Friday, July 31, 2009

கிரிக்கெட் வீரார்களின் அதிரடி ஆட்டம்: பகுதி - 4

நம் வலை நண்பர்கள் ஆடும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்!!


பங்கேற்பவர்கள்
==============
கேப்டன்: டோணி
துணை கேப்டன்: ஜீவன்


அடுத்து களம் இறங்கியவர் ஆஸ்திரேலிய அணி கேப்டன் Ricky Ponting(Captain). கேப்டன் வந்த வேகத்தில் ரன்களை குவித்தார். மள மளவென்று ரன் ரேட் ஏறியது.
இந்த நிலவரப்படி விக்கெட் எதுவும் சேதமில்லாமல் 60 ரன்கள் எடுத்திருந்தார்கள் ஆஸ்திரேலியர்கள். (60/3).

களத்தில் ஆடிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்கள் Ricky Ponting(Captain) மற்றும் Simon Katich

ஜீவன் ஏழு ஓவர் முடித்திருந்தார். கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்து விட்ட திருப்தி அவர் முகத்தில் காணப்பட்டது.

குடுகுடுப்பை அவரது ஏழாவது ஓவரின் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டை (Simon Katich) வீழ்த்தினார். தவறான கணிப்பு Simon Katich ஓடி ரன் அவுட் ஆனார். சரியான நேரத்தில் பந்தை வீசி ரன் அவுட் செய்தது நம் இந்திய அணி விக்கெட் கீப்பர் ஜமால்.

கேப்டனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

குடுகுடுப்பையை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார் டோணி. கரகோஷம் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருந்தது. (72/4).

குடுகுடுப்பை கொடுத்த ரன்கள் மொத்தம் 36. ஜீவன் கொடுத்த ரன்கள் மொத்தம் 36.

ஜீவனுக்கும், குடுகுடுப்பைக்கும் அடுத்து வால்பையன் மற்றும் உருப்புடாதது அணிமா ஜோடி சேர்ந்தனர்.

வால்பையனிடம் இருந்து முதல் பந்து. லாகவமாக ரிக்கி பாண்டிங் மட்டையை சுழற்றினார். பந்து பவுண்டரிக்கு போவதை தடுத்தார் அப்பாவி முரு. பந்து வீசிய அடுத்த நிமிடம் பேப்பரில் ஏதோ எழுத ஆரம்பித்தார் வால்பையன்.

அணிமா பந்தை எடுத்து வந்து வால்பையனிடம் கொடுத்தார். பேப்பரை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மறுபடியும் பந்து வீச தயாரானார் வால்பையன்.

ரிக்கி பாண்டிங் வால்பையனை வினோதமாகப் பார்க்கிறார். ஏதோ எழுதுகிறார், மறுபடியும் பந்து வீச வருகிறார். கொஞ்சம் அசால்ட்டாக இருப்பது போல் தெரிந்தது. அதனால் மட்டையால் பந்தை அடிப்பது சுலபம் என்று சந்தோஷ எல்லையை கடந்தார் போல் லேசா புன்முறுவலுடன் அடுத்த பந்தை எதிர் பார்த்தார்.

பந்து வீசிய அடுத்த வினாடி வால்பையன் பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தார். மைதானத்தில் இருப்பவர்களுக்கும், விளையாட்டை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் என்ன எழுதுகிறார் என்று புரியவில்லை. பந்து வால்பையனிடம் வந்த அடுத்த வினாடி பேப்பரை மடித்து வைத்துக் கொண்டு பலம் அனைத்தும் பிரயோகித்து பந்தை வீசினார். அடுத்த நிமிடம் அங்கேயே நின்று எழுத ஆரம்பித்தார்.

குழம்பி போன பாட்ஸ்மேன் வால்பையனின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியாத நிலையில் Matthew Hayden அநியாயத்துக்கு அவுட் ஆனார். அவுட் ஆகும்போது அவர் எடுத்த ரன்கள் 23.

அடுத்து பந்து வீச்சாளர் உருப்புடாதது அணிமா. இவர் ஆல் ரவுண்டர். சுழற்ப் பந்து வீச்சாளர். இவர் வீசும் பந்தை எதிர் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. பந்தை எதிர் கொள்பவர் Adam Gilchrist. பந்தின் வேகம் காற்றை கிழித்திக் கொண்டு வந்தது. பந்து வேகத்தினை எதிர் கொள்ள முடியாமல் பெரும் முயற்சி எடுத்து மட்டையை சுழற்றினார் Adam Gilchrist. பந்து அங்கேயே விழுந்தது. ஓடுவதற்கு கூட ஒருவருக்கும் வேலை கொடுக்கவில்லை.

சிரித்த முகம் அணிமாவிற்கு, அவர் என்ன நினைக்கிறார் என்று கணிப்பதில் ரொம்ப கஷ்டம். அதுவும் பாட்ஸ்மேனுக்கு மிகவும் சவாலாக இருந்தது அவரோட சிரிப்பு. எதுக்கு சிரிக்கிறார் என்று யோசிச்சே மண்டை காஞ்சிப் போனார் ரிக்கி பாண்டிங். பந்தை வீசிய அடுத்த நிமிடம் அப்பாவி முருவிடம் ஓடிப் போய்டுவார் அணிமா. அப்பாவி முரு பந்தை விரட்டிக் கொண்டு ஓடுவார்.யார் எதற்கு ஓடுகிறார்கள் என்று அரங்கத்திலும் சரி மைதானத்திலும் சரி ஒன்றும் புரியாமல் போனது. அப்பாவி முரு ஓடாமல் இருந்தால் அவருடன் பதிவுகள் பற்றி பேசுவாராம். யார் யார் புது பதிவர், எத்தனை பதிவு போட்டிருக்காங்க. யார் யாரை சந்திதாங்க, இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் யார் என்று கேள்விகள் கேட்டு அப்பாவி முருவை இன்னும் அதிகமா அப்பாவியாக்கி மகிழ்ச்சி அடைவார். அதுதான் அணிமா முகத்தில் தேங்கி நிற்கும் சிரிப்புக்கு அர்த்தமாக்கும்.

இம்முறை உருப்புடாதது அணிமா என்ன செய்கிறார் என்ற கவனம் ஈர்க்க பந்தை எதிர் கொள்வதில் கோட்டை விட்டார் ரிக்கி பாண்டிங். ரன் எடுக்க முடியவில்லை.

அவுட் ஆகாமல் இருக்கோமே என்று மகிழ்ச்சியடைந்து இது என்ன சூழ்ச்சி என்று புரியாத வண்ணம் சுற்றி ஒரு முறை நிலவரம் அறிகிறார். தூரத்தில் நசரேயன் ஏதோ எழுதிக் கொண்டு இருப்பது தெரிந்தது. குழப்பத்தின் உச்சிக்கே சென்ற ரிக்கி பாண்டிங் சரி இம்முறை நசரேயன் பக்கமா பந்தை விரட்டலாம் என்று அடுத்த பந்திற்கு காத்திருந்தார். ஆனாலும் அவரின் பந்தை எதிர் கொள்ள சுழற்றிய மட்டை ரெண்டு ரன்கள் தான் எடுத்துக் கொடுத்தது.

இருந்தாலும் அடுத்து அடுத்து ஏழு பௌண்டரிகளை கொடுத்தார் Adam Gilchrist. ரிக்கி பாண்டிங்கும் வேகமாக ரன்கள் குவித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் எதிராளிகள் சற்று குழப்பவாதிங்களாகவே இருப்பதாக மனதிற்கு பட்டது. அவர்களின் பந்து வரும் வேகத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் ஆஸ்திரிலேயர்கள் விளையாட ஆரம்பித்தனர்.

மெது மெதுவாக ரிக்கி பாண்டிங் எழுபத்தைந்தை நெருங்கினார். Adam Gilchrist மெதுவாக 40 ரன்களை எடுத்த நிலையில் அணிமாவின் பந்தில் சற்றே ஏமாந்து மட்டையை சுழற்றிய Adam Gilchrist அவுட் ஆனார்.

அடுத்து களம் இறங்கிய Michael Clarke இருபது ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் வால்பையனால் திருப்பி அனுப்பப்பட்டார். இம்முறை புத்திசாலித்தனமாக கேட்ச் பிடிப்பது அப்பாவி முரு. (150/6) . அப்பாவி முரு பிடித்த கேட்சை படத்தில் பார்த்து ரசிக்கவும்.

இப்படியாக இருவரும் அதிகம் ரன் கொடுக்காமல் தலா ஏழு ஓவர்களை முடித்தார்கள்.

முடிவடைந்த ஓவர்கள் 28. ஆஸ்திரேலியர்கள் எடுத்த மொத்த ரன்கள் 150. விக்கெட் 6 .

இப்போது இடைவேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி தேநீரும் பெப்சியும் பருகிக் கொடிருந்தார்கள்.

கேப்டன் டோணி வால்பையனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

வால்பையனுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்டுக்காம பெப்சி குடிப்பதில் மும்முரமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டார்.

ஒரு வழியாக மவுனத்தை கலைத்த டோணி, நானும் பார்த்துகிட்டே இருந்தேன் என்ன கையில்? பந்து வீசியவுடன் எழுத ஆரம்பிக்கறீங்க? வாட் Mr.வால்பையன்? என கேட்டார்.

என்னிடம் கேட்டார் டோணி நான்தான் நேராக உங்களிடமே கேட்டுக் கொள்ளுமாறு கூறு விட்டேன் வால்பையன். ஆமா அப்படி என்ன எழுதறீங்க என்று கேட்டார் அம்பையர் ராகவன்.

ஒன்னுமில்லீங்கோ ஹி ஹி ஹி என்று கையை பின்னால் ஒளித்துக் கொள்கிறார். கையை பிடித்து டோணி இழுக்க, வால்பையனின் கையில் பேப்பர் மற்றும் பேனா! இதெல்லாம் ஆடு களத்திற்கு கொண்டு வரக்கூடாது என்றார் அம்பயர் ராகவன்.

அட போங்கண்ணே..... நான் பாட்டுக்க எதிர் கவுஜ எழுதிகிட்டு சாக்கனாங்கட சரக்கு பானைய பத்தி ஆராயிச்சி பண்ணிக்கிட்டு.... வலையுலகில நடு ... நடுவுல .... யாரு என்ன கேள்வி கேட்டாலும் பின் நவீனத் துவத்துல பதில் சொல்லி அவுங்க மண்டைய பிச்சுக்க வெச்சிட்டிருந்த என்ன கூட்டிகிட்டு வந்து கிரிக்கெட் ஆடுன்னு சொன்னா இந்த வேலையை யார் செய்வா? அதான் கையிலே பேப்பர் பேனாவோட வந்துட்டேன்.

நீ எதிர் கவுஜ எழுதறதுளையும், சரக்க பத்தி விவரம் சொல்றதுலேயும் கில்லாடிதான் அதை நான் மறுக்கலை. இருந்தாலும் கிரிக்கெட்க்குன்னு சில ரூல்ஸ் இருக்கு இல்லையா? அதைத்தான் கடைபிடிக்கணும்.

ஹலோ லவ்டேல் மேடி.... கம் ஹியர்...!! இவரோட கையிலே இருக்கிற பேப்பரையும்.. பேனாவையும்..... வாங்கிகிட்டு போயி அங்கே உக்காந்து இருக்காரே உங்க ஊருக்காரர் வடக்குபட்டி ராமசாமி கிட்டே கொடுத்திடுங்க. கையிலே இதெல்லாம் வச்சிருந்தா எப்படி பந்து வீச முடியும்.....

வால்பையன் கொடுத்திடுங்க, கேப்டன் கேக்குறாரு இல்லே என்றார் ஜீவன்.

அதெல்லாம் கொடுக்க முடியாது ஜீவன். எழுத பெண்டிங் கேசு நிறைய சேர்ந்து போச்சு.

நமக்கு பெரிய பொறுப்பு கொடுத்திருக்காங்க வால்பையன் அதுனாலே நீங்க அந்த பேப்பரையும் பேனாவையும் என் கிட்டே கொடுங்க விளையாடி முடிச்சவுடனே நான் உங்க கிட்டேயே திருப்பி கொடுத்திடறேன் என்று மறுபடியும் ஜீவன் கூறினார்.

இல்லே ஜீவன் யார் கேட்டாலும் நான் தர்றதா இல்லே.

அடேய் வண்டுருட்டி மண்டையா ..... !! ஜீவன் அண்ணன் சொல்ல்றாருல்லோ ..... அந்த பேப்பரையும் .... பேனாவையும் .. இங்க குட்ரா ....என்று கேட்கிறார் மறுபடியும் மேடி

நோ நோ அதெல்லாம் முடியாது. இதே வச்சுகிட்டே தான் ஏழு ஓவர் முடிச்சிருக்கேன் தெரியுமா? பாருங்க எவ்வளவு எழுதி இருக்கேன்னு.

நடுவே டோணி புகுந்து Mr.வால்பையன் நீங்க பேசறது ரொம்ப தப்பு. ப்ளீஸ் அந்த பேப்பரை கொடுத்திடுங்க. அடுத்து நீங்க பந்து கேட்ச் பிடிக்க வேண்டிய சூழ் நிலை உருவாகலாம் அப்போ இதெல்லாம் சரிப்பட்டு வராது.

ஏண்டா.. வெந்து...வேகாத அர மண்டையா..... நம்ப தலைவரு தோணி சார் சொல்றாருல்லோ ...... ஆனா நீ கேக்க மாட்டேன்னு கொழந்தப் புள்ளையாட்டோ அடம் புடிக்குற....!! பிச்சுபுடுவன்.. பிச்சு...படவா.......

வால்பையனுக்கு செம கோபம் வந்திடிச்சு, பிடிச்சி மேடியை திட்ட ஆரம்பிக்கிறாரு போய்யா அதெல்லாம் கொடுக்க முடியாது. ராகவன் சார் பந்து வீசணும் அவ்வளவுதானே! என்னாலே முடியும். மேடி நீ போகலாம். யாரு கூப்பிடுவாங்கன்னு காத்துகிட்டா இருக்கே எதுக்கு இப்படி தலை தெறிக்க ஓடியாரே? ஓடி வர ஆளுங்களையும் மூஞ்சிங்களையும் பாரு. வீட்டு பக்கம் வா காலை உடைக்கிறேன்!

அடங்கொன்னியா.....!! ஏண்டா பிஞ்ச மண்டையா.....!! நீ ..... என் கால ஒடைக்கிரியா...?? நாலு மாசமா பல்லு வெலக்காத பய நீ... உனக்கு இவ்ளோ மண்ட கொழுப்பா....!!

அடேய்... சாரஜர் மண்டையா....!!! நானெல்லா இங்க பொறக்க வேண்டிய ஆளு இல்லடா....!! சுச்சர்லாந்து பேங்குல குப்பற படுத்துகிட்டு பணமென்ற வேல பாக்கவேண்டியது...... யென்ட்ர கெரவம்... இங்க வந்து மாட்டிகிட்டன் ....!!

இங்க பாருடா ஆன் டூட்டி மண்டயா... மருவாதையா பேப்பரையும்... பேனாவையும் எங்கிட்ட குடுத்துபோடு..... இல்லீனா திரும்பி நிக்க வெச்சு..." அங்க பாரு உங்கொப்புக்சி ஆத்துக்குள்ள மீன் புடிக்கிறாரு ன்னு சொல்லி எட்டி ஒதச்ச்சன்னு வெச்சுக்கோ.....விக்க்ரமாதித்தியன் கதையில வர்ற வேதாளம் மாறி ஈரோட்டு காவிரி ஆத்து பாலத்துல தலகீழா தொங்குவ பாத்துக்கோ.....!!!

திட்டிகிட்டு நிக்கற மேடியை பார்த்து மறுபடியும் சினம் கொண்ட வால்பையன்...." யோவ் மேடி ... நீ போமாட்ட....?? என்று கேட்டு கொண்டே அடிக்க ஓடுகிறார். ஓடுகிற வழியிலே பெப்சி குடிச்சிக்கிட்டு இருந்த அ.மு.செய்யது மேலே இடிக்க அந்த பெப்சி வணங்காமுடி மேல் கொட்டிப் போச்சு.

இந்த செய்கையில் வால்பையன் மீது அ.மு.செய்யதுக்கும், அண்ணன் வணங்காமுடிக்கும் கோபம் வந்துடுது.....

அடடா பெப்சி போச்சே என்ற கோபத்துடன் வால்பையன் திஸ் இஸ் டூ மச் என்கிறார் அ.மு.செய்யது. அதை ஆமோதிக்கறார் வணங்காமுடி.

என்ன? டூ மச்! த்ரீ மச்! இது மாதிரி பேச எனக்கும் தெரியும். கட்டிங் இல்லாம வந்தது ரொம்ப தப்பா போச்சு.

என்ன அண்ணாத்தே கட்ச்சீலே இப்படி பண்ணிபுட்டியே? காலைலயே சரக்கா? தள்ளாடிகிட்டே வந்து விழுந்தியா! இல்லே நிசமாலுமே ஓடியாந்தியா! ஐயே இங்கன நாங்க குந்திக்கினு கீரோமே கண்ணு தெரியலே அப்பாலே போ! எதையும் கண்டுக்காமே ஏதோ மாதிரி வந்து முட்டிக்கினியே! என்கிறார் வணங்காமுடி.

என்னை என்ன எருமைன்னு சொல்ல வரியா? நீதான் பந்து பொறுக்க வந்த பண்ணி குட்டி மாதிரி இருக்கே.

ஆமாம் இவரு டீ ராஜேந்திரன் வீட்டு பக்கத்து வீடு. சாராய கடைல கீற பொடிப்பசங்கள எல்லாம் இங்க இட்டாந்தா இப்பிடித்தான். என்று வணங்காமுடி முணு முணுக்க.

ஏய் யாரப்பாத்து பொடிப்பயன்னு சொல்லற.

ஆமாமா வேறே வயசானவருன்னா சொல்றதாம்!என்று முணங்கிக்கொண்டே. அண்ணாத்தே உன்னிய யாராச்சு பொடிப்பயன்னு சொல்லுவாங்களாணாத்தே. நீங்க தானே இங்க கீரதுலயே பெருசு. என்றார் வணங்காமுடி.

என்னது பெருசா? வால்பையன்...

அதான், அண்ணாத்தே பெரிய மனுஷர். வணங்காமுடி.

டேய் ரொம்ப பேசாத போ... அடிக்கறதுக்குள்ள ஓடிப்போய்டு.

பாவம் பெருசுன்னு பாத்தா ரொம்பத்தான் அலட்ரே. இன்னா நினைச்சிகிட்டு கீரே? எனக்கு கோவம் வந்திச்சு நடு மண்டையிலே நச்சுன்னு போட்டா நாக்கு தள்ளிக்கும். இது வணங்காமுடி

எங்கே போடு பார்க்கலாம், நீயோ ஒரு குழந்தை பிள்ளை. உனக்கு மண்டை எங்கே இருக்குன்னே தெரியாது. அதுலே நடு மண்டையை எப்படி தேடுவே? உன்னோட கூட்டாளி முழிக்கிற முழிய பாரு பந்த திரிடிகிட்டு வந்த மாதிரி முழிக்கிறாரு.

இங்கே பாருங்க வால்பையன் என்னை அனாவசியமா வம்புக்கு இழுக்காதீங்க. அப்புறமா எனக்கு கோவம் வந்திடும். வந்திச்சுன்னா...... கோவத்தின் உச்சியிலே அ.மு.செய்யது.

கோவம் வந்தா என்னா பண்ணுவே சொல்லு சொல்லு.....

நாங்க எல்லாம் சொல்லமாட்டோம் செஞ்சிடுவோம்லே...

அடங்கொக்காமக்கா! என்னை இவிங்க அடிப்பாங்கலாமா நான் அதெ பாத்துகிட்டு சும்மா இருபேனாமா. எங்கே கையை ஓங்குங்க பாக்கலாம். கையை ஓடிச்சிடுவேனாக்கும்.

ஐய! என்னாங்க நம்மளை நம்பி இந்தியாவோட கௌரவத்தை கொடுத்திருக்காங்க. நீங்க இப்படி சண்டை போடறீங்க. இது சரியா வால்பையன்? என்கிறார் அ.மு.செய்யது.

என்னா நம்பளா? நம்ப இல்லே தம்பி எங்களை நம்பி கொடுத்திருக்காங்க.உங்களை எல்லாம் போனாப் போகுதுன்னு கூட்டிகிட்டு வந்திருக்காங்க. ஏதாவது மிட்டாய் குடுத்தா வாங்கி சப்பிட்டிட்டு பந்து உங்ககிட்டே வந்தா மட்டும் பொறுக்கிப் போட்டுட்டு நல்ல பேரு வாங்கிகிகங்க. சொல்றது புரியுதா?

என்ன பந்து பொருக்கி போடறதா? அப்போது லவ்டேல் மேடி அங்கு வந்து சேருகிறார்.

என்னாங்கோவ்...... வால்பையனுங்கோ... குழந்தை பசங்க கிட்டே உங்க வீரத்தை காட்டுரீங்களாக்கும்... நம்ப்ளமாதிரி வீரன்கிட்டே காட்டுங்........

இங்கே பாரு உங்கிட்டே பேச எனக்கு நேரம் இல்லே, விளையாட கூப்பிடறாங்க நான் போகனும் வழி விடு.

ஐயே! இவரு பெரிய விளையாட்டு வீரருங்கோஓஓஓஓஓவ்.. ஒன்ற விளையாட்டுத் தெறமை என்ற மனசுக்கு தெர்யலைங்கோஓஓஓஒவ்வ்...

டேய் வேணாம் எல்லாரும் என்னைய வெறுப்பேத்தரமாதிரி தெரியுது. இதோட நிறுத்திக்கோ.

நெம்ப சாரிங்கோஓஓஓஓஓவ்............ ஒரே ஒரு பாட்டு மட்டும் பாடிக்கிரெநுங்கோஓஓ. கோவம் வராதுங்களே........

இதோ....... என்ற பாட்டுங்.....

ஏ..... அகுலு பாரு .. பிகுலு பாரு ...
அண்டா ... உண்டா.... ரவுசு பாரு ...
கோடமபாக்காம் மயிலு பாரு......
ஏ ... இந்தா ... ஏ ... இந்தா ... ஏ ... இந்தா ...

வளரும்
ரம்யா....

43 comments :

Unknown said...

ஹே.....ஹே.....

சாமியோவ்...... மொதோ கும்மி ... நம்புளுதுங் சாமியோவ்......... !!!!

நட்புடன் ஜமால் said...

கிராஃபிக்ஸ்ல்லாம் ஜூப்பராக்கீது

படிச்சிப்போட்டு வாறனுங்க

அம்முனியோவ் ...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கொஞ்சம் கனமா நிக்கிறது நம்ம ஜமால் அண்ணனா?

விக்கெட் கீப்பரா?

அ.மு.செய்யது said...

//தேநீரும் பெப்சியும் பருகிக் கொடிருந்தார்கள்.
//

அதெப்படி ஒரே நேரத்துல ரெண்டையும் குடிக்க முடியும் ??

அ.மு.செய்யது said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கொஞ்சம் கனமா நிக்கிறது நம்ம ஜமால் அண்ணனா?

விக்கெட் கீப்பரா?
//

நல்ல கேள்வி !!

सुREஷ் कुMAர் said...

இங்க படம் தெரியலைங்கோவ்..
எதாச்சும் மாத்துஏற்பாடு பண்ணுங்கோவ்..

सुREஷ் कुMAர் said...

மூணாவது பாகமும் செமையா வந்திருக்குங்கோவ்..

அல்லாருக்கும் கொடுத்திருக்கற வர்ணனை தூலாகீதுங்கோவ்..

வால்பையன் said...

//வால்பையன் மற்றும் உருப்புடாதது அணிமா ஜோடி சேர்ந்தனர்.//

நான் மாட்டேன்!
அசின், நயந்தாரா மாதிரி ஜோடியா போடுங்க எனக்கு!

வால்பையன் said...

கிரிக்கெட் மைதானம்
சண்டை களமா ஆகிறும் போலயே!

மக்கா எனக்கு யாருமே சப்போர்ட் இல்லையா!
நான் ஊருல இருந்து ஆள் கூட்டியாருவேன் அப்புறம்!

க.பாலாசி said...

//மக்கா எனக்கு யாருமே சப்போர்ட் இல்லையா!
நான் ஊருல இருந்து ஆள் கூட்டியாருவேன் அப்புறம்!//

தலைவா... நான் இருக்கேன். யார் அங்கே.. அட யார்ரா அங்கே....அட போங்கப்பா...

தல உங்க பந்த இப்படி நாசம் பண்ணீட்டாங்களே. உடனே எடுங்க டக்கிலாவை அடிங்க ரெண்டு ரவுண்டு. எழுதுங்க உங்க பிளாக்கில் இவர்கள் இரக்கம் இலலாதவர்கள் என்று.

தினேஷ் said...

தல உங்க பந்த இப்படி நாசம் பண்ணீட்டாங்களே. உடனே எடுங்க டக்கிலாவை அடிங்க ரெண்டு ரவுண்டு. எழுதுங்க உங்க பிளாக்கில் இவர்கள் இரக்கம் இலலாதவர்கள் என்று

ஹா ஹாஹா

sakthi said...

ரம்யா உங்கள் எழுத்து நடை வியக்க வைக்கின்றது

சரியான கற்பனைத்திறம்....

வாழ்த்துக்கள்

R.Gopi said...

ரம்யா

ஜூப்பரா கீது.....

//வால்பையன் said...
//வால்பையன் மற்றும் உருப்புடாதது அணிமா ஜோடி சேர்ந்தனர்.//

நான் மாட்டேன்!
அசின், நயந்தாரா மாதிரி ஜோடியா போடுங்க எனக்கு!//

வால்பையன் டபுள் ஆக்ஷன்.... ரெண்டு ஜோடி.... ஒண்ணு நயன்தாரா..... ரெண்டு அசின்... ஒகேவா வால்?

ரம்யா.... எழுத்து நடை... ஹ்ம்ம்ம்ம்...பின்னுது...... அதுவும் அந்த லவ்டேல் மேடி.... யப்பா..

RAMYA said...

//
லவ்டேல் மேடி said...
ஹே.....ஹே.....

சாமியோவ்...... மொதோ கும்மி ... நம்புளுதுங் சாமியோவ்......... !!!!
//

வாங்க லவ்டேல் மேடி ஆமா ஆமா நீங்கதான் மொதல்ல :))

RAMYA said...

//
கிராஃபிக்ஸ்ல்லாம் ஜூப்பராக்கீது
//

ஏனுங்கோஓஓஓஓஓஓ நெம்ப நன்றிங்கோஓஓஓஓஓஓஒவ்


//
படிச்சிப்போட்டு வாறனுங்க
அம்முனியோவ் ...
//

இன்னுமமும் படிக்கலீங்க போல இருக்குங்கோஓஓஓஓஒவ் :))

படிச்சுபோட்டு பொறவால வாங்...........

RAMYA said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கொஞ்சம் கனமா நிக்கிறது நம்ம ஜமால் அண்ணனா?

விக்கெட் கீப்பரா?
//

விக்கெட் கீப்பரை தூக்கி பாத்தீங்களாக்கும் பாவம் அவரு கீழே போட்டுடாதீங்க :))

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//தேநீரும் பெப்சியும் பருகிக் கொடிருந்தார்கள்.
//

அதெப்படி ஒரே நேரத்துல ரெண்டையும் குடிக்க முடியும் ??
//

ஹல்லோ எது வேணுமோ அது மட்டும்தான் குடிக்கோணும்
ரெண்டையும் போட்டு குழப்பக்கூடாது :))

சந்தேகம்....... அது சரி......:-)

ஆ.ஞானசேகரன் said...

மிக பெரிய விளையாட்டா இருக்கே ரம்யா

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கொஞ்சம் கனமா நிக்கிறது நம்ம ஜமால் அண்ணனா?

விக்கெட் கீப்பரா?
//

நல்ல கேள்வி !!
//

ஜமால் உங்க ரெண்டு போரையும் தேடிகிட்டு இருக்காரு :-)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
இங்க படம் தெரியலைங்கோவ்..
எதாச்சும் மாத்துஏற்பாடு பண்ணுங்கோவ்..
//

உங்க கணினி சரி இல்லேன்னு நினைக்கிறேன் :-)

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
மூணாவது பாகமும் செமையா வந்திருக்குங்கோவ்..

அல்லாருக்கும் கொடுத்திருக்கற வர்ணனை தூலாகீதுங்கோவ்..
//

நெம்ப நன்றிங்கோ தம்பி :-)

RAMYA said...

// வால்பையன் said...
//வால்பையன் மற்றும் உருப்புடாதது அணிமா ஜோடி சேர்ந்தனர்.//

நான் மாட்டேன்!
அசின், நயந்தாரா மாதிரி ஜோடியா போடுங்க எனக்கு!
//

கால்ஷீட் கேட்டிருக்கேன் கிடைச்ச அடுத்து ஆட்டம் ஆடுகளத்திலே உங்களுக்கு ஜோடியா போட்டுடறேன் :-)

அணிமாவுக்கு யோசிக்கலாம் :))

RAMYA said...

//
வால்பையன் said...
கிரிக்கெட் மைதானம்
சண்டை களமா ஆகிறும் போலயே!

மக்கா எனக்கு யாருமே சப்போர்ட் இல்லையா!
நான் ஊருல இருந்து ஆள் கூட்டியாருவேன் அப்புறம்!
//

வேணாம் வேணாம் அம்பயர் ராகவன் அண்ணா இருக்காரு கவலையை விடுங்க.

நூறு பேரு வந்தாலும் நீங்க ஒரே ஆளு சமாளிக்க மாட்டீங்க?

நீங்க யாரு உங்க பலம் உங்களுக்கே தெரியலயே வாலு :-)

RAMYA said...

//
பாலாஜி said...
//மக்கா எனக்கு யாருமே சப்போர்ட் இல்லையா!
நான் ஊருல இருந்து ஆள் கூட்டியாருவேன் அப்புறம்!//

தலைவா... நான் இருக்கேன். யார் அங்கே.. அட யார்ரா அங்கே....அட போங்கப்பா...

தல உங்க பந்த இப்படி நாசம் பண்ணீட்டாங்களே. உடனே எடுங்க டக்கிலாவை அடிங்க ரெண்டு ரவுண்டு. எழுதுங்க உங்க பிளாக்கில் இவர்கள் இரக்கம் இலலாதவர்கள் என்று.
//

வாங்க பாலாஜி உங்கள் வரவிற்கு நன்றி!!

தலைவர் வால்பையன் அவர்களுக்கு இவ்வளவு ஸ்ட்ராங் சப்போர்ட்டா :))

RAMYA said...

//
சூரியன் said...
தல உங்க பந்த இப்படி நாசம் பண்ணீட்டாங்களே. உடனே எடுங்க டக்கிலாவை அடிங்க ரெண்டு ரவுண்டு. எழுதுங்க உங்க பிளாக்கில் இவர்கள் இரக்கம் இலலாதவர்கள் என்று

ஹா ஹாஹா
//

வாங்க சூரியன் உங்க ஐடியா நல்லா இருக்கு
தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுப்பதற்கு மிக்க நன்றிங்கோ!

திங்கள் கிழமையன்று வால்பையனோட வலையை பார்க்கிறேன்
எதிர் பதிவு வருமா :-)

இல்லே போர்க்களமா மாறுமா :-)

டக்கிலா வார்த்தை நல்லா இருக்கு சூரியன்

வாலு நோட் திஸ் வார்த்தை "டக்கிலா"

RAMYA said...

//
sakthi said...
ரம்யா உங்கள் எழுத்து நடை வியக்க வைக்கின்றது

சரியான கற்பனைத்திறம்....

வாழ்த்துக்கள்
//

சக்தி வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் நன்றி தோழி!

RAMYA said...

//
R.Gopi said...
ரம்யா

ஜூப்பரா கீது.....
//


நன்றி கோபி, தொடர்ந்து உங்கள் வருகைக்கும், கொடுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி கோபி!

//வால்பையன் said...
//வால்பையன் மற்றும் உருப்புடாதது அணிமா ஜோடி சேர்ந்தனர்.//

நான் மாட்டேன்!
அசின், நயந்தாரா மாதிரி ஜோடியா போடுங்க எனக்கு!//

வால்பையன் டபுள் ஆக்ஷன்.... ரெண்டு ஜோடி.... ஒண்ணு நயன்தாரா..... ரெண்டு அசின்... ஒகேவா வால்?
//

அது சரி அப்புறம் அணிமாவுக்கு நான் யாரை தேடுவேன் :-)

கோபி கொஞ்சம் மறுபரிசீலனை பண்ணுங்கப்பா :-)

//
ரம்யா.... எழுத்து நடை... ஹ்ம்ம்ம்ம்...பின்னுது...... அதுவும் அந்த லவ்டேல் மேடி.... யப்பா..
//

நன்றி கோபி எல்லாம் உங்களை போல் உள்ள நண்பர்கள் கொடுக்கும் ஆதரவுதான் காரணம்.

மறுபடியும் மிக்க நன்றி கோபி.

सुREஷ் कुMAர் said...

//
Blogger RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
இங்க படம் தெரியலைங்கோவ்..
எதாச்சும் மாத்துஏற்பாடு பண்ணுங்கோவ்..
//

உங்க கணினி சரி இல்லேன்னு நினைக்கிறேன் :-)
//
டெல்'லு கம்பெனிகைல சொல்லி..
பொட்டிவாங்கி..
விஸ்டா போட்டு பிஸ்தாவா பொட்டிய வெச்சிருக்கேன்..

இப்டி பொசுக்குனு பொட்டி சரிஇல்லைனுட்டின்களே..

இது அநியாயத்தின் உச்ச கட்டம்..

ஒழுங்கா எல்லாருக்கும் பாகுபாடின்றி படம்தெறிய எப்பாடுபட்டாவது ஏற்பாடு பண்ணுங்க..

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
மிக பெரிய விளையாட்டா இருக்கே ரம்யா
//

ஆமா ஆ.ஞானசேகரன்
ஆனா சீக்கிரம் முடிஞ்சிடும்னு நம்பறேன் :))

வருகைக்கு நன்றி ஆ.ஞானசேகரன்.

RAMYA said...

//
//
Blogger RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
இங்க படம் தெரியலைங்கோவ்..
எதாச்சும் மாத்துஏற்பாடு பண்ணுங்கோவ்..
//

உங்க கணினி சரி இல்லேன்னு நினைக்கிறேன் :-)
//
டெல்'லு கம்பெனிகைல சொல்லி..
பொட்டிவாங்கி..
விஸ்டா போட்டு பிஸ்தாவா பொட்டிய வெச்சிருக்கேன்..

இப்டி பொசுக்குனு பொட்டி சரிஇல்லைனுட்டின்களே..

இது அநியாயத்தின் உச்ச கட்டம்..

ஒழுங்கா எல்லாருக்கும் பாகுபாடின்றி படம்தெறிய எப்பாடுபட்டாவது ஏற்பாடு பண்ணுங்க..
//

ஆஹா எல்லாருக்கும் தெரியும்போது தம்பி சுரேஷுக்கு தெரியாம ஏதோ நடுவில் சதி நடக்குதுன்னு நினைக்கிறேன்.

அதை கண்டுபிடிச்சி அந்த தடையை நீக்குவோம் சரியா :))

நோ டென்சன் ப்ளீஸ் :))

அடுத்த வாரம் டெல் கம்பெனிக்கு நான் போவேன் உங்க பிரிச்சனையை அவங்க கிட்டே எடுத்து சொல்றேன் :))

gayathri said...

நட்புடன் ஜமால் said...
கிராஃபிக்ஸ்ல்லாம் ஜூப்பராக்கீது

iyyo ennaku theriyalaye anna

gayathri said...

vaal paiyan rompa than vall thanam panraru

gayathri said...

வால்பையன் கொடுத்திடுங்க, கேப்டன் கேக்குறாரு இல்லே என்றார் ஜீவன்

ippadi solrathu than periya manusanukku azaku

gayathri said...

அதெல்லாம் கொடுக்க முடியாது ஜீவன். எழுத பெண்டிங் கேசு நிறைய சேர்ந்து போச்சு

ippadi than seium thozila nermaya irukanum

gayathri said...

நமக்கு பெரிய பொறுப்பு கொடுத்திருக்காங்க வால்பையன் அதுனாலே நீங்க அந்த பேப்பரையும் பேனாவையும் என் கிட்டே கொடுங்க விளையாடி முடிச்சவுடனே நான் உங்க கிட்டேயே திருப்பி கொடுத்திடறேன் என்று மறுபடியும் ஜீவன் கூறினார்.

evalavu azaka kili pillaiku sollra mathri sollraru koduthudunga vaal paiyan

gayathri said...

ஏண்டா.. வெந்து...வேகாத அர மண்டையா..... நம்ப தலைவரு தோணி சார் சொல்றாருல்லோ ...... ஆனா நீ கேக்க மாட்டேன்னு கொழந்தப் புள்ளையாட்டோ அடம் புடிக்குற....!! பிச்சுபுடுவன்.. பிச்சு...படவா.......

eaan pa chinna pullaya eppadi meratrenga

gayathri said...

ஓடுகிற வழியிலே பெப்சி குடிச்சிக்கிட்டு இருந்த அ.மு.செய்யது மேலே இடிக்க அந்த பெப்சி வணங்காமுடி மேல் கொட்டிப் போச்சு.
:))))))))))))))))

gayathri said...

இந்த செய்கையில் வால்பையன் மீது அ.மு.செய்யதுக்கும், அண்ணன் வணங்காமுடிக்கும் கோபம் வந்துடுது.....

அடடா பெப்சி போச்சே என்ற கோபத்துடன் வால்பையன் திஸ் இஸ் டூ மச் என்கிறார் அ.மு.செய்யது. அதை ஆமோதிக்கறார் வணங்காமுடி.



ada onnu kudithangaya onnu kudithangaya

தமிழ் அமுதன் said...

///வால்பையனுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்டுக்காம பெப்சி குடிப்பதில் மும்முரமாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டார்.///


ஆமா அப்படித்தான் இருப்பார் நாங்கதான் முன்னாடியே பெப்சில ''மிக்ஸ்'' பண்ணிட்டோம்ல ..........!

kanagu said...

இந்த தொடர நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை அக்கா :) படித்துவிட்டு கமெண்டிங்க் :)

விருது வாங்க வரவும் :)

http://enadhu-ularalgal.blogspot.com/2009/08/blog-post.html

Annam said...

:))))

SUFFIX said...

//வாட் Mr.வால்பையன்? என கேட்டார்.//

என்னது மரியாதை ரொம்ப தேயுது

SUFFIX said...

//இப்போது இடைவேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு இடத்தில் குழுமி தேநீரும் பெப்சியும் பருகிக் கொடிருந்தார்கள்.//

இதுக்கு மட்டும் தான் ஒரே இடத்தில் குழுமுவாங்களோ?