Wednesday, October 14, 2009

செல்லும் பாதை!!


அனைத்து வலை நண்பர்களின் குட்டிச் செல்வங்களுடன் நான்!!

கட்டித் தங்கங்களான சொக்கத் தங்கங்களை ஒரு சிறிய சுற்றுலா அழைத்துச் செல்ல ஆசைப் பட்டேன்!

அந்த ஆசையின் விளைவு இந்த இடுகை....

பிஞ்சு விரல்களை செல்லமாக பிடித்து செல்கையில் நழுவி ஓடும் செல்லங்களை ஓடிப்பிடித்து ஒய்யாரமாக நடக்கும் பாதை இது...


வியக்க வைக்கும் இந்த வர்ணப்பாதையில் நடை பயில வாருங்கள் செல்லங்களே!!


வெள்ளைகோடுகளும் மஞ்சள் கோடுகளும் சீரான வழியை காட்டுகிறதோ!!


வானம், பூமி, மலைகளுக்கிடையே வழி நடத்திச் செல்லும் பாதையோ!!


இந்த கண்கொள்ளா காட்சியாக தோற்றமளிக்கும் பாதைகளில் நடப்பது நாங்கள் தானே!!
வளைந்து நெளிந்து செல்கையில் மரங்களில் பூத்து குலுங்கும் மலர்கள் எங்களுக்கு மாலையணிவித்து அல்லவா வழி காட்டுகிறது!!


இரவின் ஒளியில் மிளிரும் நடை பாதையின் அழகு என்னுடன் நடை பயிலும் கட்டித் தங்கங்களுக்கு இயற்கை காணிக்கையாகியதோ!!

இந்தப் பாதைகளை என்ன வென்று சொல்ல!
என்னுடன் நடக்கும் செல்லங்கள் கண்டு களிக்க மட்டும் அமைந்தவையோ!!


தெளிவான பாதை மட்டும் அல்ல நமது எண்ணங்களும் தெளிவாக்க இந்த பாதை அமைந்ததோ!!


கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கும் இந்த பாதையில் நடக்கும் போது செல்லங்கள் குதியாட்டம் போடுவார்கள் இல்லையா!!
பார்க்கும் போதே மனம் துள்ளுகிறதே!!
நடந்து செல்லும் போது.........


குகை போல் அமைப்பு நிழல்கள் தரும் சுகம் தனித்தன்மை வாய்ந்ததோ!!


கண்களுக்கு மட்டும் அல்ல கருத்துக்கும் குளிர்ச்சிதான் இந்த வர்ண மலர்களுடன் கூடிய நடை பாதை!!

மலைகளுக்கு நடுவே தோன்றும் இந்த பாதைகளை பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறதே!! இந்த பாதையில் என்னுடன் வரும் அன்புச் செல்லங்களுடன் நடந்தால்....


அச்சச்சோ இது பனி என்ற ஜில் அரக்கனால் ஏற்பட்ட ஈரம் நடக்க முடியாமல் நாங்க அழுததால் ஏற்பட்ட ஈரம் அல்ல!!


பாதையின் கருமை நிறம் கண்களை பறிக்கின்றதே!
எனது செல்லங்களின் கால்களில் கருமை நிறம் ஒட்டிக் கொள்ளுமோ!!







37 comments :

நட்புடன் ஜமால் said...

எங்கே செல்லும் இந்த பாதை ...

SUFFIX said...

ஓவியங்கள் அருமை!!

நட்புடன் ஜமால் said...

நல்லா கிடைச்சிருக்கு படங்கள்

எடுத்தவர் எவராகிலும் - வாழ்த்துகள்.

gayathri said...

photo's ellame azaka iruku da

SUFFIX said...

இந்த ரோடு எந்த் ஊரிலருந்து எந்த ஊருக்கு போவுதுங்க

கலையரசன் said...

எல்லா ரோடும் காண்ராக்டர் காசு அடிக்காம போட்டுயிருக்காரு போல...

SUFFIX said...

// நட்புடன் ஜமால் said...
நல்லா கிடைச்சிருக்கு படங்கள்

எடுத்தவர் எவராகிலும் - வாழ்த்துகள்//

நீங்க பார்வார்டு பண்ணலையா?

SUFFIX said...

// கலையரசன் said...
எல்லா ரோடும் காண்ராக்டர் காசு அடிக்காம போட்டுயிருக்காரு போல...//

ஆமாங்க, ரோடு போற போக்கு பார்த்தாலே தெரியுது, அங்க பாருங்க ஒரு ரோடு நேரா வானத்தை நோக்கி....

SUFFIX said...

ரோட்டில ஆள் நடமாட்டமே இல்லயப்பா....

அப்துல்மாலிக் said...

ஆள் ஆரவாரமில்லா ரோடுனு சொல்லுவாங்களே இதுதானா அது

வனத்துக்குப்போக கூட ரோடு போட்டாச்சா?

R.Gopi said...

பிரமாதம் ரம்யா...

எனக்கு நேற்றுதான் ஃபார்வர்ட் மெயிலில் வந்தது... பார்த்து ரசித்ததோடு சரி... ஆனால், நீங்கள் அதை வைத்து ஒரு சூப்பர் பதிவு எழுதி விட்டீட்கள்...

வாழ்த்துக்கள்...

என் குறிப்பு : என் வலைப்பக்கம் வந்து "தீபாவளி ஸ்பெஷல் கிஃப்ட்" வாங்கிக்கொண்டதற்கு நன்றி...

ஈரோடு கதிர் said...

கலக்கல் ரம்யா

S.A. நவாஸுதீன் said...

யாருமே யூஸ் பண்ணாமத்தான் ரோடெல்லாம் இவ்ளோ சுத்தமா இருக்கோ. படங்கள் அத்தனையும் அருமை

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

எங்கே செல்லும் இந்த பாதை ...

எங்கேர்ந்து ஆரம்பிக்குது. அதை முதல்ல சொல்லுங்கப்பா

S.A. நவாஸுதீன் said...

கலையரசன் said...

எல்லா ரோடும் காண்ராக்டர் காசு அடிக்காம போட்டுயிருக்காரு போல...

ஆகா. இப்படித்தான் கலைக்கண்ணோடு பார்க்கணுங்கறது

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

// கலையரசன் said...
எல்லா ரோடும் காண்ராக்டர் காசு அடிக்காம போட்டுயிருக்காரு போல...//

ஆமாங்க, ரோடு போற போக்கு பார்த்தாலே தெரியுது, அங்க பாருங்க ஒரு ரோடு நேரா வானத்தை நோக்கி....

ஆமா. ஆக்சிடெண்ட் ஆகாமலே சொர்க்கத்துக்கு போகலாம்

S.A. நவாஸுதீன் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ரோட்டில ஆள் நடமாட்டமே இல்லயப்பா....

உச்சி உரும நேரம். அதான் யாரையும் காணோம்

Vijay said...

Wow!! Beautiful Photos :-)

இராகவன் நைஜிரியா said...

படங்களின் தொகுப்பு அருமை. அதற்கு போடப் பட்ட கருத்துகள் அதனினும் அருமை.

Unknown said...

// செல்லும் பாதை!! //

ஒரு ரோட்டுல கூட முட்டாய் கடையோ... ஐஸ்க்ரீம் கடையோ இல்ல..... !!

என்னா ஒரு வில்லத்தனம்.....???

Vijay said...

Ramya,
I am Vijay from Muscat, really I am very sad after reading your story. Gud now are in a good position. I donno wat to say. My best wishes...
Vijay.Muscat.

Menaga Sathia said...

படங்களும் அதன் கருத்துக்களும் அருமை ரம்யா!!

सुREஷ் कुMAர் said...

//
கட்டித் தங்கங்களான சொக்கத் தங்கங்களை ஒரு சிறிய சுற்றுலா அழைத்துச் செல்ல ஆசைப் பட்டேன்!
//
என்னையும் சுற்றுலா அழைத்துசெல்ல ஆசைபட்டமைக்கு நன்றி அக்கா..

சரி.. எங்க கூட்டிட்டு போறீங்க..

सुREஷ் कुMAர் said...

//
வியக்க வைக்கும் இந்த வர்ணப்பாதையில் நடை பயில வாருங்கள் செல்லங்களே!!
//
தார்ரோடா இருக்கே.. சுடுமா..

सुREஷ் कुMAர் said...

//
இரவின் ஒளியில் மிளிரும் நடை பாதையின் அழகு
//
அக்கா.. இதையா நடைபாதைனு சொல்றிங்க.. ஏதோ ஹைவே மாதிரில இருக்கு..

सुREஷ் कुMAர் said...

//
குகை போல் அமைப்பு நிழல்கள் தரும் சுகம் தனித்தன்மை வாய்ந்ததோ!!
//
ஆமா..
நடுவுல கைத்துக்கட்டில போட்டு தூங்கினா சொர்கமா இருக்கும்..

सुREஷ் कुMAர் said...

படங்களும் உங்களின் அன்பான வார்த்தைகளும் அருமை..
நன்றி அக்கா..

கலகலப்ரியா said...

soooo beautiful.. aanaalum naan intha vilaattukku varalai.. avvvvvvvvv...

ஆ.ஞானசேகரன் said...

படங்களும் நீங்கள் தொடுத்துள்ள வாசங்களும் அழகு அருமை.. பாராட்டுகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லா படங்களுமே அருமை..;-)))

பித்தனின் வாக்கு said...

எல்லாம் நல்லா இருக்கு, ஆனா இந்த மாதிரி எல்லாம் நம்ம ஊருல எப்ப வரும்னு ஏக்கமாவும் இருக்கு. நல்ல பதிவு ரம்யா. நன்றி. அதுஏன் நடந்து உங்களுக்கு வாகனம் பிடிக்காதா?

வால்பையன் said...

//நட்புடன் ஜமால் said...

எங்கே செல்லும் இந்த பாதை ..//


நிச்சயமா நம்ம வீட்டுக்கு அல்ல!

அன்புடன் நான் said...

நல்லா இருக்குங்க பாதையும் பதிவும், பாராட்டுக்கள்.

RAMYA said...

ரசித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

நன்றி --> நட்புடன் ஜமால்
நன்றி --> ஷ‌ஃபிக்ஸ்/Suffix
நன்றி --> gayathri
நன்றி --> கலையரசன்
நன்றி --> அபுஅஃப்ஸர்
நன்றி --> R.Gopi
நன்றி --> கதிர் - ஈரோடு
நன்றி --> S.A. நவாஸுதீன்
நன்றி --> Vijay
நன்றி --> இராகவன் நைஜிரியா
நன்றி --> லவ்டேல் மேடி

நன்றி --> Vijay (நன்றி விஜய் நான் இப்போது நன்றாக இருக்கிறேன் )

நன்றி --> Mrs.Menagasathia
நன்றி --> सुREஷ் कुMAர்
நன்றி --> கலகலப்ரியா
நன்றி --> ஆ.ஞானசேகரன்
நன்றி --> கார்த்திகைப் பாண்டியன்
நன்றி --> பித்தனின் வாக்கு
நன்றி --> வால்பையன்
நன்றி --> சி.கருணாகரசு

Anonymous said...

அழகான புகைப்படங்களும் கருத்தும் :)

Thamira said...

சில கிராபிக்ஸாக இருந்தபோதிலும், அத்தனையும் மனம்கவரும் அழகான சாலைகள்..!

கண்ணகி said...

செல்லும் பாதை....

அழகோ அழ்கு...எங்கிருந்து ரம்யா இந்தப்படங்களை எடுக்கிறீர்கள்....