உண்டு) ஆனால் இன்று ஒரு எதிர்பார்ப்புடன் கூடிய உபசரிப்பு கொஞ்சம் அதிகமாத்தான் இருந்திச்சு. தூக்க கலக்கத்தில் அவர்கள் என் பரபரப்பை கவனிக்க தவறி விட்டார்கள்.


எட்டரை மணிக்கு முன் அவர்கள் படித்து விடவேண்டும். ஏனென்றால் எழுந்தவுடன் அவர்கள் 9 மணிக்கு அவர்களின் உறவினர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் அங்கிருந்து அப்படியே ஊருக்கு சென்று விடுவேன் என்றும் கூறினார்கள். அதனால் தான் அவ்வளவு பரபரப்பு எனக்கு.


முடிந்த வரையில் முயற்சி செய்து பார்த்தேன்.


ஒன்றும் பருப்பு வேகவில்லை.


வந்தவர்கள் ஒருவரையும் நான் இது வரை விட்டதில்லை. வலைச்சரம் வரை படிக்க வைத்து விடுவேன்.


முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன்.


என் தோழிகளின் சிலர் எனக்காக உறக்கம் இல்லாமல் படித்து விட்டு காலையிலே போகும்போது நல்ல ஜுரத்தோடு சென்ற கதையும் உண்டு.
ஜுரம் வரும் அளவிற்கு என்னோட பதிவு பிரபலம்.

ஆனா இவங்க கிட்டே அது நடக்காது போல இருக்கே என்று சோகத்துடன் அலுவலகம் சென்று விட்டேன்.

பாருங்க அதிர்ஷ்டக் காற்று வேகமாக என் பக்கம் வீசுது. ஏனென்றால் அந்த அக்காவின் உறவினர் பையன் வந்து அழைத்து செல்வதாக இருந்த ப்ரோக்ராம் time மாறிப் போய்டுச்சு 9 மணி என்பது 11 மணி ஆகி விட்டதை எனக்கு தெரிவித்தார்கள்.

என் மனதிற்குள் மத்தாப்பு பூப்பூவாய் தெரிந்தது. சந்தோஷத்துடன் அந்த அக்காவுடன் பேசி, ஊருக்கு அனுப்பலாம் என்று வந்தேன். உள்ளூர ஒரு ஆசை, நம் பதிவை படிப்பாங்களோ என்று.

இதுலே பெரிய கூத்து என்னவென்றால், night எப்போ தூங்கினாய் என்று என்னை கேள்வி வேறு. நான் நடந்தவற்றை கூறினேன்.

அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

உன்னோட நான் கம்ப்யூட்டர் பாக்கவே இல்லை என்று கூறிவிட்டார்கள். அட கடவுளே இப்படி என்னை தனியே புலம்ப வைத்து விட்டார்களே என்று மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சரி பரவா இல்லை என்று மிகவும் சோகமான குரலுடன் கூறினேன்.

சரி சரி இப்போ காட்டு நான் படிக்கறேன் என்று கூறினார்கள். எனக்கு லேசா சந்தோஷம். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரி வாங்க அக்கா படிக்கலாம் என்றேன்.


மறுபடியும் என் பதிவை படிக்கச் சொல்லி அவர்களை தூங்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை.


நமது நண்பர் வால்பையனின் "என் கேள்விக்கு என்ன பதில்" "மாட்டியவர் ரம்யா" என்று எக்கோ effect ஒரு பேட்டி வந்துச்சே!!
அதையாவது படிக்கட்டும் என்று அந்த பதிவை படிக்க வைத்தேன்.

இந்த முறை பதிவை நான் படிக்கவில்லை. அவர்களே படித்தார்கள். பாராட்டினார்கள்.

அப்பா நான் பட்ட கஷ்டம் தீர்ந்து விட்டது. இந்த அக்காவும் படித்து விட்டார்கள். உடனே கிளம்பியும் விட்டார்கள்.

தாமதித்தால் அடுத்த டார்ச்செர் ஆரம்பம் ஆகிவிடுமா என்னா??

இல்லைன்னு சொல்லுங்கப்பா!!

சரி அடுத்த பதிவில் சந்திக்கலாம். வர்ட்டா???









497 comments :

«Oldest   ‹Older   201 – 400 of 497   Newer›   Newest»
நசரேயன் said...

யாரவது இருக்கியளா?

நான் டீ குடிக்க போயிட்டேன்

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
வாழ்த்துக்கள் தங்கச்சி ..

(இருந்தாலும் 200 நீங்களே அடிக்ககூடாது.. பரவாயில்லை.. தங்கச்சிதானே..

தங்கச்சி அடிச்சா நான் அடிச்ச மாதிரி... ஐ மீன் பின்னூட்டம்)

//


ரொம்ப நன்றி அண்ணா!

RAMYA said...

//
நசரேயன் said...
யாரவது இருக்கியளா?

நான் டீ குடிக்க போயிட்டேன்

//

எவ்வளவு நேரமா டி குடிச்சீங்க ??

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

யாரவது இருக்கியளா?

நான் டீ குடிக்க போயிட்டேன் //

இருக்கோம் தளபதி...

ஒரு பீர் அடிச்சுட்டு வந்துடறேன்..

ஆரம்பிங்க

RAMYA said...

இங்கே ஒரு ரத்த ஆறே ஓடிகிட்டு இருந்திச்சு.

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
நசரேயன் said...
யாரவது இருக்கியளா?

நான் டீ குடிக்க போயிட்டேன்

//

எவ்வளவு நேரமா டி குடிச்சீங்க ??//

ஒரு 90 இருக்குமா?

நசரேயன் said...

யம்மா தாயே பின்னூட்டத்துக்கு தனி பதிவு வேணும் எங்களுக்கு

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

இங்கே ஒரு ரத்த ஆறே ஓடிகிட்டு இருந்திச்சு. //

ரத்தமா...

ஒரே அசைவமா இருக்கே...

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

யம்மா தாயே பின்னூட்டத்துக்கு தனி பதிவு வேணும் எங்களுக்கு//

ரிப்பிட்டேய்.........

RAMYA said...

//
நசரேயன் said...
யம்மா தாயே பின்னூட்டத்துக்கு தனி பதிவு வேணும் எங்களுக்கு

//

ஆஹா வந்தவுடனே ஆரம்பிச்சுட்டீங்களா??

நசரேயன் said...

//இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார் //

அறுவை சிகிச்சை இல்லாம ஆள் மாறாட்டம் அப்படித்தானே?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...

இங்கே ஒரு ரத்த ஆறே ஓடிகிட்டு இருந்திச்சு. //

ரத்தமா...

ஒரே அசைவமா இருக்கே...

//

ஆமா அண்ணா அசைவம் தான் ஆனாலும்....

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார் //

அறுவை சிகிச்சை இல்லாம ஆள் மாறாட்டம் அப்படித்தானே? //

ஆஹா.. தளபதின்னா தளபதித்தான்

நசரேயன் said...

//அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

அவங்களுக்கு தெரியுமா அங்க நாம கும்மி தான் அடிப்போமுன்னு

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...

இங்கே ஒரு ரத்த ஆறே ஓடிகிட்டு இருந்திச்சு. //

ரத்தமா...

ஒரே அசைவமா இருக்கே...

//

ஆமா அண்ணா அசைவம் தான் ஆனாலும்....\\

ஓ இது சைவ ரத்தமா...

RAMYA said...

//
நசரேயன் said...
//இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார் //

அறுவை சிகிச்சை இல்லாம ஆள் மாறாட்டம் அப்படித்தானே?

//

உங்களுக்குன்னு தோனுது பாருங்க
ராகவன் அண்ணா கொஞ்சம் பாருங்க!!

இராகவன் நைஜிரியா said...

\\ நசரேயன் said...

//அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

அவங்களுக்கு தெரியுமா அங்க நாம கும்மி தான் அடிப்போமுன்னு \\

தெரிஞ்சா உங்கள, என்ன எல்லோரையும் நேரில் வந்து கும்மிடுவாங்க

நசரேயன் said...

//நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க.//

பதிவை மட்டும் படிச்சா அதுக்கு அப்புறம் சிரிக்க முடியாது

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
நசரேயன் said...
//இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அக்கா என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் முதலில் நட்பாக இருந்து இப்போது அக்காவாக மாறியவர்களில் ஒருவர் ஆவார் //

அறுவை சிகிச்சை இல்லாம ஆள் மாறாட்டம் அப்படித்தானே?

//

உங்களுக்குன்னு தோனுது பாருங்க
ராகவன் அண்ணா கொஞ்சம் பாருங்க!! //

அதெல்லாம் பார்த்து.. பின்னூட்டம் போட்டாச்சு

RAMYA said...

//
நசரேயன் said...
//அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

அவங்களுக்கு தெரியுமா அங்க நாம கும்மி தான் அடிப்போமுன்னு

//

நான் சொல்லறது அவங்களுக்கு அவ்வளவா புரியலை.

எங்கே கும்மி அடிப்பீங்க, எல்லாரும் எங்கே meet பண்ணுவீங்கன்னு கேக்கறாங்க.

இதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க நீங்க??

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க.//

பதிவை மட்டும் படிச்சா அதுக்கு அப்புறம் சிரிக்க முடியாது //

இஃகி... இஃகி

நசரேயன் said...

//சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் ஆரம்பிக்கால்ன்னு பேசாமல் அவங்க பேசறதை கேட்டுக் கொண்டு இருந்தேன் //

பேச முடியாத அளவுக்கு வாயிலே நீங்க பண்ணின நெல்லை அல்வாவா

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ நசரேயன் said...

//அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

அவங்களுக்கு தெரியுமா அங்க நாம கும்மி தான் அடிப்போமுன்னு \\

தெரிஞ்சா உங்கள, என்ன எல்லோரையும் நேரில் வந்து கும்மிடுவாங்க

//


ஆஹா அண்ணா சூப்பர் நீங்க சமயோசிதம் அதிகம் உங்களுக்கு.

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
நசரேயன் said...
//அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

அவங்களுக்கு தெரியுமா அங்க நாம கும்மி தான் அடிப்போமுன்னு

//

நான் சொல்லறது அவங்களுக்கு அவ்வளவா புரியலை.

எங்கே கும்மி அடிப்பீங்க, எல்லாரும் எங்கே meet பண்ணுவீங்கன்னு கேக்கறாங்க.

இதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க நீங்க??\\

வெரி சிம்பிள் கொஸ்டின்..

கணினியில் ஜாவா, ஆரக்கிள் அப்படின்னு எதாவது எடுத்து விட வேண்டியதுதானே...

நசரேயன் said...

//இரவு சாப்பாடு முடிஞ்சி, அக்கா வாங்க என் பதிவை பார்க்கலாம்ன்னு சொன்னேன் //

உங்க சாப்பாட்டுக்கு உங்க பதிவு தேவலாமுன்னு அவங்க சொன்னாங்களா

RAMYA said...

//
நசரேயன் said...
//நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க.//

பதிவை மட்டும் படிச்சா அதுக்கு அப்புறம் சிரிக்க முடியாது
//

ஏனப்பா வாயி ஒட்டிக்குமா ??
இதெல்லாம் வேறேயா??

நசரேயன் said...

//அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க. //

ரூம் வைக்க அளவுக்கு அவ்வளவு பெரிய கம்ப்யூட்டர்!!! , அது என்ன ஆயில் மோட்டாரா

RAMYA said...

//
நசரேயன் said...
//சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் ஆரம்பிக்கால்ன்னு பேசாமல் அவங்க பேசறதை கேட்டுக் கொண்டு இருந்தேன் //

பேச முடியாத அளவுக்கு வாயிலே நீங்க பண்ணின நெல்லை அல்வாவா

//

இல்லே பொச பொசா உருண்டை
சாப்பிட்டுகிட்டு இருந்தேன்!!

நசரேயன் said...

//அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க //

மனசுல ஒரு பயத்தோட அப்படித்தானே!!!

விதி என்னத்த சொல்ல

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
நசரேயன் said...
//அந்த அக்கா கிட்டே கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டு, மெதுவா நான் சொன்னேன், அக்கா நான் வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன். //

அவங்களுக்கு தெரியுமா அங்க நாம கும்மி தான் அடிப்போமுன்னு

//

நான் சொல்லறது அவங்களுக்கு அவ்வளவா புரியலை.

எங்கே கும்மி அடிப்பீங்க, எல்லாரும் எங்கே meet பண்ணுவீங்கன்னு கேக்கறாங்க.

இதுக்கு என்ன பதில் சொல்லுவீங்க நீங்க??\\

வெரி சிம்பிள் கொஸ்டின்..

கணினியில் ஜாவா, ஆரக்கிள் அப்படின்னு எதாவது எடுத்து விட வேண்டியதுதானே...

//


அப்படி சொல்லி இருந்தால் என்னை அடிச்சி வச்சிருப்பாங்க அண்ணா!!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
நசரேயன் said...
//சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் ஆரம்பிக்கால்ன்னு பேசாமல் அவங்க பேசறதை கேட்டுக் கொண்டு இருந்தேன் //

பேச முடியாத அளவுக்கு வாயிலே நீங்க பண்ணின நெல்லை அல்வாவா

//

இல்லே பொச பொசா உருண்டை
சாப்பிட்டுகிட்டு இருந்தேன்!!\\

அது என்னங்க பொச பொச உருண்டை..

நசரேயன் said...

//எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, //

உங்களுக்கு ரம் தானே பிடிக்கும், எப்ப பீர் க்கு மாறினீங்க?

RAMYA said...

//
நசரேயன் said...
//இரவு சாப்பாடு முடிஞ்சி, அக்கா வாங்க என் பதிவை பார்க்கலாம்ன்னு சொன்னேன் //

உங்க சாப்பாட்டுக்கு உங்க பதிவு தேவலாமுன்னு அவங்க சொன்னாங்களா

//

நான் சமைக்கலையே இஃஇ கிஃகி!!

RAMYA said...

//
நசரேயன் said...
//அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க. //

ரூம் வைக்க அளவுக்கு அவ்வளவு பெரிய கம்ப்யூட்டர்!!! , அது என்ன ஆயில் மோட்டாரா

//

Super Computer!!

நசரேயன் said...

//ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு //

நாங்க அனுபவிக்கிற கொடுமை யை அவங்களும் அனுபவிக்கணுமா

RAMYA said...

//
நசரேயன் said...
//அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க //

மனசுல ஒரு பயத்தோட அப்படித்தானே!!!

விதி என்னத்த சொல்ல

//

அவங்க வந்த நேரம் அவங்களுக்கு சரி இல்லைன்னு அப்போ நினைச்சிருப்பாங்க.

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
நசரேயன் said...
//சரி கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் ஆரம்பிக்கால்ன்னு பேசாமல் அவங்க பேசறதை கேட்டுக் கொண்டு இருந்தேன் //

பேச முடியாத அளவுக்கு வாயிலே நீங்க பண்ணின நெல்லை அல்வாவா

//

இல்லே பொச பொசா உருண்டை
சாப்பிட்டுகிட்டு இருந்தேன்!!\\

அது என்னங்க பொச பொச உருண்டை..
//

அண்ணா அது பொட்டுகடலை உருண்டை.

பாசிபருப்பு உருண்டை மாதிரி இருக்கும்.

இது சேலத்தில் ரொம்ப ஸ்பெஷல்

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
நசரேயன் said...
//அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க //

மனசுல ஒரு பயத்தோட அப்படித்தானே!!!

விதி என்னத்த சொல்ல

//

அவங்க வந்த நேரம் அவங்களுக்கு சரி இல்லைன்னு அப்போ நினைச்சிருப்பாங்க.\\

விதி வலியது, கொடியது அதை மாற்ற யாராலும் முடியாது

RAMYA said...

//
நசரேயன் said...
//எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, //

உங்களுக்கு ரம் தானே பிடிக்கும், எப்ப பீர் க்கு மாறினீங்க?

//

ஆரம்பிச்சுட்டாரு அண்ணா !!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...
அண்ணா அது பொட்டுகடலை உருண்டை.

பாசிபருப்பு உருண்டை மாதிரி இருக்கும்.

இது சேலத்தில் ரொம்ப ஸ்பெஷல்\\

வெரி குட்...

இப்ப எனக்கு பொச பொச உருண்டை வேணும்

RAMYA said...

//
நசரேயன் said...
//ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு //

நாங்க அனுபவிக்கிற கொடுமை யை அவங்களும் அனுபவிக்கணுமா

//

என்னா பண்ணறது விதி வலியது.

நசரேயன் said...

//கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்த உடனே ஒரே பரபரப்பு எதை மொதல்லே படிச்சு காட்டுவதுன்னு //

உங்களுக்கு வந்த பின்னூட்டத்தை படிக்க வேண்டிய தானே

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
நசரேயன் said...
//எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, //

உங்களுக்கு ரம் தானே பிடிக்கும், எப்ப பீர் க்கு மாறினீங்க?

//

ஆரம்பிச்சுட்டாரு அண்ணா !!\\

தளபதி.. நீங்களுமா...

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...
அண்ணா அது பொட்டுகடலை உருண்டை.

பாசிபருப்பு உருண்டை மாதிரி இருக்கும்.

இது சேலத்தில் ரொம்ப ஸ்பெஷல்\\

வெரி குட்...

இப்ப எனக்கு பொச பொச உருண்டை வேணும்

//

நீங்க இங்கே வரும்போது செய்து தரச்சொல்லறேன்!!

நசரேயன் said...

//
அப்புறம் எப்படியோ எதுக்கும் சிரிக்கட்டும் என்று "வைகைப்புயலும் சுப்பிரமணியும்" என்ற பதிவை படிச்சு காட்டினேன். //

அது என்ன எதுக்கும் சிரிக்கட்டும்!!

RAMYA said...

//
நசரேயன் said...
//கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்த உடனே ஒரே பரபரப்பு எதை மொதல்லே படிச்சு காட்டுவதுன்னு //

உங்களுக்கு வந்த பின்னூட்டத்தை படிக்க வேண்டிய தானே

//

பதிவு முடிஞ்சாத்தானே பின்னூட்டம் படிக்கறது??

பதிவே படிக்கலையே, என்னைய நோக அடிச்சுட்டாங்களே!!

நசரேயன் said...

//முகத்தில் எந்த விதமான மாறுதல்கள் ஏற்படவில்லை, சிரிக்கவும் இல்லை. //

அவங்க தெலுங்கா ?

RAMYA said...

//
நசரேயன் said...
//
அப்புறம் எப்படியோ எதுக்கும் சிரிக்கட்டும் என்று "வைகைப்புயலும் சுப்பிரமணியும்" என்ற பதிவை படிச்சு காட்டினேன். //

அது என்ன எதுக்கும் சிரிக்கட்டும்!!

//

ஒரு நல்ல எண்ணம் தான்!!

RAMYA said...

//
நசரேயன் said...
//முகத்தில் எந்த விதமான மாறுதல்கள் ஏற்படவில்லை, சிரிக்கவும் இல்லை. //

அவங்க தெலுங்கா
//

நான்தான் தெலுங்கு அவங்க தமிழ் தான்.

நசரேயன் said...

//எனக்கு ஒன்றுமே புரியவில்லை.//

அங்கே என்ன பாடமா நடத்துறீங்க?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
நசரேயன் said...
//அவங்க என்னான்னு கேக்காமே சரி வான்னு என் கூட கம்ப்யூட்டர் ரூம்முக்கு வந்தாங்க //

மனசுல ஒரு பயத்தோட அப்படித்தானே!!!

விதி என்னத்த சொல்ல

//

அவங்க வந்த நேரம் அவங்களுக்கு சரி இல்லைன்னு அப்போ நினைச்சிருப்பாங்க.\\

விதி வலியது, கொடியது அதை மாற்ற யாராலும் முடியாது

//

ஆமாம் நீங்க சரியா சொன்னீங்க!!

RAMYA said...

//
நசரேயன் said...
//எனக்கு ஒன்றுமே புரியவில்லை.//

அங்கே என்ன பாடமா நடத்துறீங்க?

//

இல்லே பதிவு படிச்ச்கிகிட்டு இருந்தேன்
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

நசரேயன் said...

//ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அக்கா வேறே படிக்கவான்னு கேட்டேன், //

ஒன்னே போதுமுன்னு..என்ன ஆளை விடுன்னு .. கால்ல விழுந்துட்டாங்க சரியா?

நசரேயன் said...

//அதற்கு அவர்கள் ம்ம் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அந்த ஒற்றைச் சொல் ம்ம்ஐ சரி என்று நினைத்து விட்டு //

ரெண்டு ம்ம் சொன்னா என்ன பண்ணுவீங்க

நசரேயன் said...

//பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.
ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. //

அது பதிவா இல்லை விமானமா?

டேக் ஆப் ஆகி நியூ யார்க் பக்கம் வங்க, உங்க பதிவை படிச்ச ஓசியிலே ஊரு சுத்தி பாக்கலாமே

RAMYA said...

//
நசரேயன் said...
//ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அக்கா வேறே படிக்கவான்னு கேட்டேன், //

ஒன்னே போதுமுன்னு..என்ன ஆளை விடுன்னு .. கால்ல விழுந்துட்டாங்க சரியா?

//

இல்லை நசரேயன் அவங்க தூங்கிட்டாங்க.

RAMYA said...

//
நசரேயன் said...
//அதற்கு அவர்கள் ம்ம் என்று மட்டும் சொன்னார்கள். நானும் அந்த ஒற்றைச் சொல் ம்ம்ஐ சரி என்று நினைத்து விட்டு //

ரெண்டு ம்ம் சொன்னா என்ன பண்ணுவீங்க

//

மறுமடியும் என் பதிவை படிப்பேன்

நசரேயன் said...

//அந்த அக்காவிற்கும் ரொம்ப பிடித்து விட்டது போல என்று நினைத்தவுடன் என் குரலில் புது உற்ச்சாகம் தொற்றிக் கொண்டது //

ரம் அடிச்ச மாதிரி இல்ல "ரம்" யா

RAMYA said...

//
//பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.
ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. //

அது பதிவா இல்லை விமானமா?

டேக் ஆப் ஆகி நியூ யார்க் பக்கம் வங்க, உங்க பதிவை படிச்ச ஓசியிலே ஊரு சுத்தி பாக்கலாமே

//

வரோம் ஒருநாள் வந்து நிப்போம்மில்லே!!

நசரேயன் said...

//கொஞ்சம் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன்.//

எனக்கு கேட்கவே இல்லை

RAMYA said...

//
நசரேயன் said...
//அந்த அக்காவிற்கும் ரொம்ப பிடித்து விட்டது போல என்று நினைத்தவுடன் என் குரலில் புது உற்ச்சாகம் தொற்றிக் கொண்டது //

ரம் அடிச்ச மாதிரி இல்ல "ரம்" யா

//

அட அது இல்லேப்பா அவங்க கேட்டுகிட்டு இருக்காங்கன்னு ஒரே சந்தோஷம்!!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
//பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.
ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. //

அது பதிவா இல்லை விமானமா?

டேக் ஆப் ஆகி நியூ யார்க் பக்கம் வங்க, உங்க பதிவை படிச்ச ஓசியிலே ஊரு சுத்தி பாக்கலாமே

//

வரோம் ஒருநாள் வந்து நிப்போம்மில்லே!!\\

ஆனா நானும் வருவேன்...

ஒரு விசாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க

நசரேயன் said...

//அவர்களிடம் இருந்து எந்த வித பகிர்தலும் இல்லை. மெதுவாக திரும்பி பார்த்தேன்.அதே சிரிப்பு. ஏன் இப்படி சிரிக்கின்றார்கள் என்று நன்றாக திரும்பி பார்த்தேன். //

சோக சிரிப்பா?

RAMYA said...

//
நசரேயன் said...
//கொஞ்சம் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன்.//

எனக்கு கேட்கவே இல்லை
//

நீங்க ஒன்னும் எங்க வீட்டுலே இல்லே அதான் கேக்கலை.

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் லேட்டா?

நசரேயன் said...

//அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது //

என் டி.வி யிலே பேய் வீடு படமா?

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
//பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.
ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. //

அது பதிவா இல்லை விமானமா?

டேக் ஆப் ஆகி நியூ யார்க் பக்கம் வங்க, உங்க பதிவை படிச்ச ஓசியிலே ஊரு சுத்தி பாக்கலாமே

//

வரோம் ஒருநாள் வந்து நிப்போம்மில்லே!!\\

ஆனா நானும் வருவேன்...

ஒரு விசாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க

//

வாங்க வாங்க நம்ப ரெண்டு பேரும் போகலாம் அண்ணா.

RAMYA said...

//
நசரேயன் said...
//அவர்களிடம் இருந்து எந்த வித பகிர்தலும் இல்லை. மெதுவாக திரும்பி பார்த்தேன்.அதே சிரிப்பு. ஏன் இப்படி சிரிக்கின்றார்கள் என்று நன்றாக திரும்பி பார்த்தேன். //

சோக சிரிப்பா?

//


இல்லே சிரிச்சுகிட்டே தூங்கிட்டாங்க !!

நசரேயன் said...

//என்ன பயந்து விட்டீர்களா?? ஒன்னும் சீரியஸ் மேட்டேர் இல்லே. //

பதிவை படிக்க வரைக்கும் சீரியஸ் இருந்து இருக்காது

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
நான் தான் லேட்டா?

//

வாங்க வாங்க அணிமா வணக்கம்!!

RAMYA said...

//
நசரேயன் said...
//அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது //

என் டி.வி யிலே பேய் வீடு படமா?

//

ஹையோ ஹையோ ஹையோ ஹையோ!!

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...

நான் தான் லேட்டா?//

லேட்டோ லேட்..

நசரேயன் said...

//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன் //

நல்ல வேளை தூக்கம், நீங்க சத்தமா படிச்சதிலே அந்த ஏரியா வே நல்ல தூங்கி இருக்குமே

RAMYA said...

//
நசரேயன் said...
//என்ன பயந்து விட்டீர்களா?? ஒன்னும் சீரியஸ் மேட்டேர் இல்லே. //

பதிவை படிக்க வரைக்கும் சீரியஸ் இருந்து இருக்காது

//

பயந்துடுவீங்களோன்னு ஒரு எச்சரிக்கை தான்!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// உருப்புடாதது_அணிமா said...

நான் தான் லேட்டா?//

லேட்டோ லேட்..

//

ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா!!

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
//பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.
ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. //

அது பதிவா இல்லை விமானமா?

டேக் ஆப் ஆகி நியூ யார்க் பக்கம் வங்க, உங்க பதிவை படிச்ச ஓசியிலே ஊரு சுத்தி பாக்கலாமே

//

வரோம் ஒருநாள் வந்து நிப்போம்மில்லே!!\\

ஆனா நானும் வருவேன்...

ஒரு விசாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க

//

வாங்க வாங்க நம்ப ரெண்டு பேரும் போகலாம் அண்ணா.//

தளபதி... ஒரு 4 டிக்கெட் போடுங்க..
உடனே வந்துடரோம்..

we travel only on business class.

RAMYA said...

//
நசரேயன் said...
//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன் //

நல்ல வேளை தூக்கம், நீங்க சத்தமா படிச்சதிலே அந்த ஏரியா வே நல்ல தூங்கி இருக்குமே

//

நசரேயன்!! நான் பாடலே, பதிவு படிச்சேன்.

பாடினாதான் தூங்குவாங்க படிச்சா கூடவா தூங்குவாங்க??

ஹையோ ஹையோ இது கூட தெரியலை.

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன் //

நல்ல வேளை தூக்கம், நீங்க சத்தமா படிச்சதிலே அந்த ஏரியா வே நல்ல தூங்கி இருக்குமே //

அவங்க வீட்டு பக்கத்தில் ஏரி ஒன்று இல்லைங்களே..

நசரேயன் said...

//கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம். //

இனிமேல தூக்கம் வரலைனா உங்க பதிவை படிக்கணும் அப்படித்தானே

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
//பதிவை படிக்க ஆரம்பித்தேன். படிச்சுகிட்டே லேசா அவர்களை திரும்பி பார்த்தேன், ஒன்றும் மாற்றம் இல்லை, சிரித்த முகமாக அமர்ந்து இருந்தார்கள்.
ok ok நம்ம பதிவு டேக் ஆப் ஆகிவிட்டது. //

அது பதிவா இல்லை விமானமா?

டேக் ஆப் ஆகி நியூ யார்க் பக்கம் வங்க, உங்க பதிவை படிச்ச ஓசியிலே ஊரு சுத்தி பாக்கலாமே

//

வரோம் ஒருநாள் வந்து நிப்போம்மில்லே!!\\

ஆனா நானும் வருவேன்...

ஒரு விசாவுக்கு ஏற்பாடு பண்ணுங்க

//

வாங்க வாங்க நம்ப ரெண்டு பேரும் போகலாம் அண்ணா.//

தளபதி... ஒரு 4 டிக்கெட் போடுங்க..
உடனே வந்துடரோம்..

we travel only on business class.

//

இதே படிச்சுட்டு நசரேயன் essssssssssss ஆய்டுவாரு!!

நசரேயன் said...

//தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன்.

அட அட என்ன ஒரு.....//

அறிவு கொழுந்து

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// நசரேயன் said...

//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன் //

நல்ல வேளை தூக்கம், நீங்க சத்தமா படிச்சதிலே அந்த ஏரியா வே நல்ல தூங்கி இருக்குமே //

அவங்க வீட்டு பக்கத்தில் ஏரி ஒன்று இல்லைங்களே..

//

அதானே நான் இதை கவனிக்க தவறி விட்டேனே!!

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் இந்த ஆட்டைக்கு வரல

நசரேயன் said...

//அதை விட கொடுமை அவங்க தூங்கும்போது கூட புன்னகை மாறாமல் தூங்கராங்களே. //

சோகமா இருந்தா அதுக்கு ரெண்டு பதிவை படிச்சி தொல்லை பண்ணுவீங்கன்னு நினைச்சாங்களோ என்னவோ !!!

RAMYA said...

//
நசரேயன் said...
//கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம். //

இனிமேல தூக்கம் வரலைனா உங்க பதிவை படிக்கணும் அப்படித்தானே

//

சிரிப்பாங்கன்னு படிக்கச் சொன்னேன்
அவங்க தூங்கிட்டாங்க!!

இராகவன் நைஜிரியா said...

//
இதே படிச்சுட்டு நசரேயன் essssssssssss ஆய்டுவாரு!! //

தளபதி அப்படி ஆவாருன்னு நான் நினைக்கவில்லை..

RAMYA said...

//
நசரேயன் said...
//தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன்.

அட அட என்ன ஒரு.....//

அறிவு கொழுந்து

//

நன்றி நண்பா நான் ரொம்ப அறிவாளின்னு சொன்னதுக்கு!!

நசரேயன் said...

//அந்த புன்னகை தானே என்னை இப்படி தனியா அதுவும் சத்தமா என் பதிவை என்னையே படிக்க வைத்தது. //

மைக் வச்சி படிச்சி இருந்தா ஊரே சந்தோசமா இருந்து இருக்குமே

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
நான் இந்த ஆட்டைக்கு வரல

//

அப்படி எல்லாம் சொல்லக் கூடாது!!

நசரேயன் said...

//எனக்கு செம கோவம் என் மீது//

தெரிஞ்சி இருந்தா ஆட்டோ வில் ஆள் அனுப்பி இருப்பேன்

RAMYA said...

//
நசரேயன் said...
//அதை விட கொடுமை அவங்க தூங்கும்போது கூட புன்னகை மாறாமல் தூங்கராங்களே. //

சோகமா இருந்தா அதுக்கு ரெண்டு பதிவை படிச்சி தொல்லை பண்ணுவீங்கன்னு நினைச்சாங்களோ என்னவோ !!!

//

சரியா சொன்னீங்க நசரேயன்
அப்படித்தான் இருக்கும் !!

இராகவன் நைஜிரியா said...

// உருப்புடாதது_அணிமா said...

நான் இந்த ஆட்டைக்கு வரல //

இந்த தம்பி அணிமாவுக்கு என்ன ஆச்சு... ஊருக்கு போய்விட்டு வந்ததில் இருந்து ரொம்ப மாறிப் போய்விட்டாரு........

RAMYA said...

// இராகவன் நைஜிரியா said...
//
இதே படிச்சுட்டு நசரேயன் essssssssssss ஆய்டுவாரு!! //

தளபதி அப்படி ஆவாருன்னு நான் நினைக்கவில்லை..
//

அப்படியா சொல்லறீங்க ???

இராகவன் நைஜிரியா said...

\\ நசரேயன் said...

//எனக்கு செம கோவம் என் மீது//

தெரிஞ்சி இருந்தா ஆட்டோ வில் ஆள் அனுப்பி இருப்பேன் \\

இந்த மாதிரி உப தொழில் எல்லாம் நடக்குதுங்களா...

RAMYA said...

//
நசரேயன் said...
//அந்த புன்னகை தானே என்னை இப்படி தனியா அதுவும் சத்தமா என் பதிவை என்னையே படிக்க வைத்தது. //

மைக் வச்சி படிச்சி இருந்தா ஊரே சந்தோசமா இருந்து இருக்குமே

//

நீங்க இங்கே வரும்போது அப்படி படிக்கறேன் சரியா??

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

// இராகவன் நைஜிரியா said...
//
இதே படிச்சுட்டு நசரேயன் essssssssssss ஆய்டுவாரு!! //

தளபதி அப்படி ஆவாருன்னு நான் நினைக்கவில்லை..
//

அப்படியா சொல்லறீங்க ??? //

ஆமாம்...

ஆனா அவருத்தான் இதுக்கு பதில் சொல்லவே மாட்டேங்கிறாரு..

RAMYA said...

//
நசரேயன் said...
//எனக்கு செம கோவம் என் மீது//

தெரிஞ்சி இருந்தா ஆட்டோ வில் ஆள் அனுப்பி இருப்பேன்

//

என்னைய அடிக்கவா?? நான் பாவம் இல்லையா??

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// உருப்புடாதது_அணிமா said...

நான் இந்த ஆட்டைக்கு வரல //

இந்த தம்பி அணிமாவுக்கு என்ன ஆச்சு... ஊருக்கு போய்விட்டு வந்ததில் இருந்து ரொம்ப மாறிப் போய்விட்டாரு........
//

அதான் எனக்கும் ஒன்னும் புரியலை அண்ணா!!!

நசரேயன் said...

//என்ன பண்ணறது. பிறகு அந்த அக்காவை தூங்க சொல்லிவிட்டு. //

அப்ப அவங்க தூங்கலை, தூ ங்கின மாதிரி நடிச்சி இருக்காங்க
வீட்டுக்கு வந்தவகளை இப்படியா கொடுமை படுத்துவது

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ நசரேயன் said...

//எனக்கு செம கோவம் என் மீது//

தெரிஞ்சி இருந்தா ஆட்டோ வில் ஆள் அனுப்பி இருப்பேன் \\

இந்த மாதிரி உப தொழில் எல்லாம் நடக்குதுங்களா...

//


இருக்கும் அப்புறம் மாடு வேறே!!

நசரேயன் said...

//தளபதி... ஒரு 4 டிக்கெட் போடுங்க..
உடனே வந்துடரோம்..

we travel only on business class.//

அடுத்த வாரம் டிக்கெட் வருது

RAMYA said...

//
நசரேயன் said...
//என்ன பண்ணறது. பிறகு அந்த அக்காவை தூங்க சொல்லிவிட்டு. //

அப்ப அவங்க தூங்கலை, தூ ங்கின மாதிரி நடிச்சி இருக்காங்க
வீட்டுக்கு வந்தவகளை இப்படியா கொடுமை படுத்துவது

//

அப்படி பண்ணலைன்னா எப்படி நான் எழுதறதை பட்டி தொட்டில் எல்லாம் பரப்பறது அதுக்குதான்

RAMYA said...

//
நசரேயன் said...
//தளபதி... ஒரு 4 டிக்கெட் போடுங்க..
உடனே வந்துடரோம்..

we travel only on business class.//

அடுத்த வாரம் டிக்கெட் வருது

//

யாருக்கு அது உங்களுக்கு.

நாங்க எண்களுக்கு டிக்கெட் போட சொல்லறோம் .

நசரேயன் said...

//மெயில் பாக்கலாம் என்று வந்தால், அங்கே ஒரு நண்பர் online இருந்தார். //

மெயில் ல சொல்ல வேண்டியதை எல்லாம் இங்கே சொல்லுறோம், அப்புறம் மெயில் வேரையா?

இராகவன் நைஜிரியா said...

\\ நசரேயன் said...

//தளபதி... ஒரு 4 டிக்கெட் போடுங்க..
உடனே வந்துடரோம்..

we travel only on business class.//

அடுத்த வாரம் டிக்கெட் வருது \\

நன்றி...

தளபதி நசரேயன் வாழ்க
அவர்தம் கொற்றம் வளர்க.

எங்கள் தளபதின்னா தளபதித்தான்..
அவரை அடிச்சுக்க யாருமே கிடையாது..

நசரேயன் said...

//அவரிடம் ஒரு குறை அழுதேன் //

online la எப்படி அழுவீங்க

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
நசரேயன் said...
//தளபதி... ஒரு 4 டிக்கெட் போடுங்க..
உடனே வந்துடரோம்..

we travel only on business class.//

அடுத்த வாரம் டிக்கெட் வருது

//

யாருக்கு அது உங்களுக்கு.

நாங்க எண்களுக்கு டிக்கெட் போட சொல்லறோம் . //

ஓ இதுக்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்குங்களா?

RAMYA said...

//
நசரேயன் said...
//மெயில் பாக்கலாம் என்று வந்தால், அங்கே ஒரு நண்பர் online இருந்தார். //

மெயில் ல சொல்ல வேண்டியதை எல்லாம் இங்கே சொல்லுறோம், அப்புறம் மெயில் வேரையா?

//

நீங்க தான் ஜிமெயில் வரதே இல்லையே!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ நசரேயன் said...

//தளபதி... ஒரு 4 டிக்கெட் போடுங்க..
உடனே வந்துடரோம்..

we travel only on business class.//

அடுத்த வாரம் டிக்கெட் வருது \\

நன்றி...

தளபதி நசரேயன் வாழ்க
அவர்தம் கொற்றம் வளர்க.

எங்கள் தளபதின்னா தளபதித்தான்..
அவரை அடிச்சுக்க யாருமே கிடையாது..
//

REPEEEEEEEEETTAAAAAAAAAI

RAMYA said...

//
நசரேயன் said...
//அவரிடம் ஒரு குறை அழுதேன் //

online la எப்படி அழுவீங்க

//

ஒன்னு அழுதேன் !!

நசரேயன் said...

//என்னாப்பா இன்னைக்கி இப்படி ஆகிடுச்சுன்னு?? அதுக்கு அந்த நண்பர் சொன்னார், ஒன்னும் இல்லை ரம்யா உங்க பதிவு கேட்டு மயக்கம் வந்து அவங்க தூங்கிட்டங்கன்னு சொன்னாரு. //

இருக்கும்.. இருக்கும்

நசரேயன் said...

//காலையில் எங்கே போகப்போறாங்க, எப்படியும் நம் பதிவில் ஒன்றாவது அவங்க படிச்சே ஆகவேண்டும் என்று என் மனது கட்டாயமாக கூறி விட்டது. //

விடாது கருப்பு மாதிரி விடாது பூலான் தேவி ன்னு அடுத்து ஒரு பட்டம்

RAMYA said...

//
நசரேயன் said...
//என்னாப்பா இன்னைக்கி இப்படி ஆகிடுச்சுன்னு?? அதுக்கு அந்த நண்பர் சொன்னார், ஒன்னும் இல்லை ரம்யா உங்க பதிவு கேட்டு மயக்கம் வந்து அவங்க தூங்கிட்டங்கன்னு சொன்னாரு. //

இருக்கும்.. இருக்கும்

//

ஆமா அப்படித்தான் அந்த நண்பர் சொன்னாரு!!

RAMYA said...

//
நசரேயன் said...
//காலையில் எங்கே போகப்போறாங்க, எப்படியும் நம் பதிவில் ஒன்றாவது அவங்க படிச்சே ஆகவேண்டும் என்று என் மனது கட்டாயமாக கூறி விட்டது. //

விடாது கருப்பு மாதிரி விடாது பூலான் தேவி ன்னு அடுத்து ஒரு பட்டம்

//

நன்றி ஒரே பட்டப் பெயரா கொடுக்கறீங்க.

நன்றி நன்றி நன்றி

நசரேயன் said...

//நீங்க தான் ஜிமெயில் வரதே இல்லையே!!//

அலுவலகம், வீடு ரெண்டு இடத்திலயும் அனுமதி இல்லை -

அலுவலகம் - policy
வீடு - என் மகள்

நசரேயன் said...

10 min மீண்டும் வாரேன், if you are awake

RAMYA said...

//
நசரேயன் said...
//நீங்க தான் ஜிமெயில் வரதே இல்லையே!!//

அலுவலகம், வீடு ரெண்டு இடத்திலயும் அனுமதி இல்லை -

அலுவலகம் - policy
வீடு - என் மகள்

//

ஒ குட்டி மஹாராணி ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல.

வேணும் வேணும் உங்களுக்கு நல்லா

RAMYA said...

//
நசரேயன் said...
10 min மீண்டும் வாரேன், if you are awake

//

வாங்க வாங்க நான் தூங்க போறேன்
எனக்கு கண்ணு தெயரியலை.

குத்து மதிப்பா தான் உக்காந்து இருக்கேன்

நசரேயன் said...

தூங்க போங்கோ.. அப்புறம் பார்க்கலாம்

Prabhu said...

ஹைய்யோ.... எப்படிங்க, இத்தன பின்னூட்டம்..... ஆனா ஓட்டு ஒண்ணுதான் இருக்கு. ரம்யாக்கு பின்னுட்டம் போடுறவங்க ஒருத்தவங்க கூட ஓட்டு போடலையா! நான் போட்டுடேன்.

priyamudanprabu said...

/////


அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.

எப்போ தூங்கினாங்கன்னே எனக்கு தெரியலை. தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன்.

/////


ஆளே இல்லாத காடையில யாருக்கு டீ ஆத்துனீங்க ?!!??!!?!
ஹ ஹ ஹ
( அப்ப உங்க முகத்த பாத்திருக்கனுமே ......))

நிஜமா நல்லவன் said...

me the 327

குடுகுடுப்பை said...

இங்கேயும் அப்பாவித்தொல்லையா

குடுகுடுப்பை said...

தாலாட்டுப்பதிவெழுதும் தங்க மகள் வாழ்க

புதியவன் said...

//ரம்யாவின் சோகம் !!!//

ரம்யாவிற்கு என்ன சோகம் என்று படிக்க ஆரம்பித்தால்...ரொம்ப காமெடியா இருக்கே...

அண்ணன் வணங்காமுடி said...

என்ன நடக்குது இங்க...

பின்னூட்டம் மழை போல் பெய்துகொண்டிருக்கிறது...

என்ன கொடுமை சரவணன் இது.

ரம்யா அக்கா எல்லாரையும் தனியா கவனிக்கராங்களா.

அக்கா என்ன அமௌன்ட் செலவு பண்ணினீங்க. பின்னூட்டம் இந்த அளவுக்கு விழுது.

கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் முடியுமான்னு பாப்போம்ள

இந்த மாதிரி பின்னூட்டம் கொஞ்சம் எங்க பதிவுகளையும் போடலாம்ல

புதியவன் said...

//ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு.//

இது நல்ல ஐடியாவா இருக்கே...நீங்க இது மாதிரி செய்யலாம் தப்பில்லை...நான் இதே மாதிரி செய்தால் புதியவன் வீட்டுப்பக்கம் யாரும் போய்டாதீங்கப்பா...கவிதை சொல்லியே கொல்லுரார்ன்னு சொல்லிடுவாங்களே ரம்யா...

புதியவன் said...

//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
எப்போ தூங்கினாங்கன்னே எனக்கு தெரியலை. தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன். //

ஹா...ஹா...ஹா...படித்ததும்...முடியல...சிரிக்கக்காம இருக்க முடியல...

மேவி... said...

இதே மாதிரி தானுங்க நான் என் அண்ணன் மகளை பற்றி போட்டோ கவிதை என் பதிவு ல போட்டு இருந்தேன் .....
சரி அண்ணி அதை படிச்சா சந்தோஷ படுவங்குன்னு அவகளை அந்த பதிவை படிக்க வைத்தேன்.....
ரொம்ப நேரம் ஸ்க்ரீன் யை பார்த்த பிறகு சொன்னாங்க
"மேவி போட்டோ வுக்கு பக்கத்தில எதோ எழுதி இருக்கே .... அது என்ன ??"

அப்புறும் தான் தெரிந்தது அவங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு

புதியவன் said...

//அவர்கள் எழுந்தவுடன் காபி கொடுத்து ஒரே உபசரிப்பு. (உபசரிப்பு எப்போதும் உண்டு)//

வீட்டிற்கு வாந்தால் நல்ல உபசரிப்புடன் காபி கிடைக்கும் அப்படித்தானே ரம்யா...?

புதியவன் said...

//என் தோழிகளின் சிலர் எனக்காக உறக்கம் இல்லாமல் படித்து விட்டு காலையிலே போகும்போது நல்ல ஜுரத்தோடு சென்ற கதையும் உண்டு.//

நல்ல வேளை எனக்கு உங்கள் பதிவை படித்துவிட்டு சிரிப்பு தான் வந்திருக்கு...இது வரை ஜுரமெல்லாம் வரவில்லை...

புதியவன் said...

//அப்பா நான் பட்ட கஷ்டம் தீர்ந்து விட்டது. இந்த அக்காவும் படித்து விட்டார்கள். உடனே கிளம்பியும் விட்டார்கள்.//

அப்பாடா...பட்ட கஷ்டத்திற்கு ஒரு வழியா பலன் கிடச்சிருச்சு...

புதியவன் said...

//தாமதித்தால் அடுத்த டார்ச்செர் ஆரம்பம் ஆகிவிடுமா என்னா??

இல்லைன்னு சொல்லுங்கப்பா!!//

இல்லை...இல்லை...இல்லை...

நல்ல சுவாரசியமான பதிவு ரம்யா...மிகவும் ரசித்தேன்...

நட்புடன் ஜமால் said...

மிக அருமை ரம்யா!

அடடடா சுனாமிகள் வரும் போது நாம இல்லாம போய்ட்டோமே!

நட்புடன் ஜமால் said...

உங்க லோகோ அருமைங்க ...

நட்புடன் ஜமால் said...

\\நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க. \\

அதான் தெளிவா சொல்றாங்களே! அப்புறம் இன்னா!

நட்புடன் ஜமால் said...

என்ன தனியா இளநீர் வெட்ட விட்டுட்டீங்க - சரி சரி

இருக்கட்டும்

என்ன ‘நல்லவன்னு’ சொல்றவரைக்கும் அடிச்சி ஆடுவோம்

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு. \\

ஹா ஹா ஹா என்று சிரிக்கத்தோன்றினாலும்

சிந்தித்து(உனக்கேதுடா ...) பார்த்தால்
உங்கள் பதிவை படிக்காதவர்கள், நல்ல ஒரு புத்தகத்தின் அறிமுகம் கிடைக்காதவர்களே!

நட்புடன் ஜமால் said...

\\கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்த உடனே ஒரே பரபரப்பு \\

உங்களின் பரபரப்பு இதனை படிக்கையில் உணர முடிகிறது.

நட்புடன் ஜமால் said...

\\"வைகைப்புயலும் சுப்பிரமணியும்" \\

பேர கேட்டாலே அதிருதுன்னு சொல்லுவாங்கள்ள அது மாதிரி

இந்த பதிவ பற்றி நினைத்தாலே சிரிப்பு அலை பொங்குது உள்ளே!

நட்புடன் ஜமால் said...

\\ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, அக்கா வேறே படிக்கவான்னு கேட்டேன்\\

வாலு வாலு ...

நட்புடன் ஜமால் said...

\\ கொஞ்சம் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன்\\

தூக்கத்தில யாரோ கூப்பிட்ட மாதிரி சத்தம் கேட்டது

அது நீங்க தானா!

நட்புடன் ஜமால் said...

\\அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. என்ன பயந்து விட்டீர்களா?? \\

ஹா ஹா ஹா

ரம்யா சொல்லி நாங்க பயப்படறதா

ஹையோ ஆட்டோ சத்தம் கேட்குதே

எனக்கு பயந்து வருதே

நட்புடன் ஜமால் said...

\\என் பதிவை என்னையே படிக்க வைத்தது\\

ஹா ஹா ஹா

ரம்யா! ஒன்னு அடிக்கடி சொல்வியே!

அதையும் இதையும் நினைத்தேன்

ஒரே சிரிப்பு தான் போ!

நட்புடன் ஜமால் said...

\\காலையில் எங்கே போகப்போறாங்க, எப்படியும் நம் பதிவில் ஒன்றாவது அவங்க படிச்சே ஆகவேண்டும் என்று என் மனது கட்டாயமாக கூறி விட்டது. அந்த விஷயம் அவங்களுக்கு எப்படி தெரியும். \\

ஹையோ ஹையோ

நட்புடன் ஜமால் said...

\\அவர்கள் எழுந்தவுடன் காபி கொடுத்து ஒரே உபசரிப்பு\\

லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்

டண்டனக்கரா!

நட்புடன் ஜமால் said...

\\முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன்\\

நன்றிங்கோ!

நட்புடன் ஜமால் said...

\\சிலர் எனக்காக உறக்கம் இல்லாமல் படித்து விட்டு காலையிலே போகும்போது நல்ல ஜுரத்தோடு சென்ற கதையும் உண்டு.ஜுரம் வரும் அளவிற்கு என்னோட பதிவு பிரபலம்\\

எப்பா! நல்லா சிரிப்பு சிரிப்பா வருது

Rajeswari said...

என்னது இது ..எல்லோர் வீட்டிலையும் இந்த கதைதான் ஓடுது போல..நான் பொலம்பநும்நு நினைச்சதை நீங்க புலம்பிடீங்க..சரி விடுங்க ..ஆனா ஒரு சந்தோசம் ரம்யா...மனம் தளராமல் நைட் அந்த அக்காவுக்கு படிச்சு கான்பிசீங்கலே..ஹ ஹா ஹா .....கிரேட்

நட்புடன் ஜமால் said...

\\தாமதித்தால் அடுத்த டார்ச்செர் ஆரம்பம் ஆகிவிடுமா என்னா??

இல்லைன்னு சொல்லுங்கப்பா!!\\

போடாட்டி தான் டார்ச்செர் எங்களுக்கு

சீக்கிரம் வைகை வேண்டும்!

வேத்தியன் said...

:-)
சுவையான அனுபவம்...

வேத்தியன் said...

என்ன சுவை???
அதான் நகைச்சுவை...
:-)))

வேத்தியன் said...

அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
எப்போ தூங்கினாங்கன்னே எனக்கு தெரியலை. தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன். //

:-)))))

வேத்தியன் said...

வந்தவர்கள் ஒருவரையும் நான் இது வரை விட்டதில்லை. வலைச்சரம் வரை படிக்க வைத்து விடுவேன். //

நல்ல விஷயம்...

வேத்தியன் said...

முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன்.//

இது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம்...
:-)

வேத்தியன் said...

உன்னோட நான் கம்ப்யூட்டர் பாக்கவே இல்லை என்று கூறிவிட்டார்கள். //

ஏங்க அந்த அக்காவுக்கு யாராவது பில்லி சூனியம் வச்சுட்டாங்களா???

வேத்தியன் said...

இந்த முறை பதிவை நான் படிக்கவில்லை. அவர்களே படித்தார்கள். பாராட்டினார்கள்.
//

சந்தோஷம்...

வேத்தியன் said...

அட, நானும் இப்பிடித் தாங்க...
யாராச்சும் வீட்டுக்கு வந்துட்டாங்கண்ணா போதும்...
எப்பிடியாவது என்னோட ஒரு பதிவையாவது படிக்காம அனுப்பவே மாட்டேனே...
என்ன செய்யுறது???
நாமளா பப்ளிசிட்டி பண்ணா தான் உண்டு என்னோட ப்ளாக்குக்கு...
:-)))

வேத்தியன் said...

http://jsprasu.blogspot.com/2009/03/10.html

நேரமிருந்தால் வந்து பார்க்கவும்...

ஸ்ரீதர்கண்ணன் said...

ரம்யாவின் சோகம் !!!

உங்க அக்காவுக்குதானே :)

butterfly Surya said...

366......??????

இவையெல்லாம பின்னூட்டமா.. ??

RAMYA said...

//
pappu said...
ஹைய்யோ.... எப்படிங்க, இத்தன பின்னூட்டம்..... ஆனா ஓட்டு ஒண்ணுதான் இருக்கு. ரம்யாக்கு பின்னுட்டம் போடுறவங்க ஒருத்தவங்க கூட ஓட்டு போடலையா! நான் போட்டுடேன்.

//

pappu உங்களை ஒரு தொடருக்கு அழைத்து இருக்கின்றேன்
விவேகானந்தரின் இரண்டாம் பாகத்தில் உங்களை அழைத்து
இருக்கின்றேன்.

சீக்கிரம் பதிவு போடுங்க.

நான் அப்புறமா உங்க கிட்டே ஆட்டோகிராப் வாங்கறேன்
சரியா??

எனக்கு ஓட்டு போட்டதிற்கு நன்றி pappu

எல்லாரையும் ஓட்டு போடச் சொன்னத்ரிகும் நன்றி

RAMYA said...

//
பிரியமுடன் பிரபு said...
/////


அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.

எப்போ தூங்கினாங்கன்னே எனக்கு தெரியலை. தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன்.

/////


ஆளே இல்லாத காடையில யாருக்கு டீ ஆத்துனீங்க ?!!??!!?!
ஹ ஹ ஹ
( அப்ப உங்க முகத்த பாத்திருக்கனுமே ......))
//

அதான் பிரபு ஒரே சோகம் !!

RAMYA said...

/
குடுகுடுப்பை said...
தாலாட்டுப்பதிவெழுதும் தங்க மகள் வாழ்க
//

வாங்க குடுகுடுபையாரே நன்றி பட்டம் வழங்கியதிற்கு!!

RAMYA said...

//
புதியவன் said...
//ரம்யாவின் சோகம் !!!//

ரம்யாவிற்கு என்ன சோகம் என்று படிக்க ஆரம்பித்தால்...ரொம்ப காமெடியா இருக்கே...

//

ஆஹா ஏமாந்தீங்களா
எல்லாரும் அப்படிதான் நினைத்தாங்களாம் !!

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
என்ன நடக்குது இங்க...

பின்னூட்டம் மழை போல் பெய்துகொண்டிருக்கிறது...

என்ன கொடுமை சரவணன் இது.

ரம்யா அக்கா எல்லாரையும் தனியா கவனிக்கராங்களா.

அக்கா என்ன அமௌன்ட் செலவு பண்ணினீங்க. பின்னூட்டம் இந்த அளவுக்கு விழுது.

கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் முடியுமான்னு பாப்போம்ள

இந்த மாதிரி பின்னூட்டம் கொஞ்சம் எங்க பதிவுகளையும் போடலாம்ல
//

வாங்க வாங்க அண்ணன் வணங்காமுடி!!

உங்க பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு.

நன்றி வருகைக்கும் ரசித்தமைக்கும்.

RAMYA said...

//
புதியவன் said...
//ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு.//

இது நல்ல ஐடியாவா இருக்கே...நீங்க இது மாதிரி செய்யலாம் தப்பில்லை...நான் இதே மாதிரி செய்தால் புதியவன் வீட்டுப்பக்கம் யாரும் போய்டாதீங்கப்பா...கவிதை சொல்லியே கொல்லுரார்ன்னு சொல்லிடுவாங்களே ரம்யா...
//

இல்லே இல்லே இப்ப எல்லாம் அப்படி சொல்லமாட்டாங்க
ரொம்ப திருந்திட்டாங்ககளாம்.

ஆனா நம்பதான் உஷாரா நம்ப பதிவை பத்தி மட்டும் பேசணும்.
எவ்வளவு கஷ்டப் பட்டு எழுதறோம் படிக்க எனாவாம்??

அப்படீன்னு சொல்லுவேன் அதுக்காகவே படிப்பாங்க. என்ன செய்ய?? விதி வலியது.

ஆனா புதியவன் நான் எழுதி இருக்கிற கதை உண்மைக் கதை

RAMYA said...

//
புதியவன் said...
//அவங்க தூங்கிட்டாங்க. மெதுவா கிட்டே போயி பார்த்தேன். கண்கள் மூடியபடி, உதட்டில் சிரிப்பு மலர்ந்த படி ஆழ்ந்த உறக்கம்.
எப்போ தூங்கினாங்கன்னே எனக்கு தெரியலை. தூங்கரவங்களுக்கா நான் இவ்வளவு நேரம் பதிவு படிச்சுகிட்டு இருந்தேன். //

ஹா...ஹா...ஹா...படித்ததும்...முடியல...சிரிக்கக்காம இருக்க முடியல...
//

சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டே இருங்க
அதுதான் ரம்யாவிற்கு சந்தோஷம்.

ஆனா புதியவன் என்னை தனியா
அன்னைக்கு ராத்திரி அந்த அக்கா
புலம்ப வச்சிட்டாங்களே!!

RAMYA said...

//
MayVee said...
இதே மாதிரி தானுங்க நான் என் அண்ணன் மகளை பற்றி போட்டோ கவிதை என் பதிவு ல போட்டு இருந்தேன் .....
சரி அண்ணி அதை படிச்சா சந்தோஷ படுவங்குன்னு அவகளை அந்த பதிவை படிக்க வைத்தேன்.....
ரொம்ப நேரம் ஸ்க்ரீன் யை பார்த்த பிறகு சொன்னாங்க
"மேவி போட்டோ வுக்கு பக்கத்தில எதோ எழுதி இருக்கே .... அது என்ன ??"

அப்புறும் தான் தெரிந்தது அவங்களுக்கு தமிழ் தெரியாதுன்னு
//

அட இங்கே பாருய்யா என்னைய மாதிரியே ஒரு சோகம் நடந்திருக்கு
பாவம் மாவீ, உங்க பீல்ங்க்ஸ் எனக்கு புரியுது.

இருந்தாலும் நான் முயற்ச்சியில் இருந்து பின் வாங்கறதா இல்லை.

RAMYA said...

//
புதியவன் said...
//அவர்கள் எழுந்தவுடன் காபி கொடுத்து ஒரே உபசரிப்பு. (உபசரிப்பு எப்போதும் உண்டு)//

வீட்டிற்கு வாந்தால் நல்ல உபசரிப்புடன் காபி கிடைக்கும் அப்படித்தானே ரம்யா...?
//

ஆமா புதியவன் பில்டர் காபி கிடைக்கும்.

சும்மா ஜம்ன்னு வாசனையோட இருக்கும்.

வாங்க வாங்க காபி குடிங்க
அப்புறம் சாப்பிடுங்க சரியா??

RAMYA said...

//
புதியவன் said...
//என் தோழிகளின் சிலர் எனக்காக உறக்கம் இல்லாமல் படித்து விட்டு காலையிலே போகும்போது நல்ல ஜுரத்தோடு சென்ற கதையும் உண்டு.//

நல்ல வேளை எனக்கு உங்கள் பதிவை படித்துவிட்டு சிரிப்பு தான் வந்திருக்கு...இது வரை ஜுரமெல்லாம் வரவில்லை...
//

எல்லா பதிவையும் ஒரே நாள் ராத்த்ரி முழுவதும் தூங்கவிடாமல் உக்காந்து படிக்க சொன்னா ஜுரம் தானே வரும் அதான்....

RAMYA said...

//
புதியவன் said...
//அப்பா நான் பட்ட கஷ்டம் தீர்ந்து விட்டது. இந்த அக்காவும் படித்து விட்டார்கள். உடனே கிளம்பியும் விட்டார்கள்.//

அப்பாடா...பட்ட கஷ்டத்திற்கு ஒரு வழியா பலன் கிடச்சிருச்சு...

//

அப்புறம் தான் மனசுக்கு சந்தோஷமா இருந்திச்சு.

என்னோடது மட்டும் படிக்காமல் என் firends எல்லார் பதிவும்
படிக்கனும்னா ரொம்ப கஷ்டம் இல்லையா?

RAMYA said...

//
புதியவன் said...
//தாமதித்தால் அடுத்த டார்ச்செர் ஆரம்பம் ஆகிவிடுமா என்னா??

இல்லைன்னு சொல்லுங்கப்பா!!//

இல்லை...இல்லை...இல்லை...

நல்ல சுவாரசியமான பதிவு ரம்யா...மிகவும் ரசித்தேன்...
//

நன்றி புதியவன் அடுத்து ஒரு அனுபவம் வருது வருது.

படிங்க படிங்க சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டே இருங்க.

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
மிக அருமை ரம்யா!

அடடடா சுனாமிகள் வரும் போது நாம இல்லாம போய்ட்டோமே!

//

வாங்க ஜமால் நீங்க அப்போ தூங்கிட்டீங்க அதான்.....

நான் திடீர்னு நினைச்சேன் அந்த அக்காவை பற்றி.

அதான் ஒரு இருபது நிமிடத்துலே எழுதி publish பண்ணிட்டேன்

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\நீங்க படிக்கறீங்களான்னு கேட்டேன். அதுக்கு அவங்க சும்மா சிரிச்சிட்டு வேறே பேச்சை பேச ஆரம்பிச்சாங்க. \\

அதான் தெளிவா சொல்றாங்களே! அப்புறம் இன்னா!

//

இருந்தாலும் எப்படி அவங்களை விடறது படிக்காமே!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
என்ன தனியா இளநீர் வெட்ட விட்டுட்டீங்க - சரி சரி

இருக்கட்டும்

என்ன ‘நல்லவன்னு’ சொல்றவரைக்கும் அடிச்சி ஆடுவோம்
//

நீங்க நல்லவரு வல்லவரு தனியாவே
500 கூட உங்களாலே அடிக்க முடியும்
நீங்க தான் மாவீரன் நெப்போலியன் மாதிரி.

ஹி ஹி ஹி ஹி

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\எனக்கு சந்தோசம் பீறிட்டு வந்துச்சு, ஆஹா நம்ப பதிவை வீட்டுக்கு வரவங்க எல்லாரையும் படிக்க வச்சிடரோமேன்னு. \\

ஹா ஹா ஹா என்று சிரிக்கத்தோன்றினாலும்

சிந்தித்து(உனக்கேதுடா ...) பார்த்தால்
உங்கள் பதிவை படிக்காதவர்கள், நல்ல ஒரு புத்தகத்தின் அறிமுகம் கிடைக்காதவர்களே!
//

நன்றி ஜமால் நன்றி ஜமால்
நன்றி நன்றி நன்றி நன்றி

குடந்தை அன்புமணி said...

தலைப்பு பார்த்து பயந்து போயிட்டேன். பதிவை படிச்சதும் நீங்க செஞ்சதெல்லாம் கேட்டு சிரிக்கத்தோணுது... பாவங்க... அவங்களுக்கு ஆர்வமிருக்கான்னு தெரிஞ்சிக்காம அவங்கள ரொம்பத்தான் படுத்திட்டீங்க போல... அவங்களும் ஆர்வமில்லாம எவ்வளவு நேரம்தான் ரசிக்கிறமாதிரியே நடிப்பாங்க... உங்களோட பதிவ படிக்க நாங்க இருக்கோம். கவைல படாதீங்க!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்த உடனே ஒரே பரபரப்பு \\

உங்களின் பரபரப்பு இதனை படிக்கையில் உணர முடிகிறது.

//

எப்படியாவது என் பதிவை அவங்க படிச்சுடனும்னு ஒரே ஆதங்கம் தான்.

அண்ணன் வணங்காமுடி said...

RAMYA said...

வாங்க வாங்க அண்ணன் வணங்காமுடி!!

உங்க பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு.

நன்றி வருகைக்கும் ரசித்தமைக்கும்.///

உங்கள் பின்னோடதிர்க்கு நன்றி

இதயே பின்பற்றுங்கள்...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\"வைகைப்புயலும் சுப்பிரமணியும்" \\

பேர கேட்டாலே அதிருதுன்னு சொல்லுவாங்கள்ள அது மாதிரி

இந்த பதிவ பற்றி நினைத்தாலே சிரிப்பு அலை பொங்குது உள்ளே!
//

நன்றி ஜமால் வேணும்னா நான் அதை மீள் பதிவு போடவா??

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்ன பயந்துட்டீங்களா??

நீங்க இங்கே வீட்டுக்கு வரும்போது அதே படிக்க வைப்பேனே!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\ கொஞ்சம் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன்\\

தூக்கத்தில யாரோ கூப்பிட்ட மாதிரி சத்தம் கேட்டது

அது நீங்க தானா!
//

உங்களுக்கு கேட்டுச்சா?? அட!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\அங்கே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. என்ன பயந்து விட்டீர்களா?? \\

ஹா ஹா ஹா

ரம்யா சொல்லி நாங்க பயப்படறதா

ஹையோ ஆட்டோ சத்தம் கேட்குதே

எனக்கு பயந்து வருதே
//

பயப்படாதீங்க ஆட்டோ எல்லாம் வரலை அது உங்களோட மனப்பிராந்தி !!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\என் பதிவை என்னையே படிக்க வைத்தது\\

ஹா ஹா ஹா

ரம்யா! ஒன்னு அடிக்கடி சொல்வியே!

அதையும் இதையும் நினைத்தேன்

ஒரே சிரிப்பு தான் போ!
//

மவளே தானே ஆமா!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\அவர்கள் எழுந்தவுடன் காபி கொடுத்து ஒரே உபசரிப்பு\\

லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம்

டண்டனக்கரா!

//

பதிவு படிக்கலைன்னாலும் காபி கொடுப்பேன் ஜமால்!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன்\\

நன்றிங்கோ!

//

he he he he he

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\சிலர் எனக்காக உறக்கம் இல்லாமல் படித்து விட்டு காலையிலே போகும்போது நல்ல ஜுரத்தோடு சென்ற கதையும் உண்டு.ஜுரம் வரும் அளவிற்கு என்னோட பதிவு பிரபலம்\\

எப்பா! நல்லா சிரிப்பு சிரிப்பா வருது
//

சிரிங்க சிரிங்க வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!!

RAMYA said...

//
Rajeswari said...
என்னது இது ..எல்லோர் வீட்டிலையும் இந்த கதைதான் ஓடுது போல..நான் பொலம்பநும்நு நினைச்சதை நீங்க புலம்பிடீங்க..சரி விடுங்க ..ஆனா ஒரு சந்தோசம் ரம்யா...மனம் தளராமல் நைட் அந்த அக்காவுக்கு படிச்சு கான்பிசீங்கலே..ஹ ஹா ஹா .....கிரேட்
//

உங்க வீட்டுலேயும் இதே கதைதானா?
same blood??

RAMYA said...

//
குடந்தைஅன்புமணி said...
தலைப்பு பார்த்து பயந்து போயிட்டேன். பதிவை படிச்சதும் நீங்க செஞ்சதெல்லாம் கேட்டு சிரிக்கத்தோணுது... பாவங்க... அவங்களுக்கு ஆர்வமிருக்கான்னு தெரிஞ்சிக்காம அவங்கள ரொம்பத்தான் படுத்திட்டீங்க போல... அவங்களும் ஆர்வமில்லாம எவ்வளவு நேரம்தான் ரசிக்கிறமாதிரியே நடிப்பாங்க... உங்களோட பதிவ படிக்க நாங்க இருக்கோம். கவைல படாதீங்க!
//

வாங்க வாங்க குடந்தைஅன்புமணி!!

பெயரை மாத்திடீங்களா?
நல்லா இருக்கு.

என்ன செய்ய வரவங்க எல்லாம் படிச்சா ஒரு விளம்பரம் தான்.............:):):)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\தாமதித்தால் அடுத்த டார்ச்செர் ஆரம்பம் ஆகிவிடுமா என்னா??

இல்லைன்னு சொல்லுங்கப்பா!!\\

போடாட்டி தான் டார்ச்செர் எங்களுக்கு

சீக்கிரம் வைகை வேண்டும்!

//

ஆமா ஆமா ஆமா சீக்கிரமே!!!

RAMYA said...

//
வேத்தியன் said...
:-)
சுவையான அனுபவம்...

//

வாங்க வேத்தியன் ரசித்தமைக்கு நன்றி!!!

RAMYA said...

//
வேத்தியன் said...
வந்தவர்கள் ஒருவரையும் நான் இது வரை விட்டதில்லை. வலைச்சரம் வரை படிக்க வைத்து விடுவேன். //

நல்ல விஷயம்...

//

எப்பவோ வராங்க படிக்கட்டுமே என்ற ஒரு நல்லா எண்ணம் தான் வேத்தியன் !!

RAMYA said...

//
வேத்தியன் said...
முடிந்தால் என் சக பதிவர்களின் பதிவுகளையும் படிக்க வைத்து விடுவேன்.//

இது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம்...
:-)

//

ஆமாங்க இதெல்லாம் நான் சரியா செய்து விடுவேன்!!

அண்ணன் வணங்காமுடி said...

400

அண்ணன் வணங்காமுடி said...

நான் தான் 400 அடிச்சேன்

RAMYA said...

//
ஸ்ரீதர்கண்ணன் said...
ரம்யாவின் சோகம் !!!

உங்க அக்காவுக்குதானே :)

//

வாங்க வாங்க ஸ்ரீதர்கண்ணன்.

அப்படிதான் அவங்க நினைச்சுருப்பாங்க!!

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
நான் தான் 400 அடிச்சேன்

//

வாழ்த்துக்கள் அண்ணன் வணங்காமுடி!!

RAMYA said...

//
வண்ணத்துபூச்சியார் said...
366......??????

இவையெல்லாம பின்னூட்டமா.. ??

//

ஆமா வண்ணத்துபூச்சியார்
பின்னூட்டமே தான்!!

வால்பையன் said...

ஹா ஹா ஹா
அக்கா ரொம்ப நல்லவங்க!

இந்த பின்னூட்டம் கடலில் போட்ட பெருங்காயம்.

RAMYA said...

//
வால்பையன் said...
ஹா ஹா ஹா
அக்கா ரொம்ப நல்லவங்க!

இந்த பின்னூட்டம் கடலில் போட்ட பெருங்காயம்
//

வாங்க வாங்க வால்ஸ்!!

பெருங்காயம் எல்லாம் நாங்க ஒத்துக் கொள்ள மாட்டோம்!!

«Oldest ‹Older   201 – 400 of 497   Newer› Newest»